சேவாக் 99 Not out + ரண்டீவ் No ball
ரண்டிவ்- சேவாக்- 99 not out - நோ போல் விவகாரம் சூடு இன்னும் ஆறாமலே இருக்கிறது..
நேற்று முழுக்க எக்கச் சக்க பிசியாக இருந்ததால்(அலுவலகத்துக்கும் போகவில்லை.. இரவு பத்து மணிவரை இணையமும் பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள்) இரவுக்குப் பிறகு இப்போது வரை தான் இந்த விவகாரம் பற்றி முழுக்க வாசித்து அனைத்துப் பக்கக் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டுள்ளேன்.
எனது தனிப்பட்ட கருத்தை அறிந்துகொள்ளப் பலர் ஆர்வம் காட்டியதைப் பார்த்தேன்..
என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆனது விதிகளுக்குட்பட்டு,அதன் மான்மியம்,மேன்மைகளுடன் விளையாடப்பட வேண்டியது..எப்படி வேண்டுமானாலும் என்பதல்ல,இப்படித் தான் விளையாடப்பட வேண்டும் என்று எப்போதும் விரும்புபவன்.
சுராஜ் ரண்டிவ் அன்று செய்தது அவர் வேண்டுமென்றே தெரிந்தே செய்திருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது.
கிரிக்கெட்டில் கண்ணியமாக விளையாட வேண்டியதும் Fair play என்பதும் இருக்க வேண்டும்.
ரன்டிவை வேறு யாராவது தூண்டி விட்டிருந்தால் அவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே..
இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தான் சூத்திரதாரி என்று வாய் கிழியப் பாய்ந்து பாய்ந்து கத்திய இந்திய ஊடகங்கள் இன்று டைம்ஸ் நாளிதழினால் மூக்குடைபட்டு நிற்கின்றன.
அது டில்ஷானாம்..
ஹர்ஷா போகலே தனது ட்விட்டரில் அவசரப்பட்டு சங்காவைக் குற்றம் சுமத்திய இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.
times now saying dilshan was the instigator.so what about the allegations against sangakkara?am waiting for an apology from indian media.
indian media quick to level allegations. can they look inwards? is it fair to haul an honourable man over the coals? evidence unnecessary?
there was a time when accuracy and decency were the hallmarks of journalism.now speed and disregard for people.
the performance of the media that insinuated against sangakkara was far worse than what randiv did. randiv apologised. can we?
ஆரம்பத்தில் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று கூறிய சேவாக்(பரிசளிப்பில்) பின்னர் குய்யோ முறையோ என்று முறையிட்டதும், கட்டாக் மைதானத்தில் சச்சினை அடிக்க விடவில்லை.. இலங்கை அணியில் பலருக்கும் நான் சதம் அடிப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
(கட்டாக் போட்டியில் சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்தது தினேஷ் கார்த்திக்கா அல்லது லசித் மாலிங்கவா? நல்லத் தேடிப் பாருங்கப்பா.)
அதுவும் ரண்டீவ் மன்னிப்புக் கேட்டதாக அவரே தனது ட்விட்டரில் சொன்ன பிறகு..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும் சங்கக்காரவும் பெரிய மனசுடன் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
செவாக்கோ தோனியோ இப்போது அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டபிறகும் இன்னும் சில விமர்சனப் புண்ணாக்குகள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பது எரிச்சலாயும் வேடிக்கையாயும் இருக்கிறது.
விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..
சேவாகிற்கு சதம் அடிக்க முடியாமல் போனதற்கு ரண்டிவ் நோ போல் மட்டுமல்ல.. ICC விதிகளும் ஒரு காரணமே..
நோ போல் பந்தின் ஒரு ஓட்டத்துடன் வெற்றி கிடைத்தால் அந்தப் பந்தில் பெறப்பட்ட சிக்சர் செல்லாது என்ற விதி பத்தாண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிவரும் செவாகிற்கே தெரியாத போது இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கும் ரண்டீவுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை.
ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.
ஆனால் 2002 ஆம் ஆண்டு கண்டியில் டெஸ்ட் போட்டியொன்றில் கங்குலி சதம் அடிப்பதை இலங்கை தடுத்தது என்று சொல்வதும்,1986 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்ட்டில் அசாருதீனை 199 ஓட்டங்களில் LBW மூலம் இலங்கை ஆட்டமிழக்க செய்திருக்கக் கூடாது என்று சொல்வதும் ரொம்பவே ஓவர்...
அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது..
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே..
இன்னொரு முக்கியமான தகவல்..
இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்..
இவர்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள்???
இன்னும் சில சுவாரஷ்யங்களைப் பதிவில் பகிர்ந்துகொள்ள எண்ணினேன்..
இவை பல்வேறு தளங்கள்,ட்விட்டர்களில் கண்டெடுத்தவை..
ரண்டீவ் செய்தது பிழை என இலங்கை அணியின் தீவிர ரசிகர்களே ஒத்துக் கொண்ட பிறகும் பொதுமைப் படுத்தி இலங்கையரையும் இலங்கையின் ஒட்டுமொத்த அணியையும் பலர் தாக்குவது கண்டே இந்த மொக்கை போடலாம் என்று எண்ணம் வந்தது.
மொக்கைக்குள்ளும் சில முக்கிய உண்மைகள் சுட்டால் நான் பொறுப்பல்ல..
அதே ரண்டிவ் ஓவரில் முதல் பந்தை சங்கா பிடிக்கத் தவறி பை ஓட்டங்கள் நான்கு கிடைத்ததும் சங்கா வேண்டுமென்றே செய்ததாம்.. சிலர் சொல்கிறார்கள்.. இவனுங்களை என்ன செய்வது?
அடுத்த இரு பந்துகளும் ரண்டிவினால் சேவாக்கை ஓட்டம் பெறாமல் செய்த நல்ல பந்துகள் தானே?
அந்த இரண்டு பந்துகளையும் கூட அவர் நோ போல்களாகவோ,வைட்களாகவோ போட்டிருக்கலாமே? (ஒரு தர்க்கத்துக்காக)
ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே தவறாகப் பார்த்துவிட முடியாது..
கங்கோனின் ஒரு தர்க்க நியாயப் பதிவை வெகுவாக ரசித்தேன்..
ரந்தீவின் நோ போலும் என் கருத்துக்களும்...
ஆதரவாகவும் எதிராகவும் வந்த பின்னூட்டங்களும் பல விஷயங்களை(நாம் அறியா விஷயங்களையும்) தெளிவுபடுத்தியுள்ளன.
* ரோஸ் டெய்லர்,சங்கா தயவு செய்து சேவாக்கை சதம் அடிக்க விடுங்கப்பா.. இல்லேன்னா ஊடகவியலாளர் மத்தியில் அழுதிரப்போறார்..
*மிஸ்டர்.சேவாக் பங்களாதேசைப் பார்த்து Ordinary team என்று சொன்னபோது அவர்களுக்கும் இப்படித் தானே வலித்திருக்கும்?
*ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று சொன்னானாம்..
டோனி தம்புள்ளை பயிற்சி ஆடுகளங்கள் ஆபத்தானவை என்று அழுதார்..
இப்போது சேவாக் சதம் அடிக்க விடல என்று அழுகிறார்.
Pretty lame on the part of the bowler to pull a stunt like this, but good on him for having the decency to come forward and apologize.
சச்சின் இவர்கள் அணியில் இருப்பது பெரிய ஆச்சரியம்.
*ICC இனியொரு விதி கொண்டுவரவேண்டும். யாராவது துடுப்பாட்ட வீரர் சதம் அடிக்காமல் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் பந்துவீசிய பந்துவீச்சாளர் மன்னிப்புக் கேட்கவேண்டும்..
Just got the news that Dilhara Fernando going all around the cricketers' rooms to apologize for his no balls. :D
To avoid suspicion in the future SLC has ordered bowlers a no ball every 2 overs #NoBallSaga
SLC to probe about Virat Kohli and Rohit Sharma got only 0 runs. If this pre-planned, action likely against bowlers. #NoBallSaga
What? Tharanga missed a century in the last match? Got only 0? Why they didn't bowl easy balls to him? #IamFromIndianMedia
Why indians didn't bowl easy balls to these people? http://bit.ly/9LBSsj #SehwagWants100 #IamFromIndianMedia
Indians should've bowled easy balls to help them reach 100. #SehwagWants100
India denied century to Mahela (94*) in Dambulla, to Kandamby (93* & 91*), Mahanama (92*) by not bowling easy balls. #SehwagWants100
*முதல் இரு பந்துகள் நல்லபடி வீசிய பிறகே ரண்டீவ் நோ போல் பந்தை வீசியுள்ளார். எனவே சேவாக்கின் இயலாமைக்கு என் சுராஜ் ரண்டீவ் குற்றவாளியாக்கப் படவேண்டும்?
*சுராஜ் ரண்டீவை தண்டிக்கச் சொல்கிறார்.. பேடி.. இவருக்கென்ன அருகதை இருக்கிறது? Sportsmanship பற்றிக் கதைக்க?
உலகின் மிகச் சிறந்த சாதனையாளரை ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சல்காரர் தானே பேடி..
*ரண்டீவ் தன மீது தவறு இருக்கிறதோ இல்லையோ மன்னிப்புக் கேட்டார். ஆனால் அம்லா விவகாரத்தில் சேவாக் மன்னிப்பும் கேட்கவில்லையே?
*கட்டாயம் சதம் அடிக்க இலகுவாகப் பந்து போட்டிருக்கனுமா?எதிரணியின் வீரர்கள் பெரும் ஒவ்வொரு மைல் கல்லும் கூட எதிரணியின் வெற்றியாக அமைவதால் அதையும் கொடுக்கக் கூடாது என்பதே வீரர்களின் நோக்காக இருக்கவேண்டும்.
எனவே ரண்டீவ் செய்தது சரியே.
பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..
I DONOT THINK ITS A BIG DEAL!!!! SEHWAG CANT SAY THAT SRILANKA DID NOT WANT HIM TO GET THAT 100!!!JUST BECAUSE HE'S IN FORM DOESN'T MEAN THAT IT'S COMPULSORY TO GET HIS 100!!!!IT WOULD BE A STRANGE THING IF EVERY TEAM SHOULD ALLOW ONE OF THE OPPOSITION'S PLAYERS TO GET A 100 IF THERE ON 95 OR MORE.
அடித்தால் ஓட்டம் எடுத்து விடுவான்(சேவாக்) என சங்கா சொல்வதாக வீடியோவில் குரல் பதிவாகியுள்ளது.
அப்படிஎனினும் நோ போல் போடுமாறு சங்கா சொல்லவில்லையே?
அடிக்க முடியாதவாறு கஷ்டமான பந்தை வீசுமாறு சொல்லி இருக்கலாமே.
UDRSஐ இந்தியா முதலில் ஏற்கட்டும் அதன் பின் Sportsmanship பற்றிப் பேசட்டும்..
Dear Aravida & SLC. Please ban Randiv at least 1 year and strip the captaincy of Sanga. Both Sanga & Randiv sould be responsible & both should be punished. This is shame and ridiculus. Sanga got now Aussie attitude. He criticized India after the second test saying India had a bad/negative attitude. Thereafter SL lost 3rd test and the ODI. Who got the bad attitude by bowling a No Ball purposely? India or SL. If these two are not punished, I will never support SL cricket.
This is a joke. Randhiv apologizing for Sehwag's inability to score the century. SLC has no backbone. It wasnt intentional. If it was why did Randhiv bowled to legal deliveries to him before the no ball. ICC must make a rule - every bowler must apologize to the batsman if he fails to score a century. Grow up Sehwag
சச்சின் என்ற கண்ணியவான் எத்தனை தடவை சதங்களை மற்றவர்களால் தவறவிட்டும் எப்போதும் யாரையும் குறை சொன்னதில்லையே.. (கட்டாக் உட்பட) இவர் மட்டும் என் இப்படி ?
I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?
BCCI to probe on Ojha and Ishant's resistance when Murali was trying to get 800 wickets, says it's not sportsmanship. #NoBallSaga
வேறு யார் செய்திருந்தாலும் இதைக் கணக்கெடுக்காமல் இருந்திருக்கலாம்.. இலங்கையிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான செயலை நாம் எதிர்பார்க்கவில்லை.
பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..
From the days of Ranatunga & Mendis the lankans have a hateful mentality towards Indians. Remember how Jayasurya & co. batted on for 900 odd runs in a test innings without declaring & how PM Rajiv Gandhi was attacked in lanka. The Lankans have taken us for granted & are not shying away from insulting us. The amount of money they are milking by playing India again & again is not a good gesture in their eyes & Indian players are not gaining anything by playing sub-standard competitors.Instead playing Australia will at least guarantee competitive cricket. Look at Pakistan, the moment India stopped playing with them, they are ruined financialy & their cricket is in disarray. Now is time to show the Lankan board & players their true place in the cricket heiarchy & let us show the weight of 1.25 billion people to them.
வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு இது அழகில்லை. ரண்டீவ் செய்தது தவறு என்ற தெரிந்த படியால் தானே சேவாக்கிடம் போய் மன்னிப்புக் கேட்டார்?
Randiv didn't want him to score a 100. Its simple as that. If a team is winning a match and one of their batsman is on 99, would you let him score 100 simply becoz u r going to lose anyway? I think Randiv did the right thing by preventing Mr Sehwag from scoring a 100 on a dead asian pitch.
இப்படியாக இரு பக்கக் கருத்துக்களும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன..
வாதம்,விவாதம் செய்யப் போனால் தர்க்கிக்க,தாக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன..
யாருமே இங்கே கிரிக்கெட்டில் எல்லா நேரத்திலும் உத்தமர்கள் கிடையாது..
கிரிக்கெட்டின் வரலாற்றுப் புத்தகங்களை,அதன் கறுப்புப் பக்கங்களையும் சேர்த்தே புரட்டிப் பாருங்கள்..
இதைத் தான் கங்கோனும் இன்றைய கும்மியில் சொல்லி இருந்தார்..
ரந்தீவ் செய்தது வேணுமெண்டுதான், என்னைப் பொறுத்தவரை.
ஆனா திட்டமிடப்பட்டதல்ல...
அதுதான் என் கருத்து.
நீங்க விளையாடிக் கொண்டிருக்கும்போது சில விடயங்கள் உங்களை மீறி, உங்கட மனச்சாட்சி வேல செய்யாம நடக்கும்.
நான் ஒரு பதிவு எழுதினன் எண்டு நினைக்கிறன் நான் துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில நிண்டு ஒரு பிடிய பிடிக்கும்போது நிலத்திலயும் பந்து பட்டு பிடிச்சிற்கு ஆட்டமிழப்புக் கேட்டன் எண்டு.
அந்தக் கணத்தில ஒண்டுமே தெரியாது.
ஆட்டமிழப்புக் கேட்கும்போது எங்கள மீறினதுதான் நடக்கும்.
நடுவர்கள் அந்தப் பிடி சரியா எண்டு கதைக்கும்போதுதான் எனக்கு பந்து நிலத்தில பட்டது எண்டு நினைவுக்கு வந்தது, ஆனா எனக்கு (சுய)நினைவு வரும்போது என்னால சொல்ல முடியாது, ஏனென்டா நடுவர்கள் கதைச்சு முடிக்கிற கட்டம்.
இதுதான் கிறிக்கற்.
ரந்தீவிற்கும் இதுதான் நடந்திருக்கும்.
அந்தக்கணத்தில தன்னைத்தாண்டி அதச்செய்திற்று பிறகு அந்த மனநிலையில இருந்து வெளில வரேக்க மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவனுக்கும் தான் செய்தது பிழை எண்டு விளங்கும்.
வருத்தம் தெரிவிக்குமளவிற்கு ரந்தீவ் நல்ல மனதுக்காரர்.
என் மனதில நான் வேணுமெண்டு போட்டன் எண்டு எனக்கு மட்டும் தான் தெரியும்.
ஐசிசி கண்டுபிடிக்க முடியாது.
ஏன் பெரிய நோ போல் போட்டாய் எண்டு ஐசிசி கேட்டா இதுக்கு முதல் யாருமே பெரிய நோ போல் போட்டதில்லயா எண்டு தர்க்கரீதியா கதைக்கலாம்.
எனது கருத்தும் இதே..
கமல் விருமாண்டியில் சொன்னது போல..
மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்.. மன்னிப்புக் கொடுக்கிறவன் பெரிய மனுஷன்..
ஆனால் ஒன்று இனிமேல் எந்தவொரு பந்துவீச்சாளரும் 99 ஓட்டங்களைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்ய துணியமாட்டார்..
அத்துடன் நோ போல் போடுகிற ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எல்லாரும் சந்தேகப்படப் போறாங்களே..
போடுவியா? இனிமேல் நோ போல் போடுவியா?
நேற்று முழுக்க எக்கச் சக்க பிசியாக இருந்ததால்(அலுவலகத்துக்கும் போகவில்லை.. இரவு பத்து மணிவரை இணையமும் பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள்) இரவுக்குப் பிறகு இப்போது வரை தான் இந்த விவகாரம் பற்றி முழுக்க வாசித்து அனைத்துப் பக்கக் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டுள்ளேன்.
எனது தனிப்பட்ட கருத்தை அறிந்துகொள்ளப் பலர் ஆர்வம் காட்டியதைப் பார்த்தேன்..
என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆனது விதிகளுக்குட்பட்டு,அதன் மான்மியம்,மேன்மைகளுடன் விளையாடப்பட வேண்டியது..எப்படி வேண்டுமானாலும் என்பதல்ல,இப்படித் தான் விளையாடப்பட வேண்டும் என்று எப்போதும் விரும்புபவன்.
சுராஜ் ரண்டிவ் அன்று செய்தது அவர் வேண்டுமென்றே தெரிந்தே செய்திருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது.
கிரிக்கெட்டில் கண்ணியமாக விளையாட வேண்டியதும் Fair play என்பதும் இருக்க வேண்டும்.
ரன்டிவை வேறு யாராவது தூண்டி விட்டிருந்தால் அவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே..
இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தான் சூத்திரதாரி என்று வாய் கிழியப் பாய்ந்து பாய்ந்து கத்திய இந்திய ஊடகங்கள் இன்று டைம்ஸ் நாளிதழினால் மூக்குடைபட்டு நிற்கின்றன.
அது டில்ஷானாம்..
ஹர்ஷா போகலே தனது ட்விட்டரில் அவசரப்பட்டு சங்காவைக் குற்றம் சுமத்திய இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.
times now saying dilshan was the instigator.so what about the allegations against sangakkara?am waiting for an apology from indian media.
indian media quick to level allegations. can they look inwards? is it fair to haul an honourable man over the coals? evidence unnecessary?
there was a time when accuracy and decency were the hallmarks of journalism.now speed and disregard for people.
the performance of the media that insinuated against sangakkara was far worse than what randiv did. randiv apologised. can we?
ஆரம்பத்தில் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று கூறிய சேவாக்(பரிசளிப்பில்) பின்னர் குய்யோ முறையோ என்று முறையிட்டதும், கட்டாக் மைதானத்தில் சச்சினை அடிக்க விடவில்லை.. இலங்கை அணியில் பலருக்கும் நான் சதம் அடிப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
(கட்டாக் போட்டியில் சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்தது தினேஷ் கார்த்திக்கா அல்லது லசித் மாலிங்கவா? நல்லத் தேடிப் பாருங்கப்பா.)
அதுவும் ரண்டீவ் மன்னிப்புக் கேட்டதாக அவரே தனது ட்விட்டரில் சொன்ன பிறகு..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும் சங்கக்காரவும் பெரிய மனசுடன் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
செவாக்கோ தோனியோ இப்போது அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டபிறகும் இன்னும் சில விமர்சனப் புண்ணாக்குகள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பது எரிச்சலாயும் வேடிக்கையாயும் இருக்கிறது.
விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..
சேவாகிற்கு சதம் அடிக்க முடியாமல் போனதற்கு ரண்டிவ் நோ போல் மட்டுமல்ல.. ICC விதிகளும் ஒரு காரணமே..
நோ போல் பந்தின் ஒரு ஓட்டத்துடன் வெற்றி கிடைத்தால் அந்தப் பந்தில் பெறப்பட்ட சிக்சர் செல்லாது என்ற விதி பத்தாண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிவரும் செவாகிற்கே தெரியாத போது இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கும் ரண்டீவுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை.
ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.
ஆனால் 2002 ஆம் ஆண்டு கண்டியில் டெஸ்ட் போட்டியொன்றில் கங்குலி சதம் அடிப்பதை இலங்கை தடுத்தது என்று சொல்வதும்,1986 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்ட்டில் அசாருதீனை 199 ஓட்டங்களில் LBW மூலம் இலங்கை ஆட்டமிழக்க செய்திருக்கக் கூடாது என்று சொல்வதும் ரொம்பவே ஓவர்...
அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது..
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே..
இன்னொரு முக்கியமான தகவல்..
இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்..
இவர்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள்???
இன்னும் சில சுவாரஷ்யங்களைப் பதிவில் பகிர்ந்துகொள்ள எண்ணினேன்..
இவை பல்வேறு தளங்கள்,ட்விட்டர்களில் கண்டெடுத்தவை..
ரண்டீவ் செய்தது பிழை என இலங்கை அணியின் தீவிர ரசிகர்களே ஒத்துக் கொண்ட பிறகும் பொதுமைப் படுத்தி இலங்கையரையும் இலங்கையின் ஒட்டுமொத்த அணியையும் பலர் தாக்குவது கண்டே இந்த மொக்கை போடலாம் என்று எண்ணம் வந்தது.
மொக்கைக்குள்ளும் சில முக்கிய உண்மைகள் சுட்டால் நான் பொறுப்பல்ல..
அதே ரண்டிவ் ஓவரில் முதல் பந்தை சங்கா பிடிக்கத் தவறி பை ஓட்டங்கள் நான்கு கிடைத்ததும் சங்கா வேண்டுமென்றே செய்ததாம்.. சிலர் சொல்கிறார்கள்.. இவனுங்களை என்ன செய்வது?
அடுத்த இரு பந்துகளும் ரண்டிவினால் சேவாக்கை ஓட்டம் பெறாமல் செய்த நல்ல பந்துகள் தானே?
அந்த இரண்டு பந்துகளையும் கூட அவர் நோ போல்களாகவோ,வைட்களாகவோ போட்டிருக்கலாமே? (ஒரு தர்க்கத்துக்காக)
ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே தவறாகப் பார்த்துவிட முடியாது..
கங்கோனின் ஒரு தர்க்க நியாயப் பதிவை வெகுவாக ரசித்தேன்..
ரந்தீவின் நோ போலும் என் கருத்துக்களும்...
ஆதரவாகவும் எதிராகவும் வந்த பின்னூட்டங்களும் பல விஷயங்களை(நாம் அறியா விஷயங்களையும்) தெளிவுபடுத்தியுள்ளன.
* ரோஸ் டெய்லர்,சங்கா தயவு செய்து சேவாக்கை சதம் அடிக்க விடுங்கப்பா.. இல்லேன்னா ஊடகவியலாளர் மத்தியில் அழுதிரப்போறார்..
*மிஸ்டர்.சேவாக் பங்களாதேசைப் பார்த்து Ordinary team என்று சொன்னபோது அவர்களுக்கும் இப்படித் தானே வலித்திருக்கும்?
*ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று சொன்னானாம்..
டோனி தம்புள்ளை பயிற்சி ஆடுகளங்கள் ஆபத்தானவை என்று அழுதார்..
இப்போது சேவாக் சதம் அடிக்க விடல என்று அழுகிறார்.
Pretty lame on the part of the bowler to pull a stunt like this, but good on him for having the decency to come forward and apologize.
சச்சின் இவர்கள் அணியில் இருப்பது பெரிய ஆச்சரியம்.
*ICC இனியொரு விதி கொண்டுவரவேண்டும். யாராவது துடுப்பாட்ட வீரர் சதம் அடிக்காமல் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் பந்துவீசிய பந்துவீச்சாளர் மன்னிப்புக் கேட்கவேண்டும்..
Just got the news that Dilhara Fernando going all around the cricketers' rooms to apologize for his no balls. :D
To avoid suspicion in the future SLC has ordered bowlers a no ball every 2 overs #NoBallSaga
SLC to probe about Virat Kohli and Rohit Sharma got only 0 runs. If this pre-planned, action likely against bowlers. #NoBallSaga
What? Tharanga missed a century in the last match? Got only 0? Why they didn't bowl easy balls to him? #IamFromIndianMedia
Why indians didn't bowl easy balls to these people? http://bit.ly/9LBSsj #SehwagWants100 #IamFromIndianMedia
Indians should've bowled easy balls to help them reach 100. #SehwagWants100
India denied century to Mahela (94*) in Dambulla, to Kandamby (93* & 91*), Mahanama (92*) by not bowling easy balls. #SehwagWants100
*முதல் இரு பந்துகள் நல்லபடி வீசிய பிறகே ரண்டீவ் நோ போல் பந்தை வீசியுள்ளார். எனவே சேவாக்கின் இயலாமைக்கு என் சுராஜ் ரண்டீவ் குற்றவாளியாக்கப் படவேண்டும்?
*சுராஜ் ரண்டீவை தண்டிக்கச் சொல்கிறார்.. பேடி.. இவருக்கென்ன அருகதை இருக்கிறது? Sportsmanship பற்றிக் கதைக்க?
உலகின் மிகச் சிறந்த சாதனையாளரை ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சல்காரர் தானே பேடி..
*ரண்டீவ் தன மீது தவறு இருக்கிறதோ இல்லையோ மன்னிப்புக் கேட்டார். ஆனால் அம்லா விவகாரத்தில் சேவாக் மன்னிப்பும் கேட்கவில்லையே?
*கட்டாயம் சதம் அடிக்க இலகுவாகப் பந்து போட்டிருக்கனுமா?எதிரணியின் வீரர்கள் பெரும் ஒவ்வொரு மைல் கல்லும் கூட எதிரணியின் வெற்றியாக அமைவதால் அதையும் கொடுக்கக் கூடாது என்பதே வீரர்களின் நோக்காக இருக்கவேண்டும்.
எனவே ரண்டீவ் செய்தது சரியே.
பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..
I DONOT THINK ITS A BIG DEAL!!!! SEHWAG CANT SAY THAT SRILANKA DID NOT WANT HIM TO GET THAT 100!!!JUST BECAUSE HE'S IN FORM DOESN'T MEAN THAT IT'S COMPULSORY TO GET HIS 100!!!!IT WOULD BE A STRANGE THING IF EVERY TEAM SHOULD ALLOW ONE OF THE OPPOSITION'S PLAYERS TO GET A 100 IF THERE ON 95 OR MORE.
அடித்தால் ஓட்டம் எடுத்து விடுவான்(சேவாக்) என சங்கா சொல்வதாக வீடியோவில் குரல் பதிவாகியுள்ளது.
அப்படிஎனினும் நோ போல் போடுமாறு சங்கா சொல்லவில்லையே?
அடிக்க முடியாதவாறு கஷ்டமான பந்தை வீசுமாறு சொல்லி இருக்கலாமே.
UDRSஐ இந்தியா முதலில் ஏற்கட்டும் அதன் பின் Sportsmanship பற்றிப் பேசட்டும்..
Dear Aravida & SLC. Please ban Randiv at least 1 year and strip the captaincy of Sanga. Both Sanga & Randiv sould be responsible & both should be punished. This is shame and ridiculus. Sanga got now Aussie attitude. He criticized India after the second test saying India had a bad/negative attitude. Thereafter SL lost 3rd test and the ODI. Who got the bad attitude by bowling a No Ball purposely? India or SL. If these two are not punished, I will never support SL cricket.
This is a joke. Randhiv apologizing for Sehwag's inability to score the century. SLC has no backbone. It wasnt intentional. If it was why did Randhiv bowled to legal deliveries to him before the no ball. ICC must make a rule - every bowler must apologize to the batsman if he fails to score a century. Grow up Sehwag
சச்சின் என்ற கண்ணியவான் எத்தனை தடவை சதங்களை மற்றவர்களால் தவறவிட்டும் எப்போதும் யாரையும் குறை சொன்னதில்லையே.. (கட்டாக் உட்பட) இவர் மட்டும் என் இப்படி ?
I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?
BCCI to probe on Ojha and Ishant's resistance when Murali was trying to get 800 wickets, says it's not sportsmanship. #NoBallSaga
வேறு யார் செய்திருந்தாலும் இதைக் கணக்கெடுக்காமல் இருந்திருக்கலாம்.. இலங்கையிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான செயலை நாம் எதிர்பார்க்கவில்லை.
பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..
From the days of Ranatunga & Mendis the lankans have a hateful mentality towards Indians. Remember how Jayasurya & co. batted on for 900 odd runs in a test innings without declaring & how PM Rajiv Gandhi was attacked in lanka. The Lankans have taken us for granted & are not shying away from insulting us. The amount of money they are milking by playing India again & again is not a good gesture in their eyes & Indian players are not gaining anything by playing sub-standard competitors.Instead playing Australia will at least guarantee competitive cricket. Look at Pakistan, the moment India stopped playing with them, they are ruined financialy & their cricket is in disarray. Now is time to show the Lankan board & players their true place in the cricket heiarchy & let us show the weight of 1.25 billion people to them.
வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு இது அழகில்லை. ரண்டீவ் செய்தது தவறு என்ற தெரிந்த படியால் தானே சேவாக்கிடம் போய் மன்னிப்புக் கேட்டார்?
Randiv didn't want him to score a 100. Its simple as that. If a team is winning a match and one of their batsman is on 99, would you let him score 100 simply becoz u r going to lose anyway? I think Randiv did the right thing by preventing Mr Sehwag from scoring a 100 on a dead asian pitch.
இப்படியாக இரு பக்கக் கருத்துக்களும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன..
வாதம்,விவாதம் செய்யப் போனால் தர்க்கிக்க,தாக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன..
யாருமே இங்கே கிரிக்கெட்டில் எல்லா நேரத்திலும் உத்தமர்கள் கிடையாது..
கிரிக்கெட்டின் வரலாற்றுப் புத்தகங்களை,அதன் கறுப்புப் பக்கங்களையும் சேர்த்தே புரட்டிப் பாருங்கள்..
இதைத் தான் கங்கோனும் இன்றைய கும்மியில் சொல்லி இருந்தார்..
ரந்தீவ் செய்தது வேணுமெண்டுதான், என்னைப் பொறுத்தவரை.
ஆனா திட்டமிடப்பட்டதல்ல...
அதுதான் என் கருத்து.
நீங்க விளையாடிக் கொண்டிருக்கும்போது சில விடயங்கள் உங்களை மீறி, உங்கட மனச்சாட்சி வேல செய்யாம நடக்கும்.
நான் ஒரு பதிவு எழுதினன் எண்டு நினைக்கிறன் நான் துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில நிண்டு ஒரு பிடிய பிடிக்கும்போது நிலத்திலயும் பந்து பட்டு பிடிச்சிற்கு ஆட்டமிழப்புக் கேட்டன் எண்டு.
அந்தக் கணத்தில ஒண்டுமே தெரியாது.
ஆட்டமிழப்புக் கேட்கும்போது எங்கள மீறினதுதான் நடக்கும்.
நடுவர்கள் அந்தப் பிடி சரியா எண்டு கதைக்கும்போதுதான் எனக்கு பந்து நிலத்தில பட்டது எண்டு நினைவுக்கு வந்தது, ஆனா எனக்கு (சுய)நினைவு வரும்போது என்னால சொல்ல முடியாது, ஏனென்டா நடுவர்கள் கதைச்சு முடிக்கிற கட்டம்.
இதுதான் கிறிக்கற்.
ரந்தீவிற்கும் இதுதான் நடந்திருக்கும்.
அந்தக்கணத்தில தன்னைத்தாண்டி அதச்செய்திற்று பிறகு அந்த மனநிலையில இருந்து வெளில வரேக்க மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவனுக்கும் தான் செய்தது பிழை எண்டு விளங்கும்.
வருத்தம் தெரிவிக்குமளவிற்கு ரந்தீவ் நல்ல மனதுக்காரர்.
என் மனதில நான் வேணுமெண்டு போட்டன் எண்டு எனக்கு மட்டும் தான் தெரியும்.
ஐசிசி கண்டுபிடிக்க முடியாது.
ஏன் பெரிய நோ போல் போட்டாய் எண்டு ஐசிசி கேட்டா இதுக்கு முதல் யாருமே பெரிய நோ போல் போட்டதில்லயா எண்டு தர்க்கரீதியா கதைக்கலாம்.
எனது கருத்தும் இதே..
கமல் விருமாண்டியில் சொன்னது போல..
மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்.. மன்னிப்புக் கொடுக்கிறவன் பெரிய மனுஷன்..
ஆனால் ஒன்று இனிமேல் எந்தவொரு பந்துவீச்சாளரும் 99 ஓட்டங்களைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்ய துணியமாட்டார்..
அத்துடன் நோ போல் போடுகிற ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எல்லாரும் சந்தேகப்படப் போறாங்களே..
போடுவியா? இனிமேல் நோ போல் போடுவியா?





அட்ரா சக்கை..... :D
எனக்குத் தெரிந்து இந்த விடயம் பெரிதுபடுத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிறிக்கற்றும் பல்வேறு காரணிகளால் (சொல்லத்தான் வேண்டுமா?) இதற்கு தீர்வு, தண்டனை என்று அழுகிறது.
பின்னூட்டங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
பின்னூட்டங்களுக்குப் பின் மீண்டும் வருவேன் பெரிய்ய பின்னூட்டத்துடன்... ;-)
August 18, 2010 2:08 PM
ரன்திவ் செய்தது பிழை, தவறு, குற்றம் என்பவற்றுக்குள் அடங்காது
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா? ரன்திவ்வினுடைய செயல் அதுபோன்றது தான். எதிரியின் ஒவ்வொரு வெற்றியையும், அடைவையும் தடுப்பதுதான் ஒரு வீரனின் கடமை அதற்கான சந்தர்ப்பம் அமையும் போது அதற்குரிய கருவியைக் கொண்டு அக்கடமையை ரன்திவ் செய்தார்.
கனவான், ஜென்டில்மேன் எல்லாம் பெரிய வார்த்தைகள், அப்படிப் கனவான் விளையாட்டுத்தான் என்றால் நியாயப்படி அம்பயர்களே தேவையில்லை.
இதைத் தவறு, தப்பு என்று சொல்வதுதான் தவறு. தனது எதிரணியின் அடைவுகளைத் தடுக்கும் ஒரு வீரனின் முயற்சி, அவன் விதிகளுக்கு எதிராகச் செயற்படவில்லை, யுத்த தர்மத்தில் விதிகளுக்கு முரணாகாத சூழ்ச்சிகளுக்கு இடமுண்டு. இதுவும் அதுபோன்ற ஒரு சூழ்ச்சிதான்.
99 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச்செய்வது, 100 ஓட்டங்களை எடுக்கவிடாமல் செய்வது தான் கிரிக்கட்டின் அழகே, அதைவிட்டுவிட்டு செவாக் சின்ன பாப்பா மாதிரி அழுகிறார்? இவரா ஜென்டில்மேன்?
August 18, 2010 2:09 PM
திரும்ப ஒரு விசயம்.
நான் சிலவேளைகளில் நான் புண்ணாக்குகள் என்ற வாதத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறேனோ, நாகரிகமற்ற வார்த்தையோ என்று யோசிப்பதுண்டு.
ஆனால் இங்கே ஒரு புண்ணாக்குத்தனம்.
NDTV இன் தளத்தில் அவர்களின் செய்தி.
// Though Sangakkara's role is also questionable since he gave away the four byes that also prevented Sehwag from getting his 100. //
உண்மையில் இவர்களுக்கு என்ன வேண்டும்.
சங்கக்கார தவறவிட்ட அந்தப் பந்து kept low.
செவாக் அதை அடிக்க முனைந்து அவர் பந்து கீழே சென்றதால் தவறவிட்டார்.
சங்கக்காரவிற்கு மட்டும் பந்து எழும்பி நெஞ்சளவிற்கு வந்ததா?
அந்தப் பந்தை விட்ட பின்பு சங்கக்காரவின் முகத்தைப் பார்த்தால் தெரியும்.
ஒரு பிடியைத் தவறவிட்டது போன்ற ஒரு வெளிப்பாடைக் காட்டுவார்.
உண்மையில் சுய சிந்தனையுள்ள, ஊடகம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள் தான் இங்கே இருக்கிறார்களா?
உண்மையில் புண்ணாக்குகள் தான். :(
August 18, 2010 2:14 PM
in addition to that When sanath was on 189 wat did Ganguly do, he bowled a Wide delivery & sana was way back & stumps on 189 in sharja, bt sana he did not went on crying saying they did not allowed me to score .......
August 18, 2010 2:20 PM
ரன்டிவ் செய்தது தவறுதான், ஏன் இதை இலங்கை அணி என்று பார்க்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன், இலங்கையில் எவரும் சிக்ஸ் அடித்துவிட்டு மைதானத்தில் டான்ஸ் ஆடவில்லை, எதிரணி வீரரை குரங்கு என்று சொல்லவில்லை, சக வீரரரை கன்னத்தில் அறையவில்லை, பந்தை பவுண்டரிக்குள் தட்டிவிடவில்லை. இதுதான் காரணம்.
இலங்கை அணிவீரர்களும் இப்படியெல்லாம் செய்து நாங்களும் ரெளடி என்று காட்டியிருந்தால் இது பெரிய விடயமாக இருந்திருக்காது. ஆனால் ஒரு புதுமுக வீரர் அதிக அனுபவமில்லாதவர் இவ்வாறு செய்யும் போது அதுவும் கமண்ரியில் நோபோல் போட்டால் என்ன நடக்கும் இப்போது என்று கேட்கும் போது(அது பெளலருக்கு கேட்காதுதான்) நோபோல் போட இதை பூதாகாரமாக்குகிறார்கள். SSC மைதானம் தட்டையானது வெற்றி கிடைக்காது என்று சொன்னது போல.
கடைசியில் குறிப்பிட்ட சுவாரஸ்ய விடயங்களை வெகுவாக ரசித்தேன். எனது பதிவின் படங்களையும் இணைத்தமைக்கு நன்றி..:)
நீண்ட பதிவு சீரியஸா ஆரம்பித்து நகைச்சுவையா முடிச்சிருக்கீங்கங்ணா..:)
போன சனி அனுதினன் 44 அடித்திருந்தார், அப்ப ஒரு போலீஸ்கார அண்ணன் பீமர் வீசினார் அவரை தேடிப்பிடித்து அடுத்த முறை மன்னிப்புக்கேட்டச்சொல்லுவோம்..ஹிஹி..:)
வர்ட்டா...
August 18, 2010 2:20 PM
ஆகா திரும்பவும் வருகிறேன்.
செவாக் மைதானத்தில் வைத்து 'it's fair' என்று சொல்லுவார்.
பின்னர் போட்டிக்குப் பின்னரான செய்தியாளர் மாநாட்டில் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களை அடிப்பார், மலிங்க போட முனைந்த yorker திசைமாறி காலிற்கு அருகே செல்லும், சச்சின் அதைத் திருப்பிவிட முனைவார் பந்து படாமல் சங்காவையும் தாண்டிச் செல்லும், ஆனால் அதை இலங்கை வேண்டுமென்றே தடுத்ததாக சொல்கிறார்.
மலிங்க அப்படி எத்தனை முறை யோக்கர் போட முனைந்து அகலப்பந்தையும், 4 ஓட்டங்களையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று செவாக்கிற்கு தெரியாதா?
செவாக் திடீரென மனம் மாறியது ஏனென்று யாரும் கேள்வி எழுப்பவில்லை?
திடீர் மனமாற்றத்திற்குப் பின்னாலிருக்கும் அரசியல் ஏன் ஆராயப்படவில்லை?
அந்த அரசியலை யார் நடத்துவது?
கேள்விகள் ஏன் எழுப்பப்படவில்லை?
SSC ஆடுகளம் பற்றிக் குறைபாடு, தம்புள்ள மின்னொளி பற்றிக் குறைபாடு, தம்புள்ள பயிற்சி ஆடுகளம் பற்றிக் குறைபாடு, இப்போது முறையற்ற பந்து பற்றிக் குறைபாடு.
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
(இந்த விடயத்தில் நேற்று எனக்கிருந்த கருத்துக்கும் இன்று இருப்பதற்கும் பலத்த வேறுபாடு. இந்திய ஊடகங்களின் ஊதிப் பெருப்பிக்கும் மனப்பான்மை மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.
நாளை நான் ரந்தீவை சரியென்று விவாதித்தாலும் ஆச்சரியமில்லை)
August 18, 2010 2:21 PM
நன்றி லோஷன் அண்ணா,உங்கள் பேனா மூலமாக இதன் தாக்கத்தை அறிய ஆவலாக இருந்தவன் நான்.
Gentlemen Game 'ஆக பார்க்கப்போனால் ரண்டிவ் செய்தது தவறே..அவரை யாராவது அதை செய்யுமாறு பணித்திருப்பின் அதுவும் தவறே.
//இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தான் சூத்திரதாரி என்று வாய் கிழியப் பாய்ந்து பாய்ந்து கத்திய இந்திய ஊடகங்கள் இன்று டைம்ஸ் நாளிதழினால் மூக்குடைபட்டு நிற்கின்றன.
அது டில்ஷானாம்..//
டெல்கி டார்டேவில்ஸ் அணிக்காக டில்ஷான் ஷேவாக்கோடு விளையாடுபவர்.நண்பரும் கூட..அவரா இவ்வாறு செய்திருப்பார்?
டெஸ்ட் போட்டியில் தன்னை ஷேவாக் ஆட்டமிழக்க வைத்ததன் கடுப்பை இதில் தீர்த்துக்கொண்டிருப்பாரோ?
அவ்வாறெனில் அடுத்த IPL சீசனில் எவ்வாறு இருவரும் முகம் கொடுக்கப்போகிறார்கள்?
//ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.//
உண்மை தான் ஒருவேளை தன் மீது இல்லாத குற்ற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் இது அமைகிறது..ஆனால் மறுபக்கத்தில் அந்த மன்னிப்பு கூட சில வேளைகளில் சீனியர் playerz தங்கள் மீதான குற்றத்தை மறைக்க அறிமுக ரண்டிவ் மீது சுமத்தி இருக்கலாமல்லவா??
August 18, 2010 2:28 PM
சூப்பர் கடைசியில் நம்ம உலகநாயகனின் வரிகள் மிகவும் பொருத்தம்.
என்னவோ வரவர கிரிக்கெட் பார்க்கவே வெறுக்கின்றது, பேசாமல் டென்னிஸ் பக்கம் பார்வையைத் திருப்பபோகின்றேன்.
August 18, 2010 2:32 PM
ஒரு சின்ன சந்தேகம் :
கிரிக்கெட்டில் இலங்கை பிழை செய்துவிட்டது என உந்த ஹிந்தியர்கள் இந்தக் குதி குதிக்கின்றார்களே.
தினமும் சுடப்பட்டும் அப்பாவி மீனவர்கள் பற்றி ஏன் உந்த ஹிந்தியர்களின் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ஓ கிரிக்கெட் ஹிந்தியாவின் உயிர் அல்லவா.
August 18, 2010 2:35 PM
one more mokkai from twitter.. :)
http://twitter.com/gkarthy1/status/21469324237
August 18, 2010 2:49 PM
நிமலேஷ் கூறியபடி சனத் 189 எடுத்திருக்கும் போது கங்குலி வைட் பந்து வீசியதற்கு கங்குலி இலங்கை வந்து எமது எம்பியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாஜி செய்வதை எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்திய ஊடகங்கள், சுராஜை கண்டிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
August 18, 2010 2:55 PM
வந்தி டென்னிஸ் பார்ப்பதற்கு தயாராவதன் காரணம் குட்டை பாவடை வீராங்கனைகளா? #சந்தேகம்
இங்கிலாந்தில் டென்னிஸ் மைதானத்துக்கருகில் இலங்கையின் சொ.செ.சூ பதிவரை காணமுடிகிறதாம்
August 18, 2010 2:57 PM
நண்பரே இந்திய ஊடகங்களின் நிலைப்பாடு ரொம்ப காலமாகவே இப்படி இருந்து வருகிறது. பரபரப்பிற்காகவே இந்த பன்னாடைத்தனங்கள்...சமீபத்திய ஹிந்தி திரைப்படமான Peepli live பாருங்கள்..
ஆனால் இலங்கை ஊடகங்களின் நிலை அதை விட மோசம் என நான் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. இந்த விடயத்தில் சேவாக் பற்றி குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை. மன்னிப்பு கேட்டபடியால் Randiv செயல் பற்றி மேற்கொண்டு பேசுதல் அநாகரிகமாகிறது.
மேலே சில நண்பர்களின் கருத்தை படித்தேன். அதற்கு அந்த ஊடகங்கள் பரவாயில்லை. படு கேவலம்.
எங்கள் தெருச்சிறுவர்களின் கிரிக்கெட் பேச்சு இதை விட 'Better' ஆ இருக்கும்.
August 18, 2010 3:06 PM
அன்பிற்கினிய நண்பரே...,
/ /... சச்சின் என்ற கண்ணியவான் எத்தனை தடவை சதங்களை மற்றவர்களால் தவறவிட்டும் எப்போதும் யாரையும் குறை சொன்னதில்லையே.. (கட்டாக் உட்பட) இவர் மட்டும் என் இப்படி ? / /
பொதுவாக நாங்கள் நினைப்பது இதுதான்...
"சச்சினை" விட எங்களுக்கு சேவாக் (யுவராஜ்,அஜய் ஜடேஜா போன்ற அதிரடிகள்) மிகவும் பிடிக்கும்.,ஏனென்றால் "சச்சின்" 40 ,மற்றும் 80 ரன்களுக்கு மேல் மெதுவாக மட்டை போடுவார் இக்கட்டான நேரங்களில் கூட மாறமாட்டார் - ஆனால் சேவாக் போன்றவர்கள் இந்த நேரங்களிலும் அதிரடியை குறைக்கமாட்டார்கள்."சச்சின்" சாதனை... சாதனை... என்று விளையாடும் போது இவர் சதம்,அரைசதம் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்றே நம்பினோம்(ஆகஸ்ட் 16 / 2010 வரை) . ஆனால் இப்போது
/ /...ஆரம்பத்தில் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று கூறிய சேவாக்(பரிசளிப்பில்) பின்னர் குய்யோ முறையோ என்று முறையிட்டதும், கட்டாக் மைதானத்தில் சச்சினை அடிக்க விடவில்லை.. இலங்கை அணியில் பலருக்கும் நான் சதம் அடிப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?.. //
சிறுபிள்ளைத் தனமாக ஆகிவிட்டாரே..
/ /..கட்டாக் போட்டியில் சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்தது தினேஷ் கார்த்திக்கா அல்லது லசித் மாலிங்கவா?.../ /
இருவரும் இல்லை - எனது பின்னூட்டத்தை மீண்டும் படிக்கவும்.
/ /..வேறு யார் செய்திருந்தாலும் இதைக் கணக்கெடுக்காமல் இருந்திருக்கலாம்.. இலங்கையிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான செயலை நாம் எதிர்பார்க்கவில்லை../ /
நாம் எல்லோரும் சாதாரண மானிடப்பிறவிகள் தான்..
மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்.. மன்னிப்புக் கொடுக்கிறவன் பெரிய மனுஷன்..
இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போது அனல் பறக்கும் இனி இந்தியா - இலங்கை எதிபார்க்கலாமா?
1 . ஆகஸ்ட் 22 / 2010 நடக்கும் போட்டியில் சுராஜ் சுழல் இந்தியாவை வீழ்த்துமா?
2 . மெண்டிசை வறுத்தது போல் இவரையும்...
3 . சேவாக் 100 ? / 0 ?
4 .இலங்கை அணியில் சுராஜ் இருப்பாரா?
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...,
அன்புடன் ச.ரமேஷ்.
August 18, 2010 3:32 PM
நான் தெரிந்துகொண்டவை......
தில்ஷானுக்கு எல்லோரையும் விட கிரிக்கெட் விதிகள் நல்லா தெரிஞ்சிருக்கு......
இந்திய ஊடகங்களுக்கு செய்திகள் கிடைக்கிறது ரொம்ப குறைவா இருக்கு....
சேவாக் காம்ப்ளான் குடிச்சும் இன்னும் வளரவே இல்லை....
ரண்டிவ் இனி தன்னை அறியாமலும் நோபால் போடப்போவதில்லை......
இந்த மேட்டரை பெரிசுபடுத்துறவன் ஒருத்தனும் கிரிக்கெட் விளையாடினதே இல்லை.....
இன்னும் புரியாதவை....
சேவாக் 100 அடிக்கிறதுக்கும் ராஜீவ்காந்தி இறந்ததுக்கும் என்ன சம்பந்தம்??
இப்பிடி ஒரு உருப்படாத விதியை கண்டுபிடிச்சவன் யாரு?
August 18, 2010 3:33 PM
கடைசியாக... மீண்டும்...
/ /...ஒரு சின்ன சந்தேகம் :
கிரிக்கெட்டில் இலங்கை பிழை செய்துவிட்டது என உந்த ஹிந்தியர்கள் இந்தக் குதி குதிக்கின்றார்களே.
தினமும் சுடப்பட்டும் அப்பாவி மீனவர்கள் பற்றி ஏன் உந்த ஹிந்தியர்களின் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை..../ /
தெரியலயேப்பா...(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)
நன்றி நண்பரே..(வந்தியத்தேவன்..)
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...,
அன்புடன் ச.ரமேஷ்.
August 18, 2010 3:33 PM
Thambi Losha ungala singala dogs round katti adichathu thappe illadaa kannu
August 18, 2010 4:01 PM
இப்பிடி செய்தல் என்ன... பிட்ச் ல கோடு போடுவதற்கு பதிலாக , சீமந்து சுவர் ஒன்னு கட்டி விட்டால் ( முழங்காலுக்கு கீழே இருப்பது போல உயரம் வர வேணும்) நல்ல இருக்குமே.......
ஹீ ஹீ ஹி......
August 18, 2010 4:06 PM
அண்ணா ஞாபகம் இருக்கிறதா பாகிஸ்தான் இந்தியா போட்டி ஒன்றில் இக்கட்டான் கட்டம் ஒன்றில் இன்சமாமை நோக்கி எறிந்த பந்தை இன்சி தடுத்ததாக கூக்குரள் எழுப்பி சைமம் டாபுல் ஆட்டமிழப்பு வழங்கியது.........
August 18, 2010 4:20 PM
Below point is good
//விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..//
August 18, 2010 4:22 PM
ezharai
ஒரு நோபாலுக்காக இலங்கையை திட்டும் 'இந்திய' பத்திரிக்கையெல்லாம் ஈழத்தமிழனை படுகொலை செய்யும் போது முட்டைக்கு சவரம் பண்ணாங்களா?
Saw this in Twitter
August 18, 2010 4:46 PM
@ அஜூவத்:
ஆமாம்.
http://www.cricinfo.com/ci/engine/match/235831.html
இந்தப் போட்டி....
August 18, 2010 4:53 PM
//I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?//
இந்த கருத்தை சொன்ன அதிபுத்திசாலி, இதை கல்வெட்டில் செதுக்கி வைத்து விட்டு அருகில் உட்கார்ந்து கொள்ளவும். அதுக்கு NDTV பரவா இல்லடா சாமி....
August 18, 2010 5:11 PM
சேவாக் பந்து வீசுகிறார். இலங்கை ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றிபெறும். ரன்திவ் 99 ஓட்டங்கள் பெற்றிருக்கிறார். சேவாக் நோபால் செய்கிறார்.
இப்ப இந்திய ரசிகர்களின் ரியாக்சன் எப்பிடி இருக்கும்????
August 18, 2010 5:23 PM
இடுகையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்..
August 18, 2010 5:26 PM
ரன்தீவ் நோ பாலை வேண்டுமென்றே போட்டாரோ இல்லையோ... மன்னிப்பு கேட்டு விட்டார். அத்தோடு இந்த விஷயத்தை முடித்துக்கொண்டால் நல்லது.
கிரிக்கெட்டிற்காக கூக்குரலிடும் இந்திய ஊடகங்கள் தமிழன் மடிகையில் மௌனம் சாதித்தது வெட்கப்பட வேண்டிய விஷயம். மனிதத்திற்கு மதிப்பின்றி போனது இன்று.
August 18, 2010 5:30 PM
// இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.//
ஊடகங்கள் மன்னிப்புக் கேட்குமா? விமர்சகர்கள் வேறு, விளையாட்டு வீரர்கள் வேறில்லையா? (நன்றி கன்கொன் கோபி)
August 18, 2010 5:30 PM
//தனது எதிரணியின் அடைவுகளைத் தடுக்கும் ஒரு வீரனின் முயற்சி, அவன் விதிகளுக்கு எதிராகச் செயற்படவில்லை, யுத்த தர்மத்தில் விதிகளுக்கு முரணாகாத சூழ்ச்சிகளுக்கு இடமுண்டு. இதுவும் அதுபோன்ற ஒரு சூழ்ச்சிதான்.//
it is a game. Not a WAR.Imagine a situation if Dhoni declared the innings before murali completes 800 wickets in galle or purposely orja give up his wicket to some other bowlers to avoid murali's record. that time what will you write in your blog? Will you justify indian team?. It is also a similar situation.
//நோ போல் பந்தின் ஒரு ஓட்டத்துடன் வெற்றி கிடைத்தால் அந்தப் பந்தில் பெறப்பட்ட சிக்சர் செல்லாது //
As far as i understand there is no such a rule. The 6 runs should be awarded to sehwag as per rule 24(No ball rule). Law 21.6(winning hit or extras) and Law 24.12 did not clearly specify about the above situation and uses the word "as soon as". In cricket a ball is a minimum unit of measure. So as per my understanding of the laws umpire and scorer should have calculated the score after that ball.Extra run cannot be counted before the ball is over.so it sehwag should have been awarded as 105*.
August 18, 2010 5:30 PM
// இவன் சிவன் said...
//I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?//
இந்த கருத்தை சொன்ன அதிபுத்திசாலி, இதை கல்வெட்டில் செதுக்கி வைத்து விட்டு அருகில் உட்கார்ந்து கொள்ளவும். அதுக்கு NDTV பரவா இல்லடா சாமி.... //
சில யதார்த்தங்களை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
என்ன காரணத்திற்காக அவுஸ்ரேலியாவை நாங்கள் மிகையாக எதிர்த்தோமோ,
என்ன காரணத்திற்காக ரிக்கி பொன்ரிங்கை மிகையாக வெறுக்கிறீர்களோ அதே போல் இதுவும் அமையலாம் என்பது என் கருத்து.
சங்கா தரவரிசையில் முதலாம் இடம் பற்றிக் கதைத்தபோது எப்படி அதைப் புரிந்து கொள்ளமுடியாமல் புகைந்ததோ,
மஹேல ஜெயவர்தன 2ஆவது ரெஸ்ற் போட்டியில் இந்தியா முதல்நிலை அணிபோல் ஆக்ரோசமாக ஆடவில்லை என்று குறித்த இனிங்க்ஸ் பற்றி கதைக்க அதை பொதுமைப்படுத்திய போதோ,
தோணி மின்னொளிகளைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்க சங்கா 'மின்னொளியின் கீழ் ஓட்டங்களை துரத்தி அடிக்க முடியாவிடில் சிறந்த அணியாக இருக்க முடியாது' என்றபோது புகைந்ததோ,
சங்கா செவாக்கைத் தாண்டி முதலிடத்திற்கு வந்தபோது புகைந்ததோ இன்று ரந்தீவ் செய்த போது வெளிப்பட்டிருக்கிறது என்கிறேன்.
மறுக்க முடியுமா?
மறுக்க முடியாது.
உங்கள் வரலாறு அப்படி.
August 18, 2010 5:31 PM
முதல் மூணு பாலை ஒழுங்காப் போட்டவர் நாலாவது பாலை பேட்டிங் கிரீஸுக்குப் போய் போட வேண்டிய கட்டாயம் என்ன? நான் சங்கான்னு நினைச்சேன். பாவன் தில்ஷான்.
இங்கயும் கடைசியில ஒரு தமிழன் மேல தான் பழியா? #டவுட்
August 18, 2010 5:31 PM
//அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது..
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே.//
ஆஹா என்னே ஒரு புத்திசாலித்தனமான விவாதம். #வாழ்த்துகள்.
August 18, 2010 5:32 PM
//இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்..
//
அதானே? அதிலும் இவர்களில் பதினைந்து பேர் இதே மாதிரி நோ பால்களிலும் வைட்களிலும் 100ஐக் கோட்டை விட்டவர்கள்.
August 18, 2010 5:33 PM
// முகிலன் said...
// இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.//
ஊடகங்கள் மன்னிப்புக் கேட்குமா? விமர்சகர்கள் வேறு, விளையாட்டு வீரர்கள் வேறில்லையா? (நன்றி கன்கொன் கோபி) //
இதில் நான் என்ன சொன்னேன்?
மற்றும்படி கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமில்லை.
August 18, 2010 5:34 PM
@ முகிலன்,
உதிரிக் கருத்துக்கள், விதண்டாவாதத்திற்குக் தெரிவித்த கருத்துக்களைத் தூக்கிப் பிடிப்பதைவிட பதிவின் நேரடிக் கருத்துக்களுக்கு பதிலளியுங்கள்.
நான் பின்னூட்டத்தில் செவாக் குறித்தும் கேட்டிருக்கிறேன்.
மற்றும்படி உதிரிக் கருத்துக்களை பிழையென நிறுவுவதால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
August 18, 2010 5:37 PM
ரண்டிவும் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் அணியும் இப்படி ஓடிவந்து மன்னிப்புக் கேட்டதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்பதை உணர்வீர்களா?
விதிமீறல் இல்லாத இந்த விசயத்திற்கு மன்னிப்புக் கேட்கும் ஸ்ரீலங்கா, இது போல தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டுக்கும் மன்னிப்புக் கேட்பார்களா?
கேட்டுட்டாலும்..
August 18, 2010 5:37 PM
பிந்தி விட்டேனா?
இது பின்னூட்டங்களுக்காக...
August 18, 2010 5:39 PM
// விதிமீறல் இல்லாத இந்த விசயத்திற்கு மன்னிப்புக் கேட்கும் ஸ்ரீலங்கா, இது போல தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டுக்கும் மன்னிப்புக் கேட்பார்களா?
கேட்டுட்டாலும்.. //
இது விதிமீறல் இல்லை.
ஆனால் விளையாட்டின் மான்மியத்திற்கு பிழையானது.
அதை மதிக்கும் அணி என்ற வகையில் வருத்தம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் ஒரு முறையற்ற பந்தை இந்தளவுக்குத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள் தங்கள் நாட்டின் மீனவர்கள் கொல்லப்படும்போது இந்தளவுக்கு ஒன்றாக சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்று உங்கள் ஊடகங்களைக் கேளுங்கள்.
கிறிக்கற் சபைகளுக்குள் நேரடியாக அரசியல் தலையீடுகள் குறைவானது.
அரசு செய்வதற்கு கிறிக்கற் சபை ஒன்றும் செய்ய முடியாமு.
August 18, 2010 5:40 PM
http://blogs.cricinfo.com/surfer/archives/2010/08/gentlemans_game.php
Just as in life, where you and I obey laws rather selectively — who among us has not driven 10 km above the speed limit, or perhaps after a few drinks at an impromptu celebration? Both of these are against the law, and we know it, but don’t pay heed, not merely because the punishments, if caught, are relatively mild, and because peer pressure does not even come to bear. It’s as though it’s okay to break certain rules. In cricket, it’s much the same.
August 18, 2010 5:46 PM
//உங்கள் வரலாறு அப்படி. //
குறித்த கருத்துக்கு சொந்தமான நண்பரே. உங்கள் பின்னூட்டத்தை நெறைய முறை படித்து விட்டேன். சத்தியமாய் என்னுடைய இத்துனூண்டு மூளைக்கு புரியவே இல்லை. வரலாறு பேசுனா அர்ஜுனால இருந்து அசாரு வரைக்கும் எல்லாரும் நாறுவாங்க... உங்களுடைய அருமையான கருத்துகளுக்கு இந்திய மீடியா எவ்வளவோ பரவாயில்லை போலும்!!!. முரளி 800 ஐ தொட்டபோது இங்கே தெருக்களில் அவ்வளவு ஆரவாரம். அன்றைக்கு இந்தியா தோற்றது வேற...
நாடு சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கையில் குறைந்தபட்ச நாகரீகத்தை கடைபிடிக்கவும்!!!
August 18, 2010 5:49 PM
இவன் சிவன் -
சச்சின் 100 அடித்தால் கொண்டாடுபவர்கள் தான் நாங்கள்.
ட்ராவிட் 100 அடித்தால் அதை மகிழ்ச்சியாக ஏற்பவர்கள் தான்.
உங்கள் வரலாறு என்பது உங்கள் ஊடகங்கள் திரிக்கும் விடயங்கள் தான்.
மற்றும்படி நாட்டுக்கெதிராக எதுவும் கிடையாது.
இலங்கையில் சச்சினுக்கு பெரிய இரசிகர் பட்டாளம் இருக்கிறது.
முரளியை உங்களுக்கு எப்படிப் பிடிக்குமோ எங்களுக்கு சச்சினைப் பிடிக்கும்.
கிறிக்கற் வீரர்களை மதிக்கிறோம், ஆனால் இந்த திரிவுபடுத்தும் ஊடகங்களை அல்ல.
August 18, 2010 5:54 PM
//ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்//
அப்ப ஆடத்தெரியாதவனிடம் போனஸ் பாயின்டோடு வெற்றியை பறிகொடுத்தவன்?
ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவனாய் இருப்பானோ
August 18, 2010 5:58 PM
அய்யாமாரே, அண்ணன்மாரே.. இதையும் கொஞ்சம் வாசியுங்களேன்..
இந்திய ஊடகங்களிலும் உண்மையான நாடு நிலையாளர்கள் உள்ளனர் போல இருக்கே.. :)
http://www.hindustantimes.com/News-Feed/columnscricket/Gentleman-s-game-my-foot/588310/Article1-588307.aspx
August 18, 2010 6:00 PM
// Rajasurian said...
//ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்//
அப்ப ஆடத்தெரியாதவனிடம் போனஸ் பாயின்டோடு வெற்றியை பறிகொடுத்தவன்?
ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவனாய் இருப்பானோ //
அந்த ஆடவே தெரியாத அணியிடம் தோற்ற அணியிடம் தோற்ற அணியை என்னவென்று அழைப்பீர்கள்?
அந்த ஆடவே தெரியாத அணியோடு மோதி வெறுமனே 192 ஓட்டங்களையே பெற்ற உங்களுக்கெதிராக 288 ஓட்டங்கள் குவித்து அந்த அணியை போனஸால் தோல்வியடையச் செய்தால் தோற்ற அணியை என்னவென்று சொல்ல?
August 18, 2010 6:07 PM
@ கருத்துக்கு உரிய நண்பர்
உங்கள் இலக்கு ஊடகங்கள் என்கிறபோது நல்லது தான். 'உங்கள் வரலாறு' என்ற பிரயோகமே தேவை இல்லாதது. தோன்றியதை சொன்னேன். கிரிக்கெட் விளையாடும் எத்தனை நாட்டு நாளிதழ்களை நாம் தினமும் படிக்கிறோம். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பத்திரிக்கைகளில் இலங்கையை (குறிப்பாய் முரளியை) தாக்குவதை விடவா இவர்கள் வன்மம் காட்டுகிறார்கள்!!! போங்க தோழரே...
//இந்திய ஊடகங்களிலும் உண்மையான நாடு நிலையாளர்கள் உள்ளனர் போல இருக்கே.. :)//
ஆமாம் Blog களிலும் வெகுசிலர் நியாயமாய் எழுதுவது போல....
August 18, 2010 6:36 PM
pls stop your comments we(tamilian) have lot of problem in SL they(SL and india) have good relationship in all activity especially destroy tamilian pls stop stupid arugment go and read vinavu
August 18, 2010 6:43 PM
அன்பு நண்பரே..,( கன்கொன் || Kangon )
/ / ...அந்த ஆடவே தெரியாத அணியிடம் தோற்ற அணியிடம் தோற்ற அணியை என்னவென்று அழைப்பீர்கள்?
அந்த ஆடவே தெரியாத அணியோடு மோதி வெறுமனே 192 ஓட்டங்களையே பெற்ற உங்களுக்கெதிராக 288 ஓட்டங்கள் குவித்து அந்த அணியை போனஸால் தோல்வியடையச் செய்தால் தோற்ற அணியை என்னவென்று சொல்ல?../ /
உங்கள் கருத்து ஏற்புடையது அல்ல.விவாத பொருளை தாண்டி எங்கோ போய்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கு அவருடைய மொழியில் பதில் அளித்தேன் என்று நீங்கள் சொன்னாலும் உங்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.
/ / ..கங்கோன் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தர்க்க நியாயங்களையும் யாரையும் தாக்காமல் நீங்கள் எடுத்த கருத்தை எளிமையாக விளங்கப்படுத்தியதையும் ரசித்தேன்../ / - இது உங்கள் பதிவில் அண்ணன் லோஷனின் பின்னூட்டம்.
/ /...இந்த விடயத்தில் நேற்று எனக்கிருந்த கருத்துக்கும் இன்று இருப்பதற்கும் பலத்த வேறுபாடு. இந்திய ஊடகங்களின் ஊதிப் பெருப்பிக்கும் மனப்பான்மை மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.
நாளை நான் ரந்தீவை சரியென்று விவாதித்தாலும் ஆச்சரியமில்லை../ /
உண்மையில் தொடக்கத்தில் இருந்தே மறைமுகமாக இதைதான் சொல்கிறீர்கள்.
இங்கு பலருக்கு சேவாக்கும்,இந்திய அணியும் ஏனோ கொஞ்சம் கூட பிடிக்கவில்லை போலும்.(அது உங்கள் விருப்பம் என்றாலும்)
ஆரோக்கியமாக இந்தப் பதிவும் பின் விளைவுகளும் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்(THANKS-LOSHAN)
நன்றி...
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.
August 18, 2010 6:55 PM
cricketer suraj randiv suspended for one match and fined match fee. TM Dilshan fined 50% of fee over no ball incident. news alert.
எதுக்குப்பா இது?
நாகரீகம் எண்டால் என்னெண்டே தெரியாத இந்தியப்பயலுக போடுற ஆட்டத்த பார்க்க சகிக்க முடியலே.
எதிர்பாத்துட்டே இருந்தேன் எங்கட நமக்கு ஆதரவ ஒரு பதிவ காணலே எண்டு. thanks loshan annna.
எதிரி அணியின் ஒவ்வொரு வெற்றியையும் தடுக்கிறது சரிதான். அது வெற்றி எடுக்கிறது எண்டால் என்ன 100 அடிக்கிறது எண்டால் என்ன? அதுக்கு போய் இந்த தண்டன எல்லாம் ஓவர்.
நம்ம அரசு போலவே srilanka cricketum இந்தியாக்கு ...............................
August 18, 2010 7:37 PM
//அந்த ஆடவே தெரியாத அணியோடு மோதி வெறுமனே 192 ஓட்டங்களையே பெற்ற உங்களுக்கெதிராக 288 ஓட்டங்கள் குவித்து அந்த அணியை போனஸால் தோல்வியடையச் செய்தால் தோற்ற அணியை என்னவென்று சொல்ல?//
288 ஓட்டங்கள் குவித்த அணியிடம் போனஸ் பாயின்டோடு தோற்ற அணியுடன் மோதி அதனிடம் போனஸ் பாயின்டோடு தோற்ற அணியை என்னவென்று சொல்வீர்களோ அதைவிட உயர்வாகவே சொல்லலாம்
August 18, 2010 8:01 PM
இவன் சிவன் -
// @ கருத்துக்கு உரிய நண்பர்
உங்கள் இலக்கு ஊடகங்கள் என்கிறபோது நல்லது தான். 'உங்கள் வரலாறு' என்ற பிரயோகமே தேவை இல்லாதது. தோன்றியதை சொன்னேன். கிரிக்கெட் விளையாடும் எத்தனை நாட்டு நாளிதழ்களை நாம் தினமும் படிக்கிறோம். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பத்திரிக்கைகளில் இலங்கையை (குறிப்பாய் முரளியை) தாக்குவதை விடவா இவர்கள் வன்மம் காட்டுகிறார்கள்!!! போங்க தோழரே... //
நாங்கள் அவர்களைத் தாக்குவதில்லையா?
முரளிக்கு அவுஸ்ரேலியாவிலும், இங்கிலாந்திலும் கிடைத்த எதிர்ப்பை எங்கள் ஊடகங்கள் எங்களுக்கு பூதக்கண்ணாடி வைத்துக் காட்டியது போல அங்கே எங்களுக்கு இருக்கிற ஆதரவை நாங்கள் அறிந்திருக்கிறோமா?
எங்கள் இந்திய உபகண்டத்தில்தான் பேடி, பிரசன்னா, மனின்தர் சிங் போன்றோரும் உள்ளனரே?
இவர்கள் அவுஸ்ரேலியர்களாக இருந்திருந்தால் இவர்களை இப்படி விட்டு வைத்திருப்போமா?
எங்களிலே நேர்மை இல்லை, மற்றவர்களை எப்படிக் குறை சொல்வது?
August 18, 2010 8:40 PM
@ரமேஷ் -
அது அவர் இலங்கை ஆடவே தெரியாது என்று சொன்னதை விதண்டாவாதமாக மறுபுறமாகச் சொன்னேன்.
அதைத்தவிர வேறு நோக்கம் கிடையாது.
என் தனிப்பட்ட கருத்துக்களை இன்னொருவரின் பதிவில் விளங்கப்படுத்துவது சரியோ தெரியாது.
என் பதிவை நான் 'ரந்தீவின் நோ போல் பற்றி என் கருத்துக்கள்' என்றே குறிப்பிட்டிருந்தேன்.
என்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
செவாக் பற்றிய என் எண்ணங்களையும் ஆரம்பத்திலேயே விளங்கப்படுத்திவிட்டுத்தான் எழுதினேன்.
இந்திய அணியைப் பிடிக்காதது போன்ற உணர்வு உங்களுக்குத் தெரியலாம்.
இங்கு இந்த மனநிலை ஏற்படக் காரணம் இந்த over hype இற்கு எரிச்சல் காரணமாக நாங்கள் வெளிப்படுத்தும் மனப்பாங்குகள்.
சச்சின் 200 அடித்த போது எழுதப்பட்ட பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.
அதில் சச்சின் என்பவருக்கு கிறிக்கற் வீரர் என்பதைத் தாண்டி ஓர் மரியாதை வழங்கியிருப்போம்.
சச்சினுக்கும் செவாக் இற்கும் துடுப்பாட்டம் தவிர அவர்களின் அணுகுமுறை பற்றி யோசியுங்கள்.
தனிப்பட்ட விடயங்கள் என்றாலும், ஏன் இவர்கள் இப்படி எங்கள் பகுதியிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
August 18, 2010 8:47 PM
கனவான்கள் விளையாட்டில் இப்படி செய்வது தப்பு தான். அதுக்காக இந்தியா திறமான ஆளுகளா? michal vorgon உதவும் நோக்கத்தில் பந்தெடுத்துக் கொடுக்க ஆட்டமிழக்க வைத்ததை மறக்கல. அது போல் இன்சமாம் தனக்க பட வந்த பந்தை தடுத்த போது ஆட்டமிழக்க செய்தது தப்பில்லையா?.... இப்பிடி கனக்க சொல்லலாம் ஆனால் நாளை என் தளம் தூசணத்தில் நிறைந்து விடும்.
August 18, 2010 8:48 PM
தொடரப்போகும் விதண்டாவாதப் பின்னூட்டங்களைப் படித்துச் சிரிப்பதற்காக ;)
August 18, 2010 9:26 PM
ஒரு வேளை இது இலங்கை,இந்திய வீரர்களின் கூட்டு சதியாக இருக்குமோ??
மெல்ல சுவிங்கம் இல்லாம வெறுமனே சப்பு கொட்டிக்கொண்டிருந்த வலையுலக பதிவர்களை ஒரு அல்வா கொடுத்து மீண்டும் உசுப்பேத்தி விட கைக்கொள்ளப்பட்ட உத்தியோ??
(இப்படியாகவும் இருக்கக்கூடும் யாருக்கு உண்மை வெளிச்சம்!)
August 18, 2010 10:26 PM
//நம்ம அரசு போலவே srilanka cricketum இந்தியாக்கு //
நீங்க என்னமோ பிரபாகரன் சொன்ன மாதிரி உமது சிங்கள சகோதரருக்கு விசுவாசமாய்த்தான் இருககிறிர்கள்! ஆனால் அது புரியாமல் கதைக்கும் முகிலன் போன்றவர்கள் இதை படித்தாவது திருந்தினால் சரிதான்!
August 18, 2010 10:35 PM
கன்கொன் || Kangon said...
அட்ரா சக்கை..... :D //
எதுக்குன்னு புரியுது.. ;)
எனக்குத் தெரிந்து இந்த விடயம் பெரிதுபடுத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிறிக்கற்றும் பல்வேறு காரணிகளால் (சொல்லத்தான் வேண்டுமா?) இதற்கு தீர்வு, தண்டனை என்று அழுகிறது.//
எல்லாம் மூத்த அண்ணனின் பண பலமும் IPL ஆதரவின் பலமும் தான்..
==================
படவா தமிழன் said...
ரன்திவ் செய்தது பிழை, தவறு, குற்றம் என்பவற்றுக்குள் அடங்காது
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா? ரன்திவ்வினுடைய செயல் அதுபோன்றது தான். எதிரியின் ஒவ்வொரு வெற்றியையும், அடைவையும் தடுப்பதுதான் ஒரு வீரனின் கடமை அதற்கான சந்தர்ப்பம் அமையும் போது அதற்குரிய கருவியைக் கொண்டு அக்கடமையை ரன்திவ் செய்தார்.//
அதுவும் சரியே.. ஆனால் விளையாட்டின் சில மாண்புகள் போரிலிருந்தும் வேறுபட்டவையே
கனவான், ஜென்டில்மேன் எல்லாம் பெரிய வார்த்தைகள், அப்படிப் கனவான் விளையாட்டுத்தான் என்றால் நியாயப்படி அம்பயர்களே தேவையில்லை.//
ஆ.. அஸ்கு புஸ்கு.. அதுக்கு என்றே சில நடுவர்கள் இருக்காங்களே..
இதைத் தவறு, தப்பு என்று சொல்வதுதான் தவறு. தனது எதிரணியின் அடைவுகளைத் தடுக்கும் ஒரு வீரனின் முயற்சி, அவன் விதிகளுக்கு எதிராகச் செயற்படவில்லை, யுத்த தர்மத்தில் விதிகளுக்கு முரணாகாத சூழ்ச்சிகளுக்கு இடமுண்டு. இதுவும் அதுபோன்ற ஒரு சூழ்ச்சிதான்.//
கால்பந்து போன்ற ஏனைய விளையாட்டுக்களில் இப்படி சூழ்ச்சிகள் ஏற்கப் பட்டாலும் கிரிக்கெட் மிக நாகரிகமாக விளையாடப்படுவதாக சொல்லபடுகிறது.
August 18, 2010 10:46 PM
கன்கொன் || Kangon said...
திரும்ப ஒரு விசயம்.
நான் சிலவேளைகளில் நான் புண்ணாக்குகள் என்ற வாதத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறேனோ, நாகரிகமற்ற வார்த்தையோ என்று யோசிப்பதுண்டு.//
சீசீ.இதைவிட மோசமான வார்த்தைகளை எல்லாம் பதிவுலகில் ரொம்ப சாதரணமாகவே பார்க்கிறேன்..
// Though Sangakkara's role is also questionable since he gave away the four byes that also prevented Sehwag from getting his 100. //
உண்மையில் இவர்களுக்கு என்ன வேண்டும்.
சங்கக்கார தவறவிட்ட அந்தப் பந்து kept low.
செவாக் அதை அடிக்க முனைந்து அவர் பந்து கீழே சென்றதால் தவறவிட்டார்.
சங்கக்காரவிற்கு மட்டும் பந்து எழும்பி நெஞ்சளவிற்கு வந்ததா?
அந்தப் பந்தை விட்ட பின்பு சங்கக்காரவின் முகத்தைப் பார்த்தால் தெரியும்.
ஒரு பிடியைத் தவறவிட்டது போன்ற ஒரு வெளிப்பாடைக் காட்டுவார்.//
இந்த ndtv நிறுவனம் பற்றி உலகுக்கே தெரியுமே.. முள்ளிவாய்க்கால் நடந்தபோது இலங்கை அரசின் செயல்களுக்கு வாளி தூக்கிய கேவலமான வட இந்திய துவேசிகள் தானே/..
August 18, 2010 10:49 PM
nimalesh said...
in addition to that When sanath was on 189 wat did Ganguly do, he bowled a Wide delivery & sana was way back & stumps on 189 in sharja, bt sana he did not went on crying saying they did not allowed me to score .......//
அப்போதைய சனத் தான் சாதனைகள்,மைல் கற்கள் பற்றிக் கவலைப்படாத உண்மையான கனவான்..
=======================
Bavan said...
ரன்டிவ் செய்தது தவறுதான், ஏன் இதை இலங்கை அணி என்று பார்க்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன், இலங்கையில் எவரும் சிக்ஸ் அடித்துவிட்டு மைதானத்தில் டான்ஸ் ஆடவில்லை, எதிரணி வீரரை குரங்கு என்று சொல்லவில்லை, சக வீரரரை கன்னத்தில் அறையவில்லை, பந்தை பவுண்டரிக்குள் தட்டிவிடவில்லை. இதுதான் காரணம்.//
கவனம் கன்னம்.. ஹர்பஜன் தேடி வருவார்.. ;)
இலங்கை அணிவீரர்களும் இப்படியெல்லாம் செய்து நாங்களும் ரெளடி என்று காட்டியிருந்தால் இது பெரிய விடயமாக இருந்திருக்காது. ஆனால் ஒரு புதுமுக வீரர் அதிக அனுபவமில்லாதவர் இவ்வாறு செய்யும் போது அதுவும் கமண்ரியில் நோபோல் போட்டால் என்ன நடக்கும் இப்போது என்று கேட்கும் போது(அது பெளலருக்கு கேட்காதுதான்) நோபோல் போட இதை பூதாகாரமாக்குகிறார்கள். SSC மைதானம் தட்டையானது வெற்றி கிடைக்காது என்று சொன்னது போல.//
அதான் சொன்னேனே.. ஆடத் தெரியாதவனுக்கு.. bla bla
போன சனி அனுதினன் 44 அடித்திருந்தார், அப்ப ஒரு போலீஸ்கார அண்ணன் பீமர் வீசினார் அவரை தேடிப்பிடித்து அடுத்த முறை மன்னிப்புக்கேட்டச்சொல்லுவோம்..ஹிஹி..:)//
விமலுக்கு இது தெரியுமா? அவர் தான் விதி முறை விஞ்ஞானி ஆச்சே..
போலீஸ்காரன் என்று நீங்க சொன்னது நம்ம கங்கோனைத் தானே?
August 18, 2010 10:53 PM
கன்கொன் || Kangon said...
செவாக் மைதானத்தில் வைத்து 'it's fair' என்று சொல்லுவார்.
பின்னர் போட்டிக்குப் பின்னரான செய்தியாளர் மாநாட்டில் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களை அடிப்பார், மலிங்க போட முனைந்த yorker திசைமாறி காலிற்கு அருகே செல்லும், சச்சின் அதைத் திருப்பிவிட முனைவார் பந்து படாமல் சங்காவையும் தாண்டிச் செல்லும், ஆனால் அதை இலங்கை வேண்டுமென்றே தடுத்ததாக சொல்கிறார்.
மலிங்க அப்படி எத்தனை முறை யோக்கர் போட முனைந்து அகலப்பந்தையும், 4 ஓட்டங்களையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று செவாக்கிற்கு தெரியாதா?//
இது தான் நாங்கள் சச்சின்,டிராவிட்,கும்ப்ளேக்கும் .. என் லக்ஸ்மனையும் கூட சேர்க்கலாம்.. மற்றவருக்கும் இடையிலான ஒளியாண்டு தூர வித்தியாசம்..
செவாக் திடீரென மனம் மாறியது ஏனென்று யாரும் கேள்வி எழுப்பவில்லை?
திடீர் மனமாற்றத்திற்குப் பின்னாலிருக்கும் அரசியல் ஏன் ஆராயப்படவில்லை?
அந்த அரசியலை யார் நடத்துவது?//
நிச்சயமாக இப்போது மோடி இல்லை.. வேறு யார்? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..
கேள்விகள் ஏன் எழுப்பப்படவில்லை?//
பணம் என்ற பசையால் வாய் மூடப்படும்..
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
(இந்த விடயத்தில் நேற்று எனக்கிருந்த கருத்துக்கும் இன்று இருப்பதற்கும் பலத்த வேறுபாடு. இந்திய ஊடகங்களின் ஊதிப் பெருப்பிக்கும் மனப்பான்மை மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.
நாளை நான் ரந்தீவை சரியென்று விவாதித்தாலும் ஆச்சரியமில்லை)//
உண்மை தான்.. நாங்கள் ரண்டீவ் செய்த செயலைக் கண்டித்தவர்கள்.. ஆனால் மன்னிப்பை அவர் கேட்டும் இப்பொது அவருக்கு வேண்டுமென்றே தண்டனை வழங்க செய்திருப்பதானது மனிதாபிமானமற்ற செயல்.
August 18, 2010 10:58 PM
மைந்தன் சிவா said...
டெல்கி டார்டேவில்ஸ் அணிக்காக டில்ஷான் ஷேவாக்கோடு விளையாடுபவர்.நண்பரும் கூட..அவரா இவ்வாறு செய்திருப்பார்?
டெஸ்ட் போட்டியில் தன்னை ஷேவாக் ஆட்டமிழக்க வைத்ததன் கடுப்பை இதில் தீர்த்துக்கொண்டிருப்பாரோ?
அவ்வாறெனில் அடுத்த IPL சீசனில் எவ்வாறு இருவரும் முகம் கொடுக்கப்போகிறார்கள்? //
இது வரவேற்கத் தக்கதே..
தாய் நாட்டுக்கு விளையாடுவதைப் பெரிதாகக் கருதும் எண்ணம் அருகி வரும் வேளையில் டில்ஷான் கழகத்தைப் பற்றி எண்ணாமல் செயற்பட்டது வித்தியாசமே.
அடுத்து அடுத்த வருட IPL க்கு அணிகளுக்கான வீரர்கள் மாற்றப்படுவார்களே.. டில்ஷான் சேவாக் விளையாடும் அணியில் தான் இருப்பாரா என சொல்ல முடியாது.
//ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.//
உண்மை தான் ஒருவேளை தன் மீது இல்லாத குற்ற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் இது அமைகிறது..ஆனால் மறுபக்கத்தில் அந்த மன்னிப்பு கூட சில வேளைகளில் சீனியர் playerz தங்கள் மீதான குற்றத்தை மறைக்க அறிமுக ரண்டிவ் மீது சுமத்தி இருக்கலாமல்லவா??//
ஆனாலும் பந்துவீசியது ரண்டீவ் தானே?
August 18, 2010 11:03 PM
வந்தியத்தேவன் said...
சூப்பர் கடைசியில் நம்ம உலகநாயகனின் வரிகள் மிகவும் பொருத்தம்.
என்னவோ வரவர கிரிக்கெட் பார்க்கவே வெறுக்கின்றது, பேசாமல் டென்னிஸ் பக்கம் பார்வையைத் திருப்பபோகின்றேன்.//
ம்ம் விளங்குது..அதுவும் மகளிர் டென்னிஸ் தானே பார்ப்பீங்க?
லண்டன் வந்துள்ள சதீசையும் கூட்டிட்டா போவேங்க?
வந்தியத்தேவன் said...
ஒரு சின்ன சந்தேகம் :
கிரிக்கெட்டில் இலங்கை பிழை செய்துவிட்டது என உந்த ஹிந்தியர்கள் இந்தக் குதி குதிக்கின்றார்களே.
தினமும் சுடப்பட்டும் அப்பாவி மீனவர்கள் பற்றி ஏன் உந்த ஹிந்தியர்களின் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ஓ கிரிக்கெட் ஹிந்தியாவின் உயிர் அல்லவா.//
சிம்பிள் விடை.. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் மகிந்த அல்லவே..
அதுபோல இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் மன்மோகன் அல்லவே..
August 18, 2010 11:07 PM
Karthikeyan G said...
one more mokkai from twitter.. :)
http://twitter.com/gkarthy1/status/21469324237 //
ஓ நீங்க தானா அந்த gkarthy1?
;)
==============
யோ வொய்ஸ் (யோகா) said...
நிமலேஷ் கூறியபடி சனத் 189 எடுத்திருக்கும் போது கங்குலி வைட் பந்து வீசியதற்கு கங்குலி இலங்கை வந்து எமது எம்பியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.//
இல்லை யோ.. இப்போது கங்குலி மன்னிப்புக் கேட்குமளவுக்கு உயர்ந்த குணமுடையவராக சனத் அய்யா இல்லை. :(
பாஜி செய்வதை எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்திய ஊடகங்கள், சுராஜை கண்டிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.//
இது நவயுக காலனித்துவம்
August 18, 2010 11:11 PM
யோ வொய்ஸ் (யோகா) said...
வந்தி டென்னிஸ் பார்ப்பதற்கு தயாராவதன் காரணம் குட்டை பாவடை வீராங்கனைகளா? #சந்தேகம்
இங்கிலாந்தில் டென்னிஸ் மைதானத்துக்கருகில் இலங்கையின் சொ.செ.சூ பதிவரை காணமுடிகிறதாம்//
அருகிலா? உள்ளேயா? தெளிவாக சொல்லவும்..
==================
இவன் சிவன் said...
நண்பரே இந்திய ஊடகங்களின் நிலைப்பாடு ரொம்ப காலமாகவே இப்படி இருந்து வருகிறது. பரபரப்பிற்காகவே இந்த பன்னாடைத்தனங்கள்...//
புரிந்துகொண்டமைக்கு நன்றிகள்..
சமீபத்திய ஹிந்தி திரைப்படமான Peepli live பாருங்கள்..//
இன்னும் பார்க்கவில்லை.
ஆனால் இலங்கை ஊடகங்களின் நிலை அதை விட மோசம் என நான் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.//
இல்லை சகோதரா.. நீங்கள் கொஞ்சம் ஆழமாக வாசித்தால் இலங்கை ஆங்கில,தமிழ் ஊடகங்கள் விளையாட்டு விமர்சன விஷயத்தில் பெட்டர் என்று தெரியும்.
இந்த விடயத்தில் சேவாக் பற்றி குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை. //
ஏன்?அவர் என்ன பத்தரை மாற்றுத் தங்கமா? இதுவரை கரும்புள்ளிகள் படாதவரா?
மேலே சில நண்பர்களின் கருத்தை படித்தேன். அதற்கு அந்த ஊடகங்கள் பரவாயில்லை. படு கேவலம்.
எங்கள் தெருச்சிறுவர்களின் கிரிக்கெட் பேச்சு இதை விட 'Better' ஆ இருக்கும்.//
ஊடகங்களின் விதண்டாவாதங்களுக்கு வந்துள்ள வாதப் பிரதிவாதங்களே இவை.அப்படித் தான் இருக்கும்.. ஆனால் சிலது அர்த்தமும் உள்ளவை.ஆழமும் ஆனவை./
August 18, 2010 11:18 PM
S.ரமேஷ். said...
பொதுவாக நாங்கள் நினைப்பது இதுதான்...
"சச்சினை" விட எங்களுக்கு சேவாக் (யுவராஜ்,அஜய் ஜடேஜா போன்ற அதிரடிகள்) மிகவும் பிடிக்கும்.,ஏனென்றால் "சச்சின்" 40 ,மற்றும் 80 ரன்களுக்கு மேல் மெதுவாக மட்டை போடுவார் இக்கட்டான நேரங்களில் கூட மாறமாட்டார் - ஆனால் சேவாக் போன்றவர்கள் இந்த நேரங்களிலும் அதிரடியை குறைக்கமாட்டார்கள்."சச்சின்" சாதனை... சாதனை... என்று விளையாடும் போது இவர் சதம்,அரைசதம் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்றே நம்பினோம்(ஆகஸ்ட் 16 / 2010 வரை) . ஆனால் இப்போது //
ம்ம்.. ஆனால் இதனால் தான் இன்னும் சச்சின் இந்தியாவில் மட்டுமல்ல இங்கும்,எங்கும் மதிக்கபடுகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போது அனல் பறக்கும் இனி இந்தியா - இலங்கை எதிபார்க்கலாமா?//
ம்ம்..அடிக்கடி விளையாடி அலுப்புத் தந்துகொண்டிருந்தவர்கள் இந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஒரு வேளை செட்டப்போ?
1 . ஆகஸ்ட் 22 / 2010 நடக்கும் போட்டியில் சுராஜ் சுழல் இந்தியாவை வீழ்த்துமா?
2 . மெண்டிசை வறுத்தது போல் இவரையும்...
3 . சேவாக் 100 ? / 0 ?
4 .இலங்கை அணியில் சுராஜ் இருப்பாரா?//
நீங்கள் கேட்ட நான்கில் இரண்டு (இரண்டாவது அல்ல)நடக்க சாத்தியம் அதிகம்..
==============================
Vijayakanth said...
நான் தெரிந்துகொண்டவை......
தில்ஷானுக்கு எல்லோரையும் விட கிரிக்கெட் விதிகள் நல்லா தெரிஞ்சிருக்கு......
இந்திய ஊடகங்களுக்கு செய்திகள் கிடைக்கிறது ரொம்ப குறைவா இருக்கு....
சேவாக் காம்ப்ளான் குடிச்சும் இன்னும் வளரவே இல்லை....
ரண்டிவ் இனி தன்னை அறியாமலும் நோபால் போடப்போவதில்லை......
இந்த மேட்டரை பெரிசுபடுத்துறவன் ஒருத்தனும் கிரிக்கெட் விளையாடினதே இல்லை.....//
ஆகா ஆகா..
சேவாக் காம்ப்ளான் குடிச்சும் ...//
இது எப்போ? பூஸ்ட் தானே குடிப்பார்?
சேவாக் 100 அடிக்கிறதுக்கும் ராஜீவ்காந்தி இறந்ததுக்கும் என்ன சம்பந்தம்??//
மொட்டை+முழங்கால் சம்பந்தம்..
இப்பிடி ஒரு உருப்படாத விதியை கண்டுபிடிச்சவன் யாரு?//
யாரோ ஒரு வேலையத்த வெண்ணை..விளங்காத புண்ணாக்கு..
August 18, 2010 11:25 PM
//அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது..
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே.//
நான் இந்திய/இலங்கை கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை இது அடிக்கடி நடத்தப்படும் காரணம் வேறு என்பதால். ஆனாலும் மகானாமாவை 220+ ல் பிரான்ஸிஸ் என்ற தமிழ் நடுவர் அவுட் கொடுத்தததால ஜெயசூர்யா என்ற சிங்களர் லாராவின் சாதனையை முறியடிக்க முடியாமல் போயிற்று என்று உலகத்தரம் வாய்ந்த அன்றைய அணியின் தலைவர் ஒரு முத்தை உதிர்த்திருந்தார். அதே மாதிரி இன்றைக்கு உணர்கிறேன்.
August 18, 2010 11:26 PM
Thamizhaga Thamizhan said...
Thambi Losha ungala singala dogs round katti adichathu thappe illadaa kannu //
உங்க மனிதாபிமானம் புல்லரிக்க வைக்குது அண்ணே..
அவங்க அடிச்சாலும் எதோ நீங்க வந்து மருந்து போடுற மாதிரியில்ல அக்கரைப்படுறீங்க..
போங்க வேலையைப் பாருங்கண்ணே..
=====================
பிரபா said...
இப்பிடி செய்தல் என்ன... பிட்ச் ல கோடு போடுவதற்கு பதிலாக , சீமந்து சுவர் ஒன்னு கட்டி விட்டால் ( முழங்காலுக்கு கீழே இருப்பது போல உயரம் வர வேணும்) நல்ல இருக்குமே.......//
நீங்க ஐடியா மணியின் உறவுக்காரரா?
================
அஜுவத் said...
அண்ணா ஞாபகம் இருக்கிறதா பாகிஸ்தான் இந்தியா போட்டி ஒன்றில் இக்கட்டான் கட்டம் ஒன்றில் இன்சமாமை நோக்கி எறிந்த பந்தை இன்சி தடுத்ததாக கூக்குரள் எழுப்பி சைமம் டாபுல் ஆட்டமிழப்பு வழங்கியது.......//
ம்ம்.. நல்லாவே ஞாபகம் இருக்கு.
இலங்கை அணி இதுவரை இவ்வாறான ஆட்டமிழப்புக்களைக் கோரிப் பெற்றுக் கொண்டதில்லை என்பதையும் இந்த விமர்சனப் புண்ணாக்குகள் புரிந்து கொள்ளவேண்டும்
August 18, 2010 11:34 PM
@கன்கொன்
நல்ல விளக்கம் :)
August 18, 2010 11:42 PM
Irshath said...
Below point is good
//விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..//
நன்றி :)
================
Anonymous said...
ezharai
ஒரு நோபாலுக்காக இலங்கையை திட்டும் 'இந்திய' பத்திரிக்கையெல்லாம் ஈழத்தமிழனை படுகொலை செய்யும் போது முட்டைக்கு சவரம் பண்ணாங்களா?
Saw this in Twitter //
என்னென நடந்தாலும் எமக்கு நாமே தான் எல்லாம்..
நல்ல பெயரையா.. ஏழரை :)
==================
இவன் சிவன் said...
//I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?//
இந்த கருத்தை சொன்ன அதிபுத்திசாலி, இதை கல்வெட்டில் செதுக்கி வைத்து விட்டு அருகில் உட்கார்ந்து கொள்ளவும். அதுக்கு NDTV பரவா இல்லடா சாமி....//
கீழே சம்பந்தப்பட்டவர் பதில் சொல்லி இருப்பதால் பாஸ்..அனால் ஒன்னு..உந்த NDTV என்ற கேவலமான நிறுவனத்தை விட யாருமே,
எல்லாமே பெட்டர் தான்.
August 18, 2010 11:53 PM
Anonymous said...
சேவாக் பந்து வீசுகிறார். இலங்கை ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றிபெறும். ரன்திவ் 99 ஓட்டங்கள் பெற்றிருக்கிறார். சேவாக் நோபால் செய்கிறார்.
இப்ப இந்திய ரசிகர்களின் ரியாக்சன் எப்பிடி இருக்கும்????//
யுக்தி,மதி நுட்பம் என்று போற்றி இருப்பார்களோ? (பெரும்பாலானவர்கள்)
=======================
முகிலன் said...
இடுகையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்..//
உங்கள் மகிழ்ச்சியே எனது திருப்தி :)
உங்கள் பதிவைப் பார்த்தபோதும் அப்படியே எனக்கும் :)
===================
எட்வின் said...
ரன்தீவ் நோ பாலை வேண்டுமென்றே போட்டாரோ இல்லையோ... மன்னிப்பு கேட்டு விட்டார். அத்தோடு இந்த விஷயத்தை முடித்துக்கொண்டால் நல்லது.//
அதே :)
கிரிக்கெட்டிற்காக கூக்குரலிடும் இந்திய ஊடகங்கள் தமிழன் மடிகையில் மௌனம் சாதித்தது வெட்கப்பட வேண்டிய விஷயம். மனிதத்திற்கு மதிப்பின்றி போனது இன்று.//
:(
அய்யா கலைஞர் இதற்கும் கடிதம் எழுதுவாரோ>?
August 18, 2010 11:57 PM
Anonymous said...
it is a game. Not a WAR.Imagine a situation if Dhoni declared the innings before murali completes 800 wickets in galle or purposely orja give up his wicket to some other bowlers to avoid murali's record. that time what will you write in your blog? Will you justify indian team?. It is also a similar situation. //
Dhoni wudnt have done that.. who wants to lose the game early? Mr.Anony dont compare that and this.Murali earned his wickets and he never complained.
if Indians wud have done that also Murali wudnt have cried or whined..
=====================
குறித்த கருத்துக்குச் சொந்தமானவர் said...
சில யதார்த்தங்களை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
என்ன காரணத்திற்காக அவுஸ்ரேலியாவை நாங்கள் மிகையாக எதிர்த்தோமோ,
என்ன காரணத்திற்காக ரிக்கி பொன்ரிங்கை மிகையாக வெறுக்கிறீர்களோ அதே போல் இதுவும் அமையலாம் என்பது என் கருத்து.
சங்கா தரவரிசையில் முதலாம் இடம் பற்றிக் கதைத்தபோது எப்படி அதைப் புரிந்து கொள்ளமுடியாமல் புகைந்ததோ,
மஹேல ஜெயவர்தன 2ஆவது ரெஸ்ற் போட்டியில் இந்தியா முதல்நிலை அணிபோல் ஆக்ரோசமாக ஆடவில்லை என்று குறித்த இனிங்க்ஸ் பற்றி கதைக்க அதை பொதுமைப்படுத்திய போதோ,
தோணி மின்னொளிகளைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்க சங்கா 'மின்னொளியின் கீழ் ஓட்டங்களை துரத்தி அடிக்க முடியாவிடில் சிறந்த அணியாக இருக்க முடியாது' என்றபோது புகைந்ததோ,
சங்கா செவாக்கைத் தாண்டி முதலிடத்திற்கு வந்தபோது புகைந்ததோ இன்று ரந்தீவ் செய்த போது வெளிப்பட்டிருக்கிறது என்கிறேன்.
மறுக்க முடியுமா?
மறுக்க முடியாது.//
சரி தான்.. இந்தக் காரணங்களை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.
August 19, 2010 12:11 AM
முகிலன் said...
முதல் மூணு பாலை ஒழுங்காப் போட்டவர் நாலாவது பாலை பேட்டிங் கிரீஸுக்குப் போய் போட வேண்டிய கட்டாயம் என்ன? நான் சங்கான்னு நினைச்சேன். பாவன் தில்ஷான்.
இங்கயும் கடைசியில ஒரு தமிழன் மேல தான் பழியா? #டவுட்//
தமிழன்? இங்கே தான் முஸ்லிம்கள் தம்மைத் தமிழ் பேசுவோர் என்று சொல்லத் தான் பிரியப்படுகிறார்களே..
அதிலும் டில்ஷான் முஸ்லிமாக இருந்து பவுத்தராக மாறியவர்.. தமிழ் பேசுவாரா தெரியாது.
முகிலன் said...
//அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது..
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே.//
ஆஹா என்னே ஒரு புத்திசாலித்தனமான விவாதம். #வாழ்த்துகள்.//
முகிலன், மீண்டும் நன்றாக வாசியுங்கள்..
ஆனால் 2002 ஆம் ஆண்டு கண்டியில் டெஸ்ட் போட்டியொன்றில் கங்குலி சதம் அடிப்பதை இலங்கை தடுத்தது என்று சொல்வதும்,1986 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்ட்டில் அசாருதீனை 199 ஓட்டங்களில் LBW மூலம் இலங்கை ஆட்டமிழக்க செய்திருக்கக் கூடாது என்று சொல்வதும் ரொம்பவே ஓவர்...
இந்த வரிகளுக்குப் பிறகே இதை சொன்னேன்..
முகிலன் said...
//இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்..
//
அதானே? அதிலும் இவர்களில் பதினைந்து பேர் இதே மாதிரி நோ பால்களிலும் வைட்களிலும் 100ஐக் கோட்டை விட்டவர்கள்.//
இல்லை. சும்மா போகிறபோக்கில் எடுத்து விட்டுப் போகாதீர்கள்.. தேடிப் பாருங்கள்.
August 19, 2010 12:14 AM
முகிலன் said...
ரண்டிவும் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் அணியும் இப்படி ஓடிவந்து மன்னிப்புக் கேட்டதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்பதை உணர்வீர்களா?
விதிமீறல் இல்லாத இந்த விசயத்திற்கு மன்னிப்புக் கேட்கும் ஸ்ரீலங்கா, இது போல தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டுக்கும் மன்னிப்புக் கேட்பார்களா?
கேட்டுட்டாலும்..//
அதையே தான் நாமும் கேட்கிறோம்..உங்கள் அரசு இதுவரை அந்த அப்பாவி மீனவர்களின் தாக்குதல் பற்றிக் கண்டித்ததா?
நம் இலங்கை அரசுக்கு ஏன் இப்படிப் பயப்படுகிறது?
கிரிக்கெட் விடயத்தில் காட்டும் நாட்டாமைத் தனத்தை அரசியலிலும் காட்டுங்களேன்,..
நாமும் ஆதரவு தருகிறோம்.
======================
ஆதிரை said...
பிந்தி விட்டேனா?//
ரொம்பவே,,.பிசியோ? ;)
August 19, 2010 12:18 AM
INDO LANKAN said...
http://blogs.cricinfo.com/surfer/archives/2010/08/gentlemans_game.php
Just as in life, where you and I obey laws rather selectively — who among us has not driven 10 km above the speed limit, or perhaps after a few drinks at an impromptu celebration? Both of these are against the law, and we know it, but don’t pay heed, not merely because the punishments, if caught, are relatively mild, and because peer pressure does not even come to bear. It’s as though it’s okay to break certain rules. In cricket, it’s much the same.//
tx :)
read the original one too.. hats off to the writer
================
Rajasurian said...
//ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்//
அப்ப ஆடத்தெரியாதவனிடம் போனஸ் பாயின்டோடு வெற்றியை பறிகொடுத்தவன்?
ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவனாய் இருப்பானோ//
இதில் நீங்கள் செய்வது விதண்டாவாதம் ..
அன்று பயிற்சி ஆடுகளத்தைக் குறை சொன்ன தோனியைப் பற்றியே நான் சொன்னே..
August 19, 2010 12:21 AM
Anonymous said...
pls stop your comments we(tamilian) have lot of problem in SL they(SL and india) have good relationship in all activity especially destroy tamilian pls stop stupid arugment go and read வினவு//
நாங்கள் வினவும் வாசிக்கிறோம் நண்பா.. :)
===============
என் உயிரே said...
cricketer suraj randiv suspended for one match and fined match fee. TM Dilshan fined 50% of fee over no ball incident. news alert.
எதுக்குப்பா இது? //
எங்கள் கிரிக்கெட் சபையின் அடிமைத் தனத்துக்கு :)
இந்தியாவிடமிருந்து கிடைக்கும் கிரிக்கெட் சலுகைகளுக்கு :)
நாகரீகம் எண்டால் என்னெண்டே தெரியாத இந்தியப்பயலுக போடுற ஆட்டத்த பார்க்க சகிக்க முடியலே.//
தவறு சகோதரா.. ஒரு சிலருக்காக ஒட்டு மொத்த நாட்டவரைப் பொதுமைப்படுத்துதல் தவறு.
இதைத்தானே நானும் நாமும் கண்டிக்கிறோம்.பிறகு நீங்கள் அதனையே இங்கே செய்யலாமா?
எதிர்பாத்துட்டே இருந்தேன் எங்கட நமக்கு ஆதரவ ஒரு பதிவ காணலே எண்டு. thanks loshan annna.//
நம்ம தரப்புக்கும் பேசனுமில.. எத்தனை நாள் தான் ஒரே பக்கக் கருத்தை வாங்கிக் கொண்டே இருப்பது?
எதிரி அணியின் ஒவ்வொரு வெற்றியையும் தடுக்கிறது சரிதான். அது வெற்றி எடுக்கிறது எண்டால் என்ன 100 அடிக்கிறது எண்டால் என்ன? அதுக்கு போய் இந்த தண்டன எல்லாம் ஓவர்.//
விளையாட்டின் புனிதத்தை மீறியது தவறு தான்.ஆனால் மன்னிப்புக் கோரிய பிறகு வழங்கப்பட்ட தண்டனை ஓவர்
நம்ம அரசு போலவே srilanka cricketum இந்தியாக்கு ...............................//
தவறு.. இந்தியா தான் நம்ம அரசுக்கு..... நம்ம தலைவர் மகிந்தர் யாரு? :)
August 19, 2010 12:28 AM
இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது: கங்குலி
/////http://www.tharavu.com/2010/08/blog-post_8419.html////
வந்துட்டாருய்யா நாகரீகத்தின் உச்ச கட்ட நடிகர், இவரது கூத்துக்களை மறந்து விட்டார் போலும்...
August 19, 2010 12:32 AM
கன்கொன் || Kangon said...
இந்திய அணியைப் பிடிக்காதது போன்ற உணர்வு உங்களுக்குத் தெரியலாம்.
இங்கு இந்த மனநிலை ஏற்படக் காரணம் இந்த over hype இற்கு எரிச்சல் காரணமாக நாங்கள் வெளிப்படுத்தும் மனப்பாங்குகள்.//
மிகச் சரியே..இதனால் தான் இந்திய அணியில் முக்கியமாக நாள்வரை எம் நாட்டின் ரசிகர்கள் நாட்டு பேதம் மறந்து ரசிக்கிறோம்..
சச்சின்,டிராவிட்,கும்ப்ளே,லக்ஸ்மன்
சச்சினுக்கும் செவாக் இற்கும் துடுப்பாட்டம் தவிர அவர்களின் அணுகுமுறை பற்றி யோசியுங்கள்.//
மலை அண்ட் மடு?
=====================
ம.தி.சுதா said...
கனவான்கள் விளையாட்டில் இப்படி செய்வது தப்பு தான். அதுக்காக இந்தியா திறமான ஆளுகளா? michal vorgon உதவும் நோக்கத்தில் பந்தெடுத்துக் கொடுக்க ஆட்டமிழக்க வைத்ததை மறக்கல. அது போல் இன்சமாம் தனக்க பட வந்த பந்தை தடுத்த போது ஆட்டமிழக்க செய்தது தப்பில்லையா?.... இப்பிடி கனக்க சொல்லலாம் ஆனால் நாளை என் தளம் தூசணத்தில் நிறைந்து விடும்.//
உண்மை தான்.. ஆனாலும் கவனமாய் இருங்கள்..
==============
Subankan said...
தொடரப்போகும் விதண்டாவாதப் பின்னூட்டங்களைப் படித்துச் சிரிப்பதற்காக ;)//
அதென்ன விதண்டாவாதம்? நாங்க உயிரைக் கொடுத்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.. நீங்க கூத்துப் பார்க்க வந்தீங்களோ? ;)
August 19, 2010 12:33 AM
மைந்தன் சிவா said...
ஒரு வேளை இது இலங்கை,இந்திய வீரர்களின் கூட்டு சதியாக இருக்குமோ??
மெல்ல சுவிங்கம் இல்லாம வெறுமனே சப்பு கொட்டிக்கொண்டிருந்த வலையுலக பதிவர்களை ஒரு அல்வா கொடுத்து மீண்டும் உசுப்பேத்தி விட கைக்கொள்ளப்பட்ட உத்தியோ??
(இப்படியாகவும் இருக்கக்கூடும் யாருக்கு உண்மை வெளிச்சம்!)//
அதைத் தான் நானும் மேலே ஒரு பின்னூட்டப் பதிலில் சொன்னேன்.. அன்ன தம்பிக்குள் இதுவும் நடக்கலாம்,எதுவும் நடக்கலாம்..
உலகுக்கே அல்வா கொடுத்து எவ்வளவு செய்தார்கள் இருவரும் சேர்ந்து..
=============
சம்பத்தன் said...
//நம்ம அரசு போலவே srilanka cricketum இந்தியாக்கு //
நீங்க என்னமோ பிரபாகரன் சொன்ன மாதிரி உமது சிங்கள சகோதரருக்கு விசுவாசமாய்த்தான் இருககிறிர்கள்! ஆனால் அது புரியாமல் கதைக்கும் முகிலன் போன்றவர்கள் இதை படித்தாவது திருந்தினால் சரிதான்!//
சரியாப் போச்சு.. நல்ல பேரும் நல்ல கருத்தும்..
வந்திட்டாரு விளக்கம் கொடுக்க.. வேலையைப் பாருமைய்யா..
August 19, 2010 12:36 AM
குடுகுடுப்பை said...
நான் இந்திய/இலங்கை கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை இது அடிக்கடி நடத்தப்படும் காரணம் வேறு என்பதால்.//
ம்ம்.. எனக்கும் கொட்டாவி வருகிறது..
ஆனாலும் மகானாமாவை 220+ ல் பிரான்ஸிஸ் என்ற தமிழ் நடுவர் அவுட் கொடுத்தததால ஜெயசூர்யா என்ற சிங்களர் லாராவின் சாதனையை முறியடிக்க முடியாமல் போயிற்று என்று உலகத்தரம் வாய்ந்த அன்றைய அணியின் தலைவர் ஒரு முத்தை உதிர்த்திருந்தார். அதே மாதிரி இன்றைக்கு உணர்கிறேன்.//
இது யாரு சொன்னது? எப்போ நடந்தது?
பிரான்சிஸ் ஆட்டமிழப்புக் கொடுத்தும் சரி..ஆனால் இபடியோருவர் சொன்னதாக எனக்கத் தெரியாது.
August 19, 2010 12:45 AM
யோ வொய்ஸ் (யோகா) said...
இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது: கங்குலி
/////http://www.tharavu.com/2010/08/blog-post_8419.html////
வந்துட்டாருய்யா நாகரீகத்தின் உச்ச கட்ட நடிகர், இவரது கூத்துக்களை மறந்து விட்டார் போலும்...//
இன்னொரு சாத்தான் வேதம் ஓதுதோ?
ஆனால் அந்தப் பக்கத்தைக் காணவில்லை.. அகற்றி விட்டார்கள்..
பக்கம் கண்டறியப்படவில்லை
மன்னிக்கவும், தரவு இணையம் வலைப்பதிவில் நீங்கள் காண முயற்சிக்கும் பக்கம் கிடைக்கவில்லை.
August 19, 2010 12:47 AM
see these and comment abt those
http://www.youtube.com/watch?v=B_y5ZIOGRLM
http://www.youtube.com/watch?v=jgKENOecFC0&NR=1
http://www.youtube.com/watch?v=0VL_23OWs_4&feature=related
http://www.youtube.com/watch?v=tPnUe2IMuJU
இந்திய அணி கனவான்தன்மையோடு விளையாடுகிறது என்று கூறுபவர்கள் இந்த வீடியோக்களை பாருங்கள்..
August 19, 2010 12:49 AM
http://www.tharavu.com/2010/08/blog-post_8419.html
try this
August 19, 2010 12:51 AM
@loshan
நான் கேள்வி எழுப்பியது கண்கொன்னிடம். தங்களிடம் அல்ல.
தங்களின் பதிவு இந்திய மீடியாக்களின் துவேச கருத்துக்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.
August 19, 2010 1:14 AM
ajasurian said...
@loshan
நான் கேள்வி எழுப்பியது கண்கொன்னிடம். தங்களிடம் அல்ல.//
ஏன் பதிவிலேயே அந்தக் கேள்வியும் வந்துள்ளதால் நானும் பதிலளிக்கலாம்..
தங்களின் பதிவு இந்திய மீடியாக்களின் துவேச கருத்துக்களுக்கு சற்றும் குறைந்ததல்ல//
பரவாயில்லை.அதற்கெல்லாம் பதில் தரவே இந்தப் பதிவு..
அனால் ஆழ ஊன்றி என் பதிவை வாசித்தால் ரண்டீவை நான் கண்டித்திருப்பதும் தெரியும்
August 19, 2010 1:24 AM
@loshan
//ஆழ ஊன்றி என் பதிவை வாசித்தால் ரண்டீவை நான் கண்டித்திருப்பதும் தெரியும்//
அட ஆமாம். தங்களின் நீ....ண்ட பதிவில் அப்படியும் நாலு வரி இருக்கத்தான் செய்கிறது.
//முதல் இரு பந்துகள் நல்லபடி வீசிய பிறகே ரண்டீவ் நோ போல் பந்தை வீசியுள்ளார். எனவே சேவாக்கின் இயலாமைக்கு என் சுராஜ் ரண்டீவ் குற்றவாளியாக்கப் படவேண்டும்?//
//கட்டாயம் சதம் அடிக்க இலகுவாகப் பந்து போட்டிருக்கனுமா?எதிரணியின் வீரர்கள் பெரும் ஒவ்வொரு மைல் கல்லும் கூட எதிரணியின் வெற்றியாக அமைவதால் அதையும் கொடுக்கக் கூடாது என்பதே வீரர்களின் நோக்காக இருக்கவேண்டும்.
எனவே ரண்டீவ் செய்தது சரியே//
இவையும் தங்கள் பதிவில் இருப்பவையே. :)
August 19, 2010 1:58 AM
லோஷன், கனககோபி..
இருவருடனும் ஒரு இடத்தில் மாறுபடுகிறேன். பெரியண்ணன்களின் அழுத்தம் காரணமாக SLC செய்தார்களா இல்லையா என்பது தேவையல்ல. ஆனால், ஒரு கிரிக்கெட் அணியை நிர்வகிக்கிற அமைப்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் SLC செய்தது. சச்சின் வெளியே சொல்லவே தயங்கிய ஒரு வார்த்தையைச் சொல்லி சைமண்ட்சைத் திட்டிய ஹர்பஜனுக்கு பெரியண்ணன்கள் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்கள். இனிமேலும் அப்படியான கேவலங்கள் நிகழாமலிருக்க SLC இன் நடவடிக்கை முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியது.
August 19, 2010 2:02 AM
Srilanka can't beat india in one day matches, because they can't change the pitch between the innings or the night. All the so called sri lankan big batsmens (Particularly your favourite Jayawardana (his test avarage is below 40 in other countries)) can only score 100's in srilanka. Sankakara is number one sledger and he is also number one cheater. I don't how come they got ICC award for 2 years.
Dilson is playing for Delhi with sewag and getting more money from them. Otherwise he has to beg in srilanka like other sri-lankan cricketers.
August 19, 2010 2:30 AM
களத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிறகு பெரிது படுத்தியதற்கு முக்கிய காரணம் அவர் அந்த "நோ பால் " ரீப்ளே பார்த்த பிறகுதான். அது வேண்டுமென்றே நயவன்சகத்துடன் போடப்பட்டது. இதை சேவக் சொல்லாமல் போயிருந்தால் கேவலமான இலங்கை ஆட்டக்கார்கள் இதனை தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்.
சங்ககர ஒரு பிராடு என்பது உலகமறிந்த ஒன்று அதனால் இந்திய மீடியாக்கள் அவரை சந்தேகப்பட்டதில் தவறு இல்லை. அனால் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் நேர்மை தான் இப்போது கேள்விக்குள்ளாகிறது.
August 19, 2010 2:41 AM
ஷப்பா டெஸ்ட் போட்டி 5 நாட்களை விட அதிகம் தேவை இந்தப் பதிவையும் பின்னூட்டங்களை மீண்டும்வாசிக்க. ரந்தீவ் வாழ்க.
August 19, 2010 6:35 AM
இந்திய ஊடகங்கள் எபோழுதுமே சிறிய விடயங்களை பெரிதாக்கி அதன் மூலம் இலாபம் அடைபவர்கள். அதே வேலையே இன்று இலங்கை ஊடகங்களும் செய்து கொண்டிருப்பது மன வருத்தமளிகிறது.
லோஷன் நீங்க எழுதின விடயங்கள் சிலது காமெடியா இருக்கு. எந்த வீரரும் ௯௯, ௧௯௯ ஆடமிலைந்தால் அதற்கு எப்படி எதிரணி காரணமாக இருக்கும்.
சில ஆடுகளங்கள் இப்படிதான் இருக்கும் எண்டு எல்லோருக்கும் தெரியும். சில நேரங்களில் இது சிறிய வேறு பாடுகளை காட்டத்தான் செய்யும்.
தம்புள்ள மைதானம் ஆரம்பம் முதலே பகலிரவு போட்டிகள் நடத்த சரிவராது எண்டு அனைவரைக்கும் தெரியும். மிக முக்கிய காரணம் மின்னொளி. இதை அணைத்து நாட்டு வீரர்களும் சொல்லி இருக்கார்கள். அப்படி இருந்தும் பொடிகளை தொடர்து அங்கே வைப்பது கிரிக்கெட் போர்டின் சிறப்பு.
நீகள் அனைவரும் இதை பார்டி கதைக்க கூடாது. ஏன் எனில் செய்தர்வால் தாங்களே ஒத்துக்கொண்டு தண்டனையும் பெற்றுவிட்டார்கள். இனி வரபோகிற போட்டிகள் ண மு௭க்கியம் இலையோ இருக்கோ இலக்கை இந்திய ரெண்டு பேருக்கும் இது முக்கியம்.
அனைவர்க்கும் மறுபடியம் ஒரு சின்ன விடயம் இந்த சர்ச்சைகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் வர்ணனையலர்களா செயல் பட்டவர்களே. இத்தெய் கேட்டு தன இந்திய ஊடககள் தொங்கி கொண்டு இருகின்றன. அவர்களுக்கு சொந்தமாக எதையும் சொல்ல தெரியாது
August 19, 2010 7:42 AM
http://dilscoop-en.blogspot.com/2010/08/sangakkara-was-not-happy-with-sehwag.html
"Sangakkara was not happy with Sehwag speaking in two voices on the controversy and “sensationalising” the issue."-Dilscoop
August 19, 2010 8:17 AM
// ஜெயக்குமார் said...
களத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிறகு பெரிது படுத்தியதற்கு முக்கிய காரணம் அவர் அந்த "நோ பால் " ரீப்ளே பார்த்த பிறகுதான். அது வேண்டுமென்றே நயவன்சகத்துடன் போடப்பட்டது. இதை சேவக் சொல்லாமல் போயிருந்தால் கேவலமான இலங்கை ஆட்டக்கார்கள் இதனை தொடர்ந்து செய்துகொண்டிருப்பார். //
செவாக் ஆடுகளத்தில் வைத்து உடனே வழங்கிய பேட்டியைப் பாருங்கள்.
அப்போது சொல்வார் 'இது நடப்பது தான். வீரரொருவர் 99 இல் இருக்கும்போது ஒரு ஓட்டம் பெறவேண்டி இருக்கும்போது அகலப்பந்துகளையும், முறையற்ற பந்துகளையும் வீசுவது வழக்கம். It's fair enough' என்பார்.
தேடிப் பாருங்கள்.
அப்போதே அவருக்குத் தெரியும் அது வேண்டுமென்றே வீசப்பட்டது என்று.
get your facts straight.
// சங்ககர ஒரு பிராடு என்பது உலகமறிந்த ஒன்று அதனால் இந்திய மீடியாக்கள் அவரை சந்தேகப்பட்டதில் தவறு இல்லை. அனால் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் நேர்மை தான் இப்போது கேள்விக்குள்ளாகிறது. //
சங்கக்கார இதுவரை விதிகளை மீறிச் செயற்பட்டதை இங்கே வந்த சொல்லுங்கள்.
ஏற்றுக் கொள்கிறேன்.
இதுவரை பந்தைச் சேதப்படுத்தியமைக்காக போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டாரா?
பிடிக்காத பந்தை பிடித்துவிட்டதாக சொன்னாரா?
பந்தை edge செய்துவிட்டு, அதுவும் பெரிய edge ஆக இருக்கும்போது வெளியேறாமல் நின்றாரா? ஆதுவும் ஐ.பி.எல் போன்ற உள்நாட்டுப் போட்டியில்?
சட்டத்துக்குப் புறம்பாக, அனுமதிகப்படாத விக்கற் காப்பு gloves ஐப் பயன்படுத்தினாரா?
தன்னை நோக்கி வந்த பந்தைத்த் தடுத்த துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழப்புக் கோரி ஆட்டமிழப்புப் பெற்றுக் கொண்டாரா?
முடிந்தால் வாருங்கள்.
August 19, 2010 9:06 AM
@ கிருத்திகன்:
ரந்தீவ் விடயம் என்னவெனில் இது ஹர்பஜனளவு பெரியது கிடையாது.
இது ஓர் அணியின் வெற்றியைப் பாதிக்கவில்லை.
இது பொதுவான ஒன்று.
சுராஜ் செய்த பிழை அந்த முறையற்ற பந்தை வீசும் போது காலை கோட்டைத் தாண்டி பெரியளவு இடைவெளியில் வைத்து வீசியது தான்.
ரந்தீவ் சிறிய இடைவெளியில் போட்டிருந்துவிட்டு நான் தெரியாமல் போட்டேன் என்றால் என்ன செய்ய முடியும்?
சன்ஜய் மன்ஜ்ரேக்கர் சொன்னது போல அவர் வேண்டுமென்று போட்டாரா இல்லையா என்பது தொழிநுட்ப விடமல்ல, இது ethical விடயம்.
அஜய் ஜடேஜா சொன்னது போல ரந்தீவின் இடத்தில் செவாக் இருந்திருந்தால் செவாக் இதைத்தான் செய்திருப்பார்.
tactic என்பதற்கும் ரந்தீவ் செய்ததற்குமிடையில் சிறிய வித்தியாசமே.
ரந்தீவ் மன்னிப்புக் கேட்டவுடன் விடயம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.
இது இந்திய கிறிக்கற் சபையை திருப்திப்படுத்த என்று சன்ஜய் மன்ரேக்கரே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்.
// an apology from randiv should have been the end of it. obviously sl board took into account which board sehwag represented. //
கிறிக்கின்போவைச் சேர்ந்த ஒருவர் கேள்வியெழுப்பியது போல அடுத்த முறை ஒரு பந்துவீச்சாளர் பவுண்சர் வீசி துடுப்பாட்ட வீரரைத் தாக்கினால் அதற்கும் இனி கிறிக்கற் அமைப்புக்கள் மன்னிப்புக் கேட்கப் போகின்றனவா?
ஸ்ருவேர்ட் ப்ரோட் பாகிஸ்தானின் கெய்டரை நோக்கி எறிந்ததால் கெய்டர் தொடர் முழுவதிலும் பங்கேற்கமுடியாது போய்விட்டது, இதற்கு ECB ஸ்ருவேர்ட் ப்ரோடை வாழ்நாள் முழுவதுமாக தண்டித்திருக்க வேண்டுமே?
அதற்குப் பதிலாய் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சொல்கிறார்,
'ப்ரோடிடமிருந்து அந்த ஆக்ரோஷத்தை நீக்க விரும்பவில்லை, அதுதான் எங்களுக்கு வேண்டும், ஆனால் குறித்த அந்தச் சந்தர்ப்பத்தில் ப்ரோட் எல்லையை மீறிவிட்டார் தான்' என்கிறார்கள்.
அதற்கும் இதற்குமிடையில் ஏணி வைத்தால் கூட எட்டாத விடயம், ஆனால் யாருமே அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஐசிசி தண்டனையுடன் முடிந்துவிட்டது.
August 19, 2010 9:19 AM
// யோ வொய்ஸ் (யோகா) said...
http://www.tharavu.com/2010/08/blog-post_8419.html
try this //
செய்திகள் திரிவுபடுத்தப்படுவது எப்படி என்பது இப்படித்தான்.
http://cricket.rediff.com/report/2010/aug/17/sourav-ganguly-randiv-sehwag-no-ball-dambulla.htm
கங்குலி சொன்னது இதுதான்.
கங்குலி சொன்னது அவரின் சொந்தக் கருத்து.
கங்குலியின் வரலாறுகள் கிளறப்பட்டால் நிறைய விடயங்கள் வெளியே வரும்.
ஆனால் அதைவிடுத்து தமிழில் உள்ள செய்திக்கும் ஆங்கிலத்தில் உள்ள செய்திக்குமிடையிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்....
வாழ்க ஜனநாயகம்.
August 19, 2010 9:24 AM
இதுவரை வரலாற்றில் நடந்த இப்படியான சந்தர்ப்பங்கள்.....
http://www.cricinfo.com/magazine/content/current/story/473156.html
கங்குலி விடயத்தில் கடைசி வெற்றிபெறும் ஓட்டங்களை நான்கு ஓட்டங்களை கெய்ப் பெற்றதன் மூலமே பெற்றிருக்கிறார்.
போய்க் கெய்ப் இடம் கேளுங்களய்யா...
என்ன கொடுமை...
கங்குலி விடயத்தை கதைத்துக் கொண்டு இங்கு வரட்டும் யாராவது...
அவ்வ்வ்வ்வ்....
August 19, 2010 9:44 AM
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப பிந்தி விட்டேன்!!!
லோஷன் அண்ணா உங்களின் அலசல் அருமை ரொம்பவே ரசித்தேன்!!!
வந்த கருத்துக்களை பார்த்து ஒன்றை மட்டும் சரியாக புரிந்து கொண்டேன்!!!
எமது சில இந்திய நண்பர்கள் எல்லா விடயங்களையும் ஒன்றாக கலக்கி குழம்பிய குட்டையில் கொஞ்சம் பிந்தி மீன் பிடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்!!! என்ன செய்வது தோழர்களே நீங்கள் மட்டும்தான் இப்படி இருக்கீங்க!!! உங்க அரசியல்வாதியும் சரி, கிரிக்கெட் வீரரும் சரி, உங்கள விட ரொம்பவே பாஸ்ட்!!!!
கோபி அண்ணாவின் கருத்துக்களை ரசித்தேன்!!! கிரிக்கெட் என்ற பார்வையில் அண்ணாவின் கருத்துக்கள் சரியானவையே!!! ஒருவகையில் எனக்கு ரன்டிவ்வும் சரியானவர்தான்!!!
August 19, 2010 9:44 AM
//போன சனி அனுதினன் 44 அடித்திருந்தார், அப்ப ஒரு போலீஸ்கார அண்ணன் பீமர் வீசினார் அவரை தேடிப்பிடித்து அடுத்த முறை மன்னிப்புக்கேட்டச்சொல்லுவோம்..ஹிஹி..:)//
குறைத்து சொன்ன பவன் மற்றும் லோஷன் அண்ணாவை கண்டிக்கிறேன். அது 46.
இதுக்குள்ள பவன் என்ன ஏண்டா மாட்டி விடுற????
August 19, 2010 9:47 AM
Loshan said,
தவறு சகோதரா.. ஒரு சிலருக்காக ஒட்டு மொத்த நாட்டவரைப் பொதுமைப்படுத்துதல் தவறு.
இதைத்தானே நானும் நாமும் கண்டிக்கிறோம்.பிறகு நீங்கள் அதனையே இங்கே செய்யலாமா?//
ஆனா எல்லா இந்திய ஊடகங்களும் எல்லா இந்திய பதிவர்களும் அவங்க அணிக்கு ஜால்ரா போடுறாங்களே???
நான் பொதுமைப்படுத்தலையே அண்ணா அவங்கதானே இந்திய அணி நாங்கதான் எண்டு தம்பட்டம் அடிக்கிறாங்க!
hello Mr Gankuli
நாகரீகம் பத்தி முதல் உங்க அணிக்கு சொல்லி குடுங்க?
இந்திய அணியின் ஜல்றாகளே உங்க அணிய திருத்திட்டு வாங்கய்யா மத்தவனுக்கு அட்வைஸ் பண்ண.
//ஜெயக்குமார் said...
களத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிறகு பெரிது படுத்தியதற்கு முக்கிய காரணம் அவர் அந்த "நோ பால் " ரீப்ளே பார்த்த பிறகுதான். அது வேண்டுமென்றே நயவன்சகத்துடன் போடப்பட்டது. இதை சேவக் சொல்லாமல் போயிருந்தால் கேவலமான இலங்கை ஆட்டக்கார்கள் இதனை தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்.
சங்ககர ஒரு பிராடு என்பது உலகமறிந்த ஒன்று அதனால் இந்திய மீடியாக்கள் அவரை சந்தேகப்பட்டதில் தவறு இல்லை//
Mr. Jeyakumar can u explain கேவலமான இலங்கை ஆட்டக்கார்கள் and சங்ககர ஒரு பிராட with examples?
I dont know how sachin is there?!!!!!!
Before consider ur harbajan, sreeshanth, sharma, ojha.
2nd test in ssc, ojha got sanga,s wicket? after that his expressions............??? if any body watch that......!
he also new comer.
Mr. jeyakumar u must explain how சங்ககர ஒரு பிராடு? with examples. otherwise u r a .........?
August 19, 2010 10:02 AM
Hi,
சேவக் தன்னுடைய டெல்லி டீம் மேட் என்று கூட பார்க்காமல், அல்லது குறைந்த பட்சம் உண்மையான கிரிகெட் உணர்வு கூட இல்லாமல் நோ பால் வீசசொன்ன டில்சன் கேவலமானவன் இல்லையா?
Look at these videos, you can see how he playing with his tongue.
http://www.youtube.com/watch?v=TDEIURzds1o
http://www.youtube.com/watch?v=oaJqLu5DgjQ
These are just samples.
ஆடுகளத்தை இலங்கை கருங்களிகளுடன் சேர்ந்து மாற்றி அமைத்து முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் அவனது ஈன புத்தியை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அதானால் தன் டெஸ்ட் போட்டிகளில் டொச்சு பிளேயர்கள் இருந்தாலும் இலங்கை தன் சொந்த மண்ணில் மட்டும் எளிதாக வெல்கிறது.
August 19, 2010 11:28 AM
//Before consider ur harbajan, sreeshanth, sharma, ojha.
2nd test in ssc, ojha got sanga,s wicket? after that his expressions............??? if any body watch that......!
he also new comer.//
//நாகரீகம் பத்தி முதல் உங்க அணிக்கு சொல்லி குடுங்க?
இந்திய அணியின் ஜல்றாகளே உங்க அணிய திருத்திட்டு வாங்கய்யா மத்தவனுக்கு அட்வைஸ் பண்ண. //
இதிலிருந்தே தெரிகிறது கிரிக்கெட்டில் உங்களின் நடு நிலைமை பற்றி. அதனால் நீங்கள் இலங்கை ஆதரவாளராக மட்டுமே உங்களின் கிரிக்கெட் பதிவுகளை வைத்துகொள்ளுங்கள். தயவு செய்து உலக கிரிக்கெட்டை அலச வேண்டாம்.
சாயம் வெளுத்துப்போச்சு !!!
August 19, 2010 11:32 AM
@ ஜெயக்குமார்:
அந்தப் பின்னூட்டங்களை இட்டது பதிவை வாசித்த ஒருவரை தவிர, பதிவை எழுதியவர் அல்ல...
கண்களைத் திறவுங்கள்.
மற்றும்படி நீங்கள் ஆதாரமே இல்லாமல் சங்கக்காரவை fraud என்பதற்கு நான் கேட்ட கேள்விகளுக்கு விடையளியுங்கள்.
ஏற்கனவே ஒருவர் வந்து உதிரிக் கேள்விகளுக்கு விதண்டாவாதம் புரிந்துவிட்டு நிஜமான கேள்விகளுக்கு விடையளிக்காமல் தப்பியோடியதைப் போல இருக்காதீர்கள்.
சங்கக்காரவை fraud என்று அழைத்தமைக்கான காரணம்?
sledging?
சங்க்காரவின் sledging ஐ வடிவாகப் பார்க்க.
எந்தக் கெட்ட வார்த்தையோ, நாகரிகமற்ற வார்த்தையோ இருக்காது.
குரங்கு என்று அழைக்க மாட்டார், ஒருவனின் தாய் பற்றிக் கதைக்க மாட்டார்.
முடியுமானால் வாருங்கள் திரும்ப, ஆதாரங்களுடன்.
fraud என்பதற்கும் sledging இற்கும் சம்பந்தம் இல்லை.
fraud என்ற சொல்லிற்கு விளக்கம் தாருங்கள்.
August 19, 2010 11:40 AM
// சேவக் தன்னுடைய டெல்லி டீம் மேட் என்று கூட பார்க்காமல், அல்லது குறைந்த பட்சம் உண்மையான கிரிகெட் உணர்வு கூட இல்லாமல் நோ பால் வீசசொன்ன டில்சன் கேவலமானவன் இல்லையா? //
மரியாதையாகக் கதைக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
டில்ஷான் டெல்லி அணியின் சக வீரர் என்பது சக வீரர் என்றழைக்க முடியுமோ தெரியாது.
நாடு தான் முக்கியம், ஐ.பி.எல் என்பது வெறுமனே பணம்.
இனி விதண்டாவாதம். உங்களுக்கு பதிலளிக்கும் முறை இதுதான்.
டில்ஷான் முறையற்ற பந்தை வீசச் சொல்லவில்லை, வீசலாம் என்று சொன்னதாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
எத்தனை பந்துகள் ரந்தீவ் தொடர்ந்து வீசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
செவாக் நாள் முழுவதும் தட்டிக் கொண்டிருப்பார், ரந்தீவ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
போட்ட 2 பந்துகளிலும் செவாக் ஏன் அடிக்கவில்லை.
தான் விரும்பிய நேரத்தில் தான் செவாக் அடிப்பார் என்றால் அதுவரை பந்துவீச வேண்டிய அவசியம் கிடையாது.
இனி, உண்மையாக:
மைதானத்தில் வைத்து ஒரு கதையும், போட்டிக்கு பின்னரான செய்தியாளர் மாநாட்டில் இன்னொன்றுமாகக் கதைப்பது கேவலம் கிடையாதா?
எதிரணி 1 ஓட்டத்தை மட்டுமே பெற்றால் வெற்றி என்ற நிலையில் முறையற்ற பந்து வீசியபோது அந்த அணி தோல்விக்கு பயந்து வீசியது என்று சொன்னது கேவலம் கிடையாதா?
இப்போது spirit of the cricket பற்றியெல்லாம் கதைக்கும் அன்பு ஊடகங்கள், முரளியை பேடி 15 வருடங்களாக எறிகிறார் எறிகிறார் என்று நாகரிகமற்ற வகையில் கதைத்தபோது spirit of the cricket எங்கே போனது?
எங்கே போனார்கள் இந்த நியாயஸ்தர்கள்?
எங்கே போனார்கள் இந்த பொதுமைப்படுத்தும் நபர்கள்?
விடைகளோடு வாருங்கள், வெற்று வார்த்தைகளோடு அல்ல..
August 19, 2010 11:48 AM
அன்பு ஜெயக்குமாருக்கு சமர்ப்பணம்...
உங்கட கேள்விகளுக்கு விடையளிக்க ஒரு வீடியோவே போதும்.
பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.youtube.com/watch?v=tPnUe2IMuJU&feature=related
August 19, 2010 11:55 AM
கங்கோன்.
இவங்கள் பேடியும் ஹர்பஜனும் பிறந்த அதே எரிச்சல் கார இந்திய பூமியில் பிறந்தவர்கள் தானே.
சங்கக்காரவின் ஆங்கிலம்,புலமை, மகேலவின் ஸ்டைல்,எளிமை,ஆங்கிலப் புலமை, முரளியின் சாதனைகள்,டில்ஷானின் அதிரடிகள் கண்டு எறிகிறார்கள்.
இலங்கையை விட ஆயிரம் மடங்கு பெரிய நாடாயிருந்தும் இலங்கை போல குறுகிய காலத்தில் சாதிக்கவில்லையே என்று புகைச்சல்.
லூசில விடுங்க.
August 19, 2010 12:03 PM
// Jeyakumar said...
ஆடுகளத்தை இலங்கை கருங்களிகளுடன் சேர்ந்து மாற்றி அமைத்து முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் அவனது ஈன புத்தியை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அதானால் தன் டெஸ்ட் போட்டிகளில் டொச்சு பிளேயர்கள் இருந்தாலும் இலங்கை தன் சொந்த மண்ணில் மட்டும் எளிதாக வெல்கிறது.//
ஹலோ சார் மட்ச் எந்த நாட்டில் நடக்கிறதோ அது அந்த நாட்டுக்கு சாதகமாக பிட்ச் தயாரிப்பது எல்லா நாடுகளிலும்தான் நடக்கிறது.
உ+ம் டோனி தனக்கு சாதகமாக பிட்ச் தயாரித்த மைதான பராமரிப்பாளருக்கு பணம் கொடுத்திருக்கிறார்.
ஆதாரம்-http://www.hindustantimes.com/Dhoni-rewards-pitch-curator/Article1-304395.aspx
இவை கிறிக்கட்டில் நடக்கும் சாதாரண விடயங்கள். கிறிக்கட்டில் நடக்கும் சாதாரண விடயங்களையும் பாரிய பிரச்சனை போல விதண்டாவாதம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்..;)
August 19, 2010 2:32 PM
அண்ண! ஒரு வேள அந்த நோ போலுக்கு 6 அடிக்காம அவுட் ஆகி இருந்தா??? என்ன கதை
August 19, 2010 3:58 PM
Srilanka cricket கை விட்டால் நாங்களும் கைவிடுவோம் என நினைச்சியலோ Mr. Jeyakumar.
நீங்கதாய்யா தோத்தா போட்டு எரிப்பீங்கோ! அல்லது போட்டு உடைப்பீங்கோ!
வெற்றி எடுத்தாச்சு எண்டா குதிப்பீங்கோ! அல்லது கூத்தாடுவீங்கோ!
நீங்க எல்லாம் sportsmanship, நேர்மை நியாயம் கதைக்கறீகலே 75;ா!!!!!!!!!!
தாங்க முடியலே!!!!!!!!!!!!
calcutta, Eden Garden, 1996 World Cup semi Final. ஞாபகம் வைச்சு இருக்கியலோ ஜெயக்குமார் அண்ணே.............
ஆமா எங்க போயிட்டீங்க?
வாங்க அண்ணே வந்து பதிலுகள சொல்லிபுட்டு போங்க!!!!!!!
நம்ம அண்ணனுங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் நல்லா உங்க பாசையில ( அதான் கேவலமான சொற்ப்ரயோகங்கள் அத சொன்னேன் )
loshan அண்ணே எங்க போய்டீங்க?
நம்ம ஜெயக்குமார் அண்ணே க்கு எதாச்சும் சொல்லனும்ல. அவரு பாவம்தானே!
கன்கொன் அண்ணா ரொம்ப நன்றிகள். i like ur comments.
August 19, 2010 7:26 PM
//செவாக் நாள் முழுவதும் தட்டிக் கொண்டிருப்பார், ரந்தீவ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
போட்ட 2 பந்துகளிலும் செவாக் ஏன் அடிக்கவில்லை.//
முட்டாள் தனமான வாதம். 99 தில் இருக்கும்போதே இறங்கி வந்த அடித்த சேவக்கிற்கு தெரியாதா எந்த பந்தை அடிப்பதென்று.
சேவக் ஒரு போதும் பந்து வீசுபவரை பார்பதில்லை. யார் பந்து வீசினாலும் ஒரே மாதிரி ஆடக்கூடியவர். அது முரளியாக இருந்தாலும் சரி, கிளன் மேக்ராத்தாக இருந்தாலும் சரி.
அதற்காக அவர் எல்லா பந்துகளையும் அடிக்கும் முட்டாள் அல்ல.
//தான் விரும்பிய நேரத்தில் தான் செவாக் அடிப்பார் என்றால் அதுவரை பந்துவீச வேண்டிய அவசியம் கிடையாது.//
இதுவும் ஒரு முட்டாள் தனமான வாதம். அதுக்கு பேசாம 170 நோ பால் அல்லது 50 நோ பால் , 50 வைடு மற்றும் பைஸ் என ஆட்டத்தை சீக்கிரம் முடித்திருக்கலாமே?
//டில்ஷான் டெல்லி அணியின் சக வீரர் என்பது சக வீரர் என்றழைக்க முடியுமோ தெரியாது.
நாடு தான் முக்கியம், ஐ.பி.எல் என்பது வெறுமனே பணம்.//
சிங்களன் அடிக்கும் பொது இங்கு வருவதற்கு எது காரணம் . நாட்டு பற்றுடன் உதை வாங்கிகொட்டு அங்கயே இருக்கலாமே!
August 20, 2010 12:06 AM
// முட்டாள் தனமான வாதம். 99 தில் இருக்கும்போதே இறங்கி வந்த அடித்த சேவக்கிற்கு தெரியாதா எந்த பந்தை அடிப்பதென்று.
சேவக் ஒரு போதும் பந்து வீசுபவரை பார்பதில்லை. யார் பந்து வீசினாலும் ஒரே மாதிரி ஆடக்கூடியவர். அது முரளியாக இருந்தாலும் சரி, கிளன் மேக்ராத்தாக இருந்தாலும் சரி.
அதற்காக அவர் எல்லா பந்துகளையும் அடிக்கும் முட்டாள் அல்ல. //
நான் விதண்டாவாதம் என்று சொல்லிவிட்டுத்தான் அதைச் சொன்னேன். அதை தொடர்கிறேன்.
ரந்தீவின் பந்தால் 99 ஓட்டங்களில் ரெஸ்ற்றில் ஆட்டமிழந்த செவாக் ரந்தீவின் பந்திற்கு முன்னநகர்ந்து அடிக்கப் பயந்தார்.
அதனால்தான் வழமையாக 99 ஓ அல்லது 0 என்று பார்க்காமல் அடித்துவிளையாடும் செவாக் 2 பந்துகளை சும்மா தட்டிவிட்டார்.
மூன்றாவது பந்து முறையற்ற பந்து என்று நடுவர் அறிவித்ததைக் கேட்டபின்னர்தான் முன்னநகர்ந்துவந்து அடித்தார் என்கிறேன் நான்.
ரந்தீவ் அதை முறையற்ற பந்தாக வீசியிருக்காவிட்டால் செவாக் அதை அடிக்க முனைந்திருக்க மாட்டார் என்கிறேன் நான்.
If you can speculate things, then I can too.
சீரியஸாய்:
செவாக் வழமையாக யாருக்கும் பயப்படாமல் அடிப்பவர் என்ற வரலாறைப் பார்க்கும் உங்களால் ஏன் இலங்கை அணியில் அண்மைக்கால வரலாற்றில் எந்த அணியோடும் வம்புக்கு போகாத வரலாறு தெரியவில்லை?
வரலாற்றில் உங்களுக்குச் சார்பானவற்றை மட்டுமே தூக்கிப்பிடிக்காதீர்கள்.
// இதுவும் ஒரு முட்டாள் தனமான வாதம். அதுக்கு பேசாம 170 நோ பால் அல்லது 50 நோ பால் , 50 வைடு மற்றும் பைஸ் என ஆட்டத்தை சீக்கிரம் முடித்திருக்கலாமே? //
விதண்டாவதம் தொடர்கிறது:
அது பந்துவீசும் அணியின் விருப்பம்.
நாங்கள் விரும்பும் நேரத்தில் விக்கற்றுகளைக் கைப்பற்றுவோம், விரும்பும் நேரத்தில் முறையற்ற பந்துகளை வீசுவோம்.
நாங்கள் அதைப் போலவே நாங்கள் விரும்புவதைப் போல 'இந்தப் பந்தில் 4 ஓட்டம் அடிக்க வேண்டும்', 'இந்தப் பந்தில் 6 ஓட்டம் அடிக்க வேண்டும் இவர்', 'இந்தப் பந்தில் ஓர் ஓட்டம் தான் எடுக்க வேண்டும்' என்று எதிர்பார்ப்பதில்லை.
என்ன போடுகிறோமோ அதற்கேற்றவாறு விளையாட வேண்டியது தான் துடுப்பாட்ட வீரர்.
// சிங்களன் அடிக்கும் பொது இங்கு வருவதற்கு எது காரணம் . நாட்டு பற்றுடன் உதை வாங்கிகொட்டு அங்கயே இருக்கலாமே! //
விதண்டாவதம் தொடர்கிறது:
அதே சிங்களவனை என்ன புண்ணாக்குக்கு தன்மானம் மிக்க நீங்களும், உங்கள் சபையும் பணம் கொடுத்து விளையாட வா என்று அழைக்கிறது?
வீரர்களென்றால் உள்ளூர் நல்லவர்களை வைத்தே விளையாடலாமே?
எதற்கு ஸ்ரீலங்கா கிறிக்கற்றிடம் ஒப்பந்தம் செய்து ஐ.பி.எல் இல் உங்கள் வீரர்களைப் பங்கேற்க அனுமதியுங்கள் என்று உங்கள் தன்மானம் மிக்க, நல்லவர்கள் நிறைந்த சபை கேட்டது?
August 20, 2010 12:19 AM
ஏம்பா முதல் டெஸ்டில் முரளிக்கு 800வது விக்கெட் கொடுக்காமல் இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் ஒஜா ரன் அவுட் ஆகியிருந்தால் அல்லது ரண்டிவ் ஓவரில் ஹிட் விக்கெட் செய்துகொண்டிருதால் ஸ்ரீ லங்காவிற்கு எப்படி இருந்திருக்கும்?...
August 20, 2010 1:10 AM
லோசண்ணா, இந்தியாவிற்கு வந்தால் ரத்தம் நம்மளுக்கு வந்தால் தக்காளி சட்டினியாம்.
August 20, 2010 1:31 AM
// jai said...
ஏம்பா முதல் டெஸ்டில் முரளிக்கு 800வது விக்கெட் கொடுக்காமல் இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் ஒஜா ரன் அவுட் ஆகியிருந்தால் அல்லது ரண்டிவ் ஓவரில் ஹிட் விக்கெட் செய்துகொண்டிருதால் ஸ்ரீ லங்காவிற்கு எப்படி இருந்திருக்கும்?... //
முரளி ஒருபோதும் அழுதுகொண்டு பத்திரிகையாளர் மாநாடு வைத்திருக்க மாட்டார்.
அந்தப் போட்டியைக் கவனித்துப் பார்த்திருந்தால், டில்ஷானின் பந்தில் ஸ்ரம்பிங் முயற்சி ஒன்று நடக்கும், ஒரு ரண் அவுட் முயற்சி நடக்கும். முரளியே அதைத் தெளிவாகச் சொன்னார் எப்படியாவது அந்த விக்கற்றை எடுத்துவிடுங்கள் என்று சங்கக்காரவிடம் சொன்னதாக.
முரளியின் 800ஆவதை நோக்கி அன்று போட்டி நகர்ந்திருந்தால் எதற்காக பிரசன்ன ஜெயவர்தன டில்ஷானின் பந்தில் ஸ்ரம்பிங் முயற்சி செய்ய வேண்டும்?
ஏன் ரண் அவுட் முயற்சி செய்ய வேண்டும்?
மற்றும்படி முரளியையும் செவாக்கையும் அருகில் வைத்து ஒப்பிட விரும்பவில்லை.
உங்கள் மனப்பாங்ளை இன்னொரு பின்னூட்டம் அழகாககச் சொல்கிறது.
// ம.தி.சுதா said...
லோசண்ணா, இந்தியாவிற்கு வந்தால் ரத்தம் நம்மளுக்கு வந்தால் தக்காளி சட்டினியாம். //
இதுதான் பிரச்சினை....
கொடுமை, உங்களுக்கு வரும் தக்காளிச் சட்னியையும் இரத்தமென்றல்லவா சொல்கிறீர்கள்!
August 20, 2010 8:26 AM
இப்பத்தாண்டா புரியுது எதுக்கு உங்கள எங்க போனாலும் ஓட ஓட அடிக்கிறாங்கன்னு.
எங்க போனாலும் இந்த ஏமாத்திறது , திருடுரதுன்னு எல்லா பிராடு வேலைகளும் பண்ணிட்டு எங்கள அடிக்கிறாங்க அடிக்கிறாங்கன்னு அழுக வேண்டியது. லண்டன்-ல ஒரு சிறிலங்கன் அகதியாவது நேர்மையா வாழ்றேங்கலாடா?
சக தமிழன்னு உதவி பண்ணுற தமிழ்நாட்டு தமிழனுக்கே ஆப்படிகிரீங்கலேடா.
August 20, 2010 11:31 AM
// Anonymous said...
இப்பத்தாண்டா புரியுது எதுக்கு உங்கள எங்க போனாலும் ஓட ஓட அடிக்கிறாங்கன்னு. //
ஓகோ....
அப்ப நீங்களேன் அவுஸ்ரேலியால போய் அடிவாங்குறீங்கள்?
அதுக்கு என்னண்ணே காரணம்?
// எங்க போனாலும் இந்த ஏமாத்திறது , திருடுரதுன்னு எல்லா பிராடு வேலைகளும் பண்ணிட்டு எங்கள அடிக்கிறாங்க அடிக்கிறாங்கன்னு அழுக வேண்டியது. லண்டன்-ல ஒரு சிறிலங்கன் அகதியாவது நேர்மையா வாழ்றேங்கலாடா? //
அப்ப அவுஸ்ரேலியாலயும் உஎந்த நிலைமையா?
அங்க அப்ப படிக்க போறதில்லயா?
களவெடுக்கவா போறனீங்கள்?
பிறகென்னத்துக்கு இந்தியால நிண்டு ஆர்ப்பாட்டம் பண்ணுறனீங்கள்?
// சக தமிழன்னு உதவி பண்ணுற தமிழ்நாட்டு தமிழனுக்கே ஆப்படிகிரீங்கலேடா. //
இதில தமிழனுக்கெதிரா யாரு கருத்துச் சொன்னது?
இதில எங்க தமிழர்கள், சிங்களவர்கள், இந்திக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கறுப்பர்கள் எல்லாரும் வந்தார்கள்?
யாரு இங்க ஆப்பு அடிச்சது?
(முதல்ல பொது இடத்தில எப்பிடிக் கதைக்கிறது எண்டு படிச்சிட்டு வாங்கோ.
மனுசனுக்கு மனுசன் மரியாதை குடுங்கோ, பிறகு தமிழனுக்கு குடுப்பம்)
August 20, 2010 11:58 AM
// Anonymous said...
இப்பத்தாண்டா புரியுது எதுக்கு உங்கள எங்க போனாலும் ஓட ஓட அடிக்கிறாங்கன்னு.
எங்க போனாலும் இந்த ஏமாத்திறது , திருடுரதுன்னு எல்லா பிராடு வேலைகளும் பண்ணிட்டு எங்கள அடிக்கிறாங்க அடிக்கிறாங்கன்னு அழுக வேண்டியது. லண்டன்-ல ஒரு சிறிலங்கன் அகதியாவது நேர்மையா வாழ்றேங்கலாடா?
சக தமிழன்னு உதவி பண்ணுற தமிழ்நாட்டு தமிழனுக்கே ஆப்படிகிரீங்கலேடா.//
தமிழ் நாட்டுதமிழரே..........
தெரியுது நீங்க உதவுறது எப்பிடின்னு ?
எப்படா உதவிநீங்க?
இப்பயாச்சும் உதவுறீங்களா?
வாய் இருந்தும் பேச முடியாத மௌநிகளா நாங்க எங்க உறவுகளுக்காக அழ மட்டும் தான் முடியும்.
உங்களயும்தானேடா சுடுறாங்கள் அதுக்கு முதலாவது ஏதும் பண்ணுங்கடா?
எவன் பதவி தாரான், பணம் தாரான் எண்டு வாய பிளக்குற பிணங்கள் தானேடா உங்க தலைவருங்க!!!!!!!!
அடேய் இங்க எவனும் இனவாதம் கதைகலடா நீங்க தாண்ட இந்த பதிவுல இனவாதமாவும் கேவலமாவும் பின்னூட்டம் போடுறீங்கள். இதயாடா சொல்லித்தாரான்கள்.
அடேய் போய் உங்க தமிழ் நாட்டு மீனவத்தமிழனுக்கு உதவுங்கடா!!!!!!!!!
வெத்து வேட்டுகளே............
நான் ஒரு உண்மையான தமிழர் மீது பற்றுள்ள இலங்கைத்தமிழண்டா......
ஆனால் நான் விளையாட்டில இனவாதம் பாக்கிரதில்லடா.........
முதல் எப்பிடி கதைகிறது பேசுறது எண்டு அப்பன் ஆத்தா கிட்ட பழகிட்டு வாடா.........
உங்க அணிக்கு உங்களுக்கு மரியாதைய சொல்லிதரலயாட உங்க நாட்டுல...........
நீங்க எல்லாம் எப்படா வல்லரசாகிறது...................... கனவுதாண்டா!!!!!!!!
loshan அண்ணே எங்க இருக்கீக? ரொம்பத்தான் கதைகிறாங்க...... கொஞ்சம் கதைக்க பேச சொல்லிகுடுகலாமில்ல .................
August 20, 2010 1:02 PM
என்னய்யா லோசன் தம்பி உன் பதிவுல இந்த காட்டு காட்டுராய்க?
என்னய்யா வேல? வந்து பதில போடுமய்யா.......
நம்ம தமிழனுக்கு உதவுராங்கலாமே..........? உண்மையா?
August 20, 2010 1:06 PM
சேவாக் 99* ஆனால் இங்கு 114* இன்னும் தொடரும் போல் இருக்கு லோசன் அண்ணா.
August 20, 2010 1:43 PM
என் அருமை வெற்றிக் குடும்ப சகோதரனுக்கு நான் வரையும் அன்பு மடல் தயவு செய்து இத்துடன் இந்தப் போட்டிப் பிரச்சனையை முடித்துக் கொள்வோமா?... ஏனென்றால் அது ஒரு கணவன் மனைவிப் பிரச்சனை இன்று முட்டி விட்டு நாளை சேர்ந்திடுவாங்க. ஆனால் எமக்கப்படியல்ல ஒரு பதிவாளருக்கு சரியான அங்கிகாரம் தருவது தமிழ் நாட்டு வாசகர்கள் தான். உதாரணத்திற்கு என் கொடிகள் தரவைப் பாருங்கள். நாம் எல்லோரும் தமிழர் என்ற ரீதியில் ஒரு சின்ன விடயத்திற்காக முகமுறிவுகளை ஏற்படுத்தக் கூடாது. காரணம் பிரச்சனைக்கு முழுக் காரணம் தமிழைக் கொன்ற வட நாட்டுக்காரன் அவனுடன் மோதுவோம். யாராவது தமிழ் நாட்டு வீரர் கேவலமாக நடந்தால் அதைத் தட்டிக்கேட்போம். தயவுசெய்து இந்தக் குடும்பப் போர் வேண்டாம். இது உங்களுக்கல்ல என்னருமை இலங்கை தமிழ் உறவுக்காகவே எழுதுகிறேன். தவறாக நான் சொல்லியிருந்தால் இந்த கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாம். நான் தமிழ் நாட்டுக்காரருக்கு வக்காளத்து வாங்க காரணம் என்னை பதிவுலகில் இவ்வளவு முன்னுக்கு கொண்டு வந்தவர்கள் அவர்கள் தான். நம்ம நாட்டுக்காரரில் என் முக்கிய நண்பர்கள், ஆசான்கள் என மதிக்கும் யாரும் என் தளத்தை எட்டிக் கூடப் பார்க்கல (ஒரு சிலரைத் தவிர. நான் சொல்வது சரி தானே.. சகோதரா.. (இது உங்களுக்கல்ல என்னருமை இலங்கை தமிழ் உறவுக்காகவே எழுதுகிறேன்)
August 20, 2010 9:18 PM
---- THE END ------------
August 22, 2010 11:34 PM
ha ha unga page ill sevakka kilitchi irukinga siripa adakka mudiyalla loshan anna unga blog kku adikadi vanthu cmnt pannamal rasithu vanthu vasithu vittu sellum unga razihan criket pathi thodarnthu eluthunga nadakkum pilayaum eluthunga ma requsest srilanka crikattai valthi eluthunga randive seithathu pilayaiunum thandikka pada wendiyathillai munpai vida randiv athikama vilambarapadutha pattu irukkar
August 23, 2010 5:06 PM