400வது பதிவு..தேர்தல் மசாலா

4/08/2010 09:09:00 PM

(33) Comments





நானூறாவது பதிவாம்..பதிவுகளின் எண்ணிக்கை சொல்கிறது. (சில மீள்பதிவுகள் ஆங்காங்கே இருந்தாலும் கூட..)
நல்லது.மகிழ்ச்சி.
இதுவரை பதிவிடுவது அலுக்கவில்லை.சலிக்கவில்லை என்பதும், தொடர்ந்தும் பதிவிடுவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதும் நிறைய நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நிறையப் புதிது புதிதாய் வாசிப்பதும் பதிவுலகினால் எனக்குக் கிடைத்த பரிசுகள் எனக் கருதுகிறேன்.


பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்..

= = = = = = = = = =

இலங்கையில் இன்று பொதுத் தேர்தல்.


நேற்று முன்தினம் வரை திருவிழாப் போல அமர்க்களமாக பரபரப்பாக இருந்த தேர்தல்களம் பிரசாரங்கள் முடிந்தபிறகு நேற்றிலிருந்து அடங்கிவிட்டது.இன்றும் தேர்தல் நடக்கிறதா எனுமளவுக்கு கொழும்பில் அமைதி.


வாக்களிப்புக் கூட மிக மந்த கதி என அறிந்தேன்.எங்கள் அலுவலகத்திலும் வழமையாக விரலில் மையோடு வரும் பலரும் சுத்தமான விரலோடு வந்திருந்தார்கள்..போகும்போது பார்க்கலாம் என்று கொஞ்சம் அலுப்பாகவே பலர் சொன்னதைக் கண்டேன்.


மூன்று மணியளவில் தான் எனக்கு வாக்களிக்கப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் வாக்களிக்கும் நிலையத்தில் நான் போனபோது என்னுடன் வாக்காளர்கள் நான்கே பேர்.அதிகாரிகள் தான் அதிகம்.


எனது ஜனநாயகக் கடமையை சரியாக நிறைவு செய்தேன்.


இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.


ஐயா பெரியவங்களே அடுத்த தேர்தல் வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுத்து வையுங்கப்பா..ஒரு கையில் இருப்பது ஐந்து விரல்களே. 


என் குடும்ப,நட்பு வட்டத்தில் அநேகமானோர் வாக்களித்திருந்தாலும் கொழும்பைப் பொறுத்தவரை இம்முறை தமிழர்கள் வாக்களித்தது குறைவு என்று தான் கணிக்க முடிகிறது.
தமிழர் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை கொழும்பில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு.


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தந்த ஏமாற்றம் அல்லது அதிர்ச்சி அதற்கான காரணமாக இருக்கலாம்.


இலங்கை முழுவதுமே இன்று வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு என்று கண்காணிப்பாளர்கள் சொல்லியுள்ளனர்.நாடு முழுவதும் பாதியளவானவர்களே வாக்களித்துள்ளார்கள்.அதாவது 50 முதல் 52 வீதம் வரையே வாக்களிப்பு இருந்துள்ளது.


வடக்கு-கிழக்கில் இது இன்னும் குறைந்திருக்கலாம்..குறைந்துள்ளது
குறைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானோரே வாக்களித்துள்ளனர்.இதை ஜனநாயகம் என எடுக்கலாமா?


தேர்தல் பற்றிய நம்பிக்கை மக்களுக்கு குறைந்திருப்பதையும் அவர்கள் தேர்தல் ஒன்றினை முழு மனதோடு ஏற்கும் காலம் இது இல்லை என்பதையும் தமது வாக்களிப்பின்மை மூலம் அமைதியாகக் காட்டியுள்ளனர் என்று தான் புரிந்துகொள்ள முடிகிறது.


ஆனால் இதன்மூலம் தப்பானவர்கள்,பொருத்தமற்றவர்கள்  நாடாளுமன்றம் புகுந்துவிடுவார்களோ எனும் அச்சமும் எட்டிப் பார்க்கிறது.


தேர்தல்கள் ஆணையாளர் முதல் முடிவு இன்று நள்ளிரவுக்கு முதல் அறிவிக்கப்பட்டு விடும் என்று உறுதியாக சொன்னது எண்ணுவதற்கு இலகுவாக வாக்குகள் குறைவாகத் தான் இருக்கு என்பதாலா?


இன்னொரு விஷயமும் இங்கே முக்கியமானது.ஐக்கிய தேசியக் கட்சி நேற்றே வலியுறுத்தி இருந்த விஷயம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டது போலல்லாமல், இம்முறை தொகுதிவாரியாகக் கிரமமாக வெளியிட்ட பின்னரே மாவட்ட ரீதியாக முடிவுகள் வெளியிடப்படவேண்டும் என்பது.


இது மீறப்ப்பட்டு மாறப்பட்டதுமே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஐயத்துக்குள்ளாக்கியது
இம்முறை பார்க்கலாம்.. எப்படி நடக்குதென்று..


இம்முறை வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற விருப்புவாக்குகளையும் வேறு எண்ணி அறிவிக்கவேண்டி இருப்பதால் ஒரு ஒழுங்கில் செல்லாவிட்டால் எல்லாமே குழப்பமாகி விடும்...  


கொழும்பில் தேர்தல் மோசடிகள் வன்முறைகள் குறிப்பிடத்தக்களவில் இடம்பெறாவிட்டாலும், இருநூறுக்கு மேற்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளன.


தேர்தல் வன்முறைகள்,மோசடிகளுக்கேன்றே உருவெடுத்தவராக வர்ணிக்கப்படும் மத்தியமாகாண அமைச்சரின் கைங்கர்யம் வழமை போலவே இம்முறையும் நாவலப்பிட்டியில் பெரிய தேர்தல் வன்முறைகள்,மோசடிகளை உருவாக்கியுள்ளது.


ஆனால் வடக்கில் கடந்தமுறை போல இம்முறை வாக்களிப்பு தடுப்பு,பயமுறுத்தல்கள் இம்முறை இல்லாதது (அல்லது நான் இதுவரை கேள்விப்படாதது ஆறுதல்)
ஆனால் வவுனியாவில் சில தடைகள்,அசௌகரியங்கள் இடம்பெற்றுள்ளன.


கள்ளவாக்கு,வன்முறை,சாதக பாதக கணக்குகள் பார்த்து தடுப்பதும் விடுப்பதும் தேர்தலில் பிரிக்கமுடியாத அம்சங்கள் தானே.. எவ்வளவு பார்த்திட்டோம்..இதைப் பெரிதாக சொல்வதற்கு..
கிட்டத்தட்ட முடிவுகளும் ஊகித்தே இருக்கின்ற நிலையில்..


சரி இனி என்ன பேசியென்ன.. வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும்.. பரபரப்பான 24 மணித்தியாலங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே பெங்களூர்-டெக்கான் அணிகளின் IPL போட்டியை  இப்போதைக்கு ரசிக்கிறேன்.. 

33 Responses to "400வது பதிவு..தேர்தல் மசாலா"

  • அனுதினன்

    நான் இன்று முதலாவது!!!


    அண்ணா வாழ்த்துக்கள் 400வது பதிவுக்கு

  • அனுதினன்

    மீண்டும் வாழ்த்துக்கள்

    //இதுவரை பதிவிடுவது அலுக்கவில்லை.சலிக்கவில்லை என்பதும், தொடர்ந்தும் பதிவிடுவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதும் நிறைய நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நிறையப் புதிது புதிதாய் வாசிப்பதும் பதிவுலகினால் எனக்குக் கிடைத்த பரிசுகள் எனக் கருதுகிறேன்.


    பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்..//

    என்ன தொடரும்???? தொடரணும்.... இது ரசிகர்களின் கட்டளை

    //இலங்கையில் இன்று பொதுத் தேர்தல்.//

    சொன்னாத்தான் தெர்யுது

    //நேற்று முன்தினம் வரை திருவிழாப் போல அமர்க்களமாக பரபரப்பாக இருந்த தேர்தல்களம் பிரசாரங்கள் முடிந்தபிறகு நேற்றிலிருந்து அடங்கிவிட்டது.இன்றும் தேர்தல் நடக்கிறதா எனுமளவுக்கு கொழும்பில் அமைதி.//


    திருகோணமலை மயான அமைதி அண்ணா

    //எனது ஜனநாயகக் கடமையை சரியாக நிறைவு செய்தேன்.//

    நானும் கூட

    //இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
    காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.
    //


    நான் காரணம் கேட்ட போது சொல்லவில்லை இப்போதுதானே உண்மை தெரிகிறது!!!

    //வடக்கு-கிழக்கில் இது இன்னும் குறைந்திருக்கலாம்..குறைந்துள்ளது
    குறைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானோரே வாக்களித்துள்ளனர்.இதை ஜனநாயகம் என எடுக்கலாமா?//

    இங்க 35%-40% க்குள்தான் இருக்கும் அண்ணா!!!

    //இது மீறப்ப்பட்டு மாறப்பட்டதுமே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஐயத்துக்குள்ளாக்கியது
    இம்முறை பார்க்கலாம்.. எப்படி நடக்குதென்று.//

    எப்படி நடந்தா என்ன அண்ணா?

    முடிவுகள் எப்போதும் மாறபோவது இல்லை!!! எனவே, IPL போட்டிகளை பார்க்கலாம்

  • Vijayakanth

    என்ன சொல்லுறதெண்டே தெரியல. நம்ம சனங்கள் வாக்களிக்காமல் விட்டே தகுதி இல்லாதவங்களை உருவாக்கிட்டு பிறகு அவங்ககிட்ட இருந்து ஒண்டுமே கிடைக்காது எண்டு சொல்லிக்கொண்டிருப்பாங்க... நாங்க பிழைய விட்டிட்டு மத்தவங்கள நொந்து என்ன பயன் :(

    400 பதிவுக்கு வாழ்த்துக்கள்

    என்னோட விரலிலும் இன்னும் மை போகல...போன தடவை மை அடிச்சவ என்னோட முகத்தை பார்த்துட்டு ரொம்ப அழுத்தமா அடிச்சுட்டா :(

  • SShathiesh

    நானூறுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நான்தான் இரண்டாவது என நம்புகின்றேன்.

    //பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்.//

    நிச்சயம் காத்திருப்போம்.

    //இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
    காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.//

    உங்களுக்கும் சின்னி விரலில் மை இருக்கிறதா அண்ணா? அல்லது கஷ்டப்பட்டு அழித்துவிட்டிங்களா?

    //ஐயா பெரியவங்களே அடுத்த தேர்தல் வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுத்து வையுங்கப்பா..ஒரு கையில் இருப்பது ஐந்து விரல்களே.
    //

    அட போங்கண்ண இன்னொரு கை இருக்கு ஏன் இன்னும் கால் விரலும் இருக்குதானே எவ்வளவோ பண்றாங்க இதமட்டும் பன்னமாட்டாங்களா என்ன?

  • Feros

    அண்ணா வாழ்த்துக்கள் 400வது பதிவுக்கு

  • அரசகேசரி

    வாழ்த்துக்கள் தலைவரே... (மன்னிக்கனும் தேர்தல் காய்ச்சல் இன்னும் போகல...கீகீ..கீகீ..)

  • அத்திவெட்டி ஜோதிபாரதி

    வாழ்த்துகள் திரு லோசன்!

    தொடர்ந்து கலக்குங்கள்!

  • Subankan

    400க்கு வாழ்த்துகள் அண்ணா

    இன்று தேர்தல் என்ற உணர்வே வரவில்லை. முடிவுகள் ஊகிக்கக்கூடியதாக இருப்பதுக் காரணமாக இருக்கலாம்.

  • தர்ஷன்

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • ஆதிரை

    இலங்கை மக்களின் ஜனநாயகம் மீதான அக்கறை இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.

  • ஆதிரை

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  • asmohd

    400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா......
    //அட போங்கண்ண இன்னொரு கை இருக்கு ஏன் இன்னும் கால் விரலும் இருக்குதானே எவ்வளவோ பண்றாங்க இதமட்டும் பன்னமாட்டாங்களா என்ன? //

    எவ்வளவு பண்ணிட்டோம்..... இத பண்ண மாட்டோமா ??????

    என் சின்ன விரலிலும் இன்னும் மை போகல அண்ணா...... ஏன்டா முகத்தை பார்த்தே அன்றும் நல்லா அழுத்தி அடிச்சுட்டா..... இன்றும் அடிச்சுட்டா....

  • கரன்

    400...!
    அடிச்சு தூள் பண்ணுங்க...
    வாழ்த்துகள்...!

  • Kavi

    நானூறாவது பதிவு - வாழ்த்துகள்!

  • வந்தியத்தேவன்

    நானூறிற்க்கு வாழ்த்துக்கள் நண்பா..

    தேர்தலில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ஹீஹிஹி. யார் வந்தால் நமக்கு என்ன? நாம் பாட்டுக்கு எங்கள் வேலையை பார்க்கவேண்டியதுதான்.

  • Balavasakan

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...!!

  • எட்வின்

    வாழ்த்துக்கள்

  • யோ வொய்ஸ் (யோகா)

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் லோஷன், நாங்கள் எல்லாம் ஒரு பதிவு எழுதவே ததிங்கினதோம் போடும் பொது நீங்கள் நானூறு வரை போனது என்னை பொறுத்த வரை பெரும் சாதனை என்றே பார்கிறேன், இன்னும் ஐநூறு, ஆயிரம் என பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

    தேர்தலை பொறுத்த வரை நான் நம்ம தலை வந்தியத்தேவனை ஆமோதிக்கிறேன்

  • Dream Girl

    Best of luck my dear. You deserved. Expecting more from you

  • தமிழ்நங்கை

    மதிப்புக்குரிய வருங்கால அமைச்சர் லோஷன் அவர்களுக்கு
    தங்களுடைய 400ஆவது பதிவிற்க்கு வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து இன்னும் பலதரப்பட்ட விடயங்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

    ஒபாமாவிற்க்குப் பின்னர் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கவரும் அரசியல்வாதியாக நீங்கள் விளங்க வாழ்த்துக்கள்.

  • LOSHAN

    அனுதினன் said...
    நான் இன்று முதலாவது!!!//

    :)


    அண்ணா வாழ்த்துக்கள் 400வது பதிவுக்கு//

    நன்றிகள்.



    //இதுவரை பதிவிடுவது அலுக்கவில்லை.சலிக்கவில்லை என்பதும், தொடர்ந்தும் பதிவிடுவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதும் நிறைய நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நிறையப் புதிது புதிதாய் வாசிப்பதும் பதிவுலகினால் எனக்குக் கிடைத்த பரிசுகள் எனக் கருதுகிறேன்.


    பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்..//

    என்ன தொடரும்???? தொடரணும்.... இது ரசிகர்களின் கட்டளை //

    ஆகா..:) உத்தரவு


    //வடக்கு-கிழக்கில் இது இன்னும் குறைந்திருக்கலாம்..குறைந்துள்ளது
    குறைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானோரே வாக்களித்துள்ளனர்.இதை ஜனநாயகம் என எடுக்கலாமா?//

    இங்க 35%-40% க்குள்தான் இருக்கும் அண்ணா!!!//

    ம்ம் அப்படித்தான் இன்று தெரிய வந்தது..

  • LOSHAN

    Vijayakanth said...
    என்ன சொல்லுறதெண்டே தெரியல. நம்ம சனங்கள் வாக்களிக்காமல் விட்டே தகுதி இல்லாதவங்களை உருவாக்கிட்டு பிறகு அவங்ககிட்ட இருந்து ஒண்டுமே கிடைக்காது எண்டு சொல்லிக்கொண்டிருப்பாங்க... நாங்க பிழைய விட்டிட்டு மத்தவங்கள நொந்து என்ன பயன் :(//

    ம்ம் ரொம்ப பீல் பண்றீங்க போல..



    400 பதிவுக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி :)



    என்னோட விரலிலும் இன்னும் மை போகல...போன தடவை மை அடிச்சவ என்னோட முகத்தை பார்த்துட்டு ரொம்ப அழுத்தமா அடிச்சுட்டா :(//

    இதை நாங்க நம்பனும்.. ஒருவேளை பேயடிச்சுப் பயந்து பொய் மையடிச்சிட்டாவோ???


    ====================

    SShathiesh said...
    நானூறுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நான்தான் இரண்டாவது என நம்புகின்றேன். //

    நன்றி.. மூன்றாவது பின்னூட்டி.. நான்காவது பின்னூட்டம்.. :)



    //இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
    காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.//

    உங்களுக்கும் சின்னி விரலில் மை இருக்கிறதா அண்ணா? அல்லது கஷ்டப்பட்டு அழித்துவிட்டிங்களா? //

    இல்லடா.. உன் போலல்லாமல் அடிக்கடி குளிப்பவனாதளால் அழிந்துவிட்டது.. ;()



    //ஐயா பெரியவங்களே அடுத்த தேர்தல் வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுத்து வையுங்கப்பா..ஒரு கையில் இருப்பது ஐந்து விரல்களே.
    //

    அட போங்கண்ண இன்னொரு கை இருக்கு ஏன் இன்னும் கால் விரலும் இருக்குதானே எவ்வளவோ பண்றாங்க இதமட்டும் பன்னமாட்டாங்களா என்ன?//

    அடப் பாவி.. விட்டால் ஐடியா ஐய்யாசாமியாகி அள்ளிப் போட்டுக் குடுத்துருவீங்க போல கிடக்கே..

  • LOSHAN

    Feros said...
    அண்ணா வாழ்த்துக்கள் 400வது பதிவுக்கு//

    நன்றி பெரோஸ்..
    ==============

    அரசகேசரி said...
    வாழ்த்துக்கள் தலைவரே... (மன்னிக்கனும் தேர்தல் காய்ச்சல் இன்னும் போகல...கீகீ..கீகீ..)//

    ஆகா நன்றி தொண்டரே.. (அடிமை ஒருத்தன் சிக்கிட்டாண்டா)

    =============

    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    வாழ்த்துகள் திரு லோசன்!

    தொடர்ந்து கலக்குங்கள்!//

    என்ன திடீர்னு திரு ???

    நன்றி ஜோதி..

  • LOSHAN

    Subankan said...
    400க்கு வாழ்த்துகள் அண்ணா//

    நன்றி

    இன்று தேர்தல் என்ற உணர்வே வரவில்லை. முடிவுகள் ஊகிக்கக்கூடியதாக இருப்பதுக் காரணமாக இருக்கலாம்.//

    கலாம் என்ன அதே..

    ==============

    தர்ஷன் said...
    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி..

    ==================

    ஆதிரை said...
    இலங்கை மக்களின் ஜனநாயகம் மீதான அக்கறை இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.//

    அதென்ன எப்பவோ புரிந்ததே..


    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.//

    நன்றி

  • LOSHAN

    asmohd said...
    400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா......//

    நன்றி..


    //அட போங்கண்ண இன்னொரு கை இருக்கு ஏன் இன்னும் கால் விரலும் இருக்குதானே எவ்வளவோ பண்றாங்க இதமட்டும் பன்னமாட்டாங்களா என்ன? //

    எவ்வளவு பண்ணிட்டோம்..... இத பண்ண மாட்டோமா ??????

    என் சின்ன விரலிலும் இன்னும் மை போகல அண்ணா...... ஏன்டா முகத்தை பார்த்தே அன்றும் நல்லா அழுத்தி அடிச்சுட்டா..... இன்றும் அடிச்சுட்டா....//

    அய்யோ அய்யோ.. இதைக் கேட்பார் யாரும் இல்லையா?

    ===============

    கரன் said...
    400...!
    அடிச்சு தூள் பண்ணுங்க...
    வாழ்த்துகள்...!//

    நன்றி கரன்
    ===============

    Kavi said...
    நானூறாவது பதிவு - வாழ்த்துகள்!//

    நன்றி

  • LOSHAN

    வந்தியத்தேவன் said...
    நானூறிற்க்கு வாழ்த்துக்கள் நண்பா..//

    நன்றி வந்தி..


    தேர்தலில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ஹீஹிஹி. யார் வந்தால் நமக்கு என்ன? நாம் பாட்டுக்கு எங்கள் வேலையை பார்க்கவேண்டியதுதான்.//

    அதுசரி.. நீங்கல்லாம் இப்போ லண்டன் வாசிகள்.. இலங்கை எக்கேடு கேட்டுப் போனால் என்ன.. நாங்க அப்படியா?நம் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்கள் இல்லையா?
    ===========

    Balavasakan said...
    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...!!//

    நன்றி

    ===============

    எட்வின் said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி

  • LOSHAN

    யோ வொய்ஸ் (யோகா) said...
    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் லோஷன், நாங்கள் எல்லாம் ஒரு பதிவு எழுதவே ததிங்கினதோம் போடும் பொது நீங்கள் நானூறு வரை போனது என்னை பொறுத்த வரை பெரும் சாதனை என்றே பார்கிறேன், இன்னும் ஐநூறு, ஆயிரம் என பதிவுகள் எழுத வாழ்த்துகள்.//

    நன்றி நன்றி.. :)

    தேர்தலை பொறுத்த வரை நான் நம்ம தலை வந்தியத்தேவனை ஆமோதிக்கிறேன்//

    ஓகோ.. நீங்களும் மாமா வழியா? வந்தியை சொன்னேன்.. ;)



    ===================

    Dream Girl said...
    Best of luck my dear. You deserved. Expecting more from யு//

    tx Dream girl.. but which dream and whos dream? ;)

  • LOSHAN

    தமிழ்நங்கை said...
    மதிப்புக்குரிய வருங்கால அமைச்சர் லோஷன் அவர்களுக்கு//

    ஆஹ..இதென்ன.. ஆப்பா அல்லது ஆரூடமா?


    தங்களுடைய 400ஆவது பதிவிற்க்கு வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து இன்னும் பலதரப்பட்ட விடயங்களை எதிர்ப்பார்க்கின்றேன். //

    நன்றி..

    ஒபாமாவிற்க்குப் பின்னர் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கவரும் அரசியல்வாதியாக நீங்கள் விளங்க வாழ்த்துக்கள்.//

    அண்மையில் தான் தமிழ்ப்படம் பார்த்தீங்களா?

    ஆனால் நான் சிவா அல்ல.. ;)

  • யோ வொய்ஸ் (யோகா)

    வந்தி சதீசுக்கு மட்டும்தான் மாமா எங்களுக்கில்லை

  • LOSHAN

    தனியொருவனுக்கு மாமா என்றால் தங்கங்கள் எல்லோருக்கும் அவர் ஒரு மாமா தான்.. :)

  • புதியவன்

    கையும் விரலும் இருக்கிறவங்களுக்கு எந்த விரலிலயும் மை வைக்கலாம், ஆனா கை இல்லாதவங்களுக்கு எங்க மை வைப்பாங்க? அல்லது அந்த 2 விரலும் இல்லாதவங்களுக்கு எங்க வைப்பங்க?????

  • Atchu

    400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • வந்தியத்தேவன்

    //இல்லடா.. உன் போலல்லாமல் அடிக்கடி குளிப்பவனாதளால் அழிந்துவிட்டது.. //

    அப்பட்டமான தனிநபர் தாக்குதல் என் மருமகனைப் பற்றிய உண்மைகளை வெளியே சொன்னமைக்கு கண்டனங்கள்.

    //அதுசரி.. நீங்கல்லாம் இப்போ லண்டன் வாசிகள்.. இலங்கை எக்கேடு கேட்டுப் போனால் என்ன.. நாங்க அப்படியா?நம் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்கள் இல்லையா?//


    அப்ப‌டியில்லை நான் ஒன்றும் ல‌ண்ட‌ன்வாசியில்லை இல‌ங்கைய‌ன் தான். |ஆனாலும் முடிவு தெரிந்த‌ தேர்த‌ல் தேவையா? என்ப‌துதான் என் கேள்வி. நாட்டின் பொறுப்பான‌ குடிம‌க‌னாக‌ எதிர்வ‌ரும் 2016ஆம் ஆண்டின் பொதுத்தேர்த‌லில் போட்டியிடுங்க‌ள் உங்க‌ளுக்குப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ எங்கிருன்தாலும் வ‌ருகின்றேன்.
    //LOSHAN said...
    தனியொருவனுக்கு மாமா என்றால் தங்கங்கள் எல்லோருக்கும் அவர் ஒரு மாமா தான்.. :)//

    நான் ச‌தீசுக்கு ம‌ட்டும் தான் மாமா. ஏனைய‌வ‌ர்க‌ளுக்கு ந‌ண்ப‌ன் அல்ல‌து த‌ம்பி(ப‌ச்சிள‌ன் பால‌க‌ன் என்ப‌தால் அனைவ‌ருக்கும் இளைய‌வ‌ன்)


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.