இதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter Log
பதிவுகள் போட நேரம் இல்லாத நேரம் இப்போதெல்லாம் ஒரு சில வரிகளில், சில சமயம் சில சொற்களில் மனத்தில் நினைப்பதை சொல்ல முடிந்துவிடுகிறது..
Micro Blogging எனப்படும் Twitterஐ சொல்கிறேன்..
பல முன்னாள் பதிவர்கள் இப்போது ட்விட்டர்கள் ஆகிவிட்டார்கள்..
எமது எண்ணங்கள், கருத்துக்கள், புலம்பல்கள், செயல்கள் என்று அனைத்தையுமே நினைக்கின்ற நேரத்தில் மற்றவருடன் ட்விட்டர் மூலமாகப் பகிர்ந்து கொள்ள முடிவது மட்டுமில்லை.. அங்கிருந்து Facebookஇற்கும் உடனேயே அனுப்பிவிட முடிவதால், யாரை எங்கள் கருத்துக்கள், நாங்கள் சொல்பவை போய்ச் சேரவேண்டுமோ உடனே அவை சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது..
இப்போது எனது Apple I phone 4 இலிருந்து தமிழில் தட்டச்சி ட்வீட் செய்யவும் முடிவது இரட்டிப்பு திருப்தி..
அதற்காக பதிவுலகை ஒரேயடியாகத் துறந்துவிடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை..
(உண்ணாவிரதம், தீக்குளிப்பு மாதிரியான விஷயங்களைப் பற்றி எண்ணாதீர் உடன்பிறப்புக்களே)
எங்கள் ட்வீட்சை தொகுத்து பதிவாக இடும் ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்த எங்கள் குஞ்சு பவனுக்கு முதலில் நன்றிகள்..
இப்போது மருதமூரானின் Facebook status பதிவுகளும் தொடர்ந்து வருகின்றன..
எனவே முன்பு பதிவர் சந்திப்பில் மு.மயூரன் கவலையாக சொன்னது போல அன்றி குறும்பதிவு - Micro Blogging என்பது பதிவுலகைப் பாதிக்காது என்று ஓரளவாவது நிம்மதியாக நம்பலாம்..
ஆனாலும் வாராந்தம் ட்விட் பதிவு போடுமளவுக்கு நான் தத்துவங்களைத் தமிழில் மட்டும் கொட்டுவதில்லை. :)
எனவே ட்விட்டுகள் சேரும் நேரத்தில் பதிவுகளாகக் கொட்டலாம் என்று ஒரு ஐடியா :)
Twitter, Facebook Timeline இல் மிஸ் பண்ணியவர்கள் படிக்கட்டுமே என்று ஒரு நல்லெண்ணம் தான்..
கொஞ்சம் பழைய, (எனக்கு) மறக்க முடியாதவை..
உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை-பேராசிரியர் சிவத்தம்பி
11 Nov 09
குட்டி, புத்தி, பக்தி.. இவை மூன்றுமே ஒன்றோடொன்று இணைந்தவையா? ;) ஒன்றில் ஒன்று தங்கியவையா? #சந்தேகம்
28 Dec 09
வாழ்க்கை என்பது சப்பாத்து மாதிரி..
அளவு சரியாக இருக்கவேண்டும். பெரிசாக இருந்தால் விழுந்துவிடுவோம்.. சிறிசாக இருந்தால் பயனில்லை.
அடிக்கடி மினுக்கிக் கொள்ளவேண்டும்
பிய்ந்தாலும் கிழிந்தாலும் தைத்துப் பயன்படுத்தவேண்டும்.. புதுசு வாங்காவிட்டால்
#Loshanism
முயற்சியும் இல்லாமல் சரக்கும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர் எவரும் இல்லை - மாயக் கண்ணாடிக்காக இசைஞானி பாடுகிறார் @vettrifm
இலங்கை அரசியல் ஆபத்தானது.இந்திய அரசியல் சுவாரஸ்யமானது.. எமக்கு..
ஆயுதம் இல்லாதவன் எப்போதும் ஆபத்தில்லாதவன் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள் ..
எவ்வளவு தான் மனதை வேறு திசைகளில் மாற்ற எண்ணினாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே நாளையே சுற்றி சுற்றி வருகிறது... :(
17 May
கடவுள்கள் அழிந்தால் கவலைப்படப் பலருண்டு.. பரிதாப பக்தர்கள் கொத்தாகப் பலியுண்டது பற்றி.... :( மறக்காமல் இருப்பதே என்னால் செய்யக் கூடியது
17 May
எங்கள் கடவுள்களுக்கும் மரணம் உண்டு என சொன்ன நாட்கள்.. :(
இன்றைய நாள்.....
பிரிவுத் துயரை உணர்த்தும் நாள்.. இதனால் அருகில் இருக்கும் உங்கள் உறவுகளின் மேன்மையைப் புரிந்துகொள்ளக் கூடிய நாள்..
நாம் செய்த தவறுகளை மனதுக்கு உணர்த்தி, இனி அத்தவறுகளை செய்யக்கூடாது என்று உணர்த்தும் நாள்..
உற்றவருக்கும் மற்றவருக்கும் உதவ வேண்டும் என்று உணர்த்தும் நாள்..
இன்னும் வாழ்க்கையும் வரலாறும் இருக்கிறது என்று சொல்லும் நாள்...
MAY 18
நிறைய ஆசிரியர்கள் தங்கள் மாணவிகளை மனைவியராக்கிய வரலாறு அறிந்துள்ளேன் ;)
ஏன்யா உலகத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கே என எடுத்துக் கொள்றீங்க? உங்களுக்கு என்ன சுப்பீரியர் கோம்ப்லேக்சா?(Superior complex)
நல்லவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது அவர்களின் முகமூடிகளைக் கிழித்து மூக்கில் குத்தி உடைக்க ஆத்திரம் வருகிறது.
கடந்த ஓரிரு மாதங்களில் கொட்டியவை..
புதிய இசையமைப்பாளர்கள் பலருக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவது மகிழ்ச்சி.. அந்தப் பாடல்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கின்றன #அவதானிப்பு
6 Jun
ஸ்லிம் என்றால் எங்களை விடக் கொஞ்சமே கொஞ்சம் எடை குறைந்தவர்கள். உங்களை 'ஒல்லிப்பிச்சான்கள்' என்று தான் சொல்வார்கள் ;)
- மெல்லிய உடல்வாகு உள்ள ஒருவருக்கு சொன்னது ;)
ஊசி போல உடம்பிருந்தால் நேரே மோச்சரி தான். அதனால் தான் கவிஞர் பார்மசி தேவலை என்றார் ;)
பேசும்போதும், கேட்கும்போதும் சில சொற்களின் முக்கியத்துவத்தை நாம் கவனிப்பதில்லை..
"சிலவேளை, எப்போதும், இப்போது, முன்பு, நான் நினைக்கிறேன், இருக்கலாம், பொதுவாக,....."
சதை, கதை, உதை.. கொண்டை, மண்டை, சண்டை, பெண்டை.. நல்ல காலம் விவேகா இத்தோட நிப்பாட்டிட்டார்.. #வேங்கை திரைப்படப் பாடல்
நான் சரியென நினைக்கும் சரியான பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் பொது நிலைக்கு வந்துவிட்டவன் என்ற அடிப்படியில் தவறாக இருக்கலாம் என்ற விஷயங்களை சரியாக நான் என்றும் நிலைப்படுத்திக் காட்டியதும் இல்லை; காட்ட முனையப் போவதுமில்லை.
'பிரபலம்' என்பது எப்போதுமே 'ப்ராப்ளம்' என்பதைத் தான் காட்டுதோ?
இடையிடையே பதிவு போடாவிடில் பதிவர் என்று எப்படி ஒத்துக்க மாட்டாங்களோ, IPOக்கு apply செய்யாவிட்டால் Share Trading செய்கிறோம் என்றும் ஏற்க மாட்டாங்களாம்.
#Loshanism
சில விடயங்களில் எஸ்கேப் ஆகும் எல்லாரும் அண்மைக்காலத்தில் பயன்படுத்தும் காரணம் - மனநிலை சரியில்லை. #என்னாங்கடா
23 Jun
சிலருக்கு ஏன்டா குருவாக இருந்தோம் என்று சிலநேரம் யோசிக்க வைக்கிறார்கள்.
நான் தான் அவர்களின் துரோணர் என்று சொல்லாமல் விடுவதே அவர்கள் எனக்குத் தரும் குரு தட்சணையாக இருக்கட்டும்
#நிச்சயமாக ஆணவக் கூற்று அல்ல இது
பஞ்சு போல மனசு இருந்தா பிரச்சினையில்லை ;) பிஞ்சு போனாலும் பரவாயில்லை.. ஆனால் பஞ்சு போல.... ;#censored
எல்லோருக்கும் இடமுண்டு.. ஒருவருக்கு மட்டும் என்று எதுவும் இல்லை #சும்மா வந்த தத்துவம்.. ;)
எலி டிரஸ் போட்டு ஓடினால் ஏதோ விஷயம் இருக்கு ;) #இதெல்லாம் தானா வாறது ;)
28 Jun
நிறுத்துறது, விலத்துறது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்காது தம்பி #punch
புதிய இசையமைப்பாளர்கள் பலருக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவது மகிழ்ச்சி.. அந்தப் பாடல்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கின்றன #அவதானிப்பு
மதன் கார்க்கியின் இந்தப் பாடல் வரிகள் ரசிக்கவைக்கின்றன.. புதிய பாதையில் பாடல்களை எதிர்பார்க்கவும் வைக்கின்றன. 'நீ கோரினால் வானம் வாராதா?'
:)பலவீனம் என்ன என்பதை மற்றவருக்குக் காட்டும் எதையும் வெளிப்படுத்தவும் கூடாது :) #அட்வைஸ்
சதை, கதை, உதை.. கொண்டை, மண்டை, சண்டை, பெண்டை.. நல்ல காலம் விவேகா இத்தோட நிப்பாட்டிட்டார்.. #வேங்கை திரைப்படப் பாடல்
இளையராஜாவின் ஒரிஜினலை யுவன் மாற்றியவிதம் ரசிக்கக் கூடியது.. என்னோட ராசி - தாஸ் * ஒரிஜினல் மாப்பிள்ளை படத்தில்..
ஒருத்தனை நல்லவனாக மாற்ற என்ன வேண்டுமானாலும் #விடியல் செய்யும்
சில விடயங்களில் எஸ்கேப் ஆகும் எல்லாரும் அண்மைக்காலத்தில் பயன்படுத்தும் காரணம் - மனநிலை சரியில்லை. #என்னாங்கடா
உன்னைப்போல அளவோடு உறவாட வேண்டும்.... கண்ணதாசன் சொன்னது ம்ம்ம்ம் உண்மை தான்.. #பரமசிவன் கழுத்தில் இருந்து
சிலருக்கு ஏன்டா குருவாக இருந்தோம் என்று சிலநேரம் யோசிக்க வைக்கிறார்கள்.
நான் தான் அவர்களின் துரோணர் என்று சொல்லாமல் விடுவதே அவர்கள் எனக்குத் தரும் குரு தட்சணையாக இருக்கட்டும்
#நிச்சயமாக ஆணவக் கூற்று அல்ல இது
நன்றி மறப்பது எப்பவுமே, எல்லோருக்குமே நன்றன்று #Felt
தானாக லேசில் வந்த எதையுமே என் நெஞ்சம் ரசிக்காதே.. #தில்லாலங்கடி டிங் டிங் பாடல் @vettrifm #Avatharam
அடப் பாவிங்களா.. இங்கேயும் வட்டங்கள் இருக்கிறதே.. இதுக்கும் யாராவது பதிவு போடுவாங்களோ? #google+ http://t.co/NJAZz5T - Google Plus பற்றி ;)
6 Jul
பாட்மிண்டன் விளையாடுவது எப்படி என்று @anuthinan கேட்டார்...
வழிகள் சொல்லிக் கொடுத்தேன்...
இறுக்கிப் பிடிச்சு மெதுவா அடிக்க வேண்டும் ;)
நடுவில் வலை போட்டு உள்ளுக்குள் விழுவதாக அடிக்கவேண்டும் ;)
நானும் திறந்த புத்தகம் தான்.. என்னுடன் ரொம்ப நெருங்கிய, நம்பிக்கைக்கு உரியோரிடம் மட்டும் #Just
7 Jul
நல்ல விஷயங்களை நான்கு என்ன நாற்பது இடத்திலே வாசித்தாலும் தப்பில்லை :) #நானேசொன்னது
வச்சுக்கத் தெரியாதவனுக்கு எதுக்குடா .. பேனா? ;) #புதிய பேனாவைத் தொலைத்த அலுவலக ஊழியனுக்கு சொன்னது #Loshanism
கமலின் சலங்கை ஒலி பிழை பிடிப்புக் காட்சியைக் காட்டிவிட்டு தொலைகாட்சி அறிவிப்பாளர் "களையைக் களையாகப் பார்க்கவேண்டும் ; பிலையை ஏற்றுக் கொண்டால் தான் களை வளரும்" என்கிறார். #கருமம் #கொலை
#NotVettriTV
மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை.. #பலவிஷயங்களில் - ரசிக்க வைக்கும் வைரமுத்து
14 Jul
உருக வைக்கும் வைரமுத்து வரிகள், அழ வைக்கும் SPBயின் குரல் + அங்கிங்கு அசைய விடாமல் தடுக்கும் saxophone இசை.. #என்காதலே - டூயட்
15 Jul
முத்து பாடலில் 15 வருடங்களுக்கு முதலில் ரசித்த அதே வரிகள் இப்பவும் பிடிக்கின்றன.."இனிமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது" #வைரமுத்து
15 Jul
தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..
15 Jul
இப்போதைக்கு ஷேவ் எடுக்கத் தேவையில்லை. "தாடி உங்களுக்கு சூட் ஆவுது" இருபத்து மூன்றாவது கமென்ட் :)
ட்வீட் தொல்லைகள் தொடரும்...





ஆகா.....! மற்றுமொரு ஸ்ரேற்றஸ் ரூவீட்சை கொண்ட பதிவராக வலம் வர வாழ்த்துக்கள். ஹிஹிஹி.
July 29, 2011 3:46 PM
விரைவில் சுவாமி வந்தியானாந்தாவும் தனது தத்துவங்களை ட்விட்டப் போறாராம்.
July 29, 2011 3:49 PM
அட்ரா சக்க இப்பிடியும் ஒரு ஐடியா இருக்கு என? இருந்தாலும் தாங்களின் தவற விட்ட சில டுவீட்டுக்களை இங்கே ரசிக்க முடிந்தது.. நன்றி.
///கமலின் சலங்கை ஒலி பிழை பிடிப்புக் காட்சியைக் காட்டிவிட்டு தொலைகாட்சி அறிவிப்பாளர் "களையைக் களையாகப் பார்க்கவேண்டும் ; பிலையை ஏற்றுக் கொண்டால் தான் களை வளரும்" என்கிறார். #கருமம் #கொலை///
கொலை காரர்கள்... கிராதகர்கள் ,, அழியட்டும்..
July 29, 2011 3:55 PM
பாஸ், சிறிய வரிகளூடாக பெரிய கருத்துக்களை விரவிச் சொல்லுகின்றீர்கள்.
கலக்கல் ருவிட்ஸ்.
July 29, 2011 4:06 PM
///இலங்கை அரசியல் ஆபத்தானது.இந்திய அரசியல் சுவாரஸ்யமானது.. எமக்கு../// ஹிஹி என்னமோ உண்மை தானுங்கோ ;-)
July 29, 2011 4:44 PM
:)
July 29, 2011 6:29 PM
லோஷன்,
ஆரம்பகாலங்களில் எனக்கும் twitter கருத்துக்களை(கீச்சுகளாம்) பதிவாக்குவது சரியாகப் படலைங்க. ஆனா, Timelineல் வேகமா ஓடுவதால், பல ட்விட்களை நமக்குத் தெரியாமலே போயிருதுங்க. இப்போ சரியாப்படுது. நீங்க இலங்கை நேரத்துல ட்விட்டுவது, என்னோட நேரத்துல பார்க்கிற வாய்ப்பு ரொம்ப கம்மி. அதுவுமில்லாம் உங்க handleதேடி படிக்கிறதெல்லாம் நடக்காத காரியம். நானும் இதைப் போல செய்யனும் :)
தொடரட்டும் தொல்லைகள்
July 29, 2011 8:11 PM
//நிறைய ஆசிரியர்கள் தங்கள் மாணவிகளை மனைவியராக்கிய வரலாறு அறிந்துள்ளேன் ;)// ஹா ஹா ஹா
//ஸ்லிம் என்றால் எங்களை விடக் கொஞ்சமே கொஞ்சம் எடை குறைந்தவர்கள். உங்களை 'ஒல்லிப்பிச்சான்கள்' என்று தான் சொல்வார்கள் ;)
- மெல்லிய உடல்வாகு உள்ள ஒருவருக்கு சொன்னது ;)// நானும்,அனுதினன் அண்ணாவும்தான் மேட்குறிபிட்ட வகையில் வருகிறோம். அந்த ஒல்லிப்பிச்சான் பப்புமுத்து பவன் இல்லைதானே?
கலக்கல் பதிவு. ட்விட்டரில் ஓய்வை களிப்பதால் அதிகம் ஏலவே வாசித்தேன்.
July 29, 2011 8:39 PM
செல்லாது செல்லாது! இதெல்லாம் பதிவா எடுக்கேலாது!!
July 29, 2011 10:06 PM
// உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை
-பேராசிரியர் சிவத்தம்பி-
பங்கு பற்றியதால மட்டும் என்ன நன்மை கிடைச்சது?
July 30, 2011 2:27 AM
இது பதிவா? இல்லை டிவிட்டா? இல்லை ஸ்டேட்டஸ்ஸா? #டவுட்டு
July 30, 2011 9:50 AM
பெரும்பாலனவை ட்விட்டரில் படித்தவைதான்.. ஆனால் அவற்றை பதிவில் பார்க்கையில் சுவை அதிகரிக்கின்றது..
புதிய பார்வையிலும் கலக்குங்கள் அண்ணா...
July 31, 2011 1:02 AM
கிரிக்கெட் உலகின் கண்ணியவானாக திகழும் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் குமார் சங்ககாராவுக்கு வாக்களித்து இந்த வருடத்துக்கான அபிமான வீரராக தேர்வு செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் .
சங்ககாராவுக்கு வாக்களிக்க இங்கே http://kobirajkobi.blogspot.com/2011/07/vip.html
July 31, 2011 11:28 AM
//..... வச்சுக்கத் தெரியாதவனுக்கு எதுக்குடா .. பேனா? ;) #புதிய பேனாவைத் தொலைத்த அலுவலக ஊழியனுக்கு சொன்னது #Loshanism ..//
பதிந்தவைகளில் பிடித்தது.......... :)
July 31, 2011 11:39 AM
most of those are I have retweeted. good done
August 3, 2011 12:30 PM