ராவணன் - என் பார்வையில்
ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று தெஹிவளை கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.
பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் கமெரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.
பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.
ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.
பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.
வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..
வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?'
மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.
இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.
அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.
இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.
மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.
இனி நடிக,நடிகயரைப் பற்றிப் பார்க்க முன், கதை....
நவீன ராமாயணமே..
அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.
அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.
தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.
ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..
சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ்.
தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.
அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.
அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை மணி.. கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.
விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.
அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.
ஐஸ்வர்யா - அழகு.
உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.
கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.
நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.
கண்களால் பேசும் இடங்களும் அருமை.
"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.
ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.
பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.
கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.
ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.
அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.
இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.
முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..
மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)
அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் கமெராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..
கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே.
அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.
ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?
படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.
கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..
இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..
பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.
ஆனால் என்னை மிகக் கடுப்பாக்கிய விஷயம்..
உசுரே போகுதே பாடல் வருமிடம்..
படத்தின் ஆரம்பத்திலேயே இப்பாடல் வந்துவிடுவதால் பாடலும் ஒட்டவில்லை.. அதேநேரம் ராவணின் காதலோ,மோகமோ ஆழமாகப் பதியவுமில்லை.
வழமையாக மணி பாடல்களை சரியான இடங்களில் பொருத்துவதில் கிங். இம்முறை இந்தப் பாடலில் மட்டும் சறுக்கி இருக்கிறார்.
மணி ரத்னத்தின் படங்களில் வழமையாக இருக்கும் எதோ ஒன்று ஸ்பெஷலான ஒன்று இந்தப்படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களே நீங்களும் உணர்ந்தால் சொல்லுங்கள்.
நீண்ட காலப் படப்பிடிப்பு இதற்கு ஒரு காரணமோ?
ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தெரிவு மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தெரிவுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் கமெராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
உயரமான ஆபத்தான மலைகளைப் பார்க்கும் போது விக்ரம்,ஐஸ்வர்யா மட்டுமல்லாமல் படப்பிடிப்புக் குழுவே பட்டிருக்ககூடிய கஷ்டமும் அவர்கள் எடுத்த கடும் முயற்சிகளும் தெரிகிறது.
ஆனால் படத்தின் மொத்த செலவு 120 கோடி இந்திய ரூபாய் என்பது அழகான,பிரம்மாண்டமான செட்களிலேயே தெரிகிறது.
இறுதிக் காட்சிகளுக்கு கொஞ்சம் முன்னதாக ஒரு சிறு தொய்வு. வழமைக்கு மாறாக மணிரத்னத்தின் படமொன்றில் அதிக வசனங்கள்.
கடவுள் சிலைக்கு முன்னால் விக்ரமும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்களில் தொனிக்கும் காரம் அனேக இடங்களில் மிஸ்ஸிங்.
முடிவு நான் எதிர்பார்த்ததே.. ஆனால் அந்தப் பாடல் ரஹ்மானின் இசையில் மனதைப் புரட்டி எதோ வலிக்க செய்தது.. செய்கிறது.. இப்போது வரை..
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ராவணன் பற்றி ஏகமாக எதிர்பார்ப்புக்கள் இருந்ததோ என்னவோ எனக்கு பூரண திருப்தி இல்லை.
ராமாயணத் தழுவல் என்பதால் அடுத்த காட்சிகள் இப்படி இருக்கும் என ஊகித்து ஊகித்து திரைக்கதையோடு லயிக்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கும்.
அங்கு இங்கு என ஆழ்ந்து ரசித்த பல விஷயங்கள் இருந்தும், விக்ரமின் மேல் அபாரமாக ஈர்க்கப்பட்டும், சந்தோஷ் சிவனை நினைத்து நெக்குருகியும்,,ரஹ்மானின் இசை மேல் உயிர் வைத்தும் கூட,
ராவணன் - தனிப்பட எனக்கு முழுத் திருப்தி இல்லை.
மணிரத்னத்தின் தேடலுக்கு இதைவிட இன்னும் பலபடிகள் மேலே ராவணன் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம்.
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..
ரஹ்மானின் குரலில் வைரமுத்துவின் ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்னமும் ஆன்மாவை நிறைத்து இன்னொரு யுகம் வாழும் புத்துணர்வு தருகிறது.
இந்த வரிகளை மீண்டும் இசையுடன் நிரப்பவும் ஒரு தடவை ராவணன் பார்க்கவேண்டும்.
அப்போது பிடித்தால் மறக்காமல் உங்களுக்கு சொல்கிறேன்.
# மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி முடிக்க அலுவலக மும்முரத்துடன் நேரம் போயிட்டுது. ரொம்ப நேரமாக் காத்திருந்த நண்பர்களே SORRY!
அடுத்த SORRY இவ்வளவு நீளமாகப் பதிவு போட்டமைக்கு..
என்ன செய்ய மனசிலே இருக்கும் அத்தனை விஷயமும் சொல்ல வேண்டாமோ??
பிற்சேர்க்கை - பல நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலமாக நான் வருவேன் பாடலை இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
ஆனால் ராவணன் பாடல் வெளியீட்டில் ரஹ்மானும் வைரமுத்துவும் உரையாடும்போது
'வீரா' பாடல் மட்டும் வைரமுத்து ஊருக்குப் போயிருந்தநேரம் இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சொல்கிறார்கள்.
இங்கே நன்றாக அதைக் கேட்டு அவதானியுங்கள்..
நான் வருவேன் - ராவணன்
ஆனால் ராவணன் பாடல் வெளியீட்டில் ரஹ்மானும் வைரமுத்துவும் உரையாடும்போது
'வீரா' பாடல் மட்டும் வைரமுத்து ஊருக்குப் போயிருந்தநேரம் இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சொல்கிறார்கள்.
இங்கே நன்றாக அதைக் கேட்டு அவதானியுங்கள்..
நான் வருவேன் - ராவணன்




.jpg)







நேற்று ராத்திரியிலிருந்து எதிர்பார்த்திருந்த விமர்சனம்
June 18, 2010 5:59 PM
:)))
விமர்சனம் நல்லாயிருப்பதாகப் படுகிறது...
பகிர்விற்கு நன்றிகள் அண்ணா...
:)))
June 18, 2010 6:04 PM
அட என்ன ஆச்சரியம் கிட்டத் தட்ட சில நொடிகள் வித்தியாசத்தில் இருவரும் ஒரே விடயத்தை ஒரே தலைப்பில் பதிவிட்டிருக்கிறோம்.
//ராவணன் பற்றி ஏகமாக எதிர்பார்ப்புக்கள் இருந்ததோ என்னவோ எனக்கு பூரண திருப்தி இல்லை.
ராமாயணத் தழுவல் என்பதால் அடுத்த காட்சிகள் இப்படி இருக்கும் என ஊகித்து ஊகித்து திரைக்கதையோடு லயிக்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கும்.//
எனக்கும் அதே உணர்வுதான் லோஷன் அண்ணா
June 18, 2010 6:06 PM
நாளைதான் போக வேண்டும்...
June 18, 2010 6:06 PM
நல்ல இருக்குதுங்க உங்க விமர்சனம்...
June 18, 2010 6:17 PM
My Sentiment EXACTLY!!!!!!! : ) : )
Is that the Proper End to the Movie, RAVAN's DEATH???
What about Ragini, after his Murder By her Husbond???
June 18, 2010 6:26 PM
நன்றி உங்கள் விமர்சனத்தை எதிர் பார்த்திருந்தேன் .. வழமை போல சந்தோஷ் சிவன் கலக்கியுள்ளார் போல .. என்ன குறை படத்தில் ?திரைக்கதையா ?விசில் கூட்டத்துடன் மணி படம் பார்ப்பது கஷ்டம் திங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன் .
June 18, 2010 6:32 PM
உங்கள் பாணி விமர்சனம். படத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
//மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி முடிக்க அலுவலக மும்முரத்துடன் நேரம் போயிட்டுது. ரொம்ப நேரமாக் காத்திருந்த நண்பர்களே SORRY!//
சேச்சே, ரொம்ப நேரமெல்லாம் இல்லை, காலை 5.30 இலிருந்துதான் :)
June 18, 2010 6:41 PM
மிக அருமை
June 18, 2010 6:53 PM
அண்ணே விமர்சனம் அருமை!
எனக்கும் ஏனோ படத்தில் பூரண திருப்தி இல்லை. எதிர்பார்த்து போன ஏதோ ஒன்று குறைவதாகவே நினைக்கிறேன்
June 18, 2010 7:19 PM
என்னைப்பொறுத்தவரை மிகசிறந்தபடம்.....
ஊகிககூடிய ஒன்றை சலிப்படையாதவண்ணம் திரைக்கதையமைத்து வினாடிக்கு வினாடி மனதை கட்டிவைத்துள்ளார்.
இப்படிப்பட்ட சிரமமான ஒருகருவைதூக்கிகொண்டு அதை திரைக்கதையில் அருமையாகவே கொண்டுவந்துள்ளார்..
ராவணா ஒருநாளில் ஆராயாப்படமுடியாத ஒன்று.. பத்துமுறை பார்த்தாலும் இன்னும் புது புது விடயங்களும் அர்த்தங்களும் புரியும்..
http://ashwin-win.blogspot.com/
June 18, 2010 7:38 PM
படம் பார்க்க தூண்டுகின்றது விமர்சனம். ஆனால் சன கூட்டம் குறைய பார்க்கலாம் என இப்போது எண்ணம்.
அடுத்த கமல் என நீங்கள் விக்ரமை கூறுகின்றீர்கள். அதே வரிசையில் போட்டியாளராக இருக்கும் சூர்யா அஜித்துக்கு என்ன சொல்லப் ப்போகிண்றீர்கள்
June 18, 2010 7:45 PM
//மணி ரத்னத்தின் படங்களில் வழமையாக இருக்கும் எதோ ஒன்று ஸ்பெஷலான ஒன்று இந்தப்படத்தில் மிஸ்ஸிங்..//
வழக்கமா ஒரு 'குத்துப் பாட்டு' இருக்குமே .. அதுவா?
June 18, 2010 10:04 PM
That lines from mani not muthu
June 18, 2010 10:22 PM
Kamal GREAT ACTOR-a?
HE IS NOTHING-YA
SUYRA & VIKRAM IS THE BEST AS FOR NOW
I AM A SURYA FAN
KAMAL HE IS A WOMANIZER... IF U SUPPORTS HIM... MAY BE U TOO WOMANIZER...
BYE MADHUMIDHA
MADHUMIDHA1@YAHOO.COM
June 18, 2010 10:41 PM
http://ithayapaasai.blogspot.com/2010/06/blog-post_17.html
இத படிச்சி பாருங்களேன் இறைய விடயங்களில் ஒத்து போகிறோம்
June 18, 2010 10:44 PM
இதற்குப் பெயர் (இ)ராவணன் விமர்சனம் இல்லை, (இ)ராவணன் ஆய்வு....
அருமை... என்னையும் படம்பார்க்கத் தூண்டுகிறது ஆனால் இந்த முதல்நாள் காட்சிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களின் வீங்கிய விலைகள்தான் என்ன சுருங்கிய கஜானாவால் தாங்கமுடியாதிருக்கிறது.... பார்ப்போம் இன்னும் ஓரிரு தினங்களில் விசேட காட்சிகளிலெல்லாம் அவர்கள் கொள்ளையடித்த பின்பு சாதாரணக் கட்டணத்தில் போய்ப்பார்க்கலாம் என்றிருக்கிறேன்!
(விஜய் படத்துக்கெல்லாம் இலவசட்டிக்கெற் தந்து உயிரை வாங்கிறவர்கள், இந்த மாதிரி நல்ல படத்திற்கு அப்படி தரமாட்டேன் என்கிறார்கள்... :-p)
June 18, 2010 10:47 PM
// sweet said...
KAMAL HE IS A WOMANIZER... IF U SUPPORTS HIM... MAY BE U TOO WOMANIZER...
BYE MADHUMIDHA
MADHUMIDHA1@YAHOO.COM //
Yes, but if a girl supports Simbhu, how can we call her????
// sweet said...
1000 sollungapa... simbu dance-kkaga padam 1 time pakkalam... //
http://cablesankar.blogspot.com/2008/12/blog-post_18.html
June 18, 2010 10:56 PM
//படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.//
ராவணனுக்கு ஒரு சாபம் இருந்ததே அனுமதியின்றி தொட்டால் தலை வெடித்துவிடும் என ...அதை நினைவில் வைத்து தான் மணிரத்னம் இதையும் எடுத்தாரோ
நான் இன்னும் படம் பார்க்கல .... நாளைக்கு பார்த்துட்டு என்ன குறைவு எண்டு சொல்லுறேன்
June 18, 2010 11:38 PM
இப்போது தான் ஹிந்தியில் பார்த்து விட்டு வந்தேன்.
மணிரத்னத்தின் முதல் தப்பு அபிஷேக் பச்சன்.(நடிப்பு சுத்தமா இல்லை.)
இரண்டாவது தப்பு ஸ்டோரி லைன்.
மூன்றாவது தப்பு பாடல் தரும் இடம்.
மொத்தத்தில் இது வழக்கமான மணிரத்னம் படம் இல்லை.
பெரிய பிளஸ் பாயிண்ட் சந்தோஷ் சிவன் & மணிகண்டன்.
அடுத்து எ.ஆர்.ரகுமான்.
ஹிந்தியில் கண்டிப்பா பிளாப்.
செல்வா , மும்பை.
June 19, 2010 12:06 AM
//மணி ரத்னத்தின் படங்களில் வழமையாக இருக்கும் எதோ ஒன்று ஸ்பெஷலான ஒன்று இந்தப்படத்தில் மிஸ்ஸிங்..//
நான் நினைக்கிறேன், மணிரத்தினத்தின் அனைத்து படங்களிலும் கதையுடன் பின்னிப்பினந்தபடி மனதையும் பிழிந்து செல்லும் ஒரு காதல் இருக்கும்.... அது இங்க அவ்வளவாக இல்லை எண்டு நினைக்கிறேன். உதாரணதுக்கு, ரோஜாவில் கணவனை தீரவதிகள் கொண்டு சென்ற போது மொழியும் தெரியாமல் கணவனை மீட்பதற்காக பட்ட பாடு, உயிரே படத்தில் தீவிரவாதியான மனிசாவுடன் உண்டாகும் காதல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், இந்த படத்தில் காதல் அவ்வளவாக நஞ்சை வருடவில்லை, சில நேரம் மணிரத்தினம் மாற்றான் மனைவி என்றபடியால் அதிகம் சொல்லப் போய் தமிழ் கலாச்சாரத்தில் எதாவது பிரச்சனை எடுப்பார்களோ என எண்ணி தனக்கு தானே போட்ட கடிவாளத்தால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் ....
உங்க பதில் என்ன அண்ணா???
Arun - UK
June 19, 2010 4:44 AM
//மணி ரத்தினத்தின் படங்களில் வழமையாக வரும் எதோ ஒரு ஆன ஒன்று இந்த படத்தில் மிஸ்ஸிங்...//
நான் நினைக்கிறேன் வழமையாக, கடலும் கடல் சார்ந்த இடமும் காட்டப்படுவது இந்த படத்தில் இல்லை என்று...
June 19, 2010 5:13 AM
அருமந்த வீரா பாடலை எழுத்தோட்டத்துக்கு வீணாக பயன்படுத்திவிட்டதாக தோன்றுகிறது. ஜோன் விஜய்தான் இங்கு இலட்சுமணனாக காட்டப்படுகிறார் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்.
சில வசனங்கள் அலட்டல்கள். படம் நல்லம் என்றாலும் Maximumதரத்துக்கு இல்லை என்பது உண்மை.
June 19, 2010 10:40 AM
ரஹ்மானின் குரலில் வைரமுத்துவின் ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்னமும் ஆன்மாவை நிறைத்து இன்னொரு யுகம் வாழும் புத்துணர்வு தருகிறது.//
இது மணிரத்னம் எழுதியது என்று ரஹ்மான் நேற்று விஜயில் கூறியது போல் இருந்தது. :) சரியாகத் தெரியவில்லை.
June 19, 2010 11:26 AM
நாளை படம் பார்த்ததன் பின்னர் உங்களின் விமர்சனம் / ஆய்வு வாசிக்க ஆவலாயுள்ளேன்.
@சதீஷன்
//அடுத்த கமல் என நீங்கள் விக்ரமை கூறுகின்றீர்கள். அதே வரிசையில் போட்டியாளராக இருக்கும் சூர்யா அஜித்துக்கு என்ன சொல்லப் ப்போகிண்றீர்கள்//
உங்களின் “அதே வரிசை” எனும் பதம் ஏதோ செய்கிறதே...!!!
உங்களின் விஜய் இதே வரிசைக்கு மேலேயா அல்லது கீழேயா?? #சீண்டுதல்
June 19, 2010 2:02 PM
நாளை படம் பார்த்ததன் பின்னர் உங்களின் விமர்சனம் / ஆய்வு வாசிக்க ஆவலாயுள்ளேன்.
@சதீஷன்
//அடுத்த கமல் என நீங்கள் விக்ரமை கூறுகின்றீர்கள். அதே வரிசையில் போட்டியாளராக இருக்கும் சூர்யா அஜித்துக்கு என்ன சொல்லப் ப்போகிண்றீர்கள்//
உங்களின் “அதே வரிசை” எனும் பதம் ஏதோ செய்கிறதே...!!!
உங்களின் விஜய் இதே வரிசைக்கு மேலேயா அல்லது கீழேயா?? #சீண்டுதல்
June 19, 2010 2:02 PM
நான் பார்த்தவரை படம் நன்றாகவே இருக்கிறது....ராமாயணத்தோடு ஒப்பிடாமல் ராமாயணம் கதையையே கேட்காமல் வாசிக்காமல் இருப்பவர்களால் இந்த படத்தை நன்றாக அனுபவிக்க முடியும்..
ஐஸ்வர்யாவை கடத்திய பின் சம்பவங்களை முன்னிறுத்தி படம் நகர்வதால் மணிரத்னத்திற்கு ஸ்கோப் குறைவு....அடுத்தது விக்ரமை அழுத்தமான கதாபாத்திரமாக காட்டும் காட்சிகள் குறைவு...மணிரத்னத்தின் அடையாளமான அழுத்தமான வசனங்கள் குறைவு....இவைதான் நான் பார்த்த ஏதோ மிஸ்ஸிங்கள்...
ஆனால் பார்க்கவேண்டிய படம்.... ஐஸ்வர்யா இன்னும் கண்களில் நிக்கிறார்...ராமாயணத்தை மறந்து கதை எதிர்பார்க்காமல் போனால் அனுபவிக்கலாம் .....!
June 19, 2010 4:07 PM
(விஜய் படத்துக்கெல்லாம் இலவசட்டிக்கெற் தந்து உயிரை வாங்கிறவர்கள்//
விஜய் படத்துக்கு தருவது டிக்கெட் அல்ல. மரண ஒப்புதல் வாக்குமூலம்
June 19, 2010 4:26 PM
முதலில் கமல் அதன்பிறகு விக்ரம் அப்புறம் சூர்யா..கடைசியில் கமல் சொல்லி இருக்கீங்க...
June 19, 2010 5:33 PM
விரைவில் பார்ப்போம்.
ஐயா கமலை பெண்தாசர் என்கின்றவர் பல மனைவிகளைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை ஏனோ மறந்துவிடுகின்றார்கள்.
June 19, 2010 6:33 PM
// ஐயா கமலை பெண்தாசர் என்கின்றவர் பல மனைவிகளைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை ஏனோ மறந்துவிடுகின்றார்கள். //
ஐயா! ஏன் அரசியல் பக்கமெல்லாம் போவான்?
கமலை பெண்தாசர் என்று சொன்னவர் ஒரு சிம்பு இரசிகை....
விளக்கமேதும் வேண்டுமா?
June 19, 2010 6:43 PM
இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.
அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?
சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.
இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?
June 19, 2010 7:27 PM
இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.
அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?
சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.
இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?
June 19, 2010 7:27 PM
the movie did not satisfy it expectation. its regularly happened in Tamil cinema. Third disappointment in this year.Ayirahil oruvan,Asal,and Now Raavanan.
technically movie was good. Rehman, Cinematography, Vikram, Aiswarya and Pirabhu. i like prabhu's perfromance.
I agreed with your all comments
June 19, 2010 7:47 PM
Hi Loshan,
I watched the film and it is almost narrating your review. Vikarm performance was immense and I feel it was not used by the film and it is most of the time unnecessary.. Anyway he done well as the director wanted. Karthink character was silly as u said in a Mani Ratnam film. Totally there are loads of things missing in the film in contrast with Mani Ratnam earlier films.. can watch out the film once for its visualization and for the background music... but Rahman songs are not purposely used by the film.. Congrats for ur accurate review of the film....
June 20, 2010 7:07 PM
அண்ணா நான் வருவேன்..... இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்து இல்ல,, மணிரத்னமே சொந்தக்காரர்
இந்த் விடியோவை பாருங்கோ!!
http://www.youtube.com/watch?v=Ti2Wha5oUlg
June 20, 2010 8:14 PM
//ஆட்டையாம்பட்டி அம்பி said...
இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.
அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?
சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.
இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?//
இது ஒரு திரைப்படம் அவ்வளவு தான்..இதை ராமாயணம் என்ற கோணத்தில் பார்ப்பது அவசியமற்றது.....கலகம் உண்டுபண்ணுபவர்களுக்கு வேண்டுமானால் இது அவலாக இருக்கலாம்...ஆனால் இது இன்னொரு திரைப்படம் மட்டுமே...ஒரு படைப்பாளனுக்கு சுதந்திரம் முக்கியம்....மணிரத்னம் இவ்வாறான ஒப்பீடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பயந்துதானோ என்னவோ தன்னுடைய இந்த படைப்பின் எல்லைகளை சுருக்கிக்கொண்டுள்ளார்...அது நன்றாகவே தெரிகிறது இப்படத்தில்....தளபதி என்ற படத்தை எடுக்க இருந்த சுதந்திரம் இதில் அவருக்கு இருந்திருக்காது....
June 20, 2010 11:51 PM
உங்களின் பார்வையில் விமர்சனம் நல்ல இருக்கிறது . நான் இன்னும் படம் பார்க்கவில்லை . பகிர்வுக்கு நன்றி
June 21, 2010 12:09 AM
good
June 21, 2010 2:23 PM
//ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.//
சென்னையில் கூட ரஞ்சிதா வரும் காட்சிகளில் ஒரே விசில், கைதட்டல் தான்
June 22, 2010 1:43 AM
அண்ணா...
ரிவீவ் சூபர்...
நேத்து தான் படம் பார்த்தேன்.. நல்ல இருந்தது.. ஆனா உண்மைய சொல்லணும்.. மணி ரத்னம் டச் கொஞ்சம் மிஸ்ஸிங் தான்....
நீங்க சொன்ன மாதிரி கடைசியில் வரும் நான் வருவேன் பாட்டு சூபர்.... கஷடப்பட்டு youtube ல தேடி பாட்ட கண்டு பிடிச்சேன்.. தியேட்டர் ரெகார்டிங் தான்.. ஆனா நல்ல கோளித்யா இருக்கு... இந்த லிங்க்'ல பார்க்கலாம்.. http://www.youtube.com/watch?v=aJ9AsE1LzGU
அண்ட் அல்சோ வெற்றி FM மாற்றங்கள் நல்ல இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ரோக்ராம்'ஆ "நண்பனிடம் சொல்லுங்கள்" ப்ரோக்ராம் தான்... ஹிஷம் அன்ன ரொம்ப டுச்சிங் 'ஆ செய்றாரு.. ரொம்ப நாள் அந்த ப்ரோக்ராம் தொடர வல்ல்துக்கள்..
June 25, 2010 2:42 PM
மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
இதை கொஞ்ஞம் பரிசீலிக்கலாமே!
உசிரே போகுது பாடல் படத்தில் Shift ஆகியுள்ளது.
நான் நினைக்கிர்றேன் அந்த பாடல் எழுத்ப்பட்ட இடம் ஆற்றில் தொப்பத்தில் மிதக்கும் காட்சிக்கு அடுத்ததாக எழுதப்பட்டது. ஆனால் பாடலின் மரியாதையை காப்பாற்ற இடம் மாற்றப்பட்டுள்ளது.
June 30, 2010 11:55 PM
//இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.//
ராவணன் கலிங்கத்து பரணி பாடல் வரிகள்
நான் ராவணன் கலிங்கத்து பரணி பாடல் வரிகளை தேடிய போது தான் படிச்சேன் உங்க விமர்சனம் ...
அந்த இரு பாடல்களும் டவுன்லோட் செய்ய ....http://www.beatoon.com/ta/albums/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/
m.s.santhosh
March 7, 2012 4:27 PM