மென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்
நான் முன்பொரு பதிவில் சொன்னது போல
இலங்கையின் புதிய நட்சத்திர சுழல் அஜந்த மென்டிஸ் நேற்றைய தினம் மேலுமொரு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 50 விக்கட்டுக்களை எடுத்த சாதனையே அது!
முன்பு இந்தியாவின் அஜீத் அகர்கர் 23 போட்டிகளில் 50 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையை கடந்த மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற தொடரிலேயே வீழ்த்தி இருக்க வேண்டிய இந்த சாதனையை ஒரு சில வாரங்கள் கழித்து அதே ஜிம்பாப்வே அணிக்கெதிராக வீழ்த்தி முறியடித்திருக்கிறார் மென்டிஸ். மென்டிஸ் இந்த ஐம்பது விக்கெட்டுக்கள் எடுக்க எடுத்துக் கொண்டது 19 போட்டிகள் மாத்திரமே..
சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் கால் பதித்ததிலிருந்து சாதனை மேல் சாதனையாக முறியடித்தவன்னம் இருக்கிறார் மென்டிஸ்.
இன்னும் மென்டிசின் சவாலை சரியான முறையில் எதிர்கொண்டு ஆடிய வீரராக எந்த ஒரு சர்வதேசக் கிரிக்கெட் வீரரையும் காணமுடியவில்லை.. எங்கிருந்து யாரின் வடிவில் வரப் போகிறாரோ?
அத்துடன் நேற்றைய தினம் மற்றுமொரு இந்தியரின் சாதனையும் இன்னுமொரு இலங்கையரினால் சமப்படுத்தப்பட்டுள்ளது..
முன்னாள் இந்திய அணித்தலைவர் முஹம்மத் அசாருதீன் களத்தடுப்பில் எடுத்திருந்த பிடிகளின் சாதனையே அது.. அசாருதீன் 334 போட்டிகளில் எடுத்திருந்த பிடிகளின் எண்ணிக்கையை (156) இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன வெறுமனே 289 போட்டிகளில் பிடித்து சமப்படுத்தியுள்ளார். இன்னும் மகேல பல போட்டிகளில்,பல ஆண்டுகள் விளையாடப் போவதால் நெடுங்காலம் இந்த சாதனை அவருக்கு சொந்தமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிடிகளை எடுத்திருக்கிறார். எனவே மகேலவுக்கு இப்போதைக்கு இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் போட்டியாளர் பற்றிக் கவலை தேவையில்லை.

நேற்றைய போட்டியில்,இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வெறுமனே 210 ஓட்டங்களைப் பெற்றாலும் 130ஓட்டங்களால் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து ஆச்சரியமூட்டியது.. எவ்வளவு தான் சிறப்பாகப் பந்துவீசினாலும் துடுப்பெடுத்தாடுவதில் இன்னமும் பாடசாலை அணியைப் போலத் தான் விளையாடுகிறார்கள்..
ஆனால் மகேல ஜிம்பாப்வே அணிக்கேதிராகத் தடுமாறுவது தொடர்கிறது.. நேற்றும் அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.. இப்போது கடைசி ஐந்து இன்னிங்க்சில் ஜிம்பாப்வேக்கு எதிராக மகேல பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மாத்திரமே.
போகிறபோக்கில் மகேலவைக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க வைப்பது எப்படி என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களிடம் மற்றைய அணிகளின் பந்துவீச்சாளர்கள் டியூஷன் எடுப்பார்கள் போலிருக்கே..



Eppavum polave Mendis and Mahela....no doubt he is a superb captain :))
January 13, 2009 5:17 PM
தமிழ்மக்கள் செத்து மடிகின்றார்கள். அது குறித்து ஏதாவது எழுதுகின்றாயா? கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய்? சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?
January 13, 2009 5:17 PM
To the Above Anonymous: That doesn't mean anyone has to retrict theirselves from learning! ஒரு கையில் துக்கம் என்றால், மறு கையில் ஊக்கம் வேண்டும்...அப்போதுதான் வாழ முடியும்! துக்கத்தை மட்டும் சிந்தித்துகொண்டிருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான். கற்பது, பகிர்வது ஒரு சிறந்த விடயம். இதில் பெரிய தவறு இல்லை...இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...புரிந்து கொள்ளுங்கள்.
Loshan: sorry for using ur space to reply to that anonymous. Hope you don't mind.
January 13, 2009 5:23 PM
கிரிக்கட் ரசிகர்களுளை சந்தோசப்படுத்திறீங்க
அண்ணா
January 14, 2009 1:48 PM
இலங்கையின் சிங்கள அணியை புகழ்ந்து பேசுவதை அண்ணா நீங்கள் தவிர்க்க வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். தமிழருக்கு வாய்ப்பு வழங்காத அவ்வணி பற்றி நமக்கு என்ன கவலை. ( ஒரு கேள்வி எழலாம், முரளி விளையாடுகிறார் என்று... ஆனால் ஆரம்ப காலத்தில் அவரின் தந்தை இலங்கை அணிக்கு பணம் கொடுத்தே தன் மகனை ஆட வைத்தார். பின்பு அவர் இல்லாமல் அணி இல்லை என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக என நம்பத்தக்க வட்டாரத்தில் இருந்து அறிந்தேன்)
மென்டிஸ் இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே...
உங்கள் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இதை கூறுகிறேன்.
January 14, 2009 7:31 PM
மது நீங்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதுவும் ஒரு துக்கமான விஷயம்தான். அவ்வாறு நீங்கள் நினைக்கவில்லை என்றால், முதுகெலும்பு இல்லாதாவர் என்றே அர்த்தம்.
January 14, 2009 7:38 PM
This comment has been removed by the author.
January 14, 2009 8:43 PM
This comment has been removed by the author.
January 14, 2009 8:56 PM
This comment has been removed by the author.
January 15, 2009 4:53 PM
//இன்னும் மென்டிசின் சவாலை சரியான முறையில் எதிர்கொண்டு ஆடிய வீரராக எந்த ஒரு சர்வதேசக் கிரிக்கெட் வீரரையும் காணமுடியவில்லை.. எங்கிருந்து யாரின் வடிவில் வரப் போகிறாரோ? //
ஏன் சேவாக் அடித்த அடியை மறந்து விட்டீர்களா?
சேவாக்கிற்கு மெண்டிஸ் மட்டுமல்ல, வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒரு பொருட்டே அல்ல.
கொஞ்சம் இங்கே கிளிக்கவும்
January 20, 2009 4:20 AM
எப்ப ஐயா நம்ம மகேல நல்ல க்கு வருவார்? கொஞ்ச நாளுக்குமுதல் இருந்த கங்குலி தான் ஞாபகம் வாரார்..
Razmi
January 21, 2009 8:16 PM
Dear Sehwag fan,
we dont recognize Sehwag as a batsman. He s merely a hitter. Sometimes he clicks and sometimes he fails. Except that bang in Galle, he failed against Mendis in the other tests.
சேவாக்கிற்கு மெண்டிஸ் மட்டுமல்ல, வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒரு பொருட்டே அல்ல.
That is only on his best day.
every cricket fans will agree.
SL FAN Rooban,UK
January 21, 2009 8:19 PM
1st you should understand that a fluke Batsman can’t hit 15 centuries including 2 triple centuries. Sehwag’s test average will tell you his ability. Even cricinfo judges recognized his talent. He is not only best in the Asian soil, he has played his best innings in all over the world.
January 22, 2009 2:30 AM
லோஷன் இதுவரை மெண்டிஸ் ஆவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நம்பர் ஒன் அணிகளுடன் ஆடவில்லை. சோப்ளாங்கி டீம்ச் வங்காளதேசம், சிம்பாவே மற்றும் பய்ந்தாங்கொள்ளி இந்தியாவுடன் ஆடியதை வைத்து மெண்டிசை எடைபோடாதீர்கள். முரளித்ரனை ஓரம் கட்டவே மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
உங்களுக்கு மிகவும் தெரிந்தவன்.
January 22, 2009 11:35 AM
sir I said india's shewag beat the Mendis in coming series this is my challenge to you.
January 25, 2009 2:40 PM