A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு

5/24/2010 01:40:00 PM

(32) Comments

எனது யாழ்ப்பாணப் பயணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்..
சில முக்கிய அடையாளங்களைப் பதிவு செய்து படப் பதிவாகத் தருகிறேன்..

எண்ணங்களை எழுத்துக்கள் சொல்வதை விடப் படங்கள் தெளிவாக சொல்லும் என நம்புகிறேன்.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படங்களை கிளிக்குக.. 


A9 வீதி வவுனியா - பயணத்தின் ஒரு வித தொடக்கப் புள்ளி..
இலங்கையின் தற்போதைய பரபரப்பான சந்திப்புப் புள்ளி.


யுத்தம் முடிந்ததன் அடையாளம்..
ஷெல் கோதினுள் மலர்ச் செடி..
வன்னியில் இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவகம் ஒன்றின் வாயிலில் எடுத்தது.
எத்தனை பேரின் உயிரை இதிலிருந்து புறப்பட்ட குண்டு குடித்ததோ?



துணுக்காய் சந்தியில் காணப்படும் இடங்கள் குறித்த அடையாளப்பலகை.
பின்னால் இடிந்த கட்டடம்..

நீண்ட நெடும் வீதி.. 
எத்தனை வாகனங்கள் அங்கும் இங்கும் பயணித்தாலும் இந்த வீதியின் ஆழ்ந்த மௌனமும்,தனிமையும் எங்களுக்கும் ஆழ்ந்த ஏக்கத்தையும் பெரு மூச்சையும் தரக் கூடியவை.


இரு புறமும் குவிக்கப்பட்டுள்ள சீன,ஜப்பானிய,கொரிய உதவிகள்..???
தற்காலிக இருப்பிடங்கள் அமைப்பதற்கான கூரைகள்,சுவர்கள் என்று சொல்லப்பட்டன.
தேவையில்லாமல் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட முடியாது என்ற அறிவித்தல் பலகைகளையும் கண்டேன்.

மழையில் நனைந்து வெயிலில் காய்கின்றன.. இலவச உதவிகள்..



பிள்ளையாருக்கு அரோகரா.. 
முறிகண்டி ..
கோவில் சுவர்களிலும் துப்பாக்கி ரவைகள்,ஷெல்லடி அடையாளங்கள்..
பாவம்.. எல்லோரையும் காப்பாற்ற இங்கே இருக்கும் இவரை யார் அந்த வேளையில் காப்பாற்றினரோ?



யுத்தத்தின்,தாக்குதல்களின் கோரத்தை சொல்லும் குண்டும் குழியுமான வீதி..
நீண்ட வீதியின் இரு மருங்கிலும் இன்னமும் பல இடங்களில் கண்ணி வெடி அபாயமும் உள்ளது.



கிளிநொச்சி..
வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த் தாங்கி.
அழிவுகளின் அடையாளங்கள் இப்போது சுற்றுலா மையங்களாகி படங்களில் பரிதாபங்கள் தேடுகின்றன.

முல்லைத் தீவில் குண்டுகளால் கொத்துக் கொத்தாக சிதறிப்போன,சேதமுற்ற வாகனங்கள் குவியலாகக் குவிக்கப்பட்டுள்ள ஒரு வளவு..

தெளிவாகத் தெரியும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள்..
'த' வாகன இலக்கத் தகடுகள்..
அனைத்து வாகனங்களிலும் முக்கிய,பாவிக்கக்கூடிய பாகங்கள் இல்லை..

அநாதை வாகனங்கள்..
எம்மவர் எத்தனை சிரமப்பட்டு இந்த வாகன சொத்துக்களை வாங்கினாரோ?
உரிமையாளர்கள் எத்தனை பேர் இன்னும் உயிருடன் எஞ்சியுள்ளனரோ?



ஆனையிறவு படும் பாடு..
மாடி வீடாகிப் போன வாடி வீடு.. 


பின்னணியில் கைப்பற்றப்பட்டதன் அடையாளத்துக்காக இராணுவ வெற்றி சின்னம்..
இராணுவ பராமரிப்பில் ஆனையிறவின் உப்பளப் பகுதிகள்..


ஆனையிறவில் சூரியன் மறையும் காட்சி..
வழமையாக இரசிக்கும் உவப்பான காட்சி கூட மனதில் இறுக்கத்தையும் ஏதோ ஒரு கவலையையும் இந்த இடத்திலே தந்தது..
இரத்த சிவப்பாக வானமும்,கரு நிழல் படிந்து பூமியும்..
இருள் சூழ்கிறது..


அந்தி மறைந்து இரவு வருகிறது..
ஆனையிறவின் உப்பளப் பகுதி..
தனியாகக் கிடக்கிறது..



யாழ்ப்பாண நூலகம்.. 
எரிந்தும் மீண்டு எழுந்து நிற்கிறது..


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து வெற்றி வானொலியினூடாகத்  தகவல்கள் பரிமாறும் நேரம்...


இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு வேலைகள் நடக்கின்றன..
யாழ்ப்பாணத்துக்கு வெற்றி..





தந்தை செல்வா நினைவுத் தூபி..
(*திருத்தத்துக்கு நன்றி சகோதரர்களே,நண்பர்களே)
இன்னும் வெண்மை மாறாமல்..
இத்தனை யுத்தங்களிலும் இது மட்டும் சேதமில்லாமல்..
உயரமாய் இன்னும் எத்தனை தூபிகளோ?


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து மணிக்கூண்டு கோபுரம்..
ஒற்றையாய் தனித்து..


பிராமணாகட்டுக்குளப் புனரமைப்புக்கான நினைவுக் கல்..
புனரமைப்பு ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாம்.. 
கீழே உள்ள படத்தில் குளத்தின் நிலை பாருங்கள்.. 
வடக்கின் வசந்தமேல்லாம் இப்படித் தான் போகப் போகுதோ?





வெற்றி Tshirt உடன் நாம் தங்கியிருந்த வீட்டின்(இப்போது விடுதி) மாமரத்தின் கீழே..
நாம் போயிருந்த நேரம் மாம்பழங்களாக இல்லாமல் காய்ப் பதத்திலேயே இருந்தபடியால்,
பழங்கள் சுவைக்கக் கிடைக்கவில்லை.
படம் மட்டுமே.. 


ஐவரில் நால்வர்.. கண்காட்சித் திடலில்.


எவ்வளவு நடந்தும் ஒன்றும் தெரியாதது போலிருக்க நல்லூர்க் கந்தனால் மட்டுமே முடிகிறது...
நல்லூர் ஆலய முன்றல்..


பண்ணைப் பாலம்..
இருபுறமும் அலை கடல்.. நடுவே ஒடுங்கிய பாதையில் தீவகம் நோக்கிய பயணம்.


யாழ் கோட்டைக்கு முன்னால்..


ஊர்காவற்றுறை நோக்கிய வழியில்..தமிழில் றையையும் யாரோ கடத்தி விட்டார்களோ?


மாலை ஐந்து மணிக்கே வெறிச்சோடியிருக்கும் ஊர்காவற்றுறை..
இங்கே தான் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்களாமே..


இடிந்த ஒரு மிகப் பழைய கட்டடத்துக்கு முன்னால்..1800 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டடமாம்..
சிதைவுகளின் சின்னங்கள்.

நாகதீபயவாக ஆங்கில நயினாதீவு மாறுகிறது..
படையெடுக்கிறார்கள் எம் சிங்கள சோதரர்கள்.
அங்கு சைவ ஆலயம் ஒன்றும் இன்று வரை இருக்கிறதாம்..



திரும்பி வரும் வழியில் இராணுவ நினைவு சின்னம் ஒன்று..
புலிகளின் தாங்கி ஒன்றைத் தடுத்துப் பாய்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் உயிர்ப்பலி செய்த இடமாம் இது.





32 Responses to "A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு"

  • கன்கொன் || Kangon

    பல நேரங்களில் பெருமூச்சுகள் மட்டும் வருகின்றன, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல்... :(

  • கன்கொன் || Kangon

    // மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து மணிக்கூண்டு கோபுரம்.. //

    எனக்கு பலல கவலைககளின் மத்தியில் எரிச்சலூட்டிய விடயம் இது...
    Analog கடிகாரத்தை மாற்றிவிட்டு Digital கடிகாரத்தைப் போட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அழகைக் கெடுத்துவிட்டது போதாதென்று,
    நான்கு புறமும் ஏதோ அந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை டயலொக் தான் கட்டியது என்ற வாறாக 'இலங்கை எங்களுக்குத்தான்' என்ற டயலொக்கின் விளம்பரப் பலகை... :(
    நாட்டிலே எவ்வளவு பணம் விரயமாகும் போது உந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைப் பராமரிக்க மட்டும் அரசால் முடியாமல் போனது வியப்பு...

  • சந்தனமுல்லை

    A big Sigh....

  • EKSAAR

    இராணுவ நினைவுச்சின்னங்களுக்கு முன்னால் லோஷன்.. இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்வதற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களுக்கு அஞ்சலி

  • SShathiesh-சதீஷ்.

    பெருமூச்சு :(

  • archchana

    //துணுக்காய் சந்தியில் காணப்படும் இடங்கள் குறித்த அடையாலப்பலகை.
    பின்னால் இடிந்த கட்டடம்..//

    இது துணுக்காய் சந்தியல்ல மாங்குளம் சந்தி துணுக்காய் செல்வதற்குரிய சந்தி.
    எங்கள் பாதங்கள் பஸ் இற்காக காத்திருந்த இடங்கள்.

    // நெடும் வீதி..
    எத்தனை வாகனங்கள் அங்கும் இங்கும் பயணித்தாலும் இந்த வீதியின் ஆழ்ந்த மௌனமும்,தனிமையும் எங்களுக்கும் ஆழ்ந்த ஏக்கத்தையும் பெரு மூச்சையும் தரக் கூடியவை.//

    வீதியின் ஒவ்வொரு கல்லு கூட 1000 கதை சொல்லும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

    //அநாதை வாகனங்கள்..
    எம்மவர் எத்தனை சிரமப்பட்டு இந்த வாகன சொத்துக்களை வாங்கினாரோ?//

    அனுபவித்தால் தான் அதன் சிரமம் புரியும்.

    //யாழ்ப்பாண நூலகம்.. எரிந்தும் மீண்டு எழுந்து நிற்கிறத//

    கட்டிடங்களால் மட்டுமே முடியும். இழந்த உயிர்களை எந்த வசந்தமும் மீட்டுத்தர முடியாதே.......

    //எவ்வளவு நடந்தும் ஒன்றும் தெரியாதது போலிருக்க நல்லூர்க் கந்தனால் மட்டுமே முடிகிறது...//

    நானும் எல்லா கடவுளையும் இதையே கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...........

    .

  • archchana

    //EKSAAR said...
    இராணுவ நினைவுச்சின்னங்களுக்கு முன்னால் லோஷன்.. இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்வதற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களுக்கு அஞ்சலி//

    உங்களிற்கு ஏதாவது வருத்தமா சார்?????

  • sivatharisan

    லோசன் அண்ணா. யாழ்பாணத்தின் மிக முக்கியமான இடங்களின் அழகு அழகாகவே இல்லை.

  • VARO

    ஊர்காவற்றுறை..
    இங்கே தான் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்களாமே..//

    நாகதீபயவாக ஆங்கில நயினாதீவு மாறுகிறது..//

    என்னை கவர்ந்த வரிகள்.(உறைக்கின்றது )

  • அனானி(நல்ல‌)

    //1970 ஆம் ஆண்டின் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த கொடூரத்தில் பலி கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபி..
    இன்னும் வெண்மை மாறாமல்..
    இத்தனை யுத்தங்களிலும் இது மட்டும் சேதமில்லாமல்..
    உயரமாய் இன்னும் எத்தனை தூபிகளோ?///


    இது தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத்தூபி அல்ல தந்தை செல்வா நினைவுத்தூபி(இது நூலகத்திற்கருகில் உள்ளது). தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்கழுக்கான நினைவுத்தூபி வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் உள்ளது.

  • thuva

    "ஊர்காவற்றுறை நோக்கிய வழியில்.. தமிழில் 'றை' யையும் யாரோ கடத்தி விட்டார்களோ?"
    போக போக இன்னும் போகும் !!!!!

  • soundar

    ஈழ மக்கள் இப்பொழுது சுற்றுலாதளம் ஆகிவிட்டதா?

  • Subankan

    :((

    //Analog கடிகாரத்தை மாற்றிவிட்டு Digital கடிகாரத்தைப் போட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அழகைக் கெடுத்துவிட்டது போதாதென்று,
    நான்கு புறமும் ஏதோ அந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை டயலொக் தான் கட்டியது என்ற வாறாக 'இலங்கை எங்களுக்குத்தான்' என்ற டயலொக்கின் விளம்பரப் பலகை... :(//

    அதைப் பார்த்தபோது எனது எண்ணமும் அதேதான். அனலொக்கில் இருக்கும் கம்பீரம் இப்போது இல்லை

  • கானா பிரபா

    படங்கள் பேசுகின்றன, பார்த்து முடித்ததும் ஒரு பெருமூச்சு ;(

  • மனநலமருத்துவர்

    எஸ்கரின் மனநிலை நன்றாகப் புரிகின்றது. அன்றைக்கு நிம்மதியாக இருந்தவர்கள் இன்றைக்கு கடத்தல்காரர்களினால் கஸ்டப்படுகின்ரார்கள். யுத்தம் என்ப‌து அனுபவத்தவர்களுக்குத் தான் புரியும், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும்ம் நன்றாக்ப் புரியும் ஆனால் எச்காற் போன்ற முஸ்லீம்களுக்குஇதன் வேதனை புரியாது. நல்ல மனநல மருத்துவரை நாடுவது நாட்டுக்கு நலம்.

  • மாயா

    // 1970 ஆம் ஆண்டின் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த கொடூரத்தில் பலி கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபி..
    இன்னும் வெண்மை மாறாமல்.. //

    அது தந்தை செல்வா நினைவு தூபி....என நினைக்கிறேன்.அதனால் தான் அதில் அவரது கட்சியின் உதய சூரியன் சின்னமும் இருக்கிறது....

  • சயந்தன்

    ஆனையிறவில மாடிவீடு ஏதாவது கட்டுகினமோ என்னவோ

    ஐக்கிய இலங்கைக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா என்றுவிட்டு போகவேண்டியதுதான்.

  • Jeya

    சுவாசிக்க கூட முடியலை மனசே அடைத்து போகிறது :(((

  • ஜெரி ஈசானந்தன்.

    இதயம் கனக்கிறது.

  • யோகன் பாரிஸ்(Johan-Paris)

    //1970 ஆம் ஆண்டின் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த கொடூரத்தில் பலி கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபி..
    இன்னும் வெண்மை மாறாமல்..
    இத்தனை யுத்தங்களிலும் இது மட்டும் சேதமில்லாமல்..
    உயரமாய் இன்னும் எத்தனை தூபிகளோ?//இது தந்தை செல்வா நினைவுத் தூபியே! தமிழாராட்சி மகாநாட்டில் பலியானோர் நினைவுச் சின்னம் ,வீரசிங்கம்
    மண்டபம் முன் இருந்தது. எப்போதோ அழிதொழிக்கப்பட்டது.//

    இது தந்தை செல்வா நினைவுத் தூபியே! தமிழாராட்சி மகாநாட்டில் பலியானோர் நினைவுச் சின்னம் ,வீரசிங்கம்
    மண்டபம் முன் இருந்தது. எப்போதோ அழிதொழிக்கப்பட்டது.

  • வேந்தன்

    //இது தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத்தூபி அல்ல தந்தை செல்வா நினைவுத்தூபி(இது நூலகத்திற்கருகில் உள்ளது). தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்கழுக்கான நினைவுத்தூபி வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் உள்ளது.//
    ஆம் லோஷன் இதுதான் உண்மை. சிறிமாவின் ஆட்சியில் ஒதுக்கி தந்த இடம். தந்தை செல்வாவின் 60 ஆவது பிறந்ததினத்திற்கு கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்(?). அறுபது அடி உயரம்(??). யாழ் கோட்டை சண்டையில் சிறு சேதத்துடன் தப்பியது. இந்த தூபி கட்ட முதல் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட இருந்தது, பின்னர் தூபியை கட்டி விட்டார்கள்.

  • Anonymous

    The sign is in four languages. I understand Tamil and English. What are the other two languages?

  • Anonymous

    விரைவில் மிக விரைவில் யாப்படுனவாக மாறப்போகும் கலாச்சரம் சீரழிந்த யாழின் படங்களை நினைவுச்சின்னமமாக தமிழருக்கு அளித்த உங்களுக்கு நன்றிககள்.

    யாழ்

  • Anonymous

    என்ன லோசன் புத்தர் விகாரைகள் எதுவும் கண்ணில் படவில்லையா?

  • Mathi

    ஐயோ யாழ்ப்பாணத்தில தமிழ்ல எல்லாம் பெயர்ப்பலகை (நயினாதீவு) போட்டிருக்கிறாங்கள். அப்ப யாழ்ப்பாணத்தில தமிழ் ஆட்கள் இருக்கினம் போல

  • Sivakanth

    அடையாலப்பலகை???

  • நிரூஜா

    :|

  • நிரூஜா

    :|

  • மதுவர்மன்

    அந்த மஞ்சள் நிற பெயர்ப் பலகையில், சிங்கள எழுத்துக்களில் மட்டும், ஒவ்வொரு இடத்துக்கும், இரண்டு பெயர்கள் இருப்பதை கவனித்தீர்களா?

    மேலதிக தகவல்களுக்கு
    http://dh-web.org/place.names/barelist.htm

  • அத்திவெட்டி ஜோதிபாரதி

    பகிர்வுக்கு நன்றி லோசன்!

  • kanthasamy

    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும்
    ஊர்வலம் போகின்றோம் ...

  • கும்மி

    வாழ்த்துச் சொல்ல வந்து வார்த்தைகளற்று செல்கின்றேன்.


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.