ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை?

10/27/2009 03:43:00 PM

(16) Comments


இலங்கையிலிருந்து யாழ்தேவி என்றொரு திரட்டி இயங்கி வருவது பதிவுலகில அனைவர்க்குமே தெரிந்த விஷயம்.

பெயர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்து முதலாவது பதிவர் சந்திப்பில் அதுபற்றி அவர்கள் தெளிவாக்கி, அதன் பின்னர் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளை இணைத்து.. இதெல்லாம் பழைய கதை..

என்னையும் கடந்தவாரம் நட்சத்திரப் பதிவராக்கி இருந்தார்கள். கடைசி நேர அழைப்பு பற்றி கடந்தவாரமே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அந்தப் பதிவிலேயே யாழ்தேவி கருவிப்பட்டை/வாக்குப் பட்டை பற்றியும் சொல்லி இருந்தேன்.

வேட்டைக்காரன் பாடல் பதிவுக்கு பிறகு எனக்கு 'நண்பர்கள்' மிக மிக அதிகரித்திருந்தார்கள்..
ஆதவன், சிங்கம் பதிவுகளுக்குப் பிறகு இன்னும் கூடியுள்ளார்கள்..

யாழ்தேவி கருவிப்பட்டை இந்த நண்பர்களுக்கு என் மீதான தங்கள் 'அன்பை' வெளிப்படுத்த மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கிவிட்டது.

அனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். டைனமிக் IP வைத்திருப்பவர்கள் யாழ்தேவியில் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

ஏற்கெனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பதிவுகளுக்கு மைனஸ் வாக்குகள் குத்தப்பட்டு வந்தன.

மைனஸ்களும் வாக்குகளே என்பதனாலும் இவற்றை வைத்துத் தான் என் பதிவுகளின் தரம் கணிக்கப்படுவதில்லை என்பதாலும் இதைப் பொருட்படுத்தாது இருந்தேன்

ஆனால் வேட்டைக்காரன் பதிவில் சொல்லிவைத்தார்போல ஒரு நல்ல புள்ளி கிடைத்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு மைனஸ் வாக்கு அடிக்கப்படும்.

அடுத்தது தான் உச்சக்கட்ட கொடுமை.

இலங்கையில் ஊடக சுதந்திரம் பதிவில் நல்ல வாக்குகளுக்கு சரிக்கு சமனாக மைனஸ் வாக்குகள்.
அதே போல அக்ரமின் மனைவி மறைந்த தகவலுக்கு யாரோ ஒரு அநாமதேயப் புண்ணியவான் சரமாரியாக எனக்கு மைனஸ் புள்ளிகளை அடித்துத் தள்ளுகிறார்.

ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை? இதனால் என்ன சாதிக்கிறார்கள்?
ஒரு பக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

ஆனால் இன்று வரை அநேகமான என் பதிவுகளே வாசகர் பரிந்துரைகளில் முன்னணியில் இருக்கின்றன.

(என்னைவிட) மூத்த,பிரபல பதிவருக்கும் இதே போல.. இப்போது தனியொரு பதிவில் அதிகூடிய மைனஸ் வாங்கியவர் என்ற யாழ்தேவிப் பெருமை அவருக்கு.. பாவம்.
இதில் வேடிக்கை அவரும் யாழ்தேவியில் ஒரு நிர்வாக உறுப்பினராம்.

என்ன நடக்கிறது? ஏன் நாம் இருவர் மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளோம்? யார் இந்த சதிகாரர்கள்?

யாழ்தேவி நிர்வாகிகளுக்கு என்னுடைய வாக்குப்பட்டையைக் கழற்ற முன்னர் விளக்கம் கோரிக் கடிதம் ஒன்று அனுப்பினேன்.

காரணம் பலர் வாசிக்கும் பதிவுகளில் யாழ்தேவி பட்டை எனக்கு திருஷ்டியாக அமைந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

அடுத்த நாள் இதற்கு விளக்கக் கடிதம் அனுப்பி இருந்தனர்.

யாழ்தேவி நண்பர்களின் கடிதம்..

கருவிப்பட்டை தனியே யாழ்தேவியில் கணக்குவைத்திருப்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் பதிவர்களின் வலைப்பூவுக்கு வரும் பார்வையாளர்களும் வாக்களிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு ஐபி எண்ணில் இருந்து வாக்களித்தால் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் திரும்பவும் அந்த ஐபி எண்ணில் இருந்து வாக்களிக்கமுடியும்.டயல்அப் இணைப்புகளைப்பாவிப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து இணைப்பதன்மூலம் கிடைக்கும் புதிய ஐப்பிகள் மூலமாக இம்மாதிரியான விளையாட்டுக்களை செய்கிறார்கள்.உண்மையிலேயே இதற்கு நாங்கள் மனவருத்தமடைகிறோம்.இதற்கான மாற்றுவழிகளை ஏற்கனவே நாங்கள் பரிசீலித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அதைப்போலவே சூடான இடுகைகளை மீண்டும் மீண்டும் கிளிக்பண்ணுவதன் மூலம் தங்களுடைய பதிவுகளை சூடான இடுகைகளாக மாற்றும் செயல்பாடும் கண்டறியப்பட்டிருக்கிறது.இதற்கான தீர்வும் ஓரிரு வாரத்திலே அறிமுகப்படுத்தப்படும்.இவற்றைப்பற்றி தாராளமாக உங்கள் பதிவுகளில் குறிப்பிடுங்கள்.விiளாயாட்டுக்காக இதைசெய்பவர்கள் மனம்மாற வாய்ப்பிருக்கிறது.

சுபாங்கனும் தனது பதிவில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்தேவி இந்த நிலைக்கு உடனடி திருத்தங்கள்,மேம்பாடுகளை செய்யாவிட்டால், தரமற்ற,சுவையற்ற பதிவுகள் முறையற்ற விதத்தில் முன்னணி பெறும்.பலபேர் தங்கள் பதிவுகளை யாழ்தேவியில் சமர்ப்பிக்கவும் மாட்டார்கள்.

அதற்கு முதல், என்னுடைய நண்பர்களே, மைனஸ் வாக்குப் போட்ட புண்ணியவான்களே, நீங்கள் யார், ஏன் இந்த வன்மம் என்று அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாயுள்ளது..
திங்கள் நடக்கும் இருக்கிறம் அச்சுவலை சந்திப்புக்கு வாங்களேன்.. பேசுவோம்;பழகுவோம்..

என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..


16 Responses to "ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை?"

  • தங்க முகுந்தன்

    உண்மைதான் லோஷன்!

    நேரம் கிடைக்கும் போது எழுதும் எனக்கும் இது வெறுத்துவிட்டது. முன்பு அனாமிகளின் அட்டகாசம் - இப்போது இதுவேறு!

  • sanjeevan

    நானும் பார்த்து வியந்து போனேன்
    இதையெல்லாம் கணக்கெடுதுத்து செய்தவர்களை பெரிய ஆள் ஆக்காதீர்கள் லோசன் அண்ணா.

    காய்க்கிற மரத்தில கல்லெறி விழத்தான் செய்யும்.

  • ’டொன்’ லீ

    ஆவ்.....:-)

  • Nimalesh

    can i also vatoe if that so.... how????????

  • வேந்தன்

    //டயல்அப் இணைப்புகளைப்பாவிப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து இணைப்பதன்மூலம் கிடைக்கும் புதிய ஐப்பிகள் மூலமாக இம்மாதிரியான விளையாட்டுக்களை செய்கிறார்கள்.//
    நல்ல விளையாட்டு :))), அப்ப வேலை வெட்டி இல்லாமல் மைனஸ் குத்த ஒரு கூட்டம் இருக்குதான்...:(

  • யோ வாய்ஸ் (யோகா)

    Don't care about those peoples loshan...

  • சந்ரு

    எல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா


    மீண்டும் அனானிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது. அது வேறு.

  • சந்ரு

    எல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா


    மீண்டும் அனானிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது. அது வேறு.

  • Subankan

    எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கு இல்லை. வேறு என்ன சொல்ல? :((

  • Mukilini

    //
    எல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா //

    Yea true anna.. Just ignore them... i cant believe that few ppl are so jobless........

  • ஆ.ஞானசேகரன்

    //ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை? இதனால் என்ன சாதிக்கிறார்கள்?
    ஒரு பக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.//


    ம்ம்ம்ம் ....

  • ஆதிரை

    //என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..

    இந்தத் தடவை ஓசியில ட்ரான்ஸ்போர்ட் தந்தாலும் நான் உங்களுடன் வர மாட்டேன். போன வருடமும் இதே நாட்களில் தான்..... :(

  • புல்லட்

    (என்னைவிட) மூத்த,பிரபல பதிவருக்கும் இதே போல.. இப்போது தனியொரு பதிவில் அதிகூடிய மைனஸ் வாங்கியவர் என்ற யாழ்தேவிப் பெருமை அவருக்கு.. பாவம்.
    இதில் வேடிக்கை அவரும் யாழ்தேவியில் ஒரு நிர்வாக உறுப்பினராம்./


    ஹாஹாஹா! ஏனிந்த கொலைவெறி.. சிரித்து வயிறெல்லாம் நோகுது..

  • கனககோபி

    மனவியாதிக்காரர்கள்...
    தங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லிவீட்டு எதிர் வாக்கை அளித்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு என்ன விதமான மனநோய் என அறிந்து கொள்ளலாம்....

  • Anonymous

    Sabesh. Sariyan Pooti. parkalm

  • VARO

    //என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..//

    இது நாலாயிருக்கே...


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.