கொண்டாடுவோம் இலங்கையின் சுதந்திரதினத்தை..

இலங்கையின் சுதந்திர தினக்கொண்டாட்டங்கள்; இப்பொழுதே ஆரம்பித்துள்ளன. அர தினைக்கள, அமைச்சுக் கட்டடங்களில் வாழ்த்துப் பதாதைகள், 'பெரியவர்கள்' சிரிக்கும் சுவரொட்டிகள் மற்றும் இரவு நேரங்களில் நகரத்தையே ஒளிமயமாக்கும் மின்விளக்குத் தோரணங்களும், அலங்காரங்களும்!
இதிலே தனியார் கட்டடங்கள் மற்றும் இதர கட்டடங்களையும் இவ்வாறு இரவு நேரங்களில் அலங்கரித்து 61வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது உள்நாட்டு விவகார அமைச்சின் உத்தரவு வேறு.
உலகம் முழவதும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலைகளைக் குறைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு அண்மையில் தான் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அரசு கருணை காட்டிக் கொஞ்சமாய் குறைத்துள்ளது.
மின்சாரக்கட்டணங்கள் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட ஆடம்பர, அனுஷ்டானங்கள் தேவையா?
ஒரு பக்கம் 'தேசத்தின் மகுடம்' என்ற பெயரில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் கண்காட்சி. மறுபக்கம் 4ம் திகதி வருகிற சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளின் அணிவகுப்புக்களுக்கான ஒத்திகைகள் என்று முக்கியமான வீதிகள் எல்லாமே பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீர், திடீரென்றோ மூடப்படுவது இந்த வருடமும் வழமையே.
தீவின் ஒரு பகுதி (நாட்டிலும் தானே!?) யுத்தத்தில் இருக்கு, தலைநகரத்தில் பாதுகாப்பு கட்டாயம் தானே? அதிலும் ஒரு நாட்டின் மிக முக்கியமான தினமான சுதந்திர தினத்துக்கு என்று வரும்போது இன்னும் அத்தியாவசியம் தான். மக்கள் கிடக்கிறார்கள் மக்கள்.
நாடு மக்களுக்கு எவ்வளவோ பண்ணும் போது – மக்கள் இதைக்கூட சகித்துக்கொள்ள மாட்டார்களா?
காலி முகத்திடலில் தான் ஜனாதிபதி கலந்துகொள்ளும் மாபெரும் பிரதான சுதந்திரதின விழா.. இம்முறை இத்தனை மாபெரும் பிரம்மாண்ட வெற்றி விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகிறதாம்.. இதனால் வழமையான சுதந்திர தின காலகட்டங்களை விட அதியுச்ச ஏற்பாடுகள்.. மக்களுக்கு ரொம்பவே சந்தோசமுங்க..
கொண்டாடுவோம்.. எல்லோரும் இலங்கையின் சுதந்திர தினத்தை..
வடக்கு மக்கள்? அவர்களும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறார்களாமே.. பாருங்கள் இணையத் தளங்கள்,பத்திரிகைகள், தமிழகம்,வெளிநாடுகளில் நடக்கும் மக்கள் பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் சொல்லுதே.. பிறகென்ன அவர்களும் சந்தோசமா இந்தக் கொண்டாட்டங்களில் இணையலாம் தானே..
தமிழகத்தில் கடையடைப்பு,பொது வேலை நிறுத்தத்துடன்... இலங்கையில் எல்லோரும் ரொம்பவே மகிழ்ச்சியுடன்.. (இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா.. வெளிநாட்டில இருக்கிற நீங்கள் எதோ,பார்த்து கீத்து எழுதுவதை எழுதுங்க.. )
வைரமுத்து சொன்ன வரிகள்..
'பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தபோது நாம் கட்டி இருந்த கோவணமும் களவாடப் பட்டது...'
கஞ்சிபாய் சொல்கிறார்.. நம்ம கோவணங்கள் எப்போதோ களவாடப் பட்டு விட்டன.. இப்போது எங்கள் அறுனாக்கொடிகளையும் உருவியாச்சு என்று..
உங்களுக்கு ஏதாவது புரியுது? எனக்கென்றால் ஒன்றுமே புரியல்ல..



உங்களுக்கு ஏதாவது புரியுது? எனக்கென்றால் ஒன்றுமே புரியல்ல..
ம்ஹும் ஒன்னுமே புரியலை......
February 1, 2009 3:37 PM
எனக்கும் புரியல.... சொல்லவும் முடியல அப்பரம் சொல்லவும் தெரியல? ஏனா என்ன நடக்குது என்றே புரியமாட்டேங்குது...
February 1, 2009 4:03 PM
(இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா.. வெளிநாட்டில இருக்கிற நீங்கள் எதோ,பார்த்து கீத்து எழுதுவதை எழுதுங்க.. )
nalla suthanthiram!
February 1, 2009 4:04 PM
"உங்களுக்கு ஏதாவது புரியுது? எனக்கென்றால் ஒன்றுமே புரியல்ல.."
புரிந்தும் புரியாதவர்களாக...
கஞ்சிபாய் சூஅது போல அரைஞான்கொடி கூட இல்லாதவர்கள் தான் நாம்...
February 1, 2009 4:34 PM
ரயிலில் வந்து ஏறங்கினதும் கோட்டை ஸ்டேசன்ல கேட்டாங்க எங்க identity card..
பஸ்ல வந்தா நிப்பாட்டி கேக்குறாங்க எங்க identity card..
நடந்து போனா நிப்பாட்டி கேக்குறாங்க எங்க identity card..
ஆபீஸ்ல இருக்கும் போதும் வந்து கேக்குறாங்க எங்க identity card..
அதால
நாலாம் திகதி வரைக்கும் வீட்ல இருக்கிற என்ற முடிவு..
ITS A SIMPLE SOLUTION MAN..
February 1, 2009 4:55 PM
நாமளும் இங்க சுதந்திர தினத்தை விமரிசையாய் கொண்டாட்ரமில்ல...பட்டாசு என்ன, சிங்கக்கொடி என்ன, தேசிய கீதம் என்ன..ஐயோ ஐயோ..ஒரே அமர்க்களம் தான் போங்க..நான்கின பிரஜைகளும் சந்தோஷமாக, பிரிவுகள் இல்லாத, சுதந்திரமான நாட்டுக்குள் நிம்மதியாக வாழும்படி நம்ம தல ஏற்பாடு செஞ்சிருக்காரு...இதில் complain பண்ண என்ன இருக்கு?
February 1, 2009 5:36 PM
நாங்களும் இதை கரிநாளாக உலகம் எங்கும் பெரும் ஆர்பாட்டமாக கொண்டாடுகிறோம்.
கோவனத்தை பறித்தாலும் போராட்டதை விட்டு விடாதே, அம்மணமாகவே போராடு. பட்டுவேட்டிகட்டிய அடிமையாக வாழ்வதைவிட அம்மணமான சுதந்திர மனிதனாக போராடு.
February 1, 2009 6:00 PM
ஒன்றுமே புரியல்ல..!?
February 1, 2009 8:24 PM
லோசன் காலத்திறிகேற்ப நல்ல கருத்துக்கள் அனைத்தும் வாழ்த்துக்கள்
ஆனால் எனக்கு ஒண்றுமே புரியவில்லை இனி வரும் நாட்கள் புரியவைக்கும் என்பது மட்டும் உண்மை
February 1, 2009 8:32 PM
புரியவில்லை என்று சொல்லிக்கொள்வதே மேலாகிற்று புல்லுருவிகள் இருக்கும் வரை...
February 1, 2009 9:59 PM
லோஷன் அண்ணா நாமும் விரைவில் கொண்டாடுவோம் நம் சுதந்திரத்தை .........மகிழ்ச்சியாக
February 1, 2009 11:30 PM
// இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா..
கவனம் அண்ணா!
February 2, 2009 3:29 AM
பேந்தென்ன வெடியெல்லாம் வாங்கிவச்சுக்கொண்டு ரெடியாகுங்கோ!
-gks
February 2, 2009 7:47 AM
ஹையா....
எனக்கு நல்ல விளங்குது. ஏனென்றால் நான் சிறிலங்காவிலதான் ஸாரி கொழும்பிலதான் இருக்கிறேன்
February 2, 2009 8:47 AM
Dear Friends,
This is an Urgent Request By Illaiyor Amaippu - Europe and Please call This Number +14162604005 - Is an Canadian Army Media and It will ask for Do we need Cease Fire then Press 1 for YES.
Hope you will help Us and also This will help to safe our Generation/ Friends, relatives who is in Vanni.
February 2, 2009 10:28 AM
கஞ்சிபாய் சொல்றது எனக்குப்புரியுது....
(என்னா நடிப்புடா....)
February 2, 2009 12:27 PM
//வடக்கு மக்கள்? அவர்களும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறார்களாமே.. பாருங்கள் இணையத் தளங்கள்,பத்திரிகைகள், தமிழகம்,வெளிநாடுகளில் நடக்கும் மக்கள் பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் சொல்லுதே.. பிறகென்ன அவர்களும் சந்தோசமா இந்தக் கொண்டாட்டங்களில் இணையலாம் தானே..
இதோ இணைகின்றேன். எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
(வார விடுமுறைக்கு வீட்டுக்கு சென்ற அலுவலக தோழன் திரும்பி வருவதற்கு 5ம் திகதி வரை தடையாம். கொஞ்சமும் கருணையின்றி அவனின் வேலைகளையும் என் தலையில் கட்டிவிட்டார்கள். என் தனிமனித சுதந்திரம் மீறப்படுகிறதா?)
February 2, 2009 12:55 PM
please Go to the web blog
http://girirajnet.blogspot.com/2009/02/blog-post.html
February 2, 2009 3:54 PM
பட்டு வெட்டி பற்றிய கனவில் இருந்தபோது நாம் கட்டி இருந்த கோவணமும் களவாடப் பட்டது...'
நான் லோசனுக்கு என்னாச்சு இப்படி ஒரு பதிவென்று யோசித்தேன். கடைசியில் வைத்திருக்கிறீர்கள் சரியான ஆப்பை.
அப்புறம் நான் அடிக்கடி உங்கள் குரலை கேட்கிறேன். நாகேஷ் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியும் வெற்றியில் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டது. லோசன் தவிர்த்து சுபாஷ் என்று தான் நினைக்கிறேன்... அவருடைய குரலும் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு பெண் அறிவிப்பாளர் (பெயர் நினைவில் இல்லை) கலக்குகிறார். நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். வெற்றியின் இமாலய வளர்ச்சிக்கு தங்களின் குரலே மூலதனம் என்பது உண்மை.
February 2, 2009 4:28 PM
இப்படியான விஷயம் ஓன்று இந்தியாவை பற்றி வந்திருந்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.. அமீர் சீமானுக்கு நடந்த மாதிரி ... இது போதாதா இலங்கை சுதந்திரத்தை கொண்டாட? இந்தியாவில் ஸ்ரீநகரில், காஷ்மீரில் அல்லது குஜராத்தில் இருப்பதை விட உங்களுக்கு வெள்ளவத்தையில் சுதந்திரம் இல்லையா? ஸ்லம்டாக் மில்லியனர் படம் இத்தகு ஒரு சாட்சி..
உண்மையில் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் அரசு சாப்பாட்டில் தான் பிரபாகரன் உட்பட வாழ்கிறார்கள்.. இலங்கை தமிழர்களுக்கு கனடா லண்டன் போவதற்கு இந்த பிரச்சினை மிக அவசியம்.. இது பொய் என்கிறீர்களா? அதுதானே சர்வதேச எதிர் நிலையை எடுக்க காரணமாகியது? இது பொய் என்கிறீர்களா?
February 2, 2009 6:33 PM
இது விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
February 2, 2009 7:03 PM
"உண்மையில் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் அரசு சாப்பாட்டில் தான் பிரபாகரன் உட்பட வாழ்கிறார்கள்.. இலங்கை தமிழர்களுக்கு கனடா லண்டன் போவதற்கு இந்த பிரச்சினை மிக அவசியம்.. இது பொய் என்கிறீர்களா? அதுதானே சர்வதேச எதிர் நிலையை எடுக்க காரணமாகியது? இது பொய் என்கிறீர்களா?"
அடே பைத்தியக்காரா!
சிங்கள அரசாங்கம் வெளிநாடுகளில் பிச்சைகேட்டும் போது அவர்கள் எங்களுக்கும் சேர்த்துத்தான் பிச்சைபோடுகின்றார்கள். ஆகவே அது எங்கட பங்குதான். இவனுகளுக்கு அதையும் தர விருப்பமில்லை ஆனால் அடுத்த தடவை எங்கள் பங்கை எங்களிடமே பிரித்து தந்து விடுவார்கள் என்ற பயத்திலேதான் இதையும் செய்கிறான்கள். இந்த அன்பருக்கு இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அறிவை நினைக்க சிரிப்பு வரவில்லை அழுகைதான் வருகின்றது.
எங்களுக்கொன்று ஒரு நாடு இருந்தால் நாங்கள் ஏன் வெளிநாடு செல்லவேண்டும். முந்திய இலங்கையின் அரசாங்க உத்தியோகத்தில் அதிகமிருந்தது தமிழர்கள் என்பதை மறக்கவேண்டாம். "தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய்" என்ற பிரபாகரனது வாக்கில் இருக்கிறது உமக்கான பதில். இலிப்பெண்ணையில் மின்பிறப்பாக்கிளை இயக்கி மின்சாரம் பெற்றவனடா ஈழத்தமிழன். உங்கள் நாடு போகிற போக்கை பார்த்தால் உணவுக்கு பதிலாக புதிதாக ஒன்றை கண்டுபிடித்து உங்களுக்கும் பிரபாகரன் தான் தரவேண்டியிருக்கும். வரிசையில் நின்று ஒழுங்காக வாங்கி சாப்பிட வேண்டும். நம்ம காவல்துறை உங்கடையல் மாதிரியில்லை ரொம்ப கண்டிப்பானவர்கள். காசைக்கொடுத்து கள்ளமாக எல்லாம் வாங்கமுடியாது.
February 2, 2009 7:14 PM
(இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா.. வெளிநாட்டில இருக்கிற நீங்கள் எதோ,பார்த்து கீத்து எழுதுவதை எழுதுங்க.. )
You are one of the best.
February 2, 2009 8:34 PM
(இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா.. வெளிநாட்டில இருக்கிற நீங்கள் எதோ,பார்த்து கீத்து எழுதுவதை எழுதுங்க.. )
You are one of the best.
February 2, 2009 8:34 PM
ஈழச்சோழன் பிச்சை எடுக்கிறது நீங்கள் தாண்டா.. தமிழர் புனர் வாழ்வு ஏன்டா பெயரில் ..அப்பா என் இந்தியாவில் தமிழ் நாடு இல்லை.. அங்க தேசிய கீதம் வங்காள மொழியில்தான் பாட வேண்டும்.. இங்கு தமிழில் முடியும்.. இது போதாதா இலங்கை சுதந்திரத்தை கொண்டாட..
February 3, 2009 10:50 AM
லோசன் அனானிகள் பின்னோட்டம் இட வாய்ப்பு கொடுக்க வேண்டாம். அப்படி நீங்கள் விரும்பினாலும், முறையற்ற பின்னோட்டங்களை டெலிட் செய்யுங்கள்.
February 3, 2009 10:58 AM
அனானி ஆயினும் கருத்தை கருத்தால் வெல்லுங்கள்.. ஏன் உங்களுக்கும் புத்திசாலித்தனமாக மறுதலிக்க வாய்ப்பு இருக்கு தானே.. அதை செய்யுங்கள்.. பிழை என்று நிறுவுங்கள்.. கருத்து திணிப்பை தவிர்ப்போம்... (அதுதானே இன்றைய இலங்கை தமிழர் நிலைக்கு காரணம்.. புலிக்கு வால் பிடிக்காமல் யதார்த்தத்தை நியாயத்தை புளிக்கும் ஆணித்தரமாக சொல்லுங்கள்) நிஜ ஜன நாயகத்தை உருவாக்குவோம்..
February 3, 2009 2:26 PM
Great post! Keep up the good work.
February 4, 2009 12:20 AM
/*உண்மையில் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் அரசு சாப்பாட்டில் தான் பிரபாகரன் உட்பட வாழ்கிறார்கள்.. இலங்கை தமிழர்களுக்கு கனடா லண்டன் போவதற்கு இந்த பிரச்சினை மிக அவசியம்.. இது பொய் என்கிறீர்களா? அதுதானே சர்வதேச எதிர் நிலையை எடுக்க காரணமாகியது? இது பொய் என்கிறீர்களா?
*/
இதுமாதிரியான பின்னூட்டங்களுக்கு சவுக்கடி கொடுத்த மைக் அவர்களின் பின்னூட்டம் ஒன்று. அதே போல் நீங்களும் delete செய்யுங்கள்.
http://thamilar.blogspot.com/2009/02/blog-post.html#comments
/*This post has been removed by a blog administrator.*/
மன்னிக்க வேண்டும் சிங்களவரே, உங்களின் தமிழின துரோகத்தை காட்டுவதற்கு சில ஓநாய்களும், துரோகிகளும் உண்டு. அவர்களிடம் சென்று உங்கள் கற்பனை கதைகளை அளக்கலாமே. நாங்கள் உண்மையான தமிழர்கள், நீங்கள் சென்று வரலாம்.
February 4, 2009 2:14 AM
/*உண்மையில் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் அரசு சாப்பாட்டில் தான் பிரபாகரன் உட்பட வாழ்கிறார்கள்.. இலங்கை தமிழர்களுக்கு கனடா லண்டன் போவதற்கு இந்த பிரச்சினை மிக அவசியம்.. இது பொய் என்கிறீர்களா? அதுதானே சர்வதேச எதிர் நிலையை எடுக்க காரணமாகியது? இது பொய் என்கிறீர்களா?
*/
இதுமாதிரியான பின்னூட்டங்களுக்கு சவுக்கடி கொடுத்த மைக் அவர்களின் பின்னூட்டம் ஒன்று. அதே போல் நீங்களும் delete செய்யுங்கள்.
http://thamilar.blogspot.com/2009/02/blog-post.html#comments
/*This post has been removed by a blog administrator.*/
மன்னிக்க வேண்டும் சிங்களவரே, உங்களின் தமிழின துரோகத்தை காட்டுவதற்கு சில ஓநாய்களும், துரோகிகளும் உண்டு. அவர்களிடம் சென்று உங்கள் கற்பனை கதைகளை அளக்கலாமே. நாங்கள் உண்மையான தமிழர்கள், நீங்கள் சென்று வரலாம்.
February 4, 2009 2:14 AM
/* நம்ம கோவணங்கள் எப்போதோ களவாடப் பட்டு விட்டன.. இப்போது எங்கள் அறுனாக்கொடிகளையும் உருவியாச்சு என்று.. */
நாங்கள் அம்மணமாய் இருக்கிறம், ஆனால் மனங்களில் அல்ல...
இலங்கை தமிழருக்கு வெளிநாடுகள் போடும் பிச்சையில் தான் மதிப்புக்குரிய மஹிந்த மந்திரியும் சாப்பிடுகிறார் என்று கூட சொல்லலாம்.
"தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய்" - எங்களால் முடியும் சிறந்த வழிகாட்டல்கள், சிறந்த மூளை வளம் இரண்டும் இருக்கிறது. மிகுதியை நாமே உருவாக்குவோம்... எங்கே நாட்டை எங்கள் கைகளில் முழுமையா தந்து பாருங்கோவன்...
February 4, 2009 4:20 PM
"ஈழச்சோழன் பிச்சை எடுக்கிறது நீங்கள் தாண்டா.. தமிழர் புனர் வாழ்வு ஏன்டா பெயரில் ..அப்பா என் இந்தியாவில் தமிழ் நாடு இல்லை.. அங்க தேசிய கீதம் வங்காள மொழியில்தான் பாட வேண்டும்.. இங்கு தமிழில் முடியும்.. இது போதாதா இலங்கை சுதந்திரத்தை கொண்டாட"
மதிப்புக்குரிய அன்பரே..
தமிழன் தனது பாதுகாப்புக்காக காசு கொடுக்கின்றான். நீங்கள் வெட்கமில்லாமல் போய் யார் யாரோரிமோ எல்லோ கேட்கிறியல். வெட்கமாயில்லை...
லங்காவின் தேசியகீதத்தினை உதாரணம் காட்டமளவுக்கா தமிழனின் சம உரிமைக்கு எடுத்துகாட்டு நடைமுறை வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. ஐயோ பரிதாபம்.
பொலிஸ் ரிப்போட் எடுக்கப்போனால் தெரியும் ஐயா சமஉரிமை..
February 4, 2009 8:36 PM
அந்த ஈழ போலீஸ் எங்க போச்சு.. ஐயோ ஐயோ.. அவங்க லஞ்சம் எடுக்க தேவயில்லை.. கப்பம் தானே உங்க பொழப்பு.. இலங்கை அரசு இதுவரை எந்த கடனை செலுத்துவதற்கு பிந்தியதில்லை.. பிரபாகரனின் மகனுக்கு மகளுக்கு இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்தும் பரீட்சை தான் ஒரு வழி.. ஈழ நம்பிக்கை பிரபாகரனுக்கு இருந்த்டிருக்குமானால் ஈழ பரீட்சை திணைக்களம் ஆரம்பித்திருக்க கூடும்.. வெளி நாடு செல்வதற்கும் இலங்கை கடவு சீட்டு தான் தேவை.. நடேசனுக்கு சிகிச்சைக்கு இலங்கை அரசுதான் உதவியது.. பாதுகாப்பளித்தது..
யாழ்ப்பாணத்தில் சிங்களவர் முஸ்லீம் களுக்கு இடம் இல்லை.. அனால் தமிழர் இலங்கை எங்கும் வாழ முடியும்.. கொழும்பில் அரசுக்கு எதிராக கருத்து சொல்ல முடியும்.. அவர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கும்.. ஆனால் புலி கட்டுபாட்டு பகுதிகளில் புலிக்கெதிராக பேச முடியுமா..
February 5, 2009 11:39 AM
//"Anonymous Anonymous said...
அந்த ஈழ போலீஸ் எங்க போச்சு.. ஐயோ ஐயோ.. அவங்க லஞ்சம் எடுக்க தேவயில்லை.. கப்பம் தானே உங்க பொழப்பு.. "//
அவர்கள் நியாயமான காரணங்களுக்காக தனிப்பட்ட நலன்களுக்கென்றில்லாமல் வரி அறவிட்டு பற்றிச்சீட்டு கொடுக்கிறார்கள்.
உங்கடையள்
லஞ்சம் மட்டும் வாங்காமல் கடத்திக்கொண்டு போய் கப்பத்தை வாங்கிக்கொண்டு ஆட்களையும் அல்லா முடித்தவிடுகிறார்கள்.
நாங்களே பரீட்சை வைத்தால் சொல்வீர்கள் எங்கட பரீட்சையை எழுதினால் சித்தியடைய முடியாத என்பதனால் தான் நீங்கள் உங்கட பரீட்சை வைக்கிறியல் என்று. அதனால் தான் நீங்கள் வைக்கிற பரீட்சையை நாங்களும் எழுதி சித்தியடைகின்றோம் அவ்வளவு தான்.
அது தானே கெட்டித்தனமும் கூட..
February 5, 2009 7:31 PM
ஐயா பற்றுசீட்டு எதுக்கு.. பிறகு ஒரு நாள் refer பண்ணதானே.. அது கப்பதில இருக்கா.. கப்பத்துக்கு பற்றுசீட்டு கொடுத்த ஈழமே.. அதை ரசித்த சோழனே..நீ வாழி
இப்படி கப்பம் எடுக்கிரவங்கட ஆட்கள் எல்லாம் போலீஸ் என்றால் தமிழ் நாட்டில் எத்தன நாடும் போலீஸ் உம் இருக்கும்..
கடத்தல் கொலைகள் கப்பம் எல்லாத்துக்கும் முன் உதாரணம் உங்கள் ஈழம் தான்..
உங்களுக்கு அந்த பாசை மட்டும் தான் புரியும் என்பதால் அந்த பாசையிலேயே பேசுகிறார்கள்
பரீட்சை விளக்கம் புல்லரிக்குது.. அதுசரி வீடு காணிகளுக்கு தமிழ் ஈழ உறுதி கொடித்திருகலாம் தானே
February 7, 2009 12:43 PM
ஐயா anonymous
உனக்கு இதை சொல்வதற்கும் முகமூடி தேவையா? உனது பேச்சு நீ சிங்களவனுக்கு அடிகழுவுறவன் என்பதைக் காட்டுது...
நாலும் கலந்த பிறப்பின் கோளாறுதான் இது
நீ ஏதும் சிவகாசி பக்கம் வந்தேனு வச்சுக்க டங்குவாறு பிஞ்சிறும் பிஞ்சி.
February 23, 2009 12:45 AM
...please where can I buy a unicorn?
December 15, 2009 5:29 AM