
வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாதிக்கு மேலே வெளிவந்துள்ள நிலையில், இப்போதே 15 லட்சம் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.தனது இரண்டாவது பதவிக்காலத்தை வளமான எதிர்காலம் நோக்கியதாக ஆரம்பிக்க இருக்கின்ற மக்களின் மன்னனுக்கு வாழ்த்து சொல்லும் பதிவு இது.
சதவீத அடிப்படையிலும் இனி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நெருங்க முடியாது.
சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் பொன்செகாவுக்குக் கிடைத்தும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வென்ற மக்கள் தலைவன் மகிந்த ராஜபக்ச மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 94ஆம் ஆண்டு நிகழ்த்திய வாக்குகளின் சாதனையை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்.மகத்தான வெற்றி இது..
மோசடி,வன்முறை என்று யார் இனிக் கூப்பாடு போட்டாலும் எடுபடாது.. இத்தனை பெரிய வித்தியாசத்தை மோசடிகளால் ஏற்படுத்த முடியுமா?
சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு. இனியாவது நான் முன்னைய பதிவில் சொன்னது மாதிரி பின் மண்டையைப் பாதுகாப்போம்..
தேர்தல் கடமையில் நேற்றிரவில் இருந்து ஒரு வினாடி கூட உறங்காமல் வானொலியில் முடிவுகளை சொல்லிக் கொண்டே, ட்விட்டர், Facebook மூலமாக நண்பர்கள்,நேயர்களோடும் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.(ஜனநாயகக் கடமை)
ஜனாதிபதி வெற்றிக் கனி பறிக்கிறார் என்றவுடனேயே ஆனந்தக் கூத்தாடிய எம்மில் பலருள் நானும் ட்விட்டர், Facebook மூலமாக வழங்கிய தகவல் துளிகளை, மன்னருக்கு வழங்கிய வாழ்த்துக்களை இங்கே தொகுப்பாகத் தருகிறேன்..
தூக்கம் வராமல் ஜாலியாக இருக்க எத்தனைஎல்லாம் செய்யவேண்டி இருந்தது.. ;)
ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..
பேசாமல் பொது வேட்பாளரா நம்மசிவாஜி சிங்கத்தையே போட்டிருக்கலாமோ.. பெரிசா வித்தியாசம் இருந்திருக்காது
தோளில் துண்டு போட்டவர் தலையில் துண்டு போடுவார்னு பார்த்தா, எல்லோரது மண்டையிலும் குண்டு போட்டிட்டாரே.. ;)
மனுஷன் மாத்தறை,மொனராகலையில் எல்லாம் பத்து பதினைந்து வாக்கு எடுத்திருக்கு.பொது வேட்பாளரா இருந்திருந்தால் கலக்கி இருக்கும் #Sivajilingam
இந்த ஒருநாள் கூத்துக்கு எத்தனை நாள் கஷ்டப்பட்டோம்.. பாவம் எங்கள் ஜனாதிபதி.. நிறையக் காசை செலவழிக்க வச்சுப் போட்டாங்கள்.. ;)
ஆகா. இதைத் தான் ஜனாதிபதி அவர்கள் எமது வானொலிக்காக அன்று சொன்னார்.வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை சின்னம் வெற்றியின் சின்னம்
எனது நண்பர் திரிகரன் என்பவர் சொன்னவை..
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்..., குழந்தைகளின் பாசம் தெரிந்த தந்தையான எம் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே எங்கள் வளமான எதிர்காலம்....
போரை வென்ற மாதிரி எங்கள் ஜனாதிபதி நாட்டையும் அபிவிருத்தி செய்வார்... அவர் அன்றைக்கு சொன்னார் “போரை முடிவுக்கு கொண்டு வருவன்” என்று... முடிவுக்கு வந்திச்சா?... இன்றைக்கு சொல்லுறார் “இனி அபிவிருத்தி தான் இலக்கு” என்று... அதையும் நிச்சயம் பண்ணுவார்... நம்புங்க சார்... நம்பிக்கை தானே வாழ்க்கை...
இன்னும் பல வாழ்த்துக்கள் பார்க்கவிரும்புவோர், என் facebookஐயோ, ட்விட்டரையோ பாருங்கள்..

'ஸ்தூதி' சொல்லவே உனக்கு என்கிட்டே வார்த்தை இல்லையே..
ஜனாதிபதியின் வெற்றி மேலும் பிரம்மாண்டமாகி,உறுதியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும்பல பரபரப்பு செய்திகளும், புதிய தகவல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.
எனக்கும் வளமான எதிர்காலம் ஒன்றின் மீது ஆசை இருக்கு.. :) ஆனபடியால் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..
கடந்த முறையைவிட மிகப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருகின்ற எங்கள் மன்னர் அதிமேதகு ஜனாதிபதி வாழ்வாங்கு வாழ்க.. அவர் தயவில் நாமும் வளமோடு வாழ்வோம்.
இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.
மக்கள் தலைவன் மகிந்த வாழ்க
எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொழும்பில் சிங்கத்தமிழன் சிவாஜிலிங்கத்துக்கு 548 வாக்குகளும் , நாடு முழுவதும் 3000க்கு கிட்டவாக வாக்குகளும் போட்ட வள்ளல்களை யாராவது எனக்குக் காட்டுங்களேன்.. பார்க்க ஆசையா இருக்கு..
இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லா முடிவுகளும் வந்திடும்.. வீட்டுக்கு போய் கும்பகர்ணத்தூக்கம் ஒன்று போடப் போகிறேன்.. உங்களுக்கும் எனக்கும் வளமான எதிர்காலம்.
38 comments:
என்னுடைய வாழ்த்தையும் ஜனாதிபதிக்கு சொல்லிவிடுங்கள்... வளமானதொரு எதிர்காலம்
அடடா வழக்கம்போல சுடச்சுட பதிவு போட்டுட்டீங்க அண்ணா,
//எம் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே எங்கள் வளமான எதிர்காலம்//
இனப்பாகுபாட்டை ஒழித்த எங்கள் தலைவர் வாழ்க..:p
வளமான எதிர்காலமென்றால் இலங்கையும் வல்லரசாகுமா #சந்தேகம்
//சிங்கத்தமிழன் சிவாஜிலிங்கத்துக்கு 548 வாக்குகளும் , நாடு முழுவதும் 3000க்கு கிட்டவாக வாக்குகளும் போட்ட வள்ளல்களை யாராவது எனக்குக் காட்டுங்களேன்.. பார்க்க ஆசையா இருக்கு//
எனக்கும்.. எனக்கும்..ஹீஹீ
இவ்வளவு பிஸியிலுமா?
கலக்கல்… நானும் வாழ்த்துகிறேன்.. இனிவரும் 5 வருடங்கள் அமைதியாகக் கழியட்டும்… ம் ம்;…
வாழ்க மன்னர் ...!!! வளர்க அவர்தம் புகழ்..!!!
pannikal
நாட்டின் தலைவன், மக்கள் சேவகன், இலங்கையின் மன்னன் அதிமேதகு. மஹிந்த ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்....
(அதுசரி, இந்தப் பதிவு என்ன வகை? நகைச்சுவையா? ;) )
இது நல்லாயில்லை, வார்த்தைக்கு வார்த்தை 'மன்னன்' என்று எங்கள் தலைவனின் குடும்ப ஆட்சியை குத்திக்காட்டுகிறீர்களோ? ((:
Ithu nakaisuvaiya illathu serious pathiva?
"சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு."
இப்படியான வார்த்தைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை நண்பரே. நம்பிக்கையை இழக்காதீர்
"சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு."
இப்படியான வார்த்தைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை நண்பரே. நம்பிக்கையை இழக்காதீர்
"இனியாவது நான் முன்னைய பதிவில் சொன்னது மாதிரி பின் மண்டையைப் பாதுகாப்போம்.."
தமிழர்கள் எப்போதும் பின்மண்டையை பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள், ஆனால் அதற்குள் இருப்பதை பயன்படுத்துகிறார்களா என்று தான் புரியவில்லை.
//மோசடி,வன்முறை என்று யார் இனிக் கூப்பாடு போட்டாலும் எடுபடாது.. இத்தனை பெரிய வித்தியாசத்தை மோசடிகளால் ஏற்படுத்த முடியுமா?///
????
///சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு. ///
????
////எனக்கும் வளமான எதிர்காலம் ஒன்றின் மீது ஆசை இருக்கு.. :) ஆனபடியால் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..////
அனைவருக்கும் இனி வளமான எதிர்காலம் ஒன்றின் மீது ஆசை உள்ளது ...
..எப்படியோ உங்கள் மன்னனின் ஆசை நிறைவேரிட்டு அண்ணா...
எனது வாழ்த்துக்களை உங்கள் மன்னன் மக்கள் தலைவன் மகிந்தவுக்கு சொல்லிவிடுங்கள்....
அரசியல் பதிவுகளுக்கு நம்ம எப்பவுமே பின்னூட்டம் அளவோடதான் இருக்கும், உங்கள் டிவிட்டர் அப்டேட்டுகளை நேற்று அதிகாலை தொடக்கம் வாசித்து வந்தேன்.
இனி தூங்க வேண்டும்
adimaikalin saarbil mannarukku vaazhttukal sollivitteerkal.nandri.
yes of course.
serious pathivu. great leader, serious time,
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
நானும் கும்பகர்ணத்தூக்கம் ஒன்று போடப் போகிறேன்... உங்களுக்கும் எனக்கும் வளமான எதிர்காலம் உண்டாக வாழ்த்துக்கள்.
உங்களை நேரே காணும் போது ”பல்டி பஞ்சலிங்கம்” என்ற விருது வழங்கப்படும்..வரும்போது புத்தகாயா ஏற்பாட்டு நிகழ்வில் பொட்டிருந்த ஆடைகளுடன் வரவும்..
***********
இன்னும் 7 வருசத்துக்கு அரசியல் ஐடியா ஏதாவது இருந்தா வெட்டிப்புதைச்சிருங்க..:P ..
முக்கிய விசயம் : நான் அப்பவும் இப்பவும் எப்பவும் மாமா பக்கம்தான்.. ;-)
இதுவல்லவா பல்டி! அசத்திட்டீங்க போங்க...
//பேசாமல் பொது வேட்பாளரா நம்மசிவாஜி சிங்கத்தையே போட்டிருக்கலாமோ.. பெரிசா வித்தியாசம் இருந்திருக்காது//
வடிவேல் ஜோக் மாதிரி தான் இனி சொல்ல வேணும் நீங்க குடுத்த பணத்துக்கு ஒங்க சின்னத்தில ஒரு குத்து அவங்க குடுத்த பணத்துக்கு அவங்களுக்கும் ஒரு குத்து .
தென்னிலங்கை இனவாத ஓட்டுக்களை ஒட்டு மொத்த சிறுபான்மை ஓட்டுக்களால் வெல்ல முடியவில்லை என்பதே ஒரே கவலை...!
எவ்வாறிருப்பினும் ஐநாவில் தமிழில் பேசிய தலைவன் வாழ்க.... ! :P
Football score சொல்லுறது போல facebook status update பண்ணினது நல்ல இருந்தது.....!
இனி எங்களுக்கு வடை பாயசம் தான்.
பேர கேட்டா சும்மா அதிருதில்ல....
அனைவருக்கும் எனது "வளமான எதிர்கால" வாழ்த்துகள்.
அண்ணா
இதுவல்லவா பல்டி! அசத்திட்டீங்க போங்க...
p.suthan
PALTI ATIPPATHU EPPATI ENDRU COURSE ONDRU AARAMBICHA NEENKA THAN PROFESSOR UNKALIN THINICHALANA REPORTAI PAARTHU IVANALLAWA AAMBALAI ENDRU NINAITHEN APPA UNKALA MATHIRI ORU AAMBALAYAI NAN PARTHATHE ILLA UNKAL THOOBAM POTUM PANI THODARATTUM INTHA KATTURAIKKU MAHINDHA SAARPIL PERUM THOKAI KITTUM
//PALTI ATIPPATHU EPPATI ENDRU COURSE ONDRU AARAMBICHA NEENKA THAN PROFESSOR UNKALIN THINICHALANA REPORTAI PAARTHU IVANALLAWA AAMBALAI ENDRU NINAITHEN APPA UNKALA MATHIRI ORU AAMBALAYAI NAN PARTHATHE ILLA UNKAL THOOBAM POTUM PANI THODARATTUM INTHA KATTURAIKKU MAHINDHA SAARPIL PERUM THOKAI KITTUM//
தப்புத்தப்பாக அர்த்தம் கொள்ளுகிறேன் போல... யாராவது தமிழ்ப்படுத்துங்கள்... அல்லது ஆங்கிலப்படுத்துங்கள்.
@ஆதிரை அண்ணா...
தமிழ்ப்படுத்தல்... :)
குத்துக்கரணம் அடிப்பது எப்படி என்று கற்கைநெறி ஒன்று ஆரம்பித்தால் நீங்கள் தான் பேராசிரியர். உங்களின் துணிச்சலான அறிக்கையைப் பார்த்து இவனல்லவா ஆண்பிள்ளை என்று நினைத்தேன். அப்போது/அப்பா உங்கள் மாதிரி ஆண்பிள்ளையை நான் பார்த்ததே இல்லை. உங்கள் ததூபம் போடும் பணி தொடரட்டும். இந்தக் கட்டுரைக்கு மஹிந்த சார்பில் பெரும்தொகை கிட்டும்.
(அப்பா என்றா அல்லது அப்ப என்றா சொல்ல வருகிறார் எனத் தெரியவில்லை. அப்பா என்று விளிப்புக்கு {யப்பா! } சொல்லியிருக்கலாம். அல்லது அப்ப என்றிருக்கலாம்.)
ததூபம் என்றால் என்ன? lol
//அறிக்கையைப் பார்த்து இவனல்லவா ஆண்பிள்ளை என்று நினைத்தேன்.
உவர் கலைவாணன் "தொடருகின்ற" ஒரேயொரு வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தும் பிரமித்தேன் அவனல்லவா ஆண்பிள்ளை என்று....
//உவர் கலைவாணன் "தொடருகின்ற" ஒரேயொரு வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தும் பிரமித்தேன் அவனல்லவா ஆண்பிள்ளை என்று.... //
lol................
ஹா ஹா...
பெயரில்லாத புண்ணியவான் வாழ்க...
இப்போது தான் பார்த்தேன்....
கழுவும் நீரில் அழகாய் நழுவி விட்டீர்கள். கலக்கல்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
//மோசடி,வன்முறை என்று யார் இனிக் கூப்பாடு போட்டாலும் எடுபடாது.. இத்தனை பெரிய வித்தியாசத்தை மோசடிகளால் ஏற்படுத்த முடியுமா?// anna athu enral unmaithaan.........
இது ஒரு நாடு இதுக்கு ஒரு ஜனாதிபதி தேர்தல் அதட்கில வேற சில கட்சியின் நிபந்தனையட்ட ஆதரவு இது தேவையா ???????
வேண்டாம்
லோஷன் அண்ணா தயவுசெய்து எமது நாட்டின் அரசியலை எழுதி
உங்கள் இந்த அறிவுபூர்வமான இணையத்தளத்தை அரியண்டப்படுத்தாதிங்க..... வேண்டாம்
இனிவரும் 5 வருடங்கள் அமைதியாகக் கழியட்டும்...
மாமா மன்னன் அதிமேதகு. மஹிந்த ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்....
இது ஒரு நாடு இதுக்கு ஒரு ஜனாதிபதி தேர்தல் அதட்கில வேற சில கட்சியின் நிபந்தனையட்ட ஆதரவு இது தேவையா ???????
வேண்டாம்
லோஷன் அண்ணா தயவுசெய்து எமது நாட்டின் அரசியலை எழுதி
உங்கள் இந்த அறிவுபூர்வமான இணையத்தளத்தை அரியண்டப்படுத்தாதிங்க..... வேண்டாம்
மோசடிகளால் எவ்வளவு பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்த முடியும். உயிருக்கு பயப்படாதவன் யாரவது இருக்க முடியுமா? ..cinnamon grand ல் நடந்ததெல்லாம் ஒரு divert பண்ணும் நாடகம் ...விரிவாக ஒரு பதிவில் தருகிறேன்
மோசடிகளால் எவ்வளவு பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்த முடியும். உயிருக்கு பயப்படாதவன் யாரவது இருக்க முடியுமா? ..cinnamon grand ல் நடந்ததெல்லாம் ஒரு divert பண்ணும் நாடகம் ...விரிவாக ஒரு பதிவில் தருகிறேன்
என்ன சொல்ல சிம்பாப்வேக்கு போட்டியாக ஒரு நாடு உருவாகிறது..பதிவுலகில் அரசியல் கூட கவனம் நண்பர்களே
IMSAI ARASAN 23RD PULIKESI.....!
Post a Comment