பொதுத் தேர்தல் 2010 - இறுதிக் கட்டப் பார்வை

4/05/2010 04:41:00 PM

(31) Comments



இலங்கையின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
மீண்டும் ஆளும் கட்சி.. இல்லை ஆளும் கட்சி மீண்டும் ஆளப் பதவியேற்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகவே தெரிகிறது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியிடமோ, புதிதாக முளைத்த ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்திக் களம் கண்டுள்ள ஜனநாயக் தேசிய கூடமைப்பிடமோ அரசுக்கெதிராக மக்களை ஈர்க்கக் கூடிய எந்தவொரு புதிய விடயமும் இல்லை என்று தான் கருதவேண்டியுள்ளது.


யுத்த வெற்றியும், அனைவரையும் அடக்கி அமர்த்தியுள்ள சாதுரியமும், பலவீனமான பிளவுண்டுள்ள எதிர்க்கட்சிகளும் அரச தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை வெற்றி என்பதையும் தாண்டிய மாபெரும் வெற்றி ஒன்றைப் பற்றிய ஏன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய கனவைத் தோற்றுவித்திருக்கின்றன. 


ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற (திட்டமிட்டு??) பிரம்மாண்ட வெற்றி தந்துள்ள மாபெரும் நம்பிக்கையும், எதையும் சாதிக்கலாம் என்ற உற்சாகமும் கூட இவற்றுக்கு ஒரு காரணம் என்பதை நாம் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.


அண்மைய சுயாதீனக் கருத்துக் கணிப்பொன்றின் அடிப்படையில் ஆளும் தரப்புக்கு 135 ஆசனங்கள் கிடைக்குமாம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற தேவைப்படும் மேலதிக 15 ஆசனங்கள் வழமையான பண மாற்றல்கள்,கட்சி உடைப்புக்கள்,பதவி பரிசளிப்புக்கள் என்ற ராஜபக்ச யுக்திகளால் இலகுவாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?



இங்கே தான் ஒற்றுமையின் குரலும்,பிரதிநிதித்துவத்தின் முக்கியமும் எம் எல்லோருக்கும் தெரியவேண்டும்.
எண்ணிக்கையளவில் தமிழர்,முஸ்லிம்கள் என்று எல்லாக் கட்சிகளையும் சேர்த்து எண்ணினாலும் வரும் என்றாலும் கொள்கைகள் எந்தக் கட்சியின் பால் பட்டன, தனித்துவம் என்பதெல்லாம் தேசிய,பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து வருவதைவிட, தத்தம் இனத்தின் கட்சிகளில் இருந்துவரும் போது வலிமையையும், நியாயமும் பெறும்.  


வடக்கிலும், கிழக்கிலும்,தென் கிழக்கிலும் திட்டமிட்டபடி வாக்குப் பிரிப்புக்களுக்காகப் பல முனை மோதல்களை அரச தரப்பு ஏற்படுத்தியுள்ளது.அது பற்றி நான் முன்பே தந்த பதிவிலே சொல்லி இருந்தேன்.


கிழக்கிலும் வடக்கிலும் அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே வாக்குகள் செல்லும் என்று எதிர்பார்த்தாலும், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வாரி எடுத்தது போலவோ,முஸ்லிம் காங்கிரஸ் அள்ளி எடுத்த ஆசனங்கள் போலவோ இம்முறை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.


இப்படிப்பட்ட இலகுவான வெற்றி சூழ்நிலை ஒன்று தென்பட்டாலும் கூட ஆளும் தரப்புக்களுள்ளேயே அதிகம் முட்டல்கள் மோதல்கள்.எல்லாம் விருப்பு வாக்குகள் செய்யும் வேலை.
சட்ட விரோத பிரசார யுக்திகள்,அளவுக்கதிகமான தேர்தல் வன்முறைகள்,கட்டுப்பாடில்லாமல் அரச வளங்கள்,சொத்துக்களை இம்முறை பிரசாரத்தில் ஈடுபடுத்தியும் கூட தேர்தல் ஆணையாளர் படு அமைதி.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொங்கி வெடித்து,அதிருப்தி காட்டி பின்னர் காத்துப் பொய் அடங்கிப் போன அனுபவம் இருப்பதால் இம்முறை ஆரம்பத்திலிருந்து கப்சிப்.
அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை.
இடையிடையே தேர்தல்கள் ஆணையாளர் தன்னுடைய கண்டிப்பான அறிக்கைகள் என்று சில காமெடிப் பீசுகளை வெளியிட்டு சிரிப்புக்கிடமாகிப் போனார்.
விளம்பரப் பதாகைகள்,சுவரொட்டிகளை அகற்றக் கால எல்லை வகுத்து அதை அரசியல்வாதிகளும் கணக்கெடுக்காமல்,போலீசும் நிறைவேற்றாமல் இப்போது இறுதிக் கால எல்லையாக ஐந்தாம் திகதியை (இன்று) அறிவித்திருக்கிறார்.


இதிலே மாபெரும் வேடிக்கை இன்றோடு எல்லா ஊடக பிரசாரங்களும் முடிவுக்கு வருகின்றன.நாளையுடன் அனைத்துவித பிரசாரங்களும் முடிவடைகின்றன.இவ்வளவுகாலமும் இந்த வீதியோர தேர்தல்கால அரசியல் குப்பைகளை அகற்ற முடியாத பொலீசாரால் இன்றைக்குள் இவற்றை எப்படி அகற்ற முடியும் என்பது தான் முக்கிய கேள்வி.


அகற்றாவிட்டால் போலீசாருக்கு வழங்கப்படவிருக்கும் எஞ்சிய கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்ற எச்சரிக்கை வேறு தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது.


கொழும்புக்குள் வந்தால் யாரோருவருக்கும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.ஒரு சுவர் கூட மீதமில்லாமல், விளக்குக் கம்பங்கள்,மின்சார,தொலைபேசிப் பெட்டிகளையும் கூட மூடிக் கொண்டு சிரிக்கிறார்கள் வேட்பாளர்கள்.


ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிதாய் எதிர்பார்க்கப்பட்ட ஜெனரல் பொன்சேகா இம்முறை தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் கொழும்பில் இரு ஆசனங்களோடு மட்டும் போய்விடுமா என்ற சந்தேகம் எனக்கு..

ரணில் விக்ரமசிங்க - வெற்றியைப் பற்றியே யோசிக்க முடியாத ஒருவராகவே மக்களால் பார்க்கபடுகிறார்.
ஜனாதிபதியின் திட்டமிட்டு கட்டி எழுப்பட்டுள்ள ஆளுமைக்கு முன்னால் வேறு யாரும் இப்போதைக்கு நிற்க முடியாது.

இதே போல அவரது சகோதரர் பசில் கம்பகாவில் இருந்தும் ,மகன் நாமல் ஜனாதிபதியின் சொந்த இடம் ஹம்பாந்தோட்டையில் இருந்தும் திட்டமிட்டு பிரசாரப்படுத்தப்பட்டு வெற்றிகளை உறுதிப்படுத்தி அடுத்த பரம்பரையின் அடித்தளத்தை உறுதி செய்துள்ளார்கள். 




உடல்நலக் குறைவால் வீட்டிலிருப்பதால், இரத்தப் பரிசோதனைக்காகக் கொஞ்சம் வெளியே போய் வந்தால் இன்னும் புத்தம் புதியதாய் சுவரொட்டிகள்.கிழிக்க கிழிக்க புதிது புதிதாய் வந்துகொண்டே இருக்கின்றன.
இவ்வளவு பணம் கொட்டி வருவோர் எல்லாம் சேவைகள் மட்டுமா செய்யப் போகின்றனர்?


கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்கள்.இவற்றுள் பெரும்பான்மை வாக்குகளை எடுக்கும் கட்சிக்கு ஆகக்கூடியது 11 ஆசனங்கள் கிடைக்கலாம்.
ஐக்கிய தேசியக் கூட்டணியில் என்றால் இரு தமிழ் பேசும் தெரிவுகள் இலகுவாக இருக்கிறார்கள்
குமரகுருபரன் மற்றும் பிரபா கணேஷன்.அவர்களது தலைவர் மனோ கணேஷன் இம்முறை மத்திய மாகாணத்தில் கண்டியில் போட்டியிடுகிறார். இது ஒரு விதமான சாணக்கியத் தனமே.காரணம் மனோ கணேசனுக்கு என்று இருக்கும் வாக்குவங்கியை இவர்கள் இருவருக்கும் வழங்கி கண்டியிலும் தம் கட்சியின் தடம் பதிக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார்.


எனினும் குமரகுருபரன்,பிரபா கணேஷன் இருவரும் இதுவரை தனித்துவமாகத் தெரிபவர்களாகவோ,சாதித்துக் காட்ட வாய்ப்புக் கிடைத்தவர்களாகவோ குறிப்பிடமுடியாதவர்கள்.ஆனாலும் களங்கப் படாதவர்கள்.


ஆனால் ஐக்கியதேசியக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கொழும்பிலே கிடைக்கும்? அதிலே இவர்கள் இருவரும் இடம்பிடிப்பார்களா என்பதே இப்போதுள்ள கேள்வி.
காரணம் அரச எதிர்ப்பு வாக்குகளுள் கணிசமானவற்றை பொன்சேக்காவை முன்னிறுத்தியுள்ள ஜ.தே.கூ வும் பிரிக்கவுள்ளது.


அமரர் மகேஸ்வரன் இருந்தபோதிருந்த வாக்கு உடைபடும் பிரச்சினை இப்போது இல்லாத போதிலும், தென் கொழும்பு வாக்காளர்களின் வாக்குகள் கொஞ்சம் தளம்பலடையலாம்.


மறுபக்கம் ஆளும் தரப்பைப் பார்த்தால் மலையக மக்கள் முன்னணி சார்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ரவிச்சந்திரன் (இவர் யார்? என்ன செய்தார்?)ஆகியோர் நிற்கிறார்கள்.  


ராதாகிருஷ்ணன் இரு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.எனினும் இரு முறையும் தேசியப் பட்டியல் மூலமாகவே.முதல் தடவை தேர்தல் களம் காண்கிறார்.
நல்லவர்,நாணயமானவர் எனப் பெயரெடுத்தவர்.உதவி எனக் கேட்கும்போது பலருக்கும் உதவியுள்ளார்.கைதான பல இளைஞர்களை விடுவிக்கப் போராடியவர்;பல முயற்சிகளை எடுத்தவர்.


தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்புகொண்ட பலரை இவரிடம் அனுப்பி பலரை காவலில் இருந்தே வெளிஎடுத்துள்ளேன்.தனிப்பட்ட முறையில் என் விடுதலைக்கும் இவரது குரல் உதவியாக இருந்தது.
அரசு தரப்பில் இருந்தபோதிலும் கூட அரசின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கண்ணியவான்.


என்னைப் பொறுத்தவரை ஆளும் தரப்பில் இவர் தெரிவு செய்யப்படும் சத்தியம் குறைவேயானாலும் கூட, பதவிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர் என்பதனால் வெற்றிலை சின்னத்தில் இவருக்கு மட்டும் விருப்பு வாக்குகளை அளிப்பதன் மூலம் கணிசமான வாக்குகளைப் பெற வைத்து ஏனைய முன்னணி தலைகளை முந்தவைக்கலாம்.


சுசில் பிரேமஜயந்,விமல் வீரவன்ச, பவுசி, தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, துமிந்த சில்வா, சுமதிபால, ஜீவன் குமாரதுங்க, ரோகித போகொல்லாகம, சம்பிக்க ரணவக்க, காமினி லொகுகே என்று அடுக்கடுக்காக லட்ச வாக்குக் குவிப்பு பேர்வழிகள் வரிசையில் முன்னின்றாலும், வாக்களிக்கும் ஒட்டுமொத்தப் பேரும் விருப்புவாக்குகளில் மற்றவற்றை வேறு யாருக்கும் வழங்காமல் ராதாகிருஷ்ணனுக்கு மட்டும் வழங்கினால் போதும்.


இதனால் தான் அதிகமாக ஆளும் தரப்புக்குள்ளேயே இந்தக் கோர மோதல்கள்.தமக்குள்ளேயே கொலை வெறித் தாக்குதல்களை நடத்திக் கொள்கிறார்கள்.
அண்மையில் ஒரு சியி நிகழ்ச்சியில் குறித்த இரு வேட்பாளர்கள் தத்தம் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு நேரடியாகவே மோதலை ஊக்குவித்த கண்கொள்ளாக் காட்சியை என் நண்பர் ஒருவர் படமாக்கி எனக்குக் காட்டி இருந்தார்.


பாவம் அப்பாவி அடியாட்கள்.
உங்க புள்ள குடியைப் படிக்க வையுங்கப்பா..




ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்போரும் விருப்பு வாக்கு விஷயத்தில் மிகக் கவனமாயிருத்தல் வேண்டும்.இல்லையேல் பிரதிநிதித்துவம் சிதறிவிடும்.


ஆனால் எரியும் வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம் என்று கொழும்பிலே ஆனந்தசங்கரியாரின் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலே (எப்படிப்பட்ட பெருமை கொண்ட சின்னம் அது) பெயர் அறியாத, கட்சியினதோ, வரலாற்றினதோ பின்னணி அறியாத ஒரு கூட்டம் வாக்குக் கேட்கிறது.


இதில் ஒரு சிலர் நான் அடிக்கடி காண்கின்ற முகங்கள்.வர்த்தகமே நோக்கம் கொண்ட வட்டங்கள்.இவ்வளவு காலமும் சங்கல முகம் காட்டி சில்லறை பிஸ்னெஸ் செய்த ஒருவர் தமிழில் வாக்குப் பிச்சை கேட்கிறார். கொதிக்கிறது.


முஸ்லிம்களைப் பொறுத்தவரை கொழும்பில் தெரிவு சிக்கல்களோ வாக்கு சிதறல்களோ இல்லை எனவே நம்பலாம்.
இந்த சிக்கலை ஏற்படுத்தாமல் முஸ்லிம் காங்கிரஸ் தன் மரசின்னத்தை இம்முறை எடுக்காமல் எல்லா இடங்களிலும் ஐ.தே.மு வின் யானையிலேயே சவாரி செய்கின்றார்கள்.
இதன்மூலம் கடந்த முறை பெற்ற ஐந்து இடங்களை விடக் கூடுதல் இடங்களைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள்.


முஸ்லிம் அரசியல்வாதிகள் தம் இனத்தவரிடம் மட்டுமன்றி மற்ற இனத்தவரிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளார்கள்.சேவைகளையும் களங்கமின்றி செய்த பலர் உள்ளார்கள்.
அதிலும் முசம்மில் (ஐ.தே.மு உறுப்பினர்)நல்லதொரு முன்னுதாரணமாக மக்களுடன் ஒப்பந்தம் செய்து அதை வெளியிட்டுள்ளார்.வெற்றி பெற்ற பிறகு எந்தவொரு சலுகை,பதவிக்காகவும் கட்சி மாறமாட்டேன் என்று.


மற்றவர்களும் இதைப் பின்பற்றலாமே.ஓகோ.. பின்னர் சிக்கலோ? ;)


மலையகத்தில் இம்முறை பாரம்பரியக் கட்சிகள் அண்மைக்காலத்தில் கண்டுவரும் பாரிய சவால்களை இன்னும் அதிகமாகக் காணவுள்ளன.


குறிப்பாக இம்முறையும் தம் சேவல் சின்னத்திலல்லாமல் ஆளும் தரப்பின் வெற்றிலையில் களம் காணும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரசுக்கு தம் இருப்பை நிலை நாட்டவேண்டிய கட்டாயம்.
அவரது சொந்த மாவட்டம் நுவர எலியாவிலே வழமையான வைரிகளான மலையக மக்கள் முன்னணி ஒரு பக்கம், அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் சதாசிவம்,திகாம்பரம் ஆகியோர் என்று ஒரு ரணகளம் தான்.அனல் பறக்கிறது அங்கே.


மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் சந்திரசேகரன் இல்லாதது நிச்சயம் ஒரு வெற்றிடம் தான்.அவரது மனைவியார் போட்டியிட்டாலும்,அனுதாப வாக்குகள் வந்தாலும் அடுத்தக்கட்டத்தினர் தெரிவாகும் வாய்ப்புக்கள் குறைவு என்கின்றனர் அங்குள்ளோர்.


மலையகத்தின் இன்னொரு பரபரப்பு மாவட்டம் கண்டி.
மனோ கணேஷன் ஒரு பக்கம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு பக்கம்.வழமையான கண்டியின் பரபரப்பு மைந்தர்கள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளது.


இன்னும் நிறைய எழுத ஆசை தான்.உடல் நலம் ஈடு கொடுப்பதாகவும் இல்லை.இன்னும் எழுதினால் நீங்கள் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.


எந்த இடத்தில் உள்ளீர்களோ, நல்ல படி தீர்மானித்து நல்லவர் ஒருவருக்கு அல்லதில் உள்ளவரில் நல்லவருக்கு வாக்களியுங்கள்.
அதேவேளை தோற்றுப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் வாக்கும் செல்லா வாக்குத் தான் என்பதையும் மறக்காதீர்கள்.


  இந்த தேர்தலின் முக்கியத்துவம் செல்லா வாக்குகளையும்,அளிக்கப்படா வாக்குகளையும் குறைக்கும் என்றும் நம்புகிறேன்.

வடக்கில் வாக்கிருந்தும் வாழ்விழந்தோரை எண்ணி உருகிக்கொண்டே..  

31 Responses to "பொதுத் தேர்தல் 2010 - இறுதிக் கட்டப் பார்வை"

  • யோ வொய்ஸ் (யோகா)

    அப்பாடா இன்று கோபிக்கு முன்னால் பின்னூட்டி விட்டேன்.

    நான் தான் முதலாவது

  • என்.கே.அஷோக்பரன்

    //அதேவேளை தோற்றுப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் வாக்கும் செல்லா வாக்குத் தான் என்பதையும் மறக்காதீர்கள்.//

    அப்படியானால் இராதாகிருஷ்ணனுக்களிக்கும் வாக்குகள் செல்லா வாக்குகள் தானே? எப்படிப்பார்த்தாலும் அவரால் வெல்ல முடியாது?

    அரசாங்கத்தின் அதிரடிச் சதி இதுதான். எவ்வளவு தூரம் தமிழரின் வாக்குகளைப்பிரித்து அவர்கள் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கலாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறார்கள். இம்முறை வடக்குக்கிழக்கில் கூட்டமைப்பும், கொழும்பில் ஜ.ம.மு.வும் தோற்றால் தமிழர்கள் பாடு திண்டாட்டம் தான். இதுவரை இவர்கள் அநியாயம் செய்தால் குரல்கொடுத்து சர்வதேசத்தை ஈர்க்கவாவது பிரதிநிதித்துவங்கள் இருந்தது ஆனால் இதுவும் பறிபோய்விட்டால் அரசாங்கத்துக்குக் கொண்டாட்டம் தான்!

    கனடாவில் இவ்வளவு நாளும் இருந்துட்டு வந்த சங்கரியின்ட மகனுக்குக் கொழும்புத் தமிழர்களிடம் வாக்குக் கேட்க என்ன அருகதையிருக்கிறது?

    தமிழர்கள் யோசித்துச் செயற்பட வேண்டும்!

    எல்லாத்த விடப் பெரிய ஜோக் சரத் ஃபொன்சேகாவினுடையது - கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அவருக்கு வாக்களித்ததால் தமிழர்கள் எல்லாரும் அவருடனேயே இருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார் போல - தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் அவருடைய விளம்பரங்கள் அதைத்தான் காட்டுகிறது! தமிழனுக்கு மூளையே இல்லையென்று முடிவெடுத்தவிட்டார்களோ????!

  • யோ வொய்ஸ் (யோகா)

    அரசியல் பேச எனக்கு விருப்பமில்லை ஆனாலும் சிறு பான்மை வாக்குகள் சிதறுவது கவலையான விடயம்.

    நானும் இதுவரைக்கும் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்கவில்லை...

  • Nimalesh

    Total wast of voting this time.......

  • asmohd

    கண்டியில் பைசர் முஸ்தபா வை மறந்துட்டீங்களே....... ஹரிஸ்பத்துவ தொகுதியில் என்ன ஒரு போட்டி , பைசர் முஸ்தபா விற்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில்...... ஆகா..... இரண்டு பேருடைய அலுவலகங்களிலும் IPL மேட்ச் வேறு திரைகளில்...... தான் வெற்றி பெறா விட்டாலும் ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கும் எண்ணத்துடன்........ முடியுமா ?????????????????

  • என்.கே.அஷோக்பரன்

    ஒரு இடத்தில் நான் உங்கள் கருத்தை மறுத்துக் கருத்துக்கூற வேண்டியதாக உள்ளது.

    குமரகுருபரன் தனித்துவமான அரசியல் செய்யவில்லை என்று சொன்னீர்கள். இன்றைய காலகட்டமளவில் அப்படித்தான் அது வெளித்தோற்றமாகத் தெரிகிறது - எல்லாம் ஒரே மனோ கணேசன் மயம்.!

    என்னைப் பொருத்தவரையில் இது என்னைப் பெரிதும் அதிருப்திப்படுத்தியிருந்தது உண்மையே - நானும் இதை அப்பாவிடம் பலமுறை சொல்லியுள்ளேன். 26 வருடங்கள் அரசியல் செய்திருக்கிறார். குமார் பொன்னம்பலத்தின் கொலைக்குப்பின் தலைநகரிலிருந்து சந்திரிக்காவின் கொடூர ஆட்சிக்கெதிராகக் குரல்கொடுத்தவர் - அவருக்கு அக்காலத்தில் வந்த அச்சுறுத்தல்கள் - வந்த தொலைபேசி அழைப்புக்களை நானே கேட்டு அதிர்ந்திருக்கின்றேன் அப்படியெல்லாம் தனித்துவமான அரசியல் செய்தவர் இன்று தனித்துவமான அடையாளம் இல்லாதவரென்று விமர்சிக்கப்படும் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதைக்கண்டு வருந்துகிறேன்! - இது நீங்கள் அறியாத புதுக்கதையுமில்லை.

    எனக்குள் இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது - நீண்டகாலமாகவே இவை என்னைப்போட்டு துவைத்து எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சில பண்பு கருதி அவற்றை எழுத முடியாமல் வருந்திக்கொண்டிரக்கின்றேன் - உங்கள் பதிவைப் பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது - இன்னும் எழுத கரமும் மனமும் துடிக்கிறது ஆனால் இப்போதைக்கு நான் எதுவும் சொல்வதாக இல்லை!

    இவ்வளவு என்றாலும் எழுத வாய்ப்புத்தந்த உங்கள் பதிவக்கு நன்றி!!!

  • கன்கொன் || Kangon

    எனது பின்னூட்ட இடத்தைப் பறிப்பதற்கென்று பரவலாக போட்டிகள் இடம்பெறுகின்றன போல?
    ஹி ஹி...

    முதலாவது - உடல்நலம் எப்படி இருக்கிறது அண்ணா?

    நல்ல கட்டுரை அண்ணா...

    புதிதுபுதிதாக முளைத்து தமிழர்களது வாக்குகளைக் கேட்கிறார்கள்.
    புதியவர்கள் கேட்கக்கூடாதென்றில்லை, ஆனால் இவர்கள் தேர்தல் கால இறக்குமதிகள்.
    மக்கள் பொறுப்பாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இம்முறை(யும்) நான் வாக்களிக்கப் போவதில்லை.
    எனக்கு ஊரில்தான்...
    போய் வாக்களிக்குமளவிற்கு யாரும் போட்டியிடவில்லை.

    இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வெற்றி பெறட்டும்.
    அமைச்சுப் பதவிகளைப் பெற்றுவிட்டு பேசாமல் இருக்காமல் மக்களுக்காக சேவை செய்தவர்.

    ஆகவே,
    கட்டுரையின் ஒவ்வொரு வரியோடும் ஒத்துப் போகிறேன்.
    அருமையான அலசல்...

    ஒரு விடயம்: கிருலப்பனையில் எங்கள் வீட்டுக்கு அண்மையாக இன்று அதிகாலை/ நேற்று இரவு சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஏராளமான போஸ்ரர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.
    ஒவ்வொரு நாளும் நிறம் மாறி மாறி ஒட்டப்படும் போஸ்ரர்களைப் பார்த்த பின்பு இன்று சுவர்கள் அழகாக இருந்தன...

  • மலையகத்தான்

    (மலையகத்தில் இம்முறை பாரம்பரியக் கட்சிகள் அண்மைக்காலத்தில் கண்டுவரும் பாரிய சவால்களை இன்னும் அதிகமாகக் காணவுள்ளன.

    குறிப்பாக இம்முறையும் தம் சேவல் சின்னத்திலல்லாமல் ஆளும் தரப்பின் வெற்றிலையில் களம் காணும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரசுக்கு தம் இருப்பை நிலை நாட்டவேண்டிய கட்டாயம்.
    அவரது சொந்த மாவட்டம் நுவர எலியாவிலே வழமையான வைரிகளான மலையக மக்கள் முன்னணி ஒரு பக்கம், அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் சதாசிவம்,திகாம்பரம் ஆகியோர் என்று ஒரு ரணகளம் தான்.அனல் பறக்கிறது அங்கே.)


    இங்குள்ள தமிழர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. மெல்லவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கிறார்கள்.

    சம்பள போராட்டத்தை காட்டி கொடுத்த தொண்டமான் குழுவுக்கு ஓட்டு போடுவதா இல்லை திடீரென மலையக மக்கள் மீது பாசம் வைத்த திடீர் அரசியல்வாதி ரங்காவுக்கு ஓட்டு போடுவதா இல்லை. சந்திரிக்காவுக்கு கால் பிடித்து சம்பாரித்த சதாசிவத்திற்கு ஓட்டு போடுவதா என குழம்பியுள்ளனர் நுவரெலிய மாவட்ட மக்கள்.

    இதில் ஒரு நல்ல விடயம் தேர்தலுக்கு முன்னர் மட்டும் மக்களை பார்த்து ”எனக்கு ஓட்டு போடு எருமை மாடுகளா” என கதறும் சிவலிங்கம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பது அவருக்கே தெரியும்.

    தேர்தலில் போட்டியிடும் இன்னொரு ஆசாமிக்கு அருள்சாமி என்று பெயர். லஞ்சம் வாங்கி கொண்டு கஞ்சா விற்பனக்கும் ஆசிரியர் தொழில் வழங்கிய வள்ளல் இவர்.

    இவர்களோடு ஒப்பிடும் போது சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழர்கள் ஓட்டு பேடுவது நல்லது

  • தமிழ் நெட்வேர்க்

    லசந்த விக்ரமதுங்கவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    அவர் இன்னும் மரணிக்கவில்லை எம்முள் மாணிக்கமாக இருகிறார்.
    Lasantha Manilal Wickrematunge (April 5, 1958 – January 8, 2009) was a prominent Sri Lankan journalist and former editor-in-chief of the The Sunday Leader. He was known for his confrontational and sensationalist style of journalism....

  • நிரூஜா

    வருகையை உறுதிப்படுத்துகிறேன்...! உடல் நலம் எப்பிடி?
    நல்ல கட்டுரை...
    இன்னொரு பகுதி எழுதினால் என்ன?

  • EKSAAR

    சாகித்திய வ்ருது வேலை செய்யுது போல.. ;)

    யார் வென்றாலும் தோற்றாலும், ரங்கா வெல்லவேண்டும் என்பதே என் அவா.. மின்னலில் வந்து எங்களுக்கு ரோதனை குடுக்காமலிருக்க.. "இந்தவகையில்" என்ற சொல்லைத்தவிர்த்தோ, தனிப்பட்ட அரசியலை தொகுப்பாளராக முன்னிறுத்தாமலோ ஒருபோதும் இருந்ததில்லை.

    //ராதாகிருஷ்ணன் அரசு தரப்பில் இருந்தபோதிலும் கூட அரசின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கண்ணியவான்.//
    &
    //கன்கொன் || Kangon
    புதியவர்கள் கேட்கக்கூடாதென்றில்லை,//

    ஆமோதிக்கிறேன்

  • Anonymous

    Thaks loshan

  • அனுதினன்

    அண்ணா முதலில் உடல்நிலை எப்படி?

    அண்ணாவின் பதிவுகளுடன் என் கருத்துகள் ஒத்தே போகிறது!!!
    வெற்றிக்காக போட்டியிடுபவர்களுக்கு மத்தியிலும் சண்டை
    தோல்விதான் என்று தெரிந்து போட்டியிடுபவர்களுக்கு இடையிலும் சண்டை
    இடையில் மாட்டி கொண்டு தவிப்பது அப்பாவி மக்கள் நாங்கள்தான்!!!
    இம்முறையாவது மக்கள் உணர்ந்து வீட்டில் இருக்காது சென்று சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!!!


    பதிவு அருமை இன்னும் ஒரு பகுதியை இடலாமே!!!

  • LOSHAN

    யோ வொய்ஸ் (யோகா) said...
    அப்பாடா இன்று கோபிக்கு முன்னால் பின்னூட்டி விட்டேன்.

    நான் தான் முதலாவது//

    ஆகா.. இங்கே வேற இப்படி நடக்குதா?

  • LOSHAN

    என்.கே.அஷோக்பரன் said...
    //அதேவேளை தோற்றுப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் வாக்கும் செல்லா வாக்குத் தான் என்பதையும் மறக்காதீர்கள்.//

    அப்படியானால் இராதாகிருஷ்ணனுக்களிக்கும் வாக்குகள் செல்லா வாக்குகள் தானே? எப்படிப்பார்த்தாலும் அவரால் வெல்ல முடியாது?//

    அப்படியென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.அவர் செய்த சேவைகள்,உதவிகள் என்பவற்றை நன்றியோடு உதவிகள் பெற்ற அத்தனை பெரும் நினைத்து வாக்களித்தால்(அவருக்கு மட்டும்) வெற்றி நிச்சயம் என நான் கணிக்கிறேன்.



    அரசாங்கத்தின் அதிரடிச் சதி இதுதான். எவ்வளவு தூரம் தமிழரின் வாக்குகளைப்பிரித்து அவர்கள் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கலாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறார்கள். இம்முறை வடக்குக்கிழக்கில் கூட்டமைப்பும், கொழும்பில் ஜ.ம.மு.வும் தோற்றால் தமிழர்கள் பாடு திண்டாட்டம் தான். இதுவரை இவர்கள் அநியாயம் செய்தால் குரல்கொடுத்து சர்வதேசத்தை ஈர்க்கவாவது பிரதிநிதித்துவங்கள் இருந்தது ஆனால் இதுவும் பறிபோய்விட்டால் அரசாங்கத்துக்குக் கொண்டாட்டம் தான்! //

    அது சரி.ஆனால் இவை இரண்டுமே எளிதல்ல. கொழும்பிலே ஐ.தே.மு வில் போட்டியிடும் இருவரின் நிலையம் எப்படி என்று தெரியவில்லை.யாழிலே ஒன்பதில் ஐந்தாவது வரும் என நினைக்கிறேன்.

    கனடாவில் இவ்வளவு நாளும் இருந்துட்டு வந்த சங்கரியின்ட மகனுக்குக் கொழும்புத் தமிழர்களிடம் வாக்குக் கேட்க என்ன அருகதையிருக்கிறது?//

    யார் அவர்? கொழும்பிலே கேட்கிறாரா?சொல்லவேயில்லை.. ;)

    தமிழர்கள் யோசித்துச் செயற்பட வேண்டும்!//

    இப்பவாவது அப்படி நடக்கட்டும் என நினைப்போம்..



    எல்லாத்த விடப் பெரிய ஜோக் சரத் ஃபொன்சேகாவினுடையது - கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அவருக்கு வாக்களித்ததால் தமிழர்கள் எல்லாரும் அவருடனேயே இருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார் போல - தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் அவருடைய விளம்பரங்கள் அதைத்தான் காட்டுகிறது! தமிழனுக்கு மூளையே இல்லையென்று முடிவெடுத்தவிட்டார்களோ????!//

    நானும் இதையே நினைத்தேன்.. தலையிடி காய்ச்சல் தங்களுக்கு வரும்போது தெரிகிறது.இப்படி விசாரணையின்றி எம் இளைஞர்கள் எத்தனை பேர் உள்ளே வாடும்போது அவர்கள் பெற்றோர் எப்படியெல்லாம் வாடி இருப்பார்கள்.



    ஆனால் தமிழ் விளம்பரங்கள் எல்லாம் ரொம்பவே ஓவர்..அப்படியே சிங்களத்திலிருந்து தமிழுக்கு மாற்றி சொதப்புகிறார்கள்.

  • LOSHAN

    யோ வொய்ஸ் (யோகா) said...
    அரசியல் பேச எனக்கு விருப்பமில்லை ஆனாலும் சிறு பான்மை வாக்குகள் சிதறுவது கவலையான விடயம்.//

    அது தான் பெரும்பான்மையின் ராஜதந்திரம்

    நானும் இதுவரைக்கும் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்கவில்லை...//

    நானும்???

    விரைவில் முடிவெடுங்கைய்யா..அதுக்குள்ளே யாராவது உங்கள் வாக்கைப் போட்டிடப் போறாங்க.


    ==================

    Nimalesh said...
    Total wast of voting this time.......//

    இப்படி சொல்லி சொல்லி உங்களைப் போல இளைஞர்கள் ஒதுங்குவது குள்ள நரிகளுக்கு நல்ல வாசி.

  • LOSHAN

    asmohd said...
    கண்டியில் பைசர் முஸ்தபா வை மறந்துட்டீங்களே....... ஹரிஸ்பத்துவ தொகுதியில் என்ன ஒரு போட்டி , பைசர் முஸ்தபா விற்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில்...... ஆகா..... இரண்டு பேருடைய அலுவலகங்களிலும் IPL மேட்ச் வேறு திரைகளில்...... தான் வெற்றி பெறா விட்டாலும் ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கும் எண்ணத்துடன்........ முடியுமா ?????????????????//

    மறக்கல சகோ.. தனிப்பட்ட அரசியல் போட்டிகளைப் பற்றி நான் பார்க்கவில்லையே.அதனால் தான் அது பற்றி சொல்லவில்லை.
    ஆனால் பைசர் முஸ்தபா ஹக்கீமை ஒரு இனவாதியாக சித்தரிக்க முயல்வதை அவதானித்தேன்.எப்படியாவது வெல்லவேண்டும் என்ற நோக்கம் தான்.

  • LOSHAN

    என்.கே.அஷோக்பரன் said...
    ஒரு இடத்தில் நான் உங்கள் கருத்தை மறுத்துக் கருத்துக்கூற வேண்டியதாக உள்ளது.

    குமரகுருபரன் தனித்துவமான அரசியல் செய்யவில்லை என்று சொன்னீர்கள். இன்றைய காலகட்டமளவில் அப்படித்தான் அது வெளித்தோற்றமாகத் தெரிகிறது - எல்லாம் ஒரே மனோ கணேசன் மயம்.!//

    அதைத் தான் நான் சொன்னேன்..குமரகுருபரன் என்பவர் also running என்று தான் சொல்லலாமே தவிர, முன்னிலை,தனித்துவ அரசியல்வாதி என சொல்ல முடியாது.வென்றாலும் அவரது கொள்கைகள் முன்னிலை பெறுமா என்பதும் சந்தேகமே....



    என்னைப் பொருத்தவரையில் இது என்னைப் பெரிதும் அதிருப்திப்படுத்தியிருந்தது உண்மையே - நானும் இதை அப்பாவிடம் பலமுறை சொல்லியுள்ளேன். 26 வருடங்கள் அரசியல் செய்திருக்கிறார். குமார் பொன்னம்பலத்தின் கொலைக்குப்பின் தலைநகரிலிருந்து சந்திரிக்காவின் கொடூர ஆட்சிக்கெதிராகக் குரல்கொடுத்தவர் - அவருக்கு அக்காலத்தில் வந்த அச்சுறுத்தல்கள் - வந்த தொலைபேசி அழைப்புக்களை நானே கேட்டு அதிர்ந்திருக்கின்றேன் அப்படியெல்லாம் தனித்துவமான அரசியல் செய்தவர் இன்று தனித்துவமான அடையாளம் இல்லாதவரென்று விமர்சிக்கப்படும் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதைக்கண்டு வருந்துகிறேன்! - இது நீங்கள் அறியாத புதுக்கதையுமில்லை.//

    தெரியும் அசோக்.ஆனால் அவையெல்லாம் பழங்கதை.நான் அறிந்த முன்னைய குமரகுருபரன் ஒரு துணிச்சலான தனித்துவமான நல்ல மனிதர்.இப்போது அவர் நல்ல மனிதர் ஆனால் தனித்துவம் இழந்துள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே.

    மீதி எனக்கும் உங்களுக்குள்ளும் இருக்கட்டும்.



    எனக்குள் இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது - நீண்டகாலமாகவே இவை என்னைப்போட்டு துவைத்து எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சில பண்பு கருதி அவற்றை எழுத முடியாமல் வருந்திக்கொண்டிரக்கின்றேன் - உங்கள் பதிவைப் பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது - இன்னும் எழுத கரமும் மனமும் துடிக்கிறது ஆனால் இப்போதைக்கு நான் எதுவும் சொல்வதாக இல்லை! //

    உங்களதும் உங்கள் தந்தையினதும் மனம் புண்பட நான் ஏதும் சொல்லவில்லை என நான் நம்புகிறேன்.என் பார்வை இது.



    இவ்வளவு என்றாலும் எழுத வாய்ப்புத்தந்த உங்கள் பதிவக்கு நன்றி!!!//

    இதுபற்றி முழுவதும் இல்லாவிட்டாலும் முக்கியமான ஒரு சில விஷயங்களையாவது உங்கள் பதிவில் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...
    எனது பின்னூட்ட இடத்தைப் பறிப்பதற்கென்று பரவலாக போட்டிகள் இடம்பெறுகின்றன போல?
    ஹி ஹி...//

    ம்ம் பார்த்து.. வரலாறு முக்கியம் அமைச்சரே.. ;)



    முதலாவது - உடல்நலம் எப்படி இருக்கிறது அண்ணா?//

    இப்போது கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்ச நேரமாவது கணினி முன்னாள் மறந்து இருக்குமாறு இருக்கிறது.



    நல்ல கட்டுரை அண்ணா...//

    நன்றி தம்பி



    புதிதுபுதிதாக முளைத்து தமிழர்களது வாக்குகளைக் கேட்கிறார்கள்.
    புதியவர்கள் கேட்கக்கூடாதென்றில்லை, ஆனால் இவர்கள் தேர்தல் கால இறக்குமதிகள்.
    மக்கள் பொறுப்பாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.//

    அதே அதே..

    தெளிவான நோக்கங்களோடு நல்லவர்களோடு புதியவர்கள் களம் இறங்க வேண்டும்.தேர்தல் காலத்துக்கு முன்பாகவே தம்மை அவர்கள் மக்களிடம் நிரூபித்திட வேண்டும்.



    இம்முறை(யும்) நான் வாக்களிக்கப் போவதில்லை.
    எனக்கு ஊரில்தான்...
    போய் வாக்களிக்குமளவிற்கு யாரும் போட்டியிடவில்லை.//

    இப்படி ஒதுங்க ஒதுங்க ஓநாய்களுக்கு வாய்ப்பாகும்.



    இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வெற்றி பெறட்டும்.
    அமைச்சுப் பதவிகளைப் பெற்றுவிட்டு பேசாமல் இருக்காமல் மக்களுக்காக சேவை செய்தவர்.//

    உண்மை.அணுகுவதற்கு இலகுவானவர்.

    ஆகவே,
    கட்டுரையின் ஒவ்வொரு வரியோடும் ஒத்துப் போகிறேன்.
    அருமையான அலசல்...//

    நன்றி

    ஒரு விடயம்: கிருலப்பனையில் எங்கள் வீட்டுக்கு அண்மையாக இன்று அதிகாலை/ நேற்று இரவு சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஏராளமான போஸ்ரர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.
    ஒவ்வொரு நாளும் நிறம் மாறி மாறி ஒட்டப்படும் போஸ்ரர்களைப் பார்த்த பின்பு இன்று சுவர்கள் அழகாக இருந்தன...//

    எங்கள் பக்கம் நேற்றுக் கிழித்த பின்னர் மீண்டும் இன்று புதிதாய் சில முளைத்துள்ளன.

  • LOSHAN

    மலையகத்தான் said...
    (மலையகத்தில் இம்முறை பாரம்பரியக் கட்சிகள் அண்மைக்காலத்தில் கண்டுவரும் பாரிய சவால்களை இன்னும் அதிகமாகக் காணவுள்ளன.

    குறிப்பாக இம்முறையும் தம் சேவல் சின்னத்திலல்லாமல் ஆளும் தரப்பின் வெற்றிலையில் களம் காணும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரசுக்கு தம் இருப்பை நிலை நாட்டவேண்டிய கட்டாயம்.
    அவரது சொந்த மாவட்டம் நுவர எலியாவிலே வழமையான வைரிகளான மலையக மக்கள் முன்னணி ஒரு பக்கம், அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் சதாசிவம்,திகாம்பரம் ஆகியோர் என்று ஒரு ரணகளம் தான்.அனல் பறக்கிறது அங்கே.)

    இங்குள்ள தமிழர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. மெல்லவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கிறார்கள்.

    சம்பள போராட்டத்தை காட்டி கொடுத்த தொண்டமான் குழுவுக்கு ஓட்டு போடுவதா இல்லை திடீரென மலையக மக்கள் மீது பாசம் வைத்த திடீர் அரசியல்வாதி ரங்காவுக்கு ஓட்டு போடுவதா இல்லை. சந்திரிக்காவுக்கு கால் பிடித்து சம்பாரித்த சதாசிவத்திற்கு ஓட்டு போடுவதா என குழம்பியுள்ளனர் நுவரெலிய மாவட்ட மக்கள்.

    இதில் ஒரு நல்ல விடயம் தேர்தலுக்கு முன்னர் மட்டும் மக்களை பார்த்து ”எனக்கு ஓட்டு போடு எருமை மாடுகளா” என கதறும் சிவலிங்கம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பது அவருக்கே தெரியும்.

    தேர்தலில் போட்டியிடும் இன்னொரு ஆசாமிக்கு அருள்சாமி என்று பெயர். லஞ்சம் வாங்கி கொண்டு கஞ்சா விற்பனக்கும் ஆசிரியர் தொழில் வழங்கிய வள்ளல் இவர்.

    இவர்களோடு ஒப்பிடும் போது சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழர்கள் ஓட்டு பேடுவது நல்லது//

    உங்கள் நிலைமை புரிகிறது.

    எனினும் நல்லவர்களை அடையாளப்படுத்துவதும் ஓரளவு நல்லவர்களாக இருப்பவர்களை மேலும் நன்மை செய்வோராக மாற்றுவதிலும் விழிப்போடிருங்கள்.மலை(யக) விழுங்கி மகாதேவன்களை எல்லோரையும் விழிப்புணர்வூட்டி ஓரங்கட்டுங்கள்.

    இம்முரையிளிருந்து ஒரு புதிய பாடம் படிப்பிக்கலாம்.

  • LOSHAN

    தமிழ் நெட்வேர்க் said...
    லசந்த விக்ரமதுங்கவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    அவர் இன்னும் மரணிக்கவில்லை எம்முள் மாணிக்கமாக இருகிறார்.
    Lasantha Manilal Wickrematunge (April 5, 1958 – January 8, 2009) was a prominent Sri Lankan journalist and former editor-in-chief of the The Sunday Leader. He was known for his confrontational and sensationalist style of journalism....//

    எனதும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நேர்மையான துணிச்சலான ஒரு ஊடகவியலாளன்.இவர் துணிச்சலில் பத்து சதவீதம் இருந்தால் நானும் ஒரு நல்ல ஊடகவியலாளனே.


    =============

    நிரூஜா said...
    வருகையை உறுதிப்படுத்துகிறேன்...!//

    இதென்ன விரிவுரை மண்டபமா?;)

    உடல் நலம் எப்பிடி? //

    இப்போ கொஞ்சம் பெட்டர்.


    நல்ல கட்டுரை...
    இன்னொரு பகுதி எழுதினால் என்ன?//

    விஷயங்கள் கிடைத்தால்,நேரம் இருந்தால், மனம் இருந்தால்..

  • LOSHAN

    EKSAAR said...
    சாகித்திய வ்ருது வேலை செய்யுது போல.. ;)//

    ராசா வாங்க.. உங்க மஞ்சள் கண்ணாடியைக் கழற்றி விட்டு நல்லா வாசியுங்க.விருது கொடுத்தவர்களுக்கு கொடுக்குமாரா சொல்லி இருக்கிறேன்.

    யார் வென்றாலும் தோற்றாலும், ரங்கா வெல்லவேண்டும் என்பதே என் அவா.. மின்னலில் வந்து எங்களுக்கு ரோதனை குடுக்காமலிருக்க.. "இந்தவகையில்" என்ற சொல்லைத்தவிர்த்தோ, தனிப்பட்ட அரசியலை தொகுப்பாளராக முன்னிறுத்தாமலோ ஒருபோதும் இருந்ததில்லை. //

    நோ கமெண்ட்ஸ்

    //ராதாகிருஷ்ணன் அரசு தரப்பில் இருந்தபோதிலும் கூட அரசின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கண்ணியவான்.//
    &
    //கன்கொன் || Kangon
    புதியவர்கள் கேட்கக்கூடாதென்றில்லை,//

    ஆமோதிக்கிறேன்//

    நல்லது :)


    ===============

    Anonymous said...
    Thaks loshan//

    யாருங்க நீங்க? எதுக்கு?

  • LOSHAN

    அனுதினன் said...
    அண்ணா முதலில் உடல்நிலை எப்படி?//

    இப்போது கொஞ்சம் பெட்டர்

    அண்ணாவின் பதிவுகளுடன் என் கருத்துகள் ஒத்தே போகிறது!!!
    வெற்றிக்காக போட்டியிடுபவர்களுக்கு மத்தியிலும் சண்டை
    தோல்விதான் என்று தெரிந்து போட்டியிடுபவர்களுக்கு இடையிலும் சண்டை
    இடையில் மாட்டி கொண்டு தவிப்பது அப்பாவி மக்கள் நாங்கள்தான்!!!
    இம்முறையாவது மக்கள் உணர்ந்து வீட்டில் இருக்காது சென்று சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!!!//

    நன்றி சகோ.. ஆமாம்.நாம் ஒதுங்குவது தீயவற்றுக்கு இடமளிப்பதற்கு சமன்.


    பதிவு அருமை இன்னும் ஒரு பகுதியை இடலாமே!!!//

    பார்க்கலாம்..

  • EKSAAR

    ஒரு வேண்டுகோள், பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும்போது அப்படியே
    முழுப்பின்னூட்டத்தையும் மேற்கோள்காட்டுவது 2 தடவை வாசிக்க நேர்வதனால வாசகர்கட்கு
    கஷ்டமாக இருக்கும் என நினைக்கிறேன். (நான் அதை அனுபவிப்பதால் :D ) ்

    italic, bold போன்ற ஒன்றை பயன்படுத்தி மேற்கோளையும் பதிலையும் வேறுபாடு காட்டலாமே

  • LOSHAN

    EKSAAR said...
    ஒரு வேண்டுகோள், பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும்போது அப்படியே
    முழுப்பின்னூட்டத்தையும் மேற்கோள்காட்டுவது 2 தடவை வாசிக்க நேர்வதனால வாசகர்கட்கு
    கஷ்டமாக இருக்கும் என நினைக்கிறேன். (நான் அதை அனுபவிப்பதால் :D ) ்//

    புதிதாக வசிப்போருக்கு சிரமம் இல்லாமல் இருக்கட்டுமே என்று நல்லெண்ணம் தான்..

    italic, bold போன்ற ஒன்றை பயன்படுத்தி மேற்கோளையும் பதிலையும் வேறுபாடு காட்டலாமே//

    பரிசீலனையில் எடுக்கப்பட்டுள்ளது ;)

  • கன்கொன் || Kangon

    //Anonymous said...
    Thaks loshan//

    யாருங்க நீங்க? எதுக்கு? //

    அது பிரதியமைச்சர் திரு.இராதாகிருஷ்ணனாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன... :P

  • EKSAAR

    கன்கொன் || Kangon said..
    //அது பிரதியமைச்சர் திரு.இராதாகிருஷ்ணனாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன... :P//

    கலக்கிட்டீங்க

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...
    //Anonymous said...
    Thaks loshan//

    யாருங்க நீங்க? எதுக்கு? //

    அது பிரதியமைச்சர் திரு.இராதாகிருஷ்ணனாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன... :P//


    அவராக இருக்க வாய்ப்பில்லை.. n விட்டிருக்க வாய்ப்பில்லை ;)

  • EKSAAR

    //கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அவருக்கு வாக்களித்ததால் தமிழர்கள் எல்லாரும் அவருடனேயே இருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார் போல - தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் அவருடைய விளம்பரங்கள் அதைத்தான் காட்டுகிறது!//

    தமிழ் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் முஸ்லிம்களையும் இலக்காக கொண்டது என்பதை அடியோடு மறந்திருப்பது, முஸ்லிம்களை மறந்தது மாதிரி..

  • LOSHAN

    EKSAAR said...
    //கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அவருக்கு வாக்களித்ததால் தமிழர்கள் எல்லாரும் அவருடனேயே இருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார் போல - தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் அவருடைய விளம்பரங்கள் அதைத்தான் காட்டுகிறது!//

    தமிழ் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் முஸ்லிம்களையும் இலக்காக கொண்டது என்பதை அடியோடு மறந்திருப்பது, முஸ்லிம்களை மறந்தது மாதிரி..//

    அனோமா ஆண்டி இதைக் கொஞ்சம் கவனியுங்களேன்..

  • Vijayakanth

    இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட பதிவா அண்ணா ;) ?


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.