எந்திரன்

10/01/2010 05:27:00 PM

(76) Comments

அண்மைக்காலத்தில் எந்திரன் அளவுக்கு வேறு எந்தப் படத்துக்கும் இத்தனை பரபரப்பு இருந்திருக்குமோ தெரியாது.
சில நேரம் எரிச்சல் வருமளவுக்கு எங்கு பார்த்தாலும் 'எந்திரன்',எந்திரன் தான்..
ரஜினி என்ற மந்திர சொல்லுக்கு (இன்னும்) இருக்கும் மவுசு புரிந்தது.
ஷங்கர்,ரஹ்மான்,சன் என்று நான் அடுக்கிட்டே போக நீங்கள் எல்லாரும் கொட்டாவி விட்டுட்டே அடுத்த பந்திகளைத் தேட தேவையா?

நேரே நேற்று பார்த்த எந்திரன் பற்றிய என் பார்வைக்குப் போயிடுறேனே..

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்று மாலை நடைபெற்ற எந்திரன் அறிமுகத் திரையிடலுக்கு அழைப்பிதழ் கிடைத்தது.
இறக்குமதி செய்துள்ள EAP மற்றும் MR Associates நிறுவனங்களுக்கு நன்றிகள்+வாழ்த்துக்கள்.

ஷங்கரின் இயக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாபெரும் பொருட்செலவில் வந்துள்ளது எந்திரன்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கலாநிதி மாறனின் பணமும் ஷங்கரின் தாராளமயமும் தெரிகிறது.
தமிழில் இப்படி பிரமாண்டத்தை திரையில் தர ஷங்கரால் தான் முடியும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

ரோபோ சண்டைக் காட்சி வித்தியாசமான விருந்து.தமிழில் இப்படி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கவும் முடியாது;இதுவரை பார்த்திருக்கவும் முடியாது..

  புதியமனிதா பூமிக்கு வா என எஸ்.பீ.பி அழைக்க படம் ஆரம்பிக்கிறது.
வழமையான ரஜினிக்கான அறிமுகம் மிஸ்ஸிங்.
ஆனால் இது ஷங்கரின் பத்துவருடக் கனவு என்பதால் ஓகே.

ரஜினி(வசீகரன்) ஒரு விஞ்ஞானி. அவரது பத்துவருட (இங்கேயும் பத்து??!!) கடுமையான ஆராய்ச்சி+உழைப்பில் உருவாகும் ரோபோவைத் தன் உருவத்துடனே படைக்கிறார்.
இந்த உழைப்பின் மத்தியில் தனக்காக உருகி,அலையும் அழகிய ஐஸையும் மறந்து தாடி,மீசை+தலைமுடியும் வளர்த்து பாடுபடுகிறார்.
இந்திய ராணுவத்தில் உயிரிழப்பைக் குறைக்க இந்த ரோபோவைப் பயன்படுத்த முயல்கிறார்.ஆனால் இவர் புகழ்பெறுவதைத் தடுக்க முயலும் வசீகரனின் பேராசிரியர் போரா தரும் தொல்லைகள் ரஜினியின் நிம்மதியை கெடுக்க, பேராசிரியரை ஜெயிக்க ரோபோவான சிட்டிக்கு மனிதனுக்கிருக்கும் உணர்வுகளை ஊட்டுகிறார் வசீகரன்.
அங்கே ஆரம்பிக்கிறது திருப்பம்.. அப்போ தான் இடைவேளை டொட்.(இப்படித்தான் ஹீரோ ரஜினி அடிக்கடி சொல்கிறார்)

சந்தானம்_கருணாஸ் சொல்லும் மனிதரிடம் உள்ள ரோபோவிடம் இருக்காத ஒன்று - அதாங்க பீலிங்க்சாம்.. சிட்டி ரோபோவிடம் வந்து சேர்ந்த பிறகு தான் வசீகரனுக்கு ஆரம்பிக்கிறது தலைவலி.
வரம் கொடுத்த சாமியின் தலையிலேயே கை வைத்த கதையாக வசியின் காதலி அழகிய சனாவிலேயே காதல் கொள்கிறது ரோபோ.

அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். ரொம்பவே ஸ்ட்ரோங்.
இந்தக் காதலால் ரோபோவைப் படைத்த ரஜினி அதை உடைத்துப் போட்டுவிடுகிறார்.
வில்லன் அந்த ரோபோவை எடுத்து தன்வயப்படுத்தி,ஆக்க சக்தியாக விஞ்ஞானி ரஜினி உருவாக்கியதை அழிவு சக்தியாக மாற்றி விடுகிறார்.
அதுக்குப் பிறகு ஆரம்பிக்கிறது ரஜினியின் ஆட்டம்.
வில்லன் ரோபோ செய்யும் அட்டகாசம் ரஜினி ஸ்டைல்+ரஜினி பஞ்ச். அண்மையில் இப்படிப்பட்ட ரஜினி டைப் வில்லத்தனம் பார்த்தது வேட்டையன்(சந்திரமுகி) இல் தான்.

அப்புறம் என்ன,தன் காதலியை ரோபோ கடத்த,விஞ்ஞானி இந்திய ராணுவம்+போலீசுடன் சேர்ந்து ஐஸை மீட்கவும் ரோபோவை அழிக்கவும் போராட , பெரிய ரணகளம்+ஹோலிவூடில் மட்டுமே இதுவரை பார்த்த பிரம்மாண்ட அக்ஷன் காட்சிகளோடு எந்திரன் நிறைவடைகிறான்.

ஆரம்பம் போலவே முடிவும் அமைதியாக.
ரஜினி படம் என்றே உணர்வு அழுத்தமாக இல்லாமல்,Typical ஷங்கர் படமாகவே உணரவைக்கிறது.

ரஜினியின் இரு பாத்திரங்களையும் உருவாக்குவதில் ஷங்கர் எடுத்துள்ள சிரத்தை நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும் படம் முழுவதும் ஆக்கிரமிப்பதும் விஞ்சி நிற்பதும் சிட்டி ரோபோ ரஜினி தான். இந்த அறுபது வயதிலும் ரஜினி ரொம்பவே மினக்கெட்டிருக்கிறார்.
சில,பல காட்சிகளில் கிராபிக்ஸ் உதவி செய்திருந்தாலும்,அமெரிக்க ஸ்டூடியோக்களின் கைவண்ணம் இருப்பது தெரிந்தாலும் ரஜினி பளிச்சிடுகிறார்.
குறிப்பாக ரோபோ வில்லனாக மாறிய பிறகு அதகளம்.
விஞ்ஞானியைப் பிடித்து வதைக்க எண்ணுகையில் சிட்டியின் வில்லத்தனம் மின்னுகிறது.
இறுதிக்கட்டக் காட்சிகள் முழுக்க முழுக்க ரஜினி மாயம். ரோபோக்கள் அத்தனையும் ரஜினி போலவே மாறியிருப்பது பிரமிப்பு+கொஞ்சம் சலிப்பு.




பின்னே இத்தனை ரஜினிகளா,ரஜினி மலிந்துவிட்டாரா என்று எண்ண வைத்துவிடுகிறதே..

ரோபோ ரஜினி செய்யும் சில லீலைகளும் வேலைகளும் சொன்னதை சொன்னபடியே செய்யும் குறும்பும் ரசிக்க வைப்பன.

எனினும் ஹீரோ ரஜினி ஒரு டம்மி போல தென்படுவது படத்தைக் கொஞ்சம் தளர செய்தது போல ஒரு உணர்வு. என்னுடன் படம் பார்த்த ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கும், இன்று சட்டிய ஒரு ரஜினி வெறியருக்கும் இது அறவே பிடிக்கவில்லை.
தலைவரை டம்மியாக்கி ரோபோவை ஹீரோவாக்கி விட்டார் ஷங்கர் என்று குமுறினார்கள்.
இதனால் தான் ஷங்கர் ஆரம்பத்திலேயே 'எனது பத்து வருட கனவுப் படம்' என்று அடிக்கடி சொல்லிவந்தார்.

எனக்கு எந்திரன் வரு முன் வந்த ஒரு sms தான் ஞாபகம் வந்தது..

ஹீரோ கிழவன் ஆனால் இந்தியன்.
கிழவன் ஹீரோவானால் எந்திரன்..


ஐஸ்வர்யா ராய் - அழகாய்த் தான் இருக்கிறார்.நளினமாக நடனமாடுகிறார்.ஓரளவு நடிக்கவும் செய்கிறார். பாய்ந்து பாய்ந்து முத்தமிடுகிறார்.கவர்ச்சியையும் அள்ளி வீசுகிறார்.
ஆனால் அவரது கவர்ச்சி எனக்கென்னவோ அருவருப்பாக இருக்கிறது.முதிர் கவர்ச்சி தான் காரணமோ?

நயவஞ்சக விஞ்ஞானியாக வரும் Danny Denzongpa அமைதியான வில்லன். நல்ல தெரிவு.
ஆனால் இவரிடமிருந்து வில்லன் பாத்திரத்தை ரோபோ பிற்பாதியில் எடுத்துவிடுகிறது.

நகைச்சுவை வைக்கவில்லை. சின்னப் பிள்ளைகளை சிரிக்கவைப்பதாகவே சந்தானம்+கருணாசின் நகைச்சுவைகள்.
கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் ஒரு லட்சிய விஞ்ஞானியிடம் இவர்கள் போல அசடுகள் உதவியாளர்களா? சகிக்கவில்லை.

வசனங்களால்+நகைச்சுவைகளால் ரஜினி சிரிக்கவைப்பது பரவாயில்லை.

வசனங்கள் - சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்று காட்டப்படுகிறது.
சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா? 

திரைக்கதையின் வேகமும் அக்ஷன் காட்சிகளும் படத்தை விறு விறுவாக்கியுள்ளன.
அந்த ட்ரெயின் சண்டை அமர்க்களம். ரோபோ சண்டையில் அக்ஷனை விட கிராபிக்ஸ் தான் அதிகம் விளையாடுகிறது.

ரோபோ நாயகியைத் தூக்கி வரும் இடத்தில் car chasing action பிரமாதமாக வந்திருந்தாலும் அத்தனை போலீசார் பலியாவதும்,நாயகி இருக்கிறாளே என்று பார்க்காமல் கண்மூடித் தனமாக போலீஸ் சுடுவதும் கொஞ்சம் அல்ல நிறையவே இடிக்கிறது.

ஆனாலும் இந்தப் படத்தில் வேறு  லொஜிக் எல்லாம் பார்த்து யாராவது நொட்டை சொன்னால் பேரரசுவின் படங்கள் பதினைந்தை அடுக்கடுக்காகப் போட்டு ஒரு அறையில் மூடிவிடவேண்டும்.
விஜய்,அஜித் எல்லாம் சாதாரண மனிதராக இருந்து பறந்து,பறந்து அடித்தால் பார்ப்பீர்கள்;ஒரு ரோபோவால் முடியாதா?
ஹோலிவூட் படங்களில் வரும் Sci fi Graphics காட்சிகள் பிடிக்கும்;இங்கே புளிக்குதா?

இசைப்புயல் ஆணித்தரமாக நிற்கிறார்.பாடல்களில் அசத்தியவர் படம் முழுவதும் இசை ராஜாங்கம் நடத்துகிறார்.காட்சிகளுக்கு தகுந்த இசை.காட்சிகளைப் பிரம்மாண்டமாக்கும் இசை.
சுருங்கக் கூறின் தமிழ் ஹோலிவூட் படத்துக்கு ஒஸ்கார் நாயகனின் இசை class :)

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு இந்திரனின் மற்றொரு முக்கிய பலம்.
சாபு சிறிலின் மிகப் பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களை மேலும் பிரமாதப்படுத்தி தருவது ஒளிப்பதிவு தான்.
அதுவும் ஒளியமைப்பு - அற்புதம்.

படத்தின் நீளத்தை வெட்டி,நறுக்கி நெறிப்படுத்தி இருப்பதோடு பாடல்காட்சிகளிலும் நான் உள்ளேன் ஐயா சொல்லி இருப்பவர் அன்டனி.
இவர் திறமைக்கு ஒரு சர்வதேசப் படம் கிடைத்து ஒஸ்கார் வெல்லவேண்டும் என அடிக்கடி நினைக்கிறேன்.

அமரர் ஹனீபா,கலாபவன் மணி வருவன தலா ஒவ்வொரு காட்சிகளே ஆனாலும் முக்கியமானவை.
வசனங்களின் பளிச் இடங்கள் அவை.

பாடல் காட்சிகள் வழமையான ஷங்கர் டச்.
அரிமா,இரும்பிலே  பாடல்கள் அரங்க அமைப்பில் அசத்துகின்றன.
இயற்கைக் காட்சிகளால் மனசை அள்ளுவன - காதல் அணுக்கள்,கிளிமஞ்சாரோ..
புதிய மனிதா பாடலின் சில வரிகள் இடை இடையே வந்து வைரமுத்துவின் வரிகளின் வலிமை சொல்கிறது.

ஆனால் எல்லாவற்றிலும் புதுமை பார்க்க எண்ணும் ஷங்கரும் கூட இன்னும் கோஷ்டி நடனங்களையே நம்பி இருப்பது ஏன்?
ரஹ்மானும் வைரமுத்துவும்,கார்க்கியும் படைத்த வித்தியாச படைப்பாற்றலை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தி இருக்கலாமே..
பிரம்மாண்டமாக இருப்பவை மனசில் நிலைகொள்ளாமல் போகலாம்.

 முக்கோணக் காதல் முதல் தடவை வெளிப்படுத்தப்படும் இடமும், இரு ரஜினிகளும் ஐஸ்வர்யா ராயும் சந்திக்கும் இடங்களும்,தீ விபத்தில் ரோபோ காப்பாற்றும் இடமும் பரபரப்பானவை.
வசனங்களும் நறுக்கென்று இருக்கும் இடங்கள் இவை.

இன்னுமிரு நெகிழ்வான இடங்கள் ரோபோ பார்க்கும் பிரசவம் (ரோபோ தன் உணர்ச்சியை முதல் தடவை காட்டுவதாக ரஜினி தனது நடிப்பின் பரிமாணத்தைக் காட்டுகிறார்) மற்றும் climax dismantle காட்சி.
ஆனால் ஷங்கரிடம் இதை விட அதிகமாக எதிர்பார்த்தேன்.

கதை இப்படித்தான் என்று ஏற்கெனவே தெரிந்தபின்னும், பாடல்கள் மூலமாக மேலும் ஊகித்த பின்னும்,160 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாகும் படம் என்பதனால் பிரம்மாண்டம் பற்றி அறிந்த பின்னரும் நான் எதிர்பார்த்த ஷங்கரின் கனவுப் படைப்பு மேலும் வித்தியாசமானது. 
 
சுஜாதாவின் பங்கும் இருக்கிறது என்றவுடன் முன்னைய சுஜாதாவின் படைப்புக்களின் தழுவல் அல்லது சாயல் (முக்கியமாக என் இனிய இயந்திரா) இருக்கும் என்று இறுதிவரை எதிர்பார்த்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே.
சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஷங்கரின் சிவாஜிக்கும் அந்நியனுக்கும் முன்னர் வந்திருந்தால் இக் கதையை வரவேற்றிருப்போம்.
ஆனால் இந்தக் காலத்தில் முதல் படம் எடுக்க வருபவனே கதைக்குள் பல புதுமைகள்,பல திருப்பங்கள் வைத்து ஆச்சரியப்படுத்தும் போது, ஷங்கர் பணம் + பிரம்மாண்டம் என்ற பூச்சோடு ரஜினி என்ற மாயாஜாலத்தை இப்படி சாதாரணமாக பயன்படுத்தி இருப்பது கொஞ்சம் ஏமாற்றமே.

சன் டிவியும்  ரஜினி ரசிகர்களும் தமிழில் எந்திரனை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். வட இந்தியாவில்?

எந்திரன் பிரம்மாண்டம்_தொழிநுட்பத்தில் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத மைல் கல். ஆனால் கதை,திரைக்கதையில் ஷங்கர் பத்தாண்டுக் கனவு போலவே பத்தாண்டுக்கு முன் நிற்கிறார்.

அத்துடன் உண்மையான ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் ஏக்கப்படவே கூடும்..  சிவாஜியில் அதிரடித்த ரஜினி இங்கே அடக்கி வாசிப்பது கதைக்கேற்பவே என்றாலும் கூட ரஜினி காந்த் என்ற சூப்பர் ஸ்டாரிடம் ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்ப்பது எதை என்பதை சாதாரண ரசிகனும் சொல்வானே.
என்னைப் பொறுத்தவரை

எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)


76 Responses to "எந்திரன்"

  • yazarshareek

    im waited for your post about the film and now i got that.. very nice.

  • கன்கொன் || Kangon

    // அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். //

    அட... நம்ம விஜய் வசனமாச்சே இது? ;-)
    விஜய் இரசிகர் லோஷன் அண்ணா வாழ்க... :-)

    விமர்சனத்திற்கு நன்றி. :-)
    ஷங்கரின் பத்தாண்டுகால உழைப்புப் படத்தை என் ஐந்தாண்டுகால திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். ;-)

  • murugaih

    எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)

    100% i agree with this....

  • Bavan

    படம் அருமை, அதுவும் ரோபோ காதலிக்கும், நுளம்பு பிடிக்கும் இடங்கள் அற்புதம்..:)
    எந்திரன் பிடிச்சிருக்கு..:)

  • SShathiesh-சதீஷ்.

    //அவரது கவர்ச்சி எனக்கென்னவோ அருவருப்பாக இருக்கிறது.முதிர் கவர்ச்சி தான் காரணமோ//

    அண்ணே கிழவன்களே இப்பிடி சொன்னால் எங்களை போன்ற இளம் ரத்தநகல் இந்த ஆண்டியை பார்த்து என்ன சொல்லுறது. இருந்தாலும் உங்கள் ஏமாற்றம் புரியிது. தமன்னாவோ ஹன்சிகா வராமலா போக போறாங்க

  • SShathiesh-சதீஷ்.

    கன்கொன் || Kangon said...
    // அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். //

    அட... நம்ம விஜய் வசனமாச்சே இது? ;-)
    விஜய் இரசிகர் லோஷன் அண்ணா வாழ்க... :-)

    தவறான கருத்தபரப்பும் கான்கொன் ஒழிக

  • மைந்தன் சிவா

    விமர்சனம் சரி சூப்பர் அண்ணே,ஆமா எங்க இம்புட்டு காலமா ஆள ஏரியா பக்கமே காணேல!!

  • Subankan

    //சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்//

    இல்லையே! அந்த இரண்டு நாவல்களும் எனக்கு ஏறக்குறைய மனப்பாடம். படத்தின் கதை அவற்றைவிட ஆழம். ஆனால் படத்தின் பல காட்சிகளிலும் அவற்றின் தாக்கத்தை உணர முடிந்தது. முக்கியமாக படத்தின் அவுட்லைன் :)

    //ரஜினி படம் என்றே உணர்வு அழுத்தமாக இல்லாமல்,Typical ஷங்கர் படமாகவே உணரவைக்கிறது.
    //

    என்னண்ணா? வில்லன் ரஜினி (வேறு எப்படிச் சொல்ல?) அதைத் திருப்திப்படுத்தியிருக்கிறாரே? முக்கியமாக ஒரு சிரிப்புச் சிரிப்பாரே, எனக்கு அந்த இடத்தில் 'மலை, அண்ணாமலை' சீன் ஞாபகத்துக்கு வந்தது.

  • Anonymous

    ivalvo kevalam oru nalla padatha vimarsanam eludha ungaluku arugathai illa.

  • அஸ்பர்-இ-சீக்

    பொறுப்பை உணர்ந்து, நடுநிலையான பார்வை.. டிக்கட் விலைதான் கொஞ்ஞம் இடிக்கிது.. 10 நாள் களித்து பார்ப்பதாக எமது boarding முடிவு

  • தமிழ் உதயம்

    எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, படம் குறித்த உண்மையான விமர்சனத்தை இங்கே தான் வாசிக்கிறேன்.

  • Vijayakanth

    அண்ணா உங்க விமர்சனத்தை நல்ல வேளை நான் படம் பார்க்கும் வரை வாசிக்கல...எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு....அங்கங்க அறிவியலும் பொறியியலும் ஷங்கர் ஒரு எஞ்சினியர் என்றத சொல்லுது. சந்திரமுகியை வேட்டையனுக்காக ரசித்த ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக சிட்டிக்காக இந்த எந்திரனையும் ரசிப்பார்கள். வட இந்தியாவில் தமிழ் நாட்டை விட அதிகமாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஏனெனில் அங்கு எதிர்பார்ப்பு இங்கை விட குறைவு...ஆனாலும் அண்ணா முடியுமானால் இன்னொரு முறை போய் படம் பாருங்க உங்களுக்கு இதைவிட வித்தியாசமா எழுத தோணும்.. நீங்க சொன்ன ஷங்கரோட பாடல்கள் விஷயத்தை நானும் ஆமோதிக்கிறேன்..
    என்னை பொறுத்தவரை எந்திரன் எந்திரிச்சுட்டான்

  • Cool Boy கிருத்திகன்.

    அருமையான விமர்சனம்..

  • Anuthinan S

    எந்திரன் - என்னால் ஒரு ரஜனி ரசிகனாக ஏற்று கொள்ள முடியவில்லை!!!

    சங்கர் கனவு படமாகவே பார்த்து இருக்க வேண்டும் அண்ணா!!!

    அடுத்து சங்கர் இயக்க போகும் படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். சுஜாதா இல்லாமல் என்ன கிழிக்க போகிறார் என்று பார்க்கவே!!! ஏன் என்றால் எந்திரனில் சில இடங்களில் அவர் இல்லை என்பது தெரிகிறது!!!

    //எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...//

    REPEAT

  • ஆகில் Aaqil αακιλ

    படம் பாக்கலாமுன்னு சொல்லுரிங்க உம்ம் பாப்பம் பாப்பம்

  • எப்பூடி..

    :-))))))))))))))

  • Mukundan

    >>>>>>>>>எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)>>>>>>>>

    செல்லம் யாரும்மா நீ. இப்படி நீலமா பார்வை எழுதினது கூட மறந்து போச்சு. கடைசீல குசும்பா ரெண்டு வரி ரொம்ப டச் சேஸ்குன்னாவு !
    டச் சேஸ்குன்னாவு !
    டச் சேஸ்குன்னாவு !
    அருமை

  • TechShankar

    Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

  • Nanpan

    m m i agree.
    மேலும் சுஜாதாவுக்கு எந்த வித Tks உம் tittle இல் போடவில்லை என்று நினைக்கிறன். அரிமா அரிமா பாடலில் வரும் 2 Lion "மீண்டும் ஜீனோ" வை ஞாபக படுத்துற மாதிரி இருக்கு.
    யார் அந்த கார்க்கி? இவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களன். எனக்கென்னவோ பாடல்கள் பெருசா எடுபடவில்லை என்றே தோன்றுகிறது. (வழமையான ஷங்கர் touch இல்லை)
    Sun ku இந்த படம் okay. ஆனால் எங்களுக்கு இன்னும் இன்னும் . .

  • பாரத்

    அண்ணா சிட்டி ரஜினி டபுள் வேட்டையன், அதை ரஜினியால் மட்டுமே தரமுடியும்.

  • Nirosh

    லோஷன் அண்ணா என்ன நடந்த ஏன் இத்தனை நாள் இடைவெளி... உங்களுக்கு கமெண்ட் போடாமல் உங்கள் பதிவுகளை படித்துச் சுவைப்பதில் நானும் ஒருத்தன்... உங்கள் வலைத்தளம் வந்து நீண்ட நாற்களாக நிலாக்காதல் தலைப்பப் பார்த்துவிட்டு தேய்ந்து சென்றுகொண்டிருந்தேன் இத்தனை நாளாய்.... இருப்பினும் எந்திரன் விமர்சனத்தின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஆனால் இந்தமுறை எதோ ஒரு குறைபாடு உங்கள் பதிவில் ஏதோ ஒரு குறைபாடு என்னை பூரணமாய் கவரவில்லை ஒருவேளை உங்கள் வேலைப்பளு அல்லது உங்கள் மனநிலை இதை மாற்றி இருக்கலாம்... இருப்பினும் வாழ்த்துக்கள்... மீண்டும் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கும் உங்கள் ரசிகன் நிரோஷ் கட்டாரில் இருந்து..!

  • கண்ணன் - Kannan

    சுஜாதாவின் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா கதைகளின் பாதிப்பு இல்லை என்று கண்டுபிடித்த நீங்கள் iRobot படத்தின் பாதிப்பு ரொம்பவே அதிகமாக இருக்குறது என்பதை உணரவில்லையா???

    அதிலும் சங்கர் தன்னைதானே காட்டிக்கொடுப்பதுபோல் வில்லன் இடைவேளையில் சொல்லுகிறார் “கதை இனி ஆரம்பம்” என்று ... அதன் பின்னரான அனைத்து காட்சிகளிலும் அந்த திரைபடத்தின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது! சிட்டியின் மாற்றத்துக்குரிய காரணம் தவிர !!! :)

  • R.Gopi

    Enthiran is a very good movie....

    Each and everyone who has seen the movie enjoyed it...

    Enthiran is a global blockbuster movie...

  • Mayuran

    படத்தின் கடைசி பாகம் கார்ட்டூன் தனமாக உள்ளது.

  • Balavasakan

    //(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை//

    அண்ணா இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை.. நீங்கள் சிவாஜி போய்ஸ் அல்லது காதலன் பார்த்து இந்த படத்தை விட திருப்திபட்டீர்களா அல்லது சந்திரமுகி குசேலன் பார்த்து இதை விட திருப்திபட்டீர்களா...

    ஷங்கரின் இந்தியன் மட்டுந்தான் ஒரிஜினல் ....அதன் டுப்ளிகெட்தான் அன்னியனும் சிவாஜியும் இந்த படம் ஒன்றுதான் முற்றுமுழுதாக புதிய கதைக்களத்தில் வந்திருக்கிறது இது திருப்தியில்லை என்கிறீர்கள் அப்போ அரைத்த மசாலாவையே திருப்ப அரைக்கணும் ங்கிறீங்களா..????? என்னைப்பொறுத்தவரை இந்தியனுக்கு அடுத்தபடியாக ஷங்கரின் சிறந்த படம் இதுதான்..!!

  • பிரபா

    // Anonymous said...
    ivalvo kevalam oru nalla padatha vimarsanam eludha ungaluku arugathai illa.//

    appa neenga naala ezhuthurathuthaane........ vimarasanam enpathu enna enpathu thangalukku theriyumo nanpare, athusari name poddu vara payanthavanga thaane ungalukku eppidi athellaam theriyum..............

  • Balavasakan

    சன் டிவியும் ரஜினி ரசிகர்களும் தமிழில் எந்திரனை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். வட இந்தியாவில்?///

    இதற்கு விடை இங்க இருக்கண்ணே...!!
    http://www.indiaglitz.com/channels/hindi/article/60445.html


    Verdict: ‘Endhiran’ is a super hit first International Indian Film.

    "there's going to be no another film as spectacular as ‘Endhiran’ in the near future".

    "it may not be possible for anybody from India to make such a brilliantly made hi-tech commercial film ever again".

    The graphic sequences have mesmerized the viewers. The special effects in the film are so life like that one fan challenged to run a contest to identify the graphics sequences with a million dollar prize money.

    One fan more emphatically said “I will not say that ‘Endhiran is influenced by any Hollywood film. ‘Endhiran’ is an original international Indian film".


    The film is running for 165 minutes and the fans felt not a single minute lag. The final 90 minutes are super sonic every one felt.

    The songs also have repeat value with breath taking visuals. Particularly 'Kilimanjaro' song is a visual treat most fans said. One said it’s worth seeing the film for the second time for its songs alone.

    When coming to the man of the moment, the ultimate Tamil Super star Rajinikanth, the fans loved him on screen performing the dual roles.

    They even say Rajini has given an award winning performance In ’Endhiran’. Thalaivar's performance is so natural they felt and he looks more handsome than ever. With no punch dialogues the super star is so natural and in his natural elements. Much like the ever lovable classic Rajini.

    As expected fans confirm Aishwarya Rai makes a perfect pair to Rajinikanth and the jodi rocks on screen.

    The whole world wearing festive looks for ‘Endhiran’. It just can’t get bigger than this.

  • Balavasakan

    This comment has been removed by the author.

  • Balavasakan

    ஐந்தாண்டுகால திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். ;

    ஐந்தாண்டு காலத்துக்கு அறிவ வளர்க்கிறத பின்னுக்கு போடாதீங்க தலைவா பார்த்தா பத்து வீதமாவது அறிவு வளரும்...பொது அறிவு...

  • Balavasakan

    ND tv கூட அதிகபட்சமாக ஐந்துக்கு 3.5 புள்ளி குடுத்திருக்காங்க... உங்களுக்கு என்ன ஆச்சு...???

  • கன்கொன் || Kangon

    அவ்வ்வ்வ்வ்...
    வைத்தியரே...
    இறுதி வருட பரீட்சைகள் வரப்போகுது, போய்ப் படியுங்கய்யா... ;-)

    நினைச்சு நினைச்சு வந்து பின்னூட்டுறமாதிரி இருக்கு... ;-)

  • தர்ஷன்

    ரொம்பவே ஏமாற்றம் உங்கள் பதிவு
    எனக்கு நிறைய என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீநோவும் ஞாபகம் வந்தது.

    சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ. கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ.

    ஷங்கர் படங்களில் இது வரை நான் முதலிடம் கொடுத்திருந்தது முதல்வன், ஜென்டில்மன், இந்தியனுக்கு அடுத்தடுத்த இடங்கள் இனி இதுதான் முதலிடம்.

    // எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)//

    ஒரு வேலை ஷங்கரிடம் ஊரைத் திருத்தும் படங்களையும் ரஜினியிடம் பஞ்ச டைலாக் இத்யாதிகளையும் எதிர்பார்க்கின்றீர்களோ

  • S Ravibalan

    பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது... ஆனால் கடைசியில் இப்பூடி சொல்லிப்புட்டீங்களே... :P

    ///// எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)/////

    ஏன் லோஷன் அண்ணா திருப்தி படமுடியாது...? சங்கரும் ரஜினியும் தங்கள் மாஸ் மசாலா சாயலில் இருந்து திருந்தி நல்ல தரமான திரைப்படம் தந்து இருக்கிறார்கள் என்பது நல்லதொரு விடயமே... ஒருவேளை... அந்த 100 ரஜினி ரோபோடையும் அந்த விஞ்ஞானி "பன்னிகள் தான் கூட்டமாக வரும், சிங்கம் single ஆகத்தான் varum" என்று பஞ்ச் வசனம் பேசி அடித்து துவம்சம் செய்து இனிதே நிறைவு செய்து இருந்தால் திருப்தி அடைந்திருப்பீர்கள் போலும்... :D:D:D

  • fowzanalmee

    I don't expected this type of review from you.

  • Remo Rooban

    Anna, i agree with your review except a few places. I like the film as much as u like.
    Here is the review from NDTV, some of the lines mirror your reviews.

    http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=ENTEN20100155102&subcatg=MOVIESINDIA&keyword=regional&nid=56446

  • ஜீ...

    //சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
    மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா?//

    super!!... :)

    //எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...//

    nice review!!

  • வந்தியத்தேவன்

    பல இடங்களில் ஒத்துப்போகின்றேன். இன்று டிவியில் சிவாஜி பார்த்தேன் அதில் சும்மா அதிருதில்லே என்ன ரஜனி சொல்லும் போது ஏற்படும் உணர்வு ஏனோ எந்திரனில் ஏற்படவில்லை. வித்தியாசமான முயற்சி என்பதால் பாராட்டலாம். மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்.

  • denim

    மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

  • LOSHAN

    yazarshareek said...
    im waited for your post about the film and now i got that.. very nice.//

    tx bro :)


    ==========================

    கன்கொன் || Kangon said...
    // அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். //

    அட... நம்ம விஜய் வசனமாச்சே இது? ;-)//

    ஆ? அவர் எப்போ இதுக்கு காப்புரிமை எடுத்தார்? சொல்லவே இல்ல..


    விஜய் இரசிகர் லோஷன் அண்ணா வாழ்க... :-)//

    தவறான தகவல் பரப்பினால் மான நஷ்ட வழக்குப் போடப்படும்.

    எச்சரிக்கை அல்ல.. இது கட்டளை.. ;)



    விமர்சனத்திற்கு நன்றி. :-)
    ஷங்கரின் பத்தாண்டுகால உழைப்புப் படத்தை என் ஐந்தாண்டுகால திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். ;-)//

    இந்த ஐந்து ஆண்டுகாலத் திட்டம் திட்டம் என்னுரீன்களே.. அதுவரைக்கும் என்ன செய்து கிழிக்கப் போவதாகத் திட்டம்? ;)

    சந்திரனுக்கு ரொக்கட் அனுப்ப ஏதாவது ப்ளான் பண்ணுறீங்களா?

  • LOSHAN

    murugaih said...
    எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)

    100% i agree with this....//

    :) நன்றி.

    =================

    Bavan said...
    படம் அருமை, அதுவும் ரோபோ காதலிக்கும், நுளம்பு பிடிக்கும் இடங்கள் அற்புதம்..:)
    எந்திரன் பிடிச்சிருக்கு..:)//

    ம்ம்ம் காதலிக்கும் ரோபோ?? அதான் பிடிக்குதோ? ம்ம்ம்ம் வயசு..

    =====================

  • LOSHAN

    SShathiesh-சதீஷ். said...
    //அவரது கவர்ச்சி எனக்கென்னவோ அருவருப்பாக இருக்கிறது.முதிர் கவர்ச்சி தான் காரணமோ//

    அண்ணே கிழவன்களே இப்பிடி சொன்னால் எங்களை போன்ற இளம் ரத்தநகல் இந்த ஆண்டியை பார்த்து என்ன சொல்லுறது. இருந்தாலும் உங்கள் ஏமாற்றம் புரியிது. தமன்னாவோ ஹன்சிகா வராமலா போக போறாங்க//

    என்னாது? உங்களை இளம் ரத்தமா? பார்த்து.. ஹன்சிகா? தட் குண்டு பூசணிக்கா? சாரி தம்பி.. ராங் நம்பர்.



    SShathiesh-சதீஷ். said...
    கன்கொன் || Kangon said...
    // அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். //

    அட... நம்ம விஜய் வசனமாச்சே இது? ;-)
    விஜய் இரசிகர் லோஷன் அண்ணா வாழ்க... :-)

    தவறான கருத்தபரப்பும் கான்கொன் ஒழிக//

    அதே அதே.. விஜய் வெறியன் சதீஸ் இருக்கையில் இன்னொருவரா? ;)

  • LOSHAN

    மைந்தன் சிவா said...
    விமர்சனம் சரி சூப்பர் அண்ணே,ஆமா எங்க இம்புட்டு காலமா ஆள ஏரியா பக்கமே காணேல!!//

    நன்றி தம்பி.. விமர்சனம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. இது என் பார்வை அவ்ளோ தான்.. ;)
    கொஞ்ச நாள் வெளிநாடு போயிருந்தேன்.. :)

    ========================

    Subankan said...
    //சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்//

    இல்லையே! அந்த இரண்டு நாவல்களும் எனக்கு ஏறக்குறைய மனப்பாடம். படத்தின் கதை அவற்றைவிட ஆழம். ஆனால் படத்தின் பல காட்சிகளிலும் அவற்றின் தாக்கத்தை உணர முடிந்தது. முக்கியமாக படத்தின் அவுட்லைன் :)//

    எனக்கு மனப்பாடமளவுக்கு இல்லை;ஆனாலும் வாசித்துள்ளேன்.அந்த சுஜாதாவின் இரு படைப்புக்களையும் வாசித்தவர்களுக்கு அதன் பாதிப்புக்கள் இருந்தாலும்,அந்தளவுக்கு திரையில் காட்சிகள் ஈர்க்கவில்லையே என்பது ஏமாற்றமாக இருக்கும் எனத் தன சொல்லி இருக்கிறேன்.

    அவுட்லைன் என்பது பெரியது.. ஆனால் கதை+பாத்திரங்கள் என வரும்போது ரொம்பவே மாறுபடுகிறதே..


    //ரஜினி படம் என்றே உணர்வு அழுத்தமாக இல்லாமல்,Typical ஷங்கர் படமாகவே உணரவைக்கிறது.
    //

    என்னண்ணா? வில்லன் ரஜினி (வேறு எப்படிச் சொல்ல?) அதைத் திருப்திப்படுத்தியிருக்கிறாரே? முக்கியமாக ஒரு சிரிப்புச் சிரிப்பாரே, எனக்கு அந்த இடத்தில் 'மலை, அண்ணாமலை' சீன் ஞாபகத்துக்கு வந்தது.//

    ஆனால் ஷங்கர் படம் தானே? ஹீரோ ரஜினி அடக்கி வாசித்துல்லாறே.. காமெடியன்+வில்லன் (ரோபோ வழி) ரஜினி தான் தெரிகிறார்.
    சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

    ஷங்கரின் கனவுப்படம் தான் தெரிகிறது.

    பல நூறு ரஜினிகள் தோன்றுவதால் மட்டும் ரஜினி படம் ஆகிவிடாது,

  • LOSHAN

    Anonymous said...
    ivalvo kevalam oru nalla padatha vimarsanam eludha ungaluku arugathai illa.//

    நன்றி. அப்படியே எப்படி அந்த அருகதையைப் பெறுவது என்றும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.



    ========================

    அஸ்பர்-இ-சீக் said...
    பொறுப்பை உணர்ந்து, நடுநிலையான பார்வை.. டிக்கட் விலைதான் கொஞ்ஞம் இடிக்கிது.. 10 நாள் களித்து பார்ப்பதாக எமது boarding முடிவு//

    நடுநிலை? :) நன்றி. மனசில் பட்டதை சொன்னேன்.

    ம்ம்.. ஐம்பது ரூபா கூட்டப்பட்டிருக்கு.போட்டதை எடுக்க வேண்டாமா? ;)

  • LOSHAN

    தமிழ் உதயம் said...
    எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, படம் குறித்த உண்மையான விமர்சனத்தை இங்கே தான் வாசிக்கிறேன்.//

    அப்படியா? நன்றி.எதோ மனசில் பட்டதை பதிவிட்டேன்.


    ==================

    Vijayakanth said...
    அண்ணா உங்க விமர்சனத்தை நல்ல வேளை நான் படம் பார்க்கும் வரை வாசிக்கல...எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு....//

    எனக்குப் பிடிக்கலைன்னு எங்கேயும் சொல்லலையே.. :) பிடிச்சிருக்கு. ஆனால் இன்னும் எதிர்பார்த்தேன் அப்பிடின்னு தானே சொல்லி இருக்கிறேன்.



    அங்கங்க அறிவியலும் பொறியியலும் ஷங்கர் ஒரு எஞ்சினியர் என்றத சொல்லுது. //

    அது ஷங்கரின் அநேகப் படங்களில் பார்த்ததே..



    சந்திரமுகியை வேட்டையனுக்காக ரசித்த ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக சிட்டிக்காக இந்த எந்திரனையும் ரசிப்பார்கள். //

    சந்திரமுகியை இங்கே ஒப்பிட முடியாது. அங்கே ரஜினி,ஜோதிகா ஆகியோர் வேட்டையனை விட மேலோங்கி,நிறைத்து இருந்தார்கள்.



    வட இந்தியாவில் தமிழ் நாட்டை விட அதிகமாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஏனெனில் அங்கு எதிர்பார்ப்பு இங்கை விட குறைவு...//

    பார்க்கலாம்.இதுவரை அங்கே இருந்து நல்ல மாதிரியாகத் தான் கருத்துக்கள் வருகின்றன.


    ஆனாலும் அண்ணா முடியுமானால் இன்னொரு முறை போய் படம் பாருங்க உங்களுக்கு இதைவிட வித்தியாசமா எழுத தோணும்.. //

    நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனால் மறுமுறை பார்ப்பதாக உத்தேசம்.இன்னும் சில விஷயங்களைக் கவனிக்க.
    நீங்க சொன்ன ஷங்கரோட பாடல்கள் விஷயத்தை நானும் ஆமோதிக்கிறேன்..//

    :)


    என்னை பொறுத்தவரை எந்திரன் எந்திரிச்சுட்டான்//

    என்னைப் பொறுத்தவரையும்.ஆனால் இன்னும் கொஞ்சம் கம்பீரமாக எந்திரிச்சிருக்கலாம் :)

  • LOSHAN

    Cool Boy கிருத்திகன். said...
    அருமையான விமர்சனம்..//

    நன்றி.. நீங்க தானே அந்த முதல் நாள் ஷோ பார்த்து அனுகூலம் காண்பவர்? ;)


    =========================

    Anuthinan S said...
    எந்திரன் - என்னால் ஒரு ரஜனி ரசிகனாக ஏற்று கொள்ள முடியவில்லை!!!//

    இத தித இதத் தான் நிறைய ரஜினி ரசிகர்களிடம் நான் கேட்டேன்..



    சங்கர் கனவு படமாகவே பார்த்து இருக்க வேண்டும் அண்ணா!!!//

    அப்படிப் பார்த்தும் கொஞ்சம் ஏமாற்றமே...



    அடுத்து சங்கர் இயக்க போகும் படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். சுஜாதா இல்லாமல் என்ன கிழிக்க போகிறார் என்று பார்க்கவே!!! ஏன் என்றால் எந்திரனில் சில இடங்களில் அவர் இல்லை என்பது தெரிகிறது!!!//

    நானும் அக்ரீ வித் திஸ்.. ;)

    ================


    ஆகில் Aaqil αακιλ said...
    படம் பாக்கலாமுன்னு சொல்லுரிங்க உம்ம் பாப்பம் பாப்பம்//

    ஆமாம் பார்க்கலாம்.. நல்லாவே இருக்கு..
    பார்த்தீங்களா?

  • LOSHAN

    எப்பூடி.. said...
    :-))))))))))))))//

    :):):):) ;)


    ====================

    Mukundan said...
    >>>>>>>>>எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)>>>>>>>>

    செல்லம் யாரும்மா நீ. இப்படி நீலமா பார்வை எழுதினது கூட மறந்து போச்சு. கடைசீல குசும்பா ரெண்டு வரி ரொம்ப டச் சேஸ்குன்னாவு !
    டச் சேஸ்குன்னாவு !
    டச் சேஸ்குன்னாவு !
    அருமை//

    டான்க்சுன்னா.. ;) ரசிச்சேன் ..


    ==============

  • LOSHAN

    Nanpan said...
    m m i agree.
    மேலும் சுஜாதாவுக்கு எந்த வித Tks உம் tittle இல் போடவில்லை என்று நினைக்கிறன். அரிமா அரிமா பாடலில் வரும் 2 Lion "மீண்டும் ஜீனோ" வை ஞாபக படுத்துற மாதிரி இருக்கு.//

    உண்மை. சுஜாதவை மறந்த ஷங்கர்.

    ஒரு வரி அஞ்சலியாவது செலுத்தி இருக்கலாம்.


    யார் அந்த கார்க்கி? இவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களன். //

    கார்க்கி - வைரமுத்துவின் புதல்வர். பேராசிரியர்.அறிவியலும் கவிதையும் தேர்ந்தவர்.


    எனக்கென்னவோ பாடல்கள் பெருசா எடுபடவில்லை என்றே தோன்றுகிறது. (வழமையான ஷங்கர் touch இல்லை)//

    இல்லை. பாடல்கள் நல்லாவே இருக்கு.

    இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா இருந்திருக்கலாமோ?


    Sun ku இந்த படம் okay. ஆனால் எங்களுக்கு இன்னும் இன்னும் . .//

    நீங்க சொன்னா சரி தான் :)

  • LOSHAN

    பாரத் said...
    அண்ணா சிட்டி ரஜினி டபுள் வேட்டையன், அதை ரஜினியால் மட்டுமே தரமுடியும்.//

    :) உண்மை. அது ரஜிநிக்கே தான்.

    =================

    Nirosh said...
    லோஷன் அண்ணா என்ன நடந்த ஏன் இத்தனை நாள் இடைவெளி... உங்களுக்கு கமெண்ட் போடாமல் உங்கள் பதிவுகளை படித்துச் சுவைப்பதில் நானும் ஒருத்தன்... உங்கள் வலைத்தளம் வந்து நீண்ட நாற்களாக நிலாக்காதல் தலைப்பப் பார்த்துவிட்டு தேய்ந்து சென்றுகொண்டிருந்தேன் இத்தனை நாளாய்.... இருப்பினும் எந்திரன் விமர்சனத்தின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஆனால் இந்தமுறை எதோ ஒரு குறைபாடு உங்கள் பதிவில் ஏதோ ஒரு குறைபாடு என்னை பூரணமாய் கவரவில்லை ஒருவேளை உங்கள் வேலைப்பளு அல்லது உங்கள் மனநிலை இதை மாற்றி இருக்கலாம்... இருப்பினும் வாழ்த்துக்கள்... மீண்டும் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கும் உங்கள் ரசிகன் நிரோஷ் கட்டாரில் இருந்து..!//



    நன்றி சகோதரா உங்கள் அன்புக்கு.
    குறைபாடு? எனக்கென்றால் புரியவில்லை. :)

  • LOSHAN

    கண்ணன் - Kannan said...
    சுஜாதாவின் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா கதைகளின் பாதிப்பு இல்லை என்று கண்டுபிடித்த நீங்கள் iRobot படத்தின் பாதிப்பு ரொம்பவே அதிகமாக இருக்குறது என்பதை உணரவில்லையா???//

    பல ரோபோக்கள் அடுக்கடுக்காக வருவதும் ஒரு சில காட்சிகளும் தானே?ஆனால் சுஜாதாவின் இரு படைப்புக்களின் பாதிப்பும் இல்லை என நான் சொல்லவில்லையே.. அவை போல தாக்கம் தரவில்லை எனத் தானே சொல்லியுள்ளேன்.

    அதிலும் சங்கர் தன்னைதானே காட்டிக்கொடுப்பதுபோல் வில்லன் இடைவேளையில் சொல்லுகிறார் “கதை இனி ஆரம்பம்” என்று ... அதன் பின்னரான அனைத்து காட்சிகளிலும் அந்த திரைபடத்தின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது! சிட்டியின் மாற்றத்துக்குரிய காரணம் தவிர !!! :)//

    மீண்டும் நான் இரண்டையும் பார்க்கணுமோ? ;)

    ===================

    R.Gopi said...
    Enthiran is a very good movie....

    Each and everyone who has seen the movie enjoyed it...

    Enthiran is a global blockbuster movie...//

    thanks for ur verdict :)

  • LOSHAN

    Mayuran said...
    படத்தின் கடைசி பாகம் கார்ட்டூன் தனமாக உள்ளது.//

    முடிவா? அல்லது அந்த ரோபோ சண்டையா?
    ===============

    Balavasakan said...
    //(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை//

    அண்ணா இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை.. நீங்கள் சிவாஜி போய்ஸ் அல்லது காதலன் பார்த்து இந்த படத்தை விட திருப்திபட்டீர்களா அல்லது சந்திரமுகி குசேலன் பார்த்து இதை விட திருப்திபட்டீர்களா...//

    ஷங்கரின் வழமையான படங்களைப் போலவும் இல்லாமல்,ரஜினியின் குறைந்தபட்சம் சிவாஜி போலவும் இல்லாமல் இருப்பதை சொன்னேன்.

    ஷங்கரின் வளர்ச்சியின் அடுத்த பரிமாணமாக இது வருமென்று எதிர்பார்த்தேன். ஆனால் பிரம்மாண்டத்திலும் தொழிநுட்பத்திலும் காட்டிய வளர்ச்சி கதையிலோ திரைக்கதையிலோ இல்லை என்பதே ஏமாற்றம்.

    பாய்ஸ் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆனால் சிவாஜியும் காதலனும் அந்தந்தக் காலகட்டத்தில் எந்திரனை விடத் திருப்தியளித்தன.



    ஷங்கரின் இந்தியன் மட்டுந்தான் ஒரிஜினல் ....அதன் டுப்ளிகெட்தான் அன்னியனும் சிவாஜியும் இந்த படம் ஒன்றுதான் முற்றுமுழுதாக புதிய கதைக்களத்தில் வந்திருக்கிறது இது திருப்தியில்லை என்கிறீர்கள் அப்போ அரைத்த மசாலாவையே திருப்ப அரைக்கணும் ங்கிறீங்களா..?????என்னைப்பொறுத்தவரை இந்தியனுக்கு அடுத்தபடியாக ஷங்கரின் சிறந்த படம் இதுதான்..!!//

    இது இது தான் நான் சொல்ல வந்தது.. இந்தியனுக்கு அடுத்தபடியாக.. அப்படியானால் நீங்களே சொல்கிறீர்கள். இதைவிட சிறந்த படைப்புக்கள் ஷங்கரிடமிருந்து வந்துள்ளன என்று.

    அதையே நான் எதிர்பார்க்கிறேன். அவற்றைவிட எந்திரன் சிறப்பாக வருமென்று எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாந்தேன்.அதுவும் ஷங்கரின் பத்துவருடக் கனவேன்னும்போது இன்னும் பெரிதாக நினைப்போமில்லையா?

    அரைத்த மாவு? இது மட்டும்? ஹீரோ ஜெயிப்பதும் ஒரு வில்லன் கதாநாயகி மீது ஆசை வைப்பதும் அதை ஹீரோ ஜெயிப்பதும்?

    பிரம்மாணடம்+தொழிநுட்பம் மட்டும் தானே புதிது?

    கதைக்களமும் பல ஆங்கில படங்களில் பார்த்தது தானே?

    இன்னொன்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.. திருப்தியில்லை என்று தான் சொன்னேன். பிடிக்கவில்லை என்று எங்கேயுமே சொல்லவில்லை.

  • LOSHAN

    பிரபா said...
    // Anonymous said...
    ivalvo kevalam oru nalla padatha vimarsanam eludha ungaluku arugathai illa.//

    appa neenga naala ezhuthurathuthaane........ vimarasanam enpathu enna enpathu thangalukku theriyumo nanpare, athusari name poddu vara payanthavanga thaane ungalukku eppidi athellaam theriyum..............//

    எதுக்கு இப்படியெல்லாம் பெரிய வார்த்தை. விட்ருங்க.. :)


    =======================

    Balavasakan said...
    சன் டிவியும் ரஜினி ரசிகர்களும் தமிழில் எந்திரனை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். வட இந்தியாவில்?///

    இதற்கு விடை இங்க இருக்கண்ணே...!!
    http://www.indiaglitz.com/channels/hindi/article/60445.html
    //

    :) வாசித்தேன்.. அவரவர் ரசனை என்று சொல்லலாமா?

  • LOSHAN

    Balavasakan said...
    ஐந்தாண்டுகால திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். ;

    ஐந்தாண்டு காலத்துக்கு அறிவ வளர்க்கிறத பின்னுக்கு போடாதீங்க தலைவா பார்த்தா பத்து வீதமாவது அறிவு வளரும்...பொது அறிவு...//

    ஓவர் டு கண்கோன்..


    ===============

    Balavasakan said...
    ND tv கூட அதிகபட்சமாக ஐந்துக்கு 3.5 புள்ளி குடுத்திருக்காங்க... உங்களுக்கு என்ன ஆச்சு...???//

    :) என் ரசனை இன்னும் வளரனுமோ? ;)

    ===================




    கன்கொன் || Kangon said...
    அவ்வ்வ்வ்வ்...
    வைத்தியரே...
    இறுதி வருட பரீட்சைகள் வரப்போகுது, போய்ப் படியுங்கய்யா... ;-)//

    அப்போ இப்போ அரை வைத்தியரா? ஆயிரம் பேர் கவனமப்பா.. ;)



    நினைச்சு நினைச்சு வந்து பின்னூட்டுறமாதிரி இருக்கு... ;-)//

    :)

  • LOSHAN

    தர்ஷன் said...
    ரொம்பவே ஏமாற்றம் உங்கள் பதிவு
    எனக்கு நிறைய என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீநோவும் ஞாபகம் வந்தது.//

    வரலன்னு நான் சொல்லலையே.. ஆனால் சுஜாதாவின் எழுத்து அளவில் படத்தில் அவை வரவில்லை என்று தான் அபிப்பிராயப்பட்டுள்ளேன்.



    சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ. கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ.//

    ஆனால் சுஜாதா அளவுக்கு இல்லை. இது என் தனிப்பட்ட ரசனை என நினைக்கிறன்.



    ஷங்கர் படங்களில் இது வரை நான் முதலிடம் கொடுத்திருந்தது முதல்வன், ஜென்டில்மன், இந்தியனுக்கு அடுத்தடுத்த இடங்கள் இனி இதுதான் முதலிடம்.//

    :)


    // எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)//

    ஒரு வேலை ஷங்கரிடம் ஊரைத் திருத்தும் படங்களையும் ரஜினியிடம் பஞ்ச டைலாக் இத்யாதிகளையும் எதிர்பார்க்கின்றீர்களோ//

    அப்படியில்லை. ஷங்கரிடம் சிவாஜிக்கு அடுத்தகட்டமாக திரைக்கதையை எதிர்பார்த்தேன்.

    தனியே தொழிநுட்ப முன்னேற்றம் மட்டுமே வளர்ச்சியல்ல..

  • கன்கொன் || Kangon

    // LOSHAN

    ஐந்தாண்டுகால திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். ;

    ஐந்தாண்டு காலத்துக்கு அறிவ வளர்க்கிறத பின்னுக்கு போடாதீங்க தலைவா பார்த்தா பத்து வீதமாவது அறிவு வளரும்...பொது அறிவு...//

    ஓவர் டு கண்கோன்.. //

    ஒரு படம் பாத்து என்ர அறிவு வளர்ற அளவுக்கு நான் ஞானசூனியமா இல்ல எண்டு நம்பிறன். ;-)


    // அப்போ இப்போ அரை வைத்தியரா? ஆயிரம் பேர் கவனமப்பா.. ;) //

    அது ஆயிரம் வேர். ;-)
    வேர்கள வச்சுப் படிக்க வைத்தியர் என்ன சித்த மருத்துவமா படிக்கிறார்? ;-)

  • LOSHAN

    S Ravibalan said...
    பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது... ஆனால் கடைசியில் இப்பூடி சொல்லிப்புட்டீங்களே... :P

    ///// எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
    (திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)/////

    ஏன் லோஷன் அண்ணா திருப்தி படமுடியாது...? சங்கரும் ரஜினியும் தங்கள் மாஸ் மசாலா சாயலில் இருந்து திருந்தி நல்ல தரமான திரைப்படம் தந்து இருக்கிறார்கள் என்பது நல்லதொரு விடயமே... ஒருவேளை... அந்த 100 ரஜினி ரோபோடையும் அந்த விஞ்ஞானி "பன்னிகள் தான் கூட்டமாக வரும், சிங்கம் single ஆகத்தான் varum" என்று பஞ்ச் வசனம் பேசி அடித்து துவம்சம் செய்து இனிதே நிறைவு செய்து இருந்தால் திருப்தி அடைந்திருப்பீர்கள் போலும்... :D:D:D //

    மேலேயுள்ள பதிலே உங்களுக்கும் ரவி :)


    ==================

    fowzanalmee said...
    I don't expected this type of review from you.//

    what to do Bro? Opinions and tastes differ

  • LOSHAN

    Remo Rooban said...
    Anna, i agree with your review except a few places. I like the film as much as u like.
    Here is the review from NDTV, some of the lines mirror your reviews.

    http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=ENTEN20100155102&subcatg=MOVIESINDIA&keyword=regional&nid=56446//

    tx Rooban. i ve already read this. :)
    yep.

    ===============


    ஜீ... said...
    //சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
    மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா?//

    super!!... :)

    //எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...//

    nice review!!//

    thanx

  • LOSHAN

    வந்தியத்தேவன் said...
    பல இடங்களில் ஒத்துப்போகின்றேன். இன்று டிவியில் சிவாஜி பார்த்தேன் அதில் சும்மா அதிருதில்லே என்ன ரஜனி சொல்லும் போது ஏற்படும் உணர்வு ஏனோ எந்திரனில் ஏற்படவில்லை. வித்தியாசமான முயற்சி என்பதால் பாராட்டலாம். மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்.//

    ஒத்துக் கொள்கிறேன்.. உங்கள் பதிவும் சேம் பீலிங்..


    ==============

    denim said...
    மிக அருமையான பதிவு //

    நன்றி.. உங்களுடையதும் வாசித்தேன்.

  • -

    shanker is not createsman, he is very good business man, my point of view may be that is true .............

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...


    ஒரு படம் பாத்து என்ர அறிவு வளர்ற அளவுக்கு நான் ஞானசூனியமா இல்ல எண்டு நம்பிறன். ;-)//

    ஓவர் டு பாலா.. ;)

    ஒரு படத்திலேயே வளராது என்று தெரிந்தால் ஐந்தாண்டு திட்டத்தில் போட்ட மிச்ச படங்களையும் முதலில் பார்க்கவும்.. ;)


    // அப்போ இப்போ அரை வைத்தியரா? ஆயிரம் பேர் கவனமப்பா.. ;) //

    அது ஆயிரம் வேர். ;-)//

    புழக்கத்தில் இருக்கும் பழமொழியை செப்பனிடும் கண்கோனைக் கண்டிக்க யாருமே இல்லையா?


    வேர்கள வச்சுப் படிக்க வைத்தியர் என்ன சித்த மருத்துவமா படிக்கிறார்? ;-)//

    அப்போ இல்லையா? ;)

  • LOSHAN

    - said...
    shanker is not createsman, he is very good business man, my point of view may be that is true .............//

    ur opinion..

    But to me he s an intelligent creator with business ideas and clear vision

  • கன்கொன் || Kangon

    //
    ஒரு படத்திலேயே வளராது என்று தெரிந்தால் ஐந்தாண்டு திட்டத்தில் போட்ட மிச்ச படங்களையும் முதலில் பார்க்கவும்.. ;) //

    அதிக படங்கள் என்பது மக்களது சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, நாட்டின் பிரச்சினைகள் மீதான பார்வையைத் திசைதிருப்புவது தான் நோக்கங்களைக் கொண்டது.
    சிந்திக்கும் திறனை திரைப்படங்கள் மழுங்கடிக்குமே தவிர, அவை ஒருபோதும் வளர்க்காது. ;-)


    // புழக்கத்தில் இருக்கும் பழமொழியை செப்பனிடும் கண்கோனைக் கண்டிக்க யாருமே இல்லையா? //

    பிழையானத திருத்தோணும். ;-)


    // அப்போ இல்லையா? ;) //

    வைத்தியர் ஓடிவரவும்..... ;-)

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...
    //
    ஒரு படத்திலேயே வளராது என்று தெரிந்தால் ஐந்தாண்டு திட்டத்தில் போட்ட மிச்ச படங்களையும் முதலில் பார்க்கவும்.. ;) //

    அதிக படங்கள் என்பது மக்களது சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, நாட்டின் பிரச்சினைகள் மீதான பார்வையைத் திசைதிருப்புவது தான் நோக்கங்களைக் கொண்டது.
    சிந்திக்கும் திறனை திரைப்படங்கள் மழுங்கடிக்குமே தவிர, அவை ஒருபோதும் வளர்க்காது. ;-)//



    தம்பி நான் காலையிலேயே சொன்னது போல நீர் வி.குழுவுக்குப் போம்.. உமக்கான இடம் பிரகாசமா இருக்கு.. ;)

    மேலதிக பயிற்சியை இப்போ நீர் பெரும் ஆளிடமே பெற்றுக் கொள்ளலாம்.. மற்ற மூவரும் ஒன்றும் சொல்லா விட்டால் ;)


    // புழக்கத்தில் இருக்கும் பழமொழியை செப்பனிடும் கண்கோனைக் கண்டிக்க யாருமே இல்லையா? //

    பிழையானத திருத்தோணும். ;-)//

    அப்படியானால் எல்லாப் பிழையானவற்றையும் திருத்தும்..

    ;)


    // அப்போ இல்லையா? ;) //

    வைத்தியர் ஓடிவரவும்..... ;-)//

    ஏன் மீண்டும் வேதாளம்-விக்கிரமாதித்தன் கதை தொடரவா? ;)

  • Sivakanth

    "எந்திரன் பிரம்மாண்டம்_தொழிநுட்பத்தில் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத மைல் கல். ஆனால் கதை,திரைக்கதையில் ஷங்கர் பத்தாண்டுக் கனவு போலவே பத்தாண்டுக்கு முன் நிற்கிறார்."

    Sure.....

  • அஜுவத்

    //ஹீரோ கிழவன் ஆனால் இந்தியன்.
    கிழவன் ஹீரோவானால் எந்திரன்..// ஹ்ம்ம்

    சூப்பர் பதிவு; ஆனா பத்து வருச research எல்லாம் தூக்கி குப்பயில் போர்ரதெல்லாம்(neural scheme ம கூட எடுக்காம) ரொம்பவே ஓவர்

  • ஆகில் Aaqil αακιλ

    /////ஆகில் Aaqil αακιλ said...
    படம் பாக்கலாமுன்னு சொல்லுரிங்க உம்ம் பாப்பம் பாப்பம்//
    LOSHAN - said...
    ஆமாம் பார்க்கலாம்.. நல்லாவே இருக்கு..
    பார்த்தீங்களா?//////

    அம்மம் ஐய்யா பார்த்தாகிவிட்டது படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு சில இடங்களில் லாஜிக் தான் பிழைக்குது

  • fowzanalmee

    எல்லாம் சரி.Enthiran film American box officeல first இடமுன்னு சொன்னாங்களே ஆனா Top 100 ல கூட இல்லையே??????
    Check these websites below.....
    http://www.imdb.com/boxoffice/
    http://boxofficemojo.com/weekend/chart/

    எல்லாம் Sun picture's திரு விளையாட்டா??????

    ஆனால் முதல் முறையா ஒரு தமிழ் டப்பிங் படம் Bollywood top 10 ல firsta நின்னு சாதனை படைக்குதப்பா!!!!!
    http://www.movietalkies.com/

  • fowzanalmee

    Mr X : கடவுள் இருக்காரா இல்லையா ?????

    CHITTI : நான் ஒரு ரோபோ. என்னை உருவாக்கிய Dr.வசீகரன் இதோ இருக்கிறார்.அவர்தான் எனக்கு கடவுள்.உங்களை படைத்த ஏக இறைவன் இருக்கிறான் அவன்தான் உங்கள் அனைவருக்கும் கடவுள்.
    .............................

    ஆஹா என்ன அருமையான விளக்கம்!!!!!!!!!!!!!!!!
    இதற்காகவே எத்தனை தடவையேனும் படம் பார்க்கலாம்.

    இந்த வசனம் இருப்பதினாலோ என்னவோ லோசன் அண்ணாவுக்கு இப்படத்தில் திருப்திபட முடியவில்லை???????????

  • LOSHAN

    Sivakanth said...
    "எந்திரன் பிரம்மாண்டம்_தொழிநுட்பத்தில் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத மைல் கல். ஆனால் கதை,திரைக்கதையில் ஷங்கர் பத்தாண்டுக் கனவு போலவே பத்தாண்டுக்கு முன் நிற்கிறார்."

    Sure.....//

    :)

    =============

    அஜுவத் said...
    //ஹீரோ கிழவன் ஆனால் இந்தியன்.
    கிழவன் ஹீரோவானால் எந்திரன்..// ஹ்ம்ம்//

    நீங்கள் தான் இந்த sms அனுப்பியவர் என்று சொல்லி இருக்கணுமோ? ;)

    ரஜினி ரசிகர்கள் உங்களுக்கு தின்னு கட்டிருவாங்கன்னு நல்ல மனசோடு மறைச்செனப்பா..



    சூப்பர் பதிவு; ஆனா பத்து வருச research எல்லாம் தூக்கி குப்பயில் போர்ரதெல்லாம்(neural scheme ம கூட எடுக்காம) ரொம்பவே ஓவர்//

    அது அவரவர் சூழினலியாயைப் பொறுத்தது.

  • LOSHAN

    ஆகில் Aaqil αακιλ said...

    பார்த்தீங்களா?//////

    அம்மம் ஐய்யா பார்த்தாகிவிட்டது படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு சில இடங்களில் லாஜிக் தான் பிழைக்குது//

    ம்ம்ம்ம் :)


    ==================

    fowzanalmee said...
    எல்லாம் சரி.Enthiran film American box officeல first இடமுன்னு சொன்னாங்களே ஆனா Top 100 ல கூட இல்லையே??????
    Check these websites below.....
    http://www.imdb.com/boxoffice/
    http://boxofficemojo.com/weekend/chart///

    பார்த்தேன்..

    எல்லாம் Sun picture's திரு விளையாட்டா??????//

    தெரியல..ஆனால் நேற்று ஒரு பதிவில் இல் பன்னிரெண்டாவது இடமென்று சொலி இருந்தார்கள்.



    ஆனால் முதல் முறையா ஒரு தமிழ் டப்பிங் படம் Bollywood top 10 ல firsta நின்னு சாதனை படைக்குதப்பா!!!!!
    http://www.movietalkies.com///

    சாதனை தானே? மகிழ்ச்சி,

  • LOSHAN

    fowzanalmee said...
    Mr X : கடவுள் இருக்காரா இல்லையா ?????

    CHITTI : நான் ஒரு ரோபோ. என்னை உருவாக்கிய Dr.வசீகரன் இதோ இருக்கிறார்.அவர்தான் எனக்கு கடவுள்.உங்களை படைத்த ஏக இறைவன் இருக்கிறான் அவன்தான் உங்கள் அனைவருக்கும் கடவுள்.
    .............................

    ஆஹா என்ன அருமையான விளக்கம்!!!!!!!!!!!!!!!!//

    அது ரோபோவுக்கு..
    சிட்டிக்கு தன்னை உருவாக்கிய டாக்டர் வசீகரன் கண்ணுக்கு தெரிகிறார்.

    ஆனால் உங்களுக்கோ எனக்கோ எம்மைப் படைத்ததாக சொல்லப்படும் (!) கடவுள் எப்போதாவது தெரிகிறாரா? எனவே அந்த வாதம் பிழையானது.

    இதற்காகவே எத்தனை தடவையேனும் படம் பார்க்கலாம்.

    இந்த வசனம் இருப்பதினாலோ என்னவோ லோசன் அண்ணாவுக்கு இப்படத்தில் திருப்திபட முடியவில்லை???????????//

    இந்த ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு.. :)

    எங்கே இருந்தய்யா வாறீங்க?

  • fowzanalmee

    Loshan அண்ணா said.....
    //உங்களுக்கோ எனக்கோ எம்மைப் படைத்ததாக சொல்லப்படும் (!) கடவுள் எப்போதாவது தெரிகிறாரா? எனவே அந்த வாதம் பிழையானது.
    //

    நீங்கள் எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவீர்கலேன்றால்..
    உலகில் எல்லாவற்றையும் கண்ணால் கண்ட பின்னர்தான் நம்ப வேண்டும்.
    ஏன் காற்று இருக்கிறது என்று நம்புகின்றீர்கள் ஆனால் காற்றை காண்கின்றீர்களா ???
    நீங்கள் எங்கிருந்தோ வானொலியில் கதைக்கின்றீர்கள் அதை நாங்கள் இங்கிருந்து கேட்கிறோம். அதற்கு காரணமான அலைகளை நீங்கள் கண்ணால் காண்கிறீர்களா??

    சரி சிட்டி வசீகரனால் படைக்கப்பட்டது வசீகரன் யாரால் படைக்கப்பட்டார்???????????

    சில கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்கவும் முடியாது எம்முடைய பகுத்தறிவை வைத்து சிந்திக்கவும் முடியாது........

  • கணேசன் ஜனார்த்தனன்

    வசனங்கள் - சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்று காட்டப்படுகிறது.
    சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
    மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா?



    அண்ணா ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா? என்ற கேள்விக்கு பதில் கார்க்கி வசனமான (கவிதை மட்டும் தான் கார்க்கியின் வசனம் )ரோபோ கவிதை சொல்லும் இடம் உங்களுக்கு ஜவ்வு வசனமா?

  • LOSHAN

    fowzanalmee said...
    Loshan அண்ணா said.....
    //உங்களுக்கோ எனக்கோ எம்மைப் படைத்ததாக சொல்லப்படும் (!) கடவுள் எப்போதாவது தெரிகிறாரா? எனவே அந்த வாதம் பிழையானது.
    //

    நீங்கள் எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவீர்கலேன்றால்..
    உலகில் எல்லாவற்றையும் கண்ணால் கண்ட பின்னர்தான் நம்ப வேண்டும்.
    ஏன் காற்று இருக்கிறது என்று நம்புகின்றீர்கள் ஆனால் காற்றை காண்கின்றீர்களா ???//

    ஆனால் காற்றை உணர்கிறேன்.. கடவுள் இருப்பதை இந்த உலகத்திலே எந்தவொரு செயல்பாட்டினூடாகவும் உணரமுடியவில்லையே..

    இத்தனை மக்கள் பலியான/பலியாகும் பொது அந்த so called கடவுள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?




    நீங்கள் எங்கிருந்தோ வானொலியில் கதைக்கின்றீர்கள் அதை நாங்கள் இங்கிருந்து கேட்கிறோம். அதற்கு காரணமான அலைகளை நீங்கள் கண்ணால் காண்கிறீர்களா??//

    இதையும் உணர்கிறோம்.. காண்பதல்ல.. உணரக் கூடியதாகவாவது இருக்க வேண்டுமே சகோ..



    சரி சிட்டி வசீகரனால் படைக்கப்பட்டது வசீகரன் யாரால் படைக்கப்பட்டார்???????????//

    படைக்கப்படவில்லை. பிறந்தார் என்கிறேன் நான். என்னைப் போல..

    ஆனால் இந்திரனின் வசீகரன் ஷங்கரால் படைக்கப்பட்டார். அப்படியானால் ஷங்கர் கடவுளா? ;)



    சில கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்கவும் முடியாது எம்முடைய பகுத்தறிவை வைத்து சிந்திக்கவும் முடியாது........//

    அப்படி விட்டு விட முடியாது.. ஏன் என்ற கேள்வி கேட்காமல் யாரும் இங்கு இல்லை..

    கடவுள் என்ற ஒன்று இல்லை என விவாதிக்கா லட்சம் காரணங்கள் சொல்ல முடியும்.இருக்கிறார் என்று ஒரு உதாரணம் உறுதியாகக் காட்ட உங்களால் முடியுமா?

  • LOSHAN

    கணேசன் ஜனார்த்தனன் said...
    வசனங்கள் - சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்று காட்டப்படுகிறது.
    சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
    மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா?



    அண்ணா ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா? என்ற கேள்விக்கு பதில் கார்க்கி வசனமான (கவிதை மட்டும் தான் கார்க்கியின் வசனம் )ரோபோ கவிதை சொல்லும் இடம் உங்களுக்கு ஜவ்வு வசனமா?//

    தவறு சகோ..

    அந்த ரோபோ கவிதையை எழுதியவர் நா.முத்துக்குமார்.

    ஷனா! கணனிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி! அவள் தொட்டால் எந்திரம் மனிதனாகும் மனிதன் எந்திரமாவான்! அவள் கூந்தல் கறுப்பு அருவி! அவள் நெற்றி நறுக்கி வைத்த நிலாத்துண்டு! கண்கள் பார்ப்பவர்கள் தொலையும் பெர்முட முக்கோணம்! உதடுகள் படுத்துறங்கும் வரிக்குதிரைகள்! இடை குழந்தைகள் உட்காரும் நாற்காலி! - நா.முத்துக்குமார் (எந்திரன்)

    இதை எவன் ஜவ்வு என்பான்?

    ஆனால் நாம் எல்லோரும் சுஜாதா எழுதியிருப்பார் என்று நினைத்த பல வசனங்கள் கார்க்கியால் எழுதப்பட்டவையாம்.

  • Anonymous

    Найти лучшее: скачать кунг-фу панда dvdrip

  • Anonymous

    Найти лучшее: скачать promt internet 7.0 for firefox


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.