நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

10/19/2009 11:36:00 AM

(47) Comments




சில வேடிக்கையான புதுமொழிகள்..

முன்பொரு நாள் எனது விடியல் காலை நிகழ்ச்சியில் நானும் நேயர்களும் சேர்ந்து உருவாக்கியவை..
என்று பகுதி ஒன்று வந்தது..

இப்போது பகுதி இரண்டு...

சிரியுங்கோ.. நல்லா வாய் விட்டு சிரியுங்கோ..

(நேயர்களின் பங்களிப்பு இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்தியவன் என்ற அடிப்படையில் copy rights எனக்கே இருக்கிறது)


அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.

எத்தனை பழமொழி sms பண்ண ஆசைப்பட்டாலும் phoneல credit இருந்தால் தான் அது deliver ஆகும்.

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.

Hand Phone மலிவானால் ஆவி கூட Phone bill கட்டும்.

ஓசில Iron Box கிடைத்தால் Under wearஜயும் பண்ணி போடுவாங்களாம்.

Duckworth Lewisம் Doctors எழுதுவதும் புரிகிறவர்களுக்குத் தான் புரியும்.

படுத்துகிட்டு தூங்குவானாம் good man
பறந்துகிட்டு தூங்குவானாம் Bat man

விஷாலுக்கு Comedy வராதுன்னு zooல பன்னிக்குட்டிக்கும் தெரியும்.

Power play நேரமே runs எடுத்துக்கோ.

இளிச்சவாயனுக்கு வாழ்வு வந்தா இங்கிலாந்து போய் இடியப்பம் சாப்பிடுவானாம்.

பிச்சைக்காரன் வீட்டுப் பந்திக்கும் முந்து.

Hero கமல் என்றால் heroineக்கு உதட்டில் காய்ச்சல் வரும்.

எறும்புக்கு காலம் வந்தா எருமைக்கிட்ட கூட gameஅ கேட்கும்.

சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.

பாம்பிற்கு காலம் வந்தா பாவனாவ வச்சு படம் எடுக்கும்.

ஆயிரம் ரூபாய்க்கு Trouser வாங்கினாலும் பத்து ரூபா zip தான் மானத்தை காப்பாற்றும்.

குருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.

வல்லவனுக்கு முடியுமா வழுக்கை மண்டையில் போவதற்கு?

பசித்த வயிற்றுக்கு வடித்த கஞ்சியும் பிரியாணி.

சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.

எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

கஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி.

எலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.

ஓவரா ஆடுனா Australian team கதி தான் உனக்கு.

நேரம் நல்லாயிருந்தா நெத்தலி மீன் கூட நீந்தி விளையாடும்.எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.

வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.

தொர சோறுக்கு பிச்சை எடுத்தாராம், தொர சாமி கோதுமை மா ரொட்டி கேட்டாராம்.


பி.கு - நயன்தாரா பெயர் & படம் பார்த்து வந்து கடுப்பாகிப் போனவர்களுக்காக இன்னொரு போனஸ் நயன் படம்.. கொஞ்சம் அதிக கிளு கிளுவாய்..



47 Responses to "நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?"

  • ஆதிரை

    //சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.

    லாடு லபக்கு தாஸுக்கு போத்தல் கிடைச்சால்,
    ஓடுறது லாறியானாலும் குதிச்சு இறங்குவாராம்.

  • Bavan

    //சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.//

    சூப்பர் லோசன் அண்ணா...:D

  • ஆகீல் முசம்மில்

    உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் பதிவை அறிய இங்கேசெல்லவும் http://tamil25.blogspot.com/2009/10/blog-post_12.html

  • வேந்தன்

    நல்லாத்தான் இருக்கு ஆனா சிம்பு, விஷால் விசிறிகள் இந்த பதிவில் உம்மை கும்ம போகுது உறுதி...

  • பிரபா

    இதை நான் அன்று நிகழ்ச்சி போகும் போதே எதிர்பார்த்தேன் எப்போதாவது பதிவில் இடம் பிடிக்கும் என்று...

    தூள்....

  • யோ வாய்ஸ் (யோகா)

    18+ படங்களை போட்டு என்னை போன்ற சிறுவர்கள் மனதை கெடுக்கிறீர்கள்..

    அதனால அந்த 2வது நயனின் படத்தை நான் பார்க்கல

  • புல்லட்

    எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

    எலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.

    பெஸ்ட் ! ஹாஹாஹ!

  • Anonymous

    ஏன் இப்படி
    நல்லாத்தான போயிட்டு இருந்துச்சி

    எதுக்கு இந்த கொலைவெறி

  • Balavasakan

    லோஷன் அண்ணா நல்லா இருக்கு. ..............!உப்பவும் உங்கள் நகைச்சுவை உணர்வு அப்பிடியே இருக்கு வேட்டைக்காரன் பாடல விமர்சனம் பார்த்து வயிறு புண்ணாய் இருக்கு உங்கள் குரல் இப்போது jaffna லும் கேட்குது அண்ணா இவ்வளவு காலம் உங்கள ரொம்ப மிஸ் பண்ணிவிட்டோம் எப்புடி இருக்கிறீங்கள் உங்கள் கிரிக்கெட் நியூஸ் எண்டால் மிஸ் பண்ணாமல் கேட்போம் வெற்றி இய விரைவில் இங்கு stereo ஒலி நயத்துடன் எதிர்பார்கிறோம்

  • அத்திவெட்டி ஜோதிபாரதி

    நயந்தாராவப் பத்தி பேசுறியளே என்னமோ ஏதோன்னு வந்தேன்!

    :)))

  • R.V.Raj

    என்னதான் நன்தாரா , நமிதா ,பிரியாமணி , என்ற பெயர்களைக்கேட்டா கடுப்பானாலும் உங்கள் நன்தார தாளிப்பைக்கேட்டாலே மவுஸ் உங்கள் தலைப்புப்பக்கம்தான் ஓடிவருகிறது . நீங்களும் திருந்திரமாதி இல்ல பதிவாளர் சந்திப்பில் அல்லாரும் சேர்ந்து போட்டுத்தாக்கியது போதாதா}
    //"சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்// அடுத்த படம் அப்படியிருக்காது என்ன நம்பலாம் . கேளதம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் சிம்பு நடிக்கிறார் இதுவரைக்கும் நீங்க சொன்னது சரி.

  • கானா பிரபா

    ஆகா உங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு அண்ணே ;)

  • Subankan

    //அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
    அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்//

    தகவலுக்கு நன்றி.

    //குருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.//

    குருவிய நீங்கள் விடுறதா இல்லையா?

    //நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.
    //

    இப்ப இருக்கற நயனுக்கு பிளாஸ்டர் கிடைச்சாலும் Missed call கூடக் கிடையாது.

  • நாச்சியாதீவு பர்வீன்.

    sooper loshan...........

  • என்ன கொடும சார்

    //நேயர்களின் பங்களிப்பு இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்தியவன் என்ற அடிப்படையில் copy rights எனக்கே இருக்கிறது//

    அதாவது "கஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி"!

    பந்தி பந்தியா எழுதினாலும், நயனின் பெயர்தான் ஹிட் கொடுக்கும்

  • கிறுக்கன்

    என்னமோ பொங்க...ஒக்கா மக்க இப்படி கலக்குனா என்ன செய்ய?


    மன வருத்தத்தில் இருந்த என்னை மகிழ்சி அடைய செய்த எழுத்துக்கள்..

  • ஆ.ஞானசேகரன்

    கலக்கல் நண்பா

  • venkat

    நல்லா இருக்கு

  • ப்ரியானந்த சுவாமிகள்

    எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.//
    Advance Version

    சிட்டி இக்கு வந்த சிங்கார எலி conference call இல family plan போட்டிச்சாம்

  • SIRUVAN

    எனக்கும் கொஞ்சம் தெரியும்...

    (யாழில் இருந்து வந்த உடனேயே நாகரீகமாக மாறுகிறோம் எண்டு சொல்லி கவர்ச்சி உடையில் திரியும் பெண்கள்)
    நடுக்கடலில நிண்டாலும் நாய்க்கு நக்குத்தண்ணி நக்குத்தண்ணி தான்..

    காடு படுற பாட்டுல கரடி காவடி எடுக்கோனும் எண்டு நிண்டுதாம்

  • jackiesekar

    எல்லா பழ மொழியும் சூப்பர்... முக்கியமா அந்த நயன் படம் சூப்பரோ சூப்பர்..

  • தர்ஷன்

    //அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
    அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.//

    முன்னாடி ஒரு கண்ணா சேர்த்து அப்படியே தலைவர் style இல் சொல்லிப் பாருங்கள்.
    அப்படியே அவருக்கு பொருத்தமான punch dialog

  • கோப்பாய் பொடியன்

    அப்ப பூனைக்கு காசு இருந்தா , "புவனேஸ்வரிகா கோல் பண்ணும்?

    someone had asked me to ans that ques when i copied ur title in my FB account?

  • நாஸியா

    ஐயோஒ நான் உருண்டு உருண்டு சிரிச்சிட்டு இருக்கேன்!

  • சந்ரு

    இரசித்தேன், சிரித்தேன்

  • velji

    humourously creative!

  • யசோ...அன்பாய் உரிமையோடு கரன்

    பதிவு சூப்பர்...நல்ல காமெடி...எங்கேயோ கேட்டு சிரிச்சது..."அம்மணமா ஓடிச்சாம் புலி... underware குடுத்திச்சாம் எலி

  • கனககோபி

    ஹா ஹா ஹா...
    ROFL....
    வெற்றி நேயர்கள் கலக்குகிறார்கள்....

    //யோ வாய்ஸ் (யோகா)
    18+ படங்களை போட்டு என்னை போன்ற சிறுவர்கள் மனதை கெடுக்கிறீர்கள்..
    அதனால அந்த 2வது நயனின் படத்தை நான் பார்க்கல //
    அதே... வழிமொழிகிறேன். :)

  • நாச்சியாதீவு பர்வீன்.

    "கேட்பவன் கேனயனாக இருந்ததால்
    எருமைமாடு கூட ஏரப்ப்லன் ஓட்டுமாம்"

    இது எப்படி இருக்கு மெய்யிலேயே இது எனது கற்பனை இல்லை எனது நண்பன் அல் பாரிஸ்(அனுராதபுரம்) இன் கற்பனையாகும்,

    pls visit www.farveena.blogspot.com
    www.kavifarveen.blogspot.com.

  • அஜுவத்

    கானா பிரபா said...
    //ஆகா உங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு அண்ணே ;//

    உண்மைதான் சகோதரா;...

    அண்ணா நயந்தாராவில ஒரு கண்ணாத்தான் இருக்கீங்க... முன்பு ஒரு "நயந்தாரவின் சிங்கம் வாழைப்பழம் சாப்பிடுமா??" இப்ப இது......... ஏயா ஏ????

  • dilip

    very nice...naan vizhunthu vizhuntu sirichen...too gud

  • LOSHAN

    ஆதிரை said...
    //சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.

    லாடு லபக்கு தாஸுக்கு போத்தல் கிடைச்சால்,
    ஓடுறது லாறியானாலும் குதிச்சு இறங்குவாராம்.//
    கொன்கோர்ட் அனுபவமோ? ;)
    ஆனால் அது வெற்றுப் போத்தலாம்

    ============

    Bavan said...
    //சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.//

    சூப்பர் லோசன் அண்ணா...:D//

    டாங்கூ


    ===========

    ஆகீல் முசம்மில் said...
    உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் பதிவை அறிய இங்கேசெல்லவும் http://tamil25.blogspot.com/2009/10/blog-post_12.html//

    போய்ப் பார்த்தேனே.. அங்கே ஒரு தொடர்பதிவையும் காணேல்லையே..

  • LOSHAN

    வேந்தன் said...
    நல்லாத்தான் இருக்கு ஆனா சிம்பு, விஷால் விசிறிகள் இந்த பதிவில் உம்மை கும்ம போகுது உறுதி...//

    எவ்வளவைப் பார்த்திட்டம். இதைத் தாங்க மாட்டோமா? (உள் கருத்து விளங்கிச்சா?)

    ================

    பிரபா said...
    இதை நான் அன்று நிகழ்ச்சி போகும் போதே எதிர்பார்த்தேன் எப்போதாவது பதிவில் இடம் பிடிக்கும் என்று...

    தூள்....//

    நன்றி பிரபா.. இதெல்லாம் செய்யாட்டி பிறகென்ன? ;)

  • LOSHAN

    யோ வாய்ஸ் (யோகா) said...
    18+ படங்களை போட்டு என்னை போன்ற சிறுவர்கள் மனதை கெடுக்கிறீர்கள்..//

    நீங்க யார்? எனக்கு யோ(கா) என்றொருவரை தெரியும்.. அவரில்லையா நீங்கள்?வயசிக் குறைச்சு வாலிபம் தேடும் வியாதி பலருக்கு வந்துள்ளது.. ;)

    அதனால அந்த 2வது நயனின் படத்தை நான் பார்க்கல//
    அம்மணமா ஓடிய எலி அடுத்த வீட்டில் தன் துணி எண்டுதாம்.. ;)

  • LOSHAN

    புல்லட் said...
    எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

    எலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.

    பெஸ்ட் ! ஹாஹாஹ!//

    ஆதிரையை நினைச்சு தானே சிரிச்சீங்க? ;)

    ============

    Anonymous said...
    ஏன் இப்படி
    நல்லாத்தான போயிட்டு இருந்துச்சி

    எதுக்கு இந்த கொலைவெறி//

    நல்லாத் தான் போனபடியால் தான்..

  • LOSHAN

    Balavasakan said...
    லோஷன் அண்ணா நல்லா இருக்கு. ..............!உப்பவும் உங்கள் நகைச்சுவை உணர்வு அப்பிடியே இருக்கு வேட்டைக்காரன் பாடல விமர்சனம் பார்த்து வயிறு புண்ணாய் இருக்கு உங்கள் குரல் இப்போது jaffna லும் கேட்குது அண்ணா இவ்வளவு காலம் உங்கள ரொம்ப மிஸ் பண்ணிவிட்டோம் எப்புடி இருக்கிறீங்கள் உங்கள் கிரிக்கெட் நியூஸ் எண்டால் மிஸ் பண்ணாமல் கேட்போம் வெற்றி இய விரைவில் இங்கு stereo ஒலி நயத்துடன் எதிர்பார்கிறோம்//

    நன்றி சகோதரா..

    ==========

    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    நயந்தாராவப் பத்தி பேசுறியளே என்னமோ ஏதோன்னு வந்தேன்!

    :)))//

    உங்களுக்காகத் தானே ரெண்டு படம் போட்டிருக்கிறேன்

  • LOSHAN

    R.V.Raj said...
    என்னதான் நன்தாரா , நமிதா ,பிரியாமணி , என்ற பெயர்களைக்கேட்டா கடுப்பானாலும் உங்கள் நன்தார தாளிப்பைக்கேட்டாலே மவுஸ் உங்கள் தலைப்புப்பக்கம்தான் ஓடிவருகிறது . நீங்களும் திருந்திரமாதி இல்ல பதிவாளர் சந்திப்பில் அல்லாரும் சேர்ந்து போட்டுத்தாக்கியது போதாதா}//
    சிலது பிறப்போட வந்தது.. எப்போதும் போகாது.. ;)


    //"சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்// அடுத்த படம் அப்படியிருக்காது என்ன நம்பலாம் . கேளதம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் சிம்பு நடிக்கிறார் இதுவரைக்கும் நீங்க சொன்னது சரி.//

    அப்படி நடந்தால் நல்லது தான்.. பார்ப்போம்..

    =========

    கானா பிரபா said...
    ஆகா உங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு அண்ணே ;)//

    நன்றி அண்ணாச்சி.. ரெண்டு படங்கள் போட்டதனாலா? ;)

  • LOSHAN

    Subankan said...
    //அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
    அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்//

    தகவலுக்கு நன்றி. //
    இது யாரோ ஒருவர் சொன்னது.. ;)

    //குருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.//

    குருவிய நீங்கள் விடுறதா இல்லையா?//

    அப்பிடியொரு ராசி.. ;)

    //நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.
    //

    இப்ப இருக்கற நயனுக்கு பிளாஸ்டர் கிடைச்சாலும் Missed call கூடக் கிடையாது...
    hehehe ஆதவன் அனுபவமா?

  • LOSHAN

    நாச்சியாதீவு பர்வீன். said...
    sooper loshan...........//
    டாங்க்ஸ்

    ===============

    என்ன கொடும சார் said...
    //நேயர்களின் பங்களிப்பு இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்தியவன் என்ற அடிப்படையில் copy rights எனக்கே இருக்கிறது//

    அதாவது "கஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி"!//
    மன்னிக்கவும் டாக்டர் பட்டம் எனக்கு இப்ப டூ ஏர்லி.. ;) பிறகு தாங்க வாங்கிக்கிறேன்


    பந்தி பந்தியா எழுதினாலும், நயனின் பெயர்தான் ஹிட் கொடுக்கும்//
    மன்னிக்கவும் நயனின் பெயரும்.. ;)

  • LOSHAN

    கிறுக்கன் said...
    என்னமோ பொங்க...ஒக்கா மக்க இப்படி கலக்குனா என்ன செய்ய?
    மன வருத்தத்தில் இருந்த என்னை மகிழ்சி அடைய செய்த எழுத்துக்கள்..//

    நீங்கள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்ச்சி

    ====================

    ஆ.ஞானசேகரன் said...
    கலக்கல் நண்பா//

    டாங்க்ஸ் நண்பா.. எப்படி பயணமெல்லாம்?

    =========

    venkat said...
    நல்லா இருக்கு//

    டாங்க்ஸ் :)

  • LOSHAN

    ப்ரியானந்த சுவாமிகள் said...
    எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.//
    Advance Version

    சிட்டி இக்கு வந்த சிங்கார எலி conference call இல family plan போட்டிச்சாம்.//

    ஹா ஹா.. ஒல்லாந்து அனுபவமா? ;)

    =============


    SIRUVAN said...
    எனக்கும் கொஞ்சம் தெரியும்...

    (யாழில் இருந்து வந்த உடனேயே நாகரீகமாக மாறுகிறோம் எண்டு சொல்லி கவர்ச்சி உடையில் திரியும் பெண்கள்)
    நடுக்கடலில நிண்டாலும் நாய்க்கு நக்குத்தண்ணி நக்குத்தண்ணி தான்..

    காடு படுற பாட்டுல கரடி காவடி எடுக்கோனும் எண்டு நிண்டுதாம்//

    சூப்பர்..
    காடு கரடி & கலைஞர்.. நல்லா இருக்கா?

  • LOSHAN

    jackiesekar said...
    எல்லா பழ மொழியும் சூப்பர்... முக்கியமா அந்த நயன் படம் சூப்பரோ சூப்பர்..//

    நன்றி ஐயா நன்றி.. எந்தப் படம் அண்ணாச்சி? மேலயா கீழயா?

    =========

    தர்ஷன் said...
    //அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
    அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.//

    முன்னாடி ஒரு கண்ணா சேர்த்து அப்படியே தலைவர் style இல் சொல்லிப் பாருங்கள்.
    அப்படியே அவருக்கு பொருத்தமான punch dialog//
    ஒ அப்பிடியா?
    அதான் உங்க தலைவரே சொல்லிட்டாருள்ள்ள.. ஒரு தடவ சொன்னா. ;)

  • LOSHAN

    கோப்பாய் பொடியன் said...
    அப்ப பூனைக்கு காசு இருந்தா , "புவனேஸ்வரிகா கோல் பண்ணும்?//

    நல்ல காலம் பூனை கோல் பண்ணல.. சிக்கலாகி இருக்கும்.. ;)

    someone had asked me to ans that ques when i copied ur title in my FB account?//

    இந்த விஷயம் புரியலையே.. தனி மடல் அனுப்புங்க

    ==========

    நாஸியா said...
    ஐயோஒ நான் உருண்டு உருண்டு சிரிச்சிட்டு இருக்கேன்!//
    காயம் கீயம் ஒன்னும் இல்லையே. ;)

    ==========
    சந்ரு said...
    இரசித்தேன், சிரித்தேன்//
    நன்றி சகோ..

    =======
    velji said...
    humourously creative!//
    tx a lot :)

  • LOSHAN

    யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...
    பதிவு சூப்பர்...நல்ல காமெடி...எங்கேயோ கேட்டு சிரிச்சது..."அம்மணமா ஓடிச்சாம் புலி... underware குடுத்திச்சாம் எலி//

    கவனம் எலியைப் பிடிக்கப் போறாங்க..

    ==========

    கனககோபி said...
    ஹா ஹா ஹா...
    ROFL....
    வெற்றி நேயர்கள் கலக்குகிறார்கள்....//
    உண்மை தான். கெட்டிக்காரர்கள் :)

    //யோ வாய்ஸ் (யோகா)
    18+ படங்களை போட்டு என்னை போன்ற சிறுவர்கள் மனதை கெடுக்கிறீர்கள்..
    அதனால அந்த 2வது நயனின் படத்தை நான் பார்க்கல //
    அதே... வழிமொழிகிறேன். :)//

    நான் உங்களையும் நம்பிட்டேன்

  • LOSHAN

    நாச்சியாதீவு பர்வீன். said...
    "கேட்பவன் கேனயனாக இருந்ததால்
    எருமைமாடு கூட ஏரப்ப்லன் ஓட்டுமாம்"

    இது எப்படி இருக்கு மெய்யிலேயே இது எனது கற்பனை இல்லை எனது நண்பன் அல் பாரிஸ்(அனுராதபுரம்) இன் கற்பனையாகும், //
    நல்லா இருக்கு. ஆனால் ஏற்கெனவே அறிந்தது. நான் தந்தவை எல்லாம் நாம் புதிதாக உருவாக்கியது


    ==========

    அஜுவத் said...
    கானா பிரபா said...
    //ஆகா உங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு அண்ணே ;//

    உண்மைதான் சகோதரா;...

    அண்ணா நயந்தாராவில ஒரு கண்ணாத்தான் இருக்கீங்க... முன்பு ஒரு "நயந்தாரவின் சிங்கம் வாழைப்பழம் சாப்பிடுமா??" இப்ப இது......... ஏயா ஏ????//

    நயனின் படத்தைப் பாருங்க விளக்கம் புரியும்.. ;)

    ==========

    dilip said...
    very nice...naan vizhunthu vizhuntu sirichen...too gud//

    dankooooooo :)

  • சந்தனமுல்லை

    அவ்வ்வ்..ஒய் திஸ் கொலவெறி!!

  • Lojee

    anna super, nice.........


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.