வெற்றி FM மீது தாக்குதல்
நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.
அந்த வேளையில் ரஜினிகாந்த்,லெனின் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் முழந்தாளிட்டு நிறுத்தியுள்ளார்கள்.
அதற்கு முதல் பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வரவேற்பறை,தொலைகாட்சி நிலையத்துக்கான வழி ஆகிய இடங்களிலுள்ள கண்ணாடிகளை நொறுக்கிய பின்னர்,வானொலி கலையகங்கள் இருக்கும் பக்கமாக நுழைய முயன்றபோதும் வாயில்களை சேதப்படுத்திய பின் வெளியேறிவிட்டனர்.
தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரத்துக்குள் வந்தபோதும் தீ முற்றாக எரிந்து செய்திப் பிரிவினுள்ளே அனைத்தையும் சாம்பராக்கிவிட்டது.
செய்திகள்,தொலைக்காட்சி செயலிழந்த போதும் வெற்றி FM, Real Radio (ஆங்கிலம்),சியத FM(சிங்களம்) ஆகியன இயங்குகின்றன.
மேலதிக விபரங்கள்,படங்களை பின்னர் பதிவேற்றுகிறேன்.
உடனடியாக செய்திகளை வெளிப்படுத்தி,மக்களுக்கு அறியத் தந்த சக ஊடகங்களுக்கு நன்றிகள்.




இதைத்தவிர வேறு பின்னூட்டம் என்னிடம் இல்லை
:(
July 30, 2010 6:46 AM
SHAME ON YOU - SRI LANKA!
July 30, 2010 7:01 AM
:-(
Be safe....
July 30, 2010 7:37 AM
எனது ஆழ்ந்த அனுதாபங்களும், கண்டனங்களும் லோஷன்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட அச்சகோதரர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து, சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்
July 30, 2010 7:37 AM
உயர்பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற வெற்றி எப் எம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் .. உண்மைய சொன்ன இப்பிடி தான் அடிபாங்களோ ? இது காலம் காலமா நடக்கிறது தானே ?
July 30, 2010 7:38 AM
Kodumai
July 30, 2010 7:39 AM
உங்களுக்கு ஒன்றுமாகவில்லையே?
வேறு யாருக்கும் ஏதேனும் காயங்கள் உண்டாகினவா?
என்ன காரணத்துக்காகத் தாக்குதல்?
காடையர்கள் என்றால் சிங்களர்களா?
July 30, 2010 7:45 AM
வாழ்க ஜனநாயகம்.
July 30, 2010 8:22 AM
tharjini
ethu eppavumea thodarum, tamil elankaiku etiri
July 30, 2010 8:50 AM
இலங்கையில் இது ஒன்றும் புதிதில்லை. ஊடகம் என்றால் தகவல்கள் கொடுப்பதுமல்ல சமயத்தில் அடியும் வாங்கவேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது....
மிகவும் வேதனையாகவுள்ளது அண்ணா. உங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
முன்னரைவிட பலமடங்கு பலத்துடன் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.
July 30, 2010 9:01 AM
காய்க்கிற மரத்துக்கு தான் கல்லடி விழும் அண்ணா... அது போல உங்களுடைய வெற்றிக்கும் (WIN) உயர்ச்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது... குறுகிய காலத்தில் உங்களது வளர்ச்சியை போருக்காதவர்களின் வேலை இது... வலைப்பதிவின் சார்பில் எனது கண்டனத்தையும் தெரிவித்துகொள்கிறேன் அண்ணா..
July 30, 2010 9:53 AM
'சியத்த' ஒலி, ஒளிபரப்பு நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை முதலில் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஊடக சுதந்திரத்தை தொலைத்துவிட்டு தேடுகிற தேசத்தில் நாங்களும் ஊடகவியலாளராக இருக்கிறோம் என்பதில் பெருமை. ஆனாலும், ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறான வன்முறைகளைத் தொடர்ந்தும் அனுமதிப்பவர்கள் வன்முறையாளர்களை விட கெடியவர்கள்.
July 30, 2010 9:55 AM
மனவருத்தமான செய்தி...மீண்டும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ள...இவ்வாறு தொடர்ந்து போனால் எப்படி ஜனநாயகத்தினை இலங்கையில் ஏற்படுத்துவது? பாதிக்கப்பட்ட நண்பர்கள் விரைவில் விரைவில் குணமடைய குணமடைய வேண்டுவோம்
July 30, 2010 10:05 AM
:(((((((((
July 30, 2010 10:05 AM
காலையில் வெளியே சென்றிருந்ததால் முதலே எனக்குத் தெரியாது.
வெளியே சென்றபின் தான் இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னார்கள்.
காயமடைந்தவர்கள் மிகவிரைவாக குணமடையவேண்டும், குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
ஊடகங்கள் மீதான தொடர்ச்சியான நெருக்குதல்களுக்கு மத்தியில் இயங்கும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது கண்டிக்கபட வேண்டியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகவும் விசாரணை நடத்த 'விசாரணைக் குழு' அமைக்கப்படும் என்று நம்புகிறோம்.
அதைவிட வேறெதையும் எம்மால் எதிர்பார்க்க முடியாது.
இம்முறையாவது ஊடக அமைச்சோ அல்லது காவல்துறையோ நீதியை வழங்குகிறதா என்று பார்ப்போம். :(
செய்திப்பிரிவு மீண்டு(ம்) வரக் காத்திருக்கிறேன்...
July 30, 2010 10:08 AM
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா. வர வர எங்கள் நாட்டு நிலமை எப்பிடிப் போகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.
வாழ்க ஜனநாயகம். காயமுற்றவர்கள் விரைவில் குணமாகட்டும். மீண்டும் அவர்கள் பயணம் தொடரட்டும்.
ஜனகன் - அமெரிக்காவிலிருந்து
July 30, 2010 10:16 AM
பத்திரமாக இருங்கள் ... எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் ...
July 30, 2010 10:28 AM
கருத்துக்களை தட்டச்சு செய்ய விரல்கள் வேகமேடுதாலும் சுயநலமும் பாதுகாப்பும் கருதி மனது தடுக்குறது.......
Anna be safe...
always we r wt u......
July 30, 2010 10:40 AM
this only a strat. aduththa adi unakku than. be care full man. we will beat u again. our next aim. wi will try cut u'r neck. u time is going to end very soon. i will saw u. who i'm?
July 30, 2010 11:07 AM
எந்த விதத்திலும் சகித்துக்கொள்ளமுடியாத செய்தி. யுத்த குற்ற விசாரணைகள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை விட, ஒரு நாட்டின் நன்மதிப்புக்கும், அதன் பாதுகாப்பிற்கும், சர்வதேச ரீதியில் அவமதிப்புக்கும் ஊடகங்களின் மீதான தாக்குதலே முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பதை இவற்றில் ஈடுபடுவோர் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் வழமைதானே என்று பாராமுகமாக இருந்துவிடக்கூடாது.
ஊடகங்களின் மீதான தாக்குதல்களை ஊடக அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள் என்பவை கண்டித்தால் மட்டும் போதாது. இன்றைய நிலையில் மக்களுக்கான இந்த ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மக்களே பாதுகாப்பு வழங்கவேண்டிய தேவை எம் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு உரிய சட்டங்கள், செயற்பாட்டு ரீதியாக நிறைவேற்றப்பட்டு ஊடக சுதந்திரம் கௌரவிக்கப்படவேண்டும்.
July 30, 2010 11:12 AM
ம்ம்... அனைத்தும் சீக்கிரம் சரியாக இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..:(((
July 30, 2010 11:17 AM
//this only a strat. aduththa adi unakku than. be care full man. we will beat u again. our next aim. wi will try cut u'r neck. u time is going to end very soon. i will saw u. who i'm?//
இந்த மனம் கொந்தளிக்கும் நேரத்திலும். இப்படி எல்லாம் நம் மத்தியில் மனிதர்கள் உள்ளனரே என்று வேதனைதான் வருகின்றது. இவ்வாறான பின்னூட்டங்களை அழித்துவிடுங்கள் லோஷன்.
July 30, 2010 11:25 AM
very sad scene.. today morning when i got the Breaking News alert on my phone i was shocked... but was happy to hear that Vettri FM was not harmed..
dont worry anna... ellaam nallathukku endu ninaiththukollungal... ellam nallathaaka nadakkum ethir kaalaaththil....
July 30, 2010 11:48 AM
அனைத்துமே மீண்டும் சரியாகி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்!!!
அண்ணா, எத்தனை நடந்தாலும், யார் எது செய்தாலும் ரசிகர்கள்தான் உங்கள் பலம்!!! எனவே இதை ஒரு பொருட்டாக எடுக்காது வெற்றியை வெற்றி பாதையில் அழைத்து செல்லுங்கள்
July 30, 2010 11:57 AM
:((((
July 30, 2010 12:13 PM
anna b safe,etho oru promboku cmnt eluthi vachuruku patheengala?
seriyana ___________ payal,thill iruntha pera,adrs potu anupiruka vendiyathuthane.
tc
kit
July 30, 2010 12:23 PM
மிகவும் வருந்த தக்க செயல் நண்பரே. ஜூலை மாதம் இலங்கையை பொறுத்தவரையில் காடையர் மாதமாகி பலவருடங்கள் ஆகி விட்டது.
புலம் பெயர்ந்த உணர்ச்சி அற்ற தமிழனாய் என்னால் சொல்லகூடியது "பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என் உடன்பிறப்புகளே".
July 30, 2010 2:43 PM
கோழைகள்...என்ன சாதித்தனர்...
July 30, 2010 4:36 PM
முதலில் சூரியன்,சக்தி இன்று வெற்றி நாளை எந்த ஊடகமோ தெரியவில்லை
July 30, 2010 5:33 PM
உண்மைகள் எங்கு உள்ளதோ அங்கே தான் அடாவடி தனங்கள் இருக்கும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும் வெற்றி மீண்டும் வெற்றி பெறும்
July 30, 2010 5:34 PM
லோஷன்..,
சக மனிதனாய் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிக்க அகிம்சையை தவிர வேறதுவும் சிறப்பான ஆயுதம் இல்லை(நன்றி - மகாத்மா
July 30, 2010 6:27 PM
ஊடக சுதந்திரம் அற்ற நாட்டில் வேறு எதனை எதிர்பார்க்கமுடியும். சக்தி, சூரியன், சண்டே லீடர் வழியில் இன்றைக்கு வெற்றி. கருத்துகளை கருத்துக்களால் சந்திக்கமுடியாத மனிதர்களால் வேறு என்ன செய்யமுடியும்.
July 30, 2010 8:19 PM
வணக்கம் லோஷன்
மிகவும் வருத்தமாக இருக்கின்றது, செய்தி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன்
July 30, 2010 8:44 PM
Don't give up. Hope to see the Vetri team with more spirit and courage!
Good Luck Guys! We are with you!
July 30, 2010 9:01 PM
உண்மையில் முதலில் கவலையாய் இருந்தது பின்
//this only a strat. aduththa adi unakku than. be care full man. we will beat u again. our next aim. wi will try cut u'r neck. u time is going to end very soon. i will saw u. who i'm?//
இந்த செய்தியை படித்ததும் கோவமாய் கிடக்குது,எவ்வளவு துணிச்சலாய் இப்படி பகிரங்கமாய் மிரட்டமுடிகிறது.சாத்தாண் ஆட்சியில் பேய்கள் ஆடும் ஆட்ட்ம்.............. அண்ணா கவலை வேண்டாம்...........ஆனால் மிகவும் அவதாணமாய் செய்ற்படுங்கள்........தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்
July 30, 2010 11:02 PM
இலங்கையின் ஊடக சுதந்திரம் மீது விழுந்த இன்னுமொரு பலத்த அடி. தங்கள் பயணம் தளராது தொடரட்டும்.
July 30, 2010 11:51 PM
கவலைப்பட வேண்டிய விடயம்.
என்னுடைய கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு ஊடகம் தாக்கப்பட்டவுடன் கண்டனங்களும் அறிக்கைகளும் விடப்படுவதும் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் விடுவதும் சாதாரணமாகிவிட்டது.
இந்த தாக்குதல் சூத்திரதாரிகளாவது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா?
July 31, 2010 12:03 AM
கவலைப்பட வேண்டிய விடயம்.
என்னுடைய கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு ஊடகம் தாக்கப்பட்டவுடன் கண்டனங்களும் அறிக்கைகளும் விடப்படுவதும் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் விடுவதும் சாதாரணமாகிவிட்டது.
இந்த தாக்குதல் சூத்திரதாரிகளாவது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா?
July 31, 2010 12:03 AM
கேள்விப்பட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் லோஷன். கொஞ்சம் அவதானமாக செயல்படுங்கள். அதிகம் வெளியில் போவதை தவிர்துக்கொளுங்கள். வாகனங்கள் பாவிக்கும் முன் வடிவாக முதல் சோதனை செய்யுங்கள். கடவுள் துணை நிற்பார்.
July 31, 2010 4:24 AM
லோஷன்..
மிகப் பிந்தி வருகிறேன். சக மனிதனாய், தோழனாய், சகோதரனாய் உங்களுக்கு வருந்தங்கள். வேறேதும் சொல்லப்போவதில்லை. மீண்டு வாருங்கள். நிறையப் பேசுவோம்.அந்தப் பின்னூட்டம் பெருங்கவலை அளிக்கிறது
July 31, 2010 6:10 AM
ஊடகங்களை உயிரிலும் மேலாக மதிக்கும் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது லோஷன் அண்ணா
செய்தி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன்
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
புது விதியால் உலகை வெல்வோம்
தர்ஷன்
U.S.A
July 31, 2010 7:47 AM
வருத்தப்படவும் கவலைக்கொள்ளவும் மட்டுமே முடிகிறது அண்ணா!!!!!!!
July 31, 2010 9:02 AM
Dont give up.... U guys have to come much stronger & harder
July 31, 2010 9:15 AM
இது ஒரு மிகவும் கவலைக்கிடமானதும், கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது.
இந்த செய்தியைக் கேட்ட உடனே நான் ஆடிப்போயிட்டேன். நான் வழமையாகக் கேட்கும் வானொலிக்கா இவ்வாறு நிகழ்ந்தது.
இதனை செய்தவர்களை பிடித்து தலை கீழாக தொங்க வைத்து, கீழே நெருப்பைப் போட வேண்டும்.
July 31, 2010 10:41 AM
WE ARE WITH YOU,,,,,MARCH FORWARD !!!!!!!
July 31, 2010 1:36 PM
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எதிரிகளை விட துரோகிகளிடம் கவனமாக இருங்கள்.
எந்த நேரத்திலும் நாம் உங்களுடன் இருக்கிறோம், இருப்போம் அண்ணா.
இலங்கை திருந்திவிட்டது என்று எண்ணியிருந்தேன். இல்லை .இது போன்ற காட்டு மிராண்டிகள் இருக்கும் வரை இலங்கையை யாரும் திருத்த முடியாது.
(நேற்றைய தினம் இங்கு விடுமுறை. ஆகையால் இன்றுதான் செய்தி அறிந்தேன். தாமதமான கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.)
July 31, 2010 3:19 PM
nam epodum salethawrga alla nam irukum varai emdu vettri fm yarlum asaika mudeyadu enadu anudabangal
July 31, 2010 11:50 PM
//this only a strat. aduththa adi unakku than. be care full man. we will beat u again. our next aim. wi will try cut u'r neck. u time is going to end very soon. i will saw u. who i'm?//
EPPADI IWANGALAALA MATTUM IWWALAWU SERIOUS TIMELAYUM COMEDY PANNA MUDIYUTHU :-O
August 2, 2010 11:27 PM